• ஒரு இயற்கை மரணம்
    எத்தனை பேரை வாழ வைக்கிறது
    என்று பாருங்கள்...

    1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்..

    2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார்.

    3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி
    மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்..

    4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்..

    6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார்.

    7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார்.

    8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள்.

    10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்..

    12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார்

    14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு
    கடைக்காரன் லாபம் அடைகிறார்.

    15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார்.

    16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்.....

    ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்...

    மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்....

    இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே...

    ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

    இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    ஒரு இயற்கை மரணம் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்று பாருங்கள்... 1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்.. 2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார். 3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்.. 4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்.. 6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார். 7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார். 8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள். 10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்.. 12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார் 14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரன் லாபம் அடைகிறார். 15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார். 16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்..... ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்... மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்.... இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே... ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும். இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் .
    ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ...
    அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ...

    உழைப்பே உயர்வு தரும் ...
    கல்வியே சிறந்த செல்வம் ...
    நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ...

    இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை,

    தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் ,
    அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் ,
    நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ...

    இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான்.

    இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் .

    இது பொறாமை இல்லை . ஆதங்கம் ...

    "Stop making stupid people famous"

    #Stop_making_stupid_people_famous
    எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் . ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ... அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ... உழைப்பே உயர்வு தரும் ... கல்வியே சிறந்த செல்வம் ... நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ... இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை, தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் , அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் , நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ... இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான். இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் . இது பொறாமை இல்லை . ஆதங்கம் ... "Stop making stupid people famous" #Stop_making_stupid_people_famous
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!..

    பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம

    தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு.

    தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது

    அன்றைய இளைஞர் கூட்டம்.

    ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது.

    இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு.

    லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர்.

    61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது.

    டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார்.

    கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!..

    கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார்.

    எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும்.

    சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம்.

    அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை.

    - இது ஒரு இணைய தள பதிவு!
    யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு. தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது அன்றைய இளைஞர் கூட்டம். ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது. இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு. லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர். 61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது. டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார். கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!.. கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார். எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும். சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம். அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை. - இது ஒரு இணைய தள பதிவு!
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • சங்ககால Soup boy

    இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம்.

    விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது.

    “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு
    மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
    ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப
    இறுவரை வீழ்நரின் நடுங்கி"

    தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது.

    மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    சங்ககால Soup boy இரு பாலரும் காதலித்து அதன்பின் காதலி,காதலனை கைவிட்டால் அந்த ஆடவருக்கு "Soup boy" என தற்போதைய தலைமுறை பெயர் சூட்டியுள்ளதை பார்த்துள்ளோம். விரக்தியடைந்த ஆடவன் காதலி வீட்டுமுன் சென்று"என்னம்மா இப்டி பன்றிங்களேமா" என சோமபானம் அருந்தி கலாட்டா செய்வதை திரைப்படங்களில் கண்டுள்ளோம். இதைப்போல காதலியால் கைவிடப்பட்டு கடைசியில் வேறுவழியின்றி அந்த காதலியை உட்சபட்சமாய் அவமானப்படுத்தப்படும் நிகழ்வு "மடலேறும் நிலை" என சங்க இலக்கியம் சுட்டுகிறது. “வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல் ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப இறுவரை வீழ்நரின் நடுங்கி" தன் காதல் கைகூடாத நிலையில் இறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை மேற்கண்ட அகப்பாடல் குறிக்கிறது. மடல் என்பது பனைமட்டை, ஓலையைக் குறிக்கும். இவற்றைக்கொண்டு குதிரை மாதிரி ஒரு பதுமைகட்டி ஊரில் தெருவில் மன்றத்தில் நிறுத்தி அதன் மேலமர்ந்து காதலன் அணியக்கூடாத பூக்களை அணிந்து தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய பெண் இவள்தான் என்று ஊரார்க்கு அறியச் செய்வான். அதனால் அக்குழுவினுள் நெருக்கடி ஏற்பட்டு அந்தப் பெண்ணை அவனுக்கு மணம் செய்து வைத்த வழக்கம் மிகவும் தொன்மையானது. தொல்காப்பியம் மடலேறுதல் துறையைப் பெருந்திணை என்ற ஒவ்வாக்காமத்தில் அடக்கித் தண்டித்தது. குறிஞ்சி, நெய்தல் திணைகளில் கைக்கிளைக் காமத்தில் வைத்துப் பாடப்பட்டது.
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • திருகோணமலை கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் (Trinco-5) படு*கொ*லை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதும் இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார்

    திருகோணமலையில் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர கடைமையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்தின் ஏற்பாட்டில் திட்டமிட்டு இந்த படு*கொ*லைகளை நடத்தியிருந்தார்

    இந்த சம்பவத்தில் கொ*ல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காலம் சென்ற டாக்டர் மனோகரன் வழங்கிய சத்தியக்கடதாசியில், சம்பவம் நடந்த அன்று மாலை காந்தி சிலைக்கு அருகே எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகரவின் பிக்கப் வாகனம் (pick- up truck) சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    அந்த வாகனத்தில் முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் இருந்ததையும், அவர் கடந்து சென்ற பிறகு சோதனைச் சாவடிகளில் இருந்த கடற்படையினர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர சென்றுவிட்டார், இனி நாம் உள்ளே செல்லலாம் என்று பேசிக்கொண்டதையும் பதிவு செய்திருக்கின்றார்

    சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, கடற்கரையில் பணியிலிருந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை அசம்பாவிதம் நடக்கப்போவதாகக் கூறி எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர வெளியேறியிருக்கின்றார் என்கின்ற தகவலையும் இந்த கொடூரம் ஒரு திட்டமிட்ட சம்பவம் என்பதற்கு ஆதாரமாக பதிவு செய்திருக்கின்றார்

    அதே போல திருகோணமலை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டி, கொ*ல்லப்பட்டவர்கள் பு*லி உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கவும் எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர முயன்றிருந்தார்

    இது போதாதென்று சம்பவ இடத்தில் து*ப்பாக்கிக் கா*யங்களை மறைத்து கு*ண்டு வெ*டிப்பினால் மரணம் நிகழ்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கவும் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர முயற்சி செய்திருந்தார்

    இது மாத்திரமின்றி ஜனவரி 10, 2006 அன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பிறகு டாக்டர் மனோகரன் வீடு திரும்பியபோது, ​​முகமூடி அணிந்த இராணுவத்தினர் சகிதம் எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவின் வாகனம் அவரது வீட்டிற்கு வெளியே அச்சுறுத்தும் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அதே இரவில், டாக்டர் மனோகரன் வீடடின் கூரையின் மீது கற்கள் வீசப்பட்டதோடு தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் திருகோணமலையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டனர்

    இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத அட்டூழியங்களை தொடர்ச்சியாக செய்த கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவிற்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்த போதிலும் நீதியின் முன் நிறுத்தாமல் பதவி உயர்வுகள் வழங்கி கெளரவித்தார