• கிரிக்கெட் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிவதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டுவது என்பது தனி ஒரு கலை!

    2015 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தில்ஷன் செய்த அந்த தரமான சம்பவம் இன்றும் நம் கண்களுக்குள் நிற்கிறது.

    மிட்செல் ஜான்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது என்பதே பலருக்கு சவாலாக இருந்த காலத்தில், அந்த ஓவரை தில்ஷன் தன் ஆளுமையால் கட்டிப்போட்டார்.

    முதல் பந்தை மிட்-ஆப் திசையில் தட்டிவிட்டு பவுண்டரியை கணக்கைத் தொடங்கியவர், அடுத்தடுத்த பந்துகளில் கார்னர், கவர்ஸ், மற்றும் தனக்கே உரித்தான ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார்.

    ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைத் தொடும்போது ஆஸ்திரேலிய அணியின் முகத்தில் தெரிந்த அந்த திகைப்பு, திலஷனின் பேட்டிங் வலிமைக்குச் சாட்சி.

    பவுலர்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்றினாலும், தில்ஷன் அன்று வேறொரு மனநிலையில் இருந்தார். ஒரு ஓவரில் ஆறு ஃபோர்கள் அடிப்பது என்பது வெறும் டைமிங் மட்டுமல்ல, அது பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையை மொத்தமாகச் சிதைக்கும் ஒரு யுத்தி.

    கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை!

    #cricket #tamilcricket #NationalChampionship #Dilshan #cricketlovers
    கிரிக்கெட் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிவதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டுவது என்பது தனி ஒரு கலை! 2015 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தில்ஷன் செய்த அந்த தரமான சம்பவம் இன்றும் நம் கண்களுக்குள் நிற்கிறது. மிட்செல் ஜான்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது என்பதே பலருக்கு சவாலாக இருந்த காலத்தில், அந்த ஓவரை தில்ஷன் தன் ஆளுமையால் கட்டிப்போட்டார். முதல் பந்தை மிட்-ஆப் திசையில் தட்டிவிட்டு பவுண்டரியை கணக்கைத் தொடங்கியவர், அடுத்தடுத்த பந்துகளில் கார்னர், கவர்ஸ், மற்றும் தனக்கே உரித்தான ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார். ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைத் தொடும்போது ஆஸ்திரேலிய அணியின் முகத்தில் தெரிந்த அந்த திகைப்பு, திலஷனின் பேட்டிங் வலிமைக்குச் சாட்சி. பவுலர்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்றினாலும், தில்ஷன் அன்று வேறொரு மனநிலையில் இருந்தார். ஒரு ஓவரில் ஆறு ஃபோர்கள் அடிப்பது என்பது வெறும் டைமிங் மட்டுமல்ல, அது பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையை மொத்தமாகச் சிதைக்கும் ஒரு யுத்தி. கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை! #cricket #tamilcricket #NationalChampionship #Dilshan #cricketlovers
    0 Reacties ·0 aandelen ·11K Views ·0 voorbeeld
  • வெறும் ஒரு சில மணிநேரத்திலேயே வெனிசுவேலா அதிபரை கைது செய்ய அமெரிக்காவால் முடிந்திருக்கின்றது.

    இவ்வளவிற்கும் முப்படைகளையும் கொண்ட இறையான்மையுள்ள தேசம் வெனிசுவேலா.
    வெனிசுவேலாவின் பின்னணியில் ரஷ்யா, சீனா போன்ற உலகின் பெரும்சக்திகள் இருந்தன.

    எவரின் உதவியும் இல்லாமல், 23 தேசங்களின் ஆயுத, ஆளணி வளங்களையும் கொண்டு ஒரு சிறிய தேசத்தை, அதுவும் பெரும் பொருளாதார தடைகளைப்போட்டு , அறமற்ற வகையில் யுத்தத்தை நடத்தி வெற்றிகொள்ள சிங்களத்திற்கு அண்ணளவாக ஐந்து வருடங்களிற்கு மேல் தேவைப்பட்டிருக்கின்றது.

    இந்த உலகினையே எதிர்த்து, தன்னந்தனியாக நின்ற நாம் தோற்றதாக நான் நினைக்கவில்லை.
    இந்த உலகும், சிங்களமும் எம்மிடம் தோற்றதாகவே நான் நினைக்கின்றேன்.

