சங்ககால Soup boy

இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம்.

விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது.

“வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி"

தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது.

மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
சங்ககால Soup boy இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம். விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது. “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல் ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப இறுவரை வீழ்நரின் நடுங்கி" தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது. மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com