உங்கள் பதிவு....

உங்களுக்காக ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து நீங்களும் உங்களுடைய பதிவுகளை இங்கே பதிவு செய்ய முடியும். 

Recent Updates
  • காட்டுனா .. நான் என் வீட்டில இருந்தத விட வெளியூர் நண்பர்கள் வீட்டில தான் இருப்பேன்
    காட்டுனா .. நான் என் வீட்டில இருந்தத விட வெளியூர் நண்பர்கள் வீட்டில தான் இருப்பேன்
    0 Comments ·0 Shares ·188 Views ·0 Reviews
  • மனிதன் மிருகத்தைக்கூட விட்டுவைக்கவில்லை ஏமாற்றுவதில்
    மனிதன் மிருகத்தைக்கூட விட்டுவைக்கவில்லை ஏமாற்றுவதில்
    0 Comments ·0 Shares ·189 Views ·2 Plays ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·179 Views ·0 Reviews
  • என்னதான் அதிகமான வாக்கு செலுத்தினாலும் காசு கொடுத்து வாங்கிய வாக்கு தான் பெருமைப்பட ஒன்னுமே இல்லை...
    என்னதான் அதிகமான வாக்கு செலுத்தினாலும் காசு கொடுத்து வாங்கிய வாக்கு தான் பெருமைப்பட ஒன்னுமே இல்லை...
    0 Comments ·0 Shares ·196 Views ·0 Reviews
  • மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள்.

    மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

    மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன.

    பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil

    பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம்,

    இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA

    அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

    அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன.

    வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது.

    ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway
    மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

    இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China
    சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது.

    அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia
    ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது.

    மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள். மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன. வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது. ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது. அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது. மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    0 Comments ·0 Shares ·8K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·8K Views ·1 Plays ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·8K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·8K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·8K Views ·0 Reviews
  • ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Comments ·0 Shares ·10K Views ·0 Reviews
  • கிரிக்கெட் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிவதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டுவது என்பது தனி ஒரு கலை!

    2015 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தில்ஷன் செய்த அந்த தரமான சம்பவம் இன்றும் நம் கண்களுக்குள் நிற்கிறது.

    மிட்செல் ஜான்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது என்பதே பலருக்கு சவாலாக இருந்த காலத்தில், அந்த ஓவரை தில்ஷன் தன் ஆளுமையால் கட்டிப்போட்டார்.

    முதல் பந்தை மிட்-ஆப் திசையில் தட்டிவிட்டு பவுண்டரியை கணக்கைத் தொடங்கியவர், அடுத்தடுத்த பந்துகளில் கார்னர், கவர்ஸ், மற்றும் தனக்கே உரித்தான ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார்.

    ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைத் தொடும்போது ஆஸ்திரேலிய அணியின் முகத்தில் தெரிந்த அந்த திகைப்பு, திலஷனின் பேட்டிங் வலிமைக்குச் சாட்சி.

    பவுலர்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்றினாலும், தில்ஷன் அன்று வேறொரு மனநிலையில் இருந்தார். ஒரு ஓவரில் ஆறு ஃபோர்கள் அடிப்பது என்பது வெறும் டைமிங் மட்டுமல்ல, அது பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையை மொத்தமாகச் சிதைக்கும் ஒரு யுத்தி.

    கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை!