    எம் வரலாறே எமது வழிகாட்டி..❤️❤️
    வெறும் ஒரு சில மணிநேரத்திலேயே வெனிசுவேலா அதிபரை கைது செய்ய அமெரிக்காவால் முடிந்திருக்கின்றது. இவ்வளவிற்கும் முப்படைகளையும் கொண்ட இறையான்மையுள்ள தேசம் வெனிசுவேலா. வெனிசுவேலாவின் பின்னணியில் ரஷ்யா, சீனா போன்ற உலகின் பெரும்சக்திகள் இருந்தன. எவரின் உதவியும் இல்லாமல், 23 தேசங்களின் ஆயுத, ஆளணி வளங்களையும் கொண்டு ஒரு சிறிய தேசத்தை, அதுவும் பெரும் பொருளாதார தடைகளைப்போட்டு , அறமற்ற வகையில் யுத்தத்தை நடத்தி வெற்றிகொள்ள சிங்களத்திற்கு அண்ணளவாக ஐந்து வருடங்களிற்கு மேல் தேவைப்பட்டிருக்கின்றது. இந்த உலகினையே எதிர்த்து, தன்னந்தனியாக நின்ற நாம் தோற்றதாக நான் நினைக்கவில்லை. இந்த உலகும், சிங்களமும் எம்மிடம் தோற்றதாகவே நான் நினைக்கின்றேன். எம் வரலாறே எமது வழிகாட்டி..❤️❤️
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • சங்ககால Soup boy

    இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம்.

    விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது.

    “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு
    மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
    ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப
    இறுவரை வீழ்நரின் நடுங்கி"

    தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது.

    மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    சங்ககால Soup boy இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம். விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது. “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல் ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப இறுவரை வீழ்நரின் நடுங்கி" தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது. மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • முல்லாவின் கதைகள்

    1. பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம;
    முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு
    பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில்
    என்ன சமையல் செய்தாலும் அவள் அதை
    மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி
    சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச்
    சொல்வாள்.
    அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம்
    முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை
    எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை.
    ஒருநாள் முல்லாவுக்கு "கோழிக்குஞ்சு சூப் '
    தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று
    ஆசையாக இருந்தது.
    'சூப் "தயார் செய்யச் சொல்லலாம் என
    மனைவியை அழைத்தார்.
    "
    மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது
    முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு
    வந்தது.
    வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை
    வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப்
    வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம்
    அவருக்கு ஏற்ப்பட்டது.
    "சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம்
    என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்.
    சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும்
    ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத்
    திறந்தார்.
    அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண்
    கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில்
    நின்று கொண்டிருந்தாள்.
    என்ன ? என முல்லா விசாரித்தார்.
    உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே
    ! அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு
    வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள்.
    முல்லா உரத்த குரலில் "ஒஹோஹோ" என்று
    சிரித்தார்.
    உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து
    "உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச்
    சிரிக்கிறீர்கள் ?" என்று கேட்டாள்.
    'இந்த வினோதத்தைப் பார் ?" இத்தனை
    காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான்
    அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம்
    சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச்
    சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச்
    சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான்
    நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி
    மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி
    மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று
    கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.
    முல்லாவின் கதைகள் 1. பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம; முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு "கோழிக்குஞ்சு சூப் ' தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. 'சூப் "தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். " மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. "சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன ? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே ! அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் "ஒஹோஹோ" என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து "உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள் ?" என்று கேட்டாள். 'இந்த வினோதத்தைப் பார் ?" இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • #வீட்டை_விட்டு_ஓடிப்_போய் #திருமணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்..

    அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் வேண்டாம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்.. என் கூட பிறந்தது இரண்டு அக்கா தங்கச்சி நான் ஒருவன் மட்டுமே நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்திருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் என் ஊரைச் சேர்ந்த ஒரு நர்சிங் படிக்கும் மாணவியுடன் காதல் வந்து.. நான் படித்து முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தேன் மாதம் 15 ஆயிரம் சம்பளம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு ரூம் எடுத்திருந்தோம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அதுபோக சாப்பாட்டு செலவுக்கு.

    நான் வேலை செய்யும் கம்பெனி நல்ல ஓவர் டைம் கிடைக்கும் ஆனால் நான் ஓவர் டைம் செய்ய மாட்டேன். நான் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவேன். காரணம் என் காதலியிடம் பேச வேண்டும் என்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பேன்...

    இரண்டு மாதம் வேலை செய்வேன். 10 நாள் லீவு எடுத்து வந்து என் காதலியே அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி பார்க் பீஜ் என்று பல இடங்களில் சுற்றுவோம்.. ஹோட்டல் சாப்பிடவும்.
    காதலிக்கு தேவையான துணிமணிகளை வாங்கி கொடுப்பேன் பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுப்பேன் அவளுக்காகவே நான் வேலை செய்தேன்... என் குடும்பத்துக்கும் என் அக்கா பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய மாட்டேன்... என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் காதலி மட்டும்தான்..

    இருவீட்டுஎதிர்ப்பையும் மீறி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் அவள் சம்மதத்துடன்.

    திருமணம் செய்த கையோடு அவளை நான் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டேன் நான் 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் தனியாக ரூம் எடுக்க வேண்டுமென்றால் 7500 வாடகை கொடுக்க வேண்டும்... அதுபோக சாப்பாடு செலவு இருக்கிறது. நான் வாங்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் ஓவர் டைம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஆளாகி உள்ளேன்..

    காதலிக்கும் போது அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன் இப்போது ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறேன் என் மனைவி என்னிடம் சண்டை போடுகிறாள்..
    நீ சரியாக என்னிடம் பாசங்க காட்ட மாட்டேங்கிறாய், அன்பாய் இருக்க மாட்டாக லேட்டா வீட்டுக்கு வருகிறாய்.

    நம் இருவரும் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தோம் அப்படி இருக்க வேண்டும்.

    என்னை பீஜ்க்கு கூட்டிட்டு போ பார்க்குகு கூப்பிட்டு போ சினிமா பார்க்க கூப்பிட்டு போ வெளியே சுத்த வேண்டும் என்று சொல்கிறாள். நான் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்தில் நான் என்ன செய்வது?

    காதலிக்கும் போது மாசம் ஆயிரம் ரூபாய் தான் ரூம் வாடகை 14,000 மிச்சம் இருக்கும் சாப்பாடு செலவு வேற இப்போது ஓவர் டைம் பார்க்கிறேன் ஆனால் கையில் காசு மிச்சமும் இல்லை.. ஆனால் இவள் ஊர் சுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் இப்போது மாசமா வேற இருக்கிறாள் .

    எங்க அம்மா அப்பாவிடம் பேசி உன்னை எங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் இல்லை நான் உன் கூட தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.😭😭
    எனக்கு #செத்து கூட போயிடலாமா என்று தோன்றுகிறது.அண்ணா.

    ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்பு எந்த பொறுப்பும் கிடையாது ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு எல்லா பொறுப்பும் வந்து விடுகிறது தன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நான் என்ன செய்வது...???
    #வீட்டை_விட்டு_ஓடிப்_போய் #திருமணம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.. அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் வேண்டாம் எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்.. என் கூட பிறந்தது இரண்டு அக்கா தங்கச்சி நான் ஒருவன் மட்டுமே நான் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்திருக்கிறேன். நான் படிக்கும் காலத்தில் என் ஊரைச் சேர்ந்த ஒரு நர்சிங் படிக்கும் மாணவியுடன் காதல் வந்து.. நான் படித்து முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தேன் மாதம் 15 ஆயிரம் சம்பளம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு ரூம் எடுத்திருந்தோம் மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.. அதுபோக சாப்பாட்டு செலவுக்கு. நான் வேலை செய்யும் கம்பெனி நல்ல ஓவர் டைம் கிடைக்கும் ஆனால் நான் ஓவர் டைம் செய்ய மாட்டேன். நான் ஐந்து மணிக்கு எல்லாம் வந்து விடுவேன். காரணம் என் காதலியிடம் பேச வேண்டும் என்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருப்பேன்... இரண்டு மாதம் வேலை செய்வேன். 10 நாள் லீவு எடுத்து வந்து என் காதலியே அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி பார்க் பீஜ் என்று பல இடங்களில் சுற்றுவோம்.. ஹோட்டல் சாப்பிடவும். காதலிக்கு தேவையான துணிமணிகளை வாங்கி கொடுப்பேன் பிறந்தநாள் கிப்ட் வாங்கி கொடுப்பேன் அவளுக்காகவே நான் வேலை செய்தேன்... என் குடும்பத்துக்கும் என் அக்கா பிள்ளைகளுக்கும் எதுவும் செய்ய மாட்டேன்... என் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் என் காதலி மட்டும்தான்.. இருவீட்டுஎதிர்ப்பையும் மீறி நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் அவள் சம்மதத்துடன். திருமணம் செய்த கையோடு அவளை நான் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டேன் நான் 15000 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் தனியாக ரூம் எடுக்க வேண்டுமென்றால் 7500 வாடகை கொடுக்க வேண்டும்... அதுபோக சாப்பாடு செலவு இருக்கிறது. நான் வாங்கும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பத்தாமல் ஓவர் டைம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நான் ஆளாகி உள்ளேன்.. காதலிக்கும் போது அஞ்சு மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வந்து விடுவேன் இப்போது ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறேன் என் மனைவி என்னிடம் சண்டை போடுகிறாள்.. நீ சரியாக என்னிடம் பாசங்க காட்ட மாட்டேங்கிறாய், அன்பாய் இருக்க மாட்டாக லேட்டா வீட்டுக்கு வருகிறாய். நம் இருவரும் திருமணத்துக்கு முன் எப்படி இருந்தோம் அப்படி இருக்க வேண்டும். என்னை பீஜ்க்கு கூட்டிட்டு போ பார்க்குகு கூப்பிட்டு போ சினிமா பார்க்க கூப்பிட்டு போ வெளியே சுத்த வேண்டும் என்று சொல்கிறாள். நான் வாங்கும் 15 ஆயிரம் சம்பளத்தில் நான் என்ன செய்வது? காதலிக்கும் போது மாசம் ஆயிரம் ரூபாய் தான் ரூம் வாடகை 14,000 மிச்சம் இருக்கும் சாப்பாடு செலவு வேற இப்போது ஓவர் டைம் பார்க்கிறேன் ஆனால் கையில் காசு மிச்சமும் இல்லை.. ஆனால் இவள் ஊர் சுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள் ஜாலியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாள் இப்போது மாசமா வேற இருக்கிறாள் . எங்க அம்மா அப்பாவிடம் பேசி உன்னை எங்க வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் இல்லை நான் உன் கூட தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள்.😭😭 எனக்கு #செத்து கூட போயிடலாமா என்று தோன்றுகிறது.அண்ணா. ஆண்களுக்கு கல்யாணத்துக்கு முன்பு எந்த பொறுப்பும் கிடையாது ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு எல்லா பொறுப்பும் வந்து விடுகிறது தன்னை நம்பி வந்த பெண்ணையும் காப்பாற்ற வேண்டும் அல்லவா நான் என்ன செய்வது...???
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • பட்டணத்து ஆள் ஒரு முறை கிராமத்துக்கு சென்றான். அங்கே ஒரு கொட்டகையில் இருக்கும் பெரியவரிடம் சென்று "ஐயா.. இந்த கொட்டகைகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?"...
    பெரியவர்: நீங்கள் ஆடுகளின் கொட்டகையை கேட்கிறீங்களா இல்ல... மாடுகளின் கொட்டகையை கேட்கிறீர்களா..