    #cricket #tamilcricket #NationalChampionship #Dilshan #cricketlovers
    கிரிக்கெட் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிக்சர் மழை பொழிவதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டுவது என்பது தனி ஒரு கலை! 2015 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தில்ஷன் செய்த அந்த தரமான சம்பவம் இன்றும் நம் கண்களுக்குள் நிற்கிறது. மிட்செல் ஜான்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வது என்பதே பலருக்கு சவாலாக இருந்த காலத்தில், அந்த ஓவரை தில்ஷன் தன் ஆளுமையால் கட்டிப்போட்டார். முதல் பந்தை மிட்-ஆப் திசையில் தட்டிவிட்டு பவுண்டரியை கணக்கைத் தொடங்கியவர், அடுத்தடுத்த பந்துகளில் கார்னர், கவர்ஸ், மற்றும் தனக்கே உரித்தான ஷாட்கள் மூலம் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடித்தார். ஒவ்வொரு பந்தும் எல்லைக்கோட்டைத் தொடும்போது ஆஸ்திரேலிய அணியின் முகத்தில் தெரிந்த அந்த திகைப்பு, திலஷனின் பேட்டிங் வலிமைக்குச் சாட்சி. பவுலர்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்றினாலும், தில்ஷன் அன்று வேறொரு மனநிலையில் இருந்தார். ஒரு ஓவரில் ஆறு ஃபோர்கள் அடிப்பது என்பது வெறும் டைமிங் மட்டுமல்ல, அது பந்துவீச்சாளரின் தன்னம்பிக்கையை மொத்தமாகச் சிதைக்கும் ஒரு யுத்தி. கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை! #cricket #tamilcricket #NationalChampionship #Dilshan #cricketlovers
    0 Comments ·0 Shares ·10K Views ·0 Reviews
  • 🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம்

    செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம்.
    இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை.

    👉 இது உண்மையில்:

    • இரத்த ஓட்டம் குறைவது
    • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது
    • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது
    • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation)

    இதனால் உருவாகும் ஒரு நிலை.

    ---

    🔍 நாம் வெளியில் பார்க்குவது

    தோலில்:

    • குழிகள்
    • ஆரஞ்சு தோல் போல uneven texture

    ஏன் வருகிறது?

    • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும்
    • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும்
    • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும்

    ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது.

    ---

    🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது?

    • கொழுப்பு செல்கள் பெரிதாகும்
    • லிம்ப் நாளங்கள் அடைபடும்
    • இரத்த நாளங்கள் சுருங்கும்
    • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது

    ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது.

    ---

    💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம்

    லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹

    அது:

    • அதிக நீரை வெளியேற்றும்
    • கழிவுகளை நீக்கும்
    • அழற்சியை குறைக்கும்
    • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்

    ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை.

    அது இயங்க வேண்டுமெனில்:

    • உடல் இயக்கம்
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம் குடித்தல்
    • மன அமைதி

    தேவை.

    ---

    🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்:

    • நீர் தேங்கும்
    • கொழுப்பு செல்கள் வீங்கும்
    • அழற்சி அதிகரிக்கும்
    • தோல் கடினமாகும்

    ➡️ இதுவே செல்லுலைட்.

    ---

    👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்?

    ஏனெனில்:

    • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும்
    • நீண்ட நேரம் உட்கார்வது
    • இப்பகுதியில் கொழுப்பு அதிகம்
    • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம்
    • லிம்ப் பாதை நீளம் அதிகம்

    ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும்.

    ---

    ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை

    நீங்கள்:

    • எடை குறைத்தாலும்
    • தினமும் exercise செய்தாலும்
    • நல்ல உணவு சாப்பிட்டாலும்

    செல்லுலைட் இருக்கலாம்.

    ஏனெனில் இது:

    • திரவ அழுத்தம்
    • தோல் திசு இறுக்கம்
    • லிம்ப் அடைப்பு
    • இரத்த ஓட்டம்
    • உடல் அழற்சி

    இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை.

    ---

    🧠 ஹார்மோன் & மன அழுத்தம்

    அதிக stress & hormone imbalance:

    • தோல் திசுக்களை கடினமாக்கும்
    • லிம்ப் நாளங்களை சுருக்கும்
    • நீர் தேங்க வைக்கும்

    ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை.

    ---

    🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது?

    கிரீம்கள்:

    • தோலை மென்மையாக்கும்
    • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

    ஆனால்:

    • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது
    • உள்ளழற்சியை நீக்காது

    உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான்.