    மாடு கொட்டகை...

    மாடுகள் அனைத்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்..

    அப்ப ஆட்டுக் கூட்டத்தை..

    ஆட்டு கூட்டத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்..

    மாடு எம்புட்டு கட்டு வைக்கோல் சாப்பிடும்...

    பசுமாட்டை கேட்கிறீங்களா இல்லை எருமை மாட்டை கேட்கிறீங்களா...

    பசு மாடு எம்புட்டு கட்டு சாப்பிடும்..

    பசுமாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்...

    அப்ப எருமை மாடு?

    எருமை மாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்...

    😠😠😠

    என்ன பெரியவரே ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்ல வேண்டியது தானே...

    அதெப்படி சார்... ரெண்டும் வேற வேற உரிமையாளருடையது...

    பசுமாடு யாருடையது...

    பசுமாடு எங்க முதலாளியோடது...

    அப்ப எருமைமாடு?

    எருமைமாடு எங்க முதலாளியோடது..

    😳😳😳
    ( வந்தவர் மயங்கி விழுந்தார்...)


    பட்டணத்து ஆள் ஒரு முறை கிராமத்துக்கு சென்றான். அங்கே ஒரு கொட்டகையில் இருக்கும் பெரியவரிடம் சென்று "ஐயா.. இந்த கொட்டகைகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?"... பெரியவர்: நீங்கள் ஆடுகளின் கொட்டகையை கேட்கிறீங்களா இல்ல... மாடுகளின் கொட்டகையை கேட்கிறீர்களா.. மாடு கொட்டகை... மாடுகள் அனைத்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.. அப்ப ஆட்டுக் கூட்டத்தை.. ஆட்டு கூட்டத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்.. மாடு எம்புட்டு கட்டு வைக்கோல் சாப்பிடும்... பசுமாட்டை கேட்கிறீங்களா இல்லை எருமை மாட்டை கேட்கிறீங்களா... பசு மாடு எம்புட்டு கட்டு சாப்பிடும்.. பசுமாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்... அப்ப எருமை மாடு? எருமை மாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்... 😠😠😠 என்ன பெரியவரே ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்ல வேண்டியது தானே... அதெப்படி சார்... ரெண்டும் வேற வேற உரிமையாளருடையது... பசுமாடு யாருடையது... பசுமாடு எங்க முதலாளியோடது... அப்ப எருமைமாடு? எருமைமாடு எங்க முதலாளியோடது.. 😳😳😳 ( வந்தவர் மயங்கி விழுந்தார்...)
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...
    புருஷனோட Contact லிஸ்ட்ல
    Super Women,
    Sweet Heart,
    Dream Girl,
    Princess,
    Lovely Lady...
    இந்த பேரையெல்லாம் பார்த்து வெறி ஆயிட்டா..
    இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா..
    முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட #அம்மா அட்டெண்ட் பண்ணாங்க..
    ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவனோட #தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...
    மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (#மனைவி) அவளோட நம்பரு...
    நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது #மகளோட நம்பரு...
    கடைசி நம்பருக்கு கால் பண்ணா #மாமியார் நம்பரு...
    மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி
    'அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமே'ன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5,000 டாலர் பணத்தையும் கொடுத்து "போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க.. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். இந்த வாரம் போய்ட்டு வாங்க"ன்னு வழி அனுப்பி வச்சா அந்த புண்ணியவதி..
    வெளிய வந்த நம்மாளு #Mechanicன்னு save பண்ணி வச்சிருந்த அவன் #ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...
    #Moral of The Story:
    இதுக்கு தான் சொல்றது Men Are Always Menன்னு...
    Facebook
    புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா... புருஷனோட Contact லிஸ்ட்ல Super Women, Sweet Heart, Dream Girl, Princess, Lovely Lady... இந்த பேரையெல்லாம் பார்த்து வெறி ஆயிட்டா.. இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா.. முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட #அம்மா அட்டெண்ட் பண்ணாங்க.. ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவனோட #தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு... மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (#மனைவி) அவளோட நம்பரு... நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது #மகளோட நம்பரு... கடைசி நம்பருக்கு கால் பண்ணா #மாமியார் நம்பரு... மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி 'அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமே'ன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5,000 டாலர் பணத்தையும் கொடுத்து "போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க.. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். இந்த வாரம் போய்ட்டு வாங்க"ன்னு வழி அனுப்பி வச்சா அந்த புண்ணியவதி.. வெளிய வந்த நம்மாளு #Mechanicன்னு save பண்ணி வச்சிருந்த அவன் #ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்... #Moral of The Story: இதுக்கு தான் சொல்றது Men Are Always Menன்னு... Facebook
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அது உண்மைதான்.. ஒருவருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்றால் அது கூட ஆபத்தாக போய்விடுவதுண்டு.
    பழங்காலத்திலெல்லாம் கிரேக்க தேசத்தில் ஒரு பழக்கம் காணப்பட்டது. அதாவது யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால் அவருடைய பெயரை ஒரு மட்பாண்டத்தில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டுவிடுவார்கள். அவ்வளவுதான் இது மாதிரி பல பேர் போட்டுக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் குவிந்த உடன் அந்த சில்லுகளில் யாருடைய பெயர் அதிகமாக இருக்கிறதோ அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். அது அங்கே உள்ள வழக்கம்.

    ஒரு நாள் அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு சில்லு வைத்துக் கொண்டிருந்தான். யாருடைய பெயரையாவது எழுதி அந்த இடத்தில் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் படிக்காதவன். அதனால் எழுத தெரியவில்லை. யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

    ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் கையிலிருந்த மட்பாண்ட சில்லை கொடுத்தான். "ஐயா.. இதிலே ஒரு பெயர் எழுதி கொடுங்கள்" என்றார். அந்தப் பெரியவர் அதை கையில் வாங்கிக் கொண்டார்.

    " யாருடைய பெயரை எழுத வேண்டும்?" என்றார்.

    இவன் "அரிஸ்டோட்டில் என்று எழுதுங்கள்" என்றான். அதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.? ஏன் தெரியுமா அவர்தான் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். இருந்தாலும் தான் தான் அது என்பதை காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார்.

    "அதுசரி.. அரிஸ்டோட்டில் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அவர் பெயரை எழுதச் சொல்கிறாய்?" என்று கேட்டார் .

    "அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய வில்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை" என்றான்.

    "எதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?" என்று கேட்டார்.

    "அரிஸ்டோட்டில் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.. அவர் ரொம்ப நல்லவர். அவர் ஒரு பெரிய அறிவாளி. அவர் ஒரு பெரிய வள்ளல். பேரறிஞர். இப்படி எல்லோரும் சொல்வதை கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது.. அதனால் அவரை வெறுக்கிறேன்" என்று கூறினான்.

    இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நாம் நல்லவனாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை. எந்த தொல்லையும் இல்லை. ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று அடுத்தவர்கள் எப்போது சொல்ல ஆரம்பிக்கிறார்களோ அன்றிலிருந்து தான் நமக்கு இடைஞ்சல் ஆரம்பமாகிறது. எனவே எதுவுமே அளவுக்கு மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அது உண்மைதான்.. ஒருவருக்கு அளவுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்றால் அது கூட ஆபத்தாக போய்விடுவதுண்டு. பழங்காலத்திலெல்லாம் கிரேக்க தேசத்தில் ஒரு பழக்கம் காணப்பட்டது. அதாவது யாரையாவது நாடு கடத்த வேண்டும் என்று அந்த மக்கள் விரும்பினால் அவருடைய பெயரை ஒரு மட்பாண்டத்தில் எழுதி அதை ஒரு குறிப்பிட்ட பொது இடத்தில் போட்டுவிடுவார்கள். அவ்வளவுதான் இது மாதிரி பல பேர் போட்டுக்கொண்டே இருப்பார்கள். எல்லாம் குவிந்த உடன் அந்த சில்லுகளில் யாருடைய பெயர் அதிகமாக இருக்கிறதோ அந்த நபரை ஒரு பத்து ஆண்டுகள் நாடு கடத்தி விடுவார்கள். அது அங்கே உள்ள வழக்கம். ஒரு நாள் அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு ஆள் நின்றுக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு சில்லு வைத்துக் கொண்டிருந்தான். யாருடைய பெயரையாவது எழுதி அந்த இடத்தில் போட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் படிக்காதவன். அதனால் எழுத தெரியவில்லை. யாராவது அந்த வழியாக வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். ஒரு பெரியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஓடினான் கையிலிருந்த மட்பாண்ட சில்லை கொடுத்தான். "ஐயா.. இதிலே ஒரு பெயர் எழுதி கொடுங்கள்" என்றார். அந்தப் பெரியவர் அதை கையில் வாங்கிக் கொண்டார். " யாருடைய பெயரை எழுத வேண்டும்?" என்றார். இவன் "அரிஸ்டோட்டில் என்று எழுதுங்கள்" என்றான். அதைக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு அதிர்ச்சி.? ஏன் தெரியுமா அவர்தான் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். இருந்தாலும் தான் தான் அது என்பதை காட்டிக் கொள்ளாமல் அந்த நபரிடம் கேட்டார். "அதுசரி.. அரிஸ்டோட்டில் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அவர் பெயரை எழுதச் சொல்கிறாய்?" என்று கேட்டார் . "அவர் எனக்கு எந்தக் கெடுதலும் செய்ய வில்லை. அவரை நான் பார்த்ததுகூட இல்லை" என்றான். "எதற்காக அவரை நாடு கடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறாய்?" என்று கேட்டார். "அரிஸ்டோட்டில் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.. அவர் ரொம்ப நல்லவர். அவர் ஒரு பெரிய அறிவாளி. அவர் ஒரு பெரிய வள்ளல். பேரறிஞர். இப்படி எல்லோரும் சொல்வதை கேட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது.. அதனால் அவரை வெறுக்கிறேன்" என்று கூறினான். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நாம் நல்லவனாக இருப்பதில் தவறு ஏதும் இல்லை. எந்த தொல்லையும் இல்லை. ஆனால் நம்மை நல்லவன் நல்லவன் என்று அடுத்தவர்கள் எப்போது சொல்ல ஆரம்பிக்கிறார்களோ அன்றிலிருந்து தான் நமக்கு இடைஞ்சல் ஆரம்பமாகிறது. எனவே எதுவுமே அளவுக்கு மீறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் !

    அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
    கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

    அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி.
    வயது 24.
    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்.

    கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு.
    அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
    “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?”

    ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை .
    பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !”

    நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.”

    ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

    ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ?

    “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

    “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

    “உங்கள் அப்பா அம்மா..?”

    ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ”

    நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

    ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.”

    “ஓஹோ”

    நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
    ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

    நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
    ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
    “இல்லை...”
    இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?”
    “இல்லை.”

    வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
    நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் :
    “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

    நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார்.

    அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க...
    டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?”

    ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?”

    நிருபர்கள் சற்றே குழப்பத்துடன்,
    “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...”

    ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ?
    ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
    “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !”

    திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

    ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் :
    “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்."

    நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

    ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
    நான் வரட்டுமா ?”

    ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

    “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..."

    John Durai Asir Chelliah
    சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் ! அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள். அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி. வயது 24. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார். கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு. அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.” ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ? “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....” “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?” “உங்கள் அப்பா அம்மா..?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.” “ஓஹோ” நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை...” இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?” “இல்லை.” வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?” நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார். அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க... டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?” ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழப்பத்துடன், “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ? ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !” திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் : “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்." நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் . ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..." John Durai Asir Chelliah
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் !

    அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
    கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

    அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி.
    வயது 24.
    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்.

    கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு.
    அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
    “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?”

    ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை .
    பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !”

    நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.”

    ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

    ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ?

    “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

    “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

    “உங்கள் அப்பா அம்மா..?”

    ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ”

    நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

    ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.”

    “ஓஹோ”

    நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
    ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

    நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
    ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
    “இல்லை...”
    இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?”
    “இல்லை.”

    வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
    நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் :
    “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

    நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார்.

    அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க...
    டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?”

    ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?”

    நிருபர்கள் சற்றே குழப்பத்துடன்,
    “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...”

    ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ?
    ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
    “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !”

    திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

    ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் :
    “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்."

    நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

    ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
    நான் வரட்டுமா ?”

    ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

    “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..."

    John Durai Asir Chelliah
    சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் ! அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள். அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி. வயது 24. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார். கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு. அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.” ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ? “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....” “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?” “உங்கள் அப்பா அம்மா..?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.” “ஓஹோ” நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை...” இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?” “இல்லை.” வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?” நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார். அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க... டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?” ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழப்பத்துடன், “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ? ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !” திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் : “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்." நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் . ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..." John Durai Asir Chelliah
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • 👌👌👌👌

    இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்..
    *
    வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார்.
    *
    "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.
    *
    உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் "
    *
    இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர்,
    *
    நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார்.
    *
    "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .."
    *
    நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
    *
    நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு கோமியம் ஆச்சே" என்று அலறினார் இவர்.
    *
    "Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "
    *
    உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.
    *
    ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.
    *
    " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார்.
    *
    " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
    *
    " அய்யோ டாக்டர்,அது மாட்டு கோமியம் ஆச்சே " என்று அலறினார் இவர்..
    *
    "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க "
    *
    இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்!
    *
    " எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார்.
    *
    " Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர்
    *
    "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர்.
    *
    " Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் "
    *
    பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.!
    *
    படிப்பாவது..கிடிப்பாவது?மூனாங் கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும்,நாடு இது!
    👌👌👌👌 இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. * வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். * "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். * உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " * இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், * நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். * "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." * நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு கோமியம் ஆச்சே" என்று அலறினார் இவர். * "Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " * உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். * ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். * " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். * " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * " அய்யோ டாக்டர்,அது மாட்டு கோமியம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. * "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க " * இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்! * " எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார். * " Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் * "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். * " Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் " * பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.! * படிப்பாவது..கிடிப்பாவது?மூனாங் கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும்,நாடு இது!
    0 Reacties ·0 aandelen ·1K Views ·0 voorbeeld
  • எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள்.

    பெரும்பாலும் இளவயது திருமணம்!

    அவர்கள் அறியாமலே
    உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம்
    செய்திருப்பார்கள்.

    வயசுக்கு வந்து ஓராண்டு முடிய
    மணம் புரிந்தவர்களே அதிகம்.

    சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு.

    பெண்களை அப்போது கல்வி தொழில்
    என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை.

    எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள்.

    பெண்கள் எங்கும் தனியாக செல்ல
    மாட்டார்கள்.
    பெண்கள் எந்த வாகனமும்
    ஓட்டமாட்டார்கள்.
    பெண்களின் கடமை வீட்டுவேலை
    குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது.

    தாத்தாமார் குசும்பனுகள்
    பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு
    செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய்
    இருந்தவர்கள் அதிகம்.
    ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள்.
    அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம்.

    பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு
    வயதில் திருமணம் செய்ததால்தான்
    பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள்.

    குழந்தைகள் அதிகமாக பெற காரணம்
    குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை.

    பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது
    வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு
    பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து
    பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு.

    சிறுவயதில் திருமணம் செய்ததால்
    பேரன் பேத்தி கொள்ளு பேரன்
    கண்டு இறந்தவர்களே அதிகம்.

    இதைவிட அவர்களது உணவு பழக்க
    வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக
    இருந்ததால் நோய் நொடியின்றி
    நீண்ட காலம் வாழ்ந்தனர்.

    இயற்கையை நேசித்த மனிதர்களாய்
    வாழப்பழகியதால் இயற்கை அவர்களை
    வாழ அனுமதித்தது.