    ---

    🌿 உண்மையான தீர்வு

    உதவி செய்ய வேண்டியது:

    • லிம்ப் drainage
    • உடல் stretching / massage
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம்
    • அழற்சி குறைக்கும் உணவு
    • மன அமைதி

    இதனால்:

    • நீர் தேக்கம் குறையும்
    • கொழுப்பு மென்மையாகும்
    • தோல் மென்மையாகும்

    ---

    🤍 முடிவு

    செல்லுலைட்:

    ❌ உடல் குறை இல்லை
    ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி

    👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை.
    👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது.

    உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚

    ---

    #CelluliteAwareness
    #LymphaticHealth
    #WomenHealthTamil
    #BodyScience
    #SkinHealth
    #NaturalHealing
    #TamilHealthTips
    #WellnessTamil
    #HormoneHealth
    #HealthyBodyMind
    #NoBodyShaming
    #RealWomenRealBodies
    #InflammationAwareness
    #SelfCareTamil
    #HealthEducation
    🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம் செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம். இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை. 👉 இது உண்மையில்: • இரத்த ஓட்டம் குறைவது • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation) இதனால் உருவாகும் ஒரு நிலை. --- 🔍 நாம் வெளியில் பார்க்குவது தோலில்: • குழிகள் • ஆரஞ்சு தோல் போல uneven texture ஏன் வருகிறது? • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும் • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும் • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும் ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது. --- 🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது? • கொழுப்பு செல்கள் பெரிதாகும் • லிம்ப் நாளங்கள் அடைபடும் • இரத்த நாளங்கள் சுருங்கும் • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது. --- 💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம் லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹 அது: • அதிக நீரை வெளியேற்றும் • கழிவுகளை நீக்கும் • அழற்சியை குறைக்கும் • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை. அது இயங்க வேண்டுமெனில்: • உடல் இயக்கம் • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் குடித்தல் • மன அமைதி தேவை. --- 🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்: • நீர் தேங்கும் • கொழுப்பு செல்கள் வீங்கும் • அழற்சி அதிகரிக்கும் • தோல் கடினமாகும் ➡️ இதுவே செல்லுலைட். --- 👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்? ஏனெனில்: • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும் • நீண்ட நேரம் உட்கார்வது • இப்பகுதியில் கொழுப்பு அதிகம் • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம் • லிம்ப் பாதை நீளம் அதிகம் ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும். --- ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை நீங்கள்: • எடை குறைத்தாலும் • தினமும் exercise செய்தாலும் • நல்ல உணவு சாப்பிட்டாலும் செல்லுலைட் இருக்கலாம். ஏனெனில் இது: • திரவ அழுத்தம் • தோல் திசு இறுக்கம் • லிம்ப் அடைப்பு • இரத்த ஓட்டம் • உடல் அழற்சி இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை. --- 🧠 ஹார்மோன் & மன அழுத்தம் அதிக stress & hormone imbalance: • தோல் திசுக்களை கடினமாக்கும் • லிம்ப் நாளங்களை சுருக்கும் • நீர் தேங்க வைக்கும் ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை. --- 🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது? கிரீம்கள்: • தோலை மென்மையாக்கும் • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆனால்: • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது • உள்ளழற்சியை நீக்காது உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான். --- 🌿 உண்மையான தீர்வு உதவி செய்ய வேண்டியது: • லிம்ப் drainage • உடல் stretching / massage • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் • அழற்சி குறைக்கும் உணவு • மன அமைதி இதனால்: • நீர் தேக்கம் குறையும் • கொழுப்பு மென்மையாகும் • தோல் மென்மையாகும் --- 🤍 முடிவு செல்லுலைட்: ❌ உடல் குறை இல்லை ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி 👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை. 👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது. உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚 --- #CelluliteAwareness #LymphaticHealth #WomenHealthTamil #BodyScience #SkinHealth #NaturalHealing #TamilHealthTips #WellnessTamil #HormoneHealth #HealthyBodyMind #NoBodyShaming #RealWomenRealBodies #InflammationAwareness #SelfCareTamil #HealthEducation
    0 Comments ·0 Shares ·11K Views ·0 Reviews
More Stories
Idaivelai.com https://idaivelai.com