    இப்போது தலைமுறை இடைவெளி
    கல்வி, சுகாதாரம், மருத்துவம்,
    செயற்கை உணவுகள் , மனித சிந்தனை,
    முதுநிலை வயது , திருமணம்,
    குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து
    பணத்தை நோக்கிய பார்வை,
    தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும்
    கூட்டுக்குடும்பம் இல்லாது போன
    சுயநலத்தாலும் பெண்ணினத்தின்
    சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள்
    என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக
    போய்விட்டது.

    உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது
    தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால்
    பாருங்கள்,
    குழந்தைகளை பெறுவதையே கேலியாக
    நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும்.

    அதைவிட திருமணம் இல்லாது போகும்.

    பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான்
    விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க
    கூடியவாறு சமூகம் மாறும்.

    மனித ஆயுள் குறுகும்.
    எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள்.
    இதுதான் உண்மை நிலை.

    மூதாதையர் அழகாய் உருவாக்கிய
    குலத்தை இனிவரும் சந்ததிகள்
    நன்றி வணக்கம் போட்டு முடித்து
    வைப்பார்கள்.

    இதுதான் காலத்தின் அழிவு என்பது
    மனிதன் தன்னைத்தானே அழித்து
    கொள்ள ஆயிரம் வழிகளை தானே
    உருவாக்குவான்.

    கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும்
    அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட
    போர், யுத்தம் , இனவெறி , பணவெறி
    மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற
    மருத்துவம் என்பவற்றாலும்
    உணவுப்பொருளை உற்பத்தி செய்யும்
    தலைமுறை அழிந்தும் போக மனித
    இனம் மீண்டும் பழைய படி கோவணம்
    குறுக்குகளோடு அதனை பாஷன் என்று
    சொல்லி அணியும் காலம் வெகு
    தொலைவில் இல்லை.

    #இரசித்தது
    எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் இளவயது திருமணம்! அவர்கள் அறியாமலே உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம் செய்திருப்பார்கள். வயசுக்கு வந்து ஓராண்டு முடிய மணம் புரிந்தவர்களே அதிகம். சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு. பெண்களை அப்போது கல்வி தொழில் என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை. எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். பெண்கள் எங்கும் தனியாக செல்ல மாட்டார்கள். பெண்கள் எந்த வாகனமும் ஓட்டமாட்டார்கள். பெண்களின் கடமை வீட்டுவேலை குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது. தாத்தாமார் குசும்பனுகள் பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய் இருந்தவர்கள் அதிகம். ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள். அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம். பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு வயதில் திருமணம் செய்ததால்தான் பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள். குழந்தைகள் அதிகமாக பெற காரணம் குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை. பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு. சிறுவயதில் திருமணம் செய்ததால் பேரன் பேத்தி கொள்ளு பேரன் கண்டு இறந்தவர்களே அதிகம். இதைவிட அவர்களது உணவு பழக்க வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். இயற்கையை நேசித்த மனிதர்களாய் வாழப்பழகியதால் இயற்கை அவர்களை வாழ அனுமதித்தது. இப்போது தலைமுறை இடைவெளி கல்வி, சுகாதாரம், மருத்துவம், செயற்கை உணவுகள் , மனித சிந்தனை, முதுநிலை வயது , திருமணம், குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து பணத்தை நோக்கிய பார்வை, தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும் கூட்டுக்குடும்பம் இல்லாது போன சுயநலத்தாலும் பெண்ணினத்தின் சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள் என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக போய்விட்டது. உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால் பாருங்கள், குழந்தைகளை பெறுவதையே கேலியாக நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும். அதைவிட திருமணம் இல்லாது போகும். பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான் விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க கூடியவாறு சமூகம் மாறும். மனித ஆயுள் குறுகும். எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள். இதுதான் உண்மை நிலை. மூதாதையர் அழகாய் உருவாக்கிய குலத்தை இனிவரும் சந்ததிகள் நன்றி வணக்கம் போட்டு முடித்து வைப்பார்கள். இதுதான் காலத்தின் அழிவு என்பது மனிதன் தன்னைத்தானே அழித்து கொள்ள ஆயிரம் வழிகளை தானே உருவாக்குவான். கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும் அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட போர், யுத்தம் , இனவெறி , பணவெறி மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற மருத்துவம் என்பவற்றாலும் உணவுப்பொருளை உற்பத்தி செய்யும் தலைமுறை அழிந்தும் போக மனித இனம் மீண்டும் பழைய படி கோவணம் குறுக்குகளோடு அதனை பாஷன் என்று சொல்லி அணியும் காலம் வெகு தொலைவில் இல்லை. #இரசித்தது
    0 Reacties ·0 aandelen ·2K Views ·0 voorbeeld
Zoekresultaten
Idaivelai.com https://idaivelai.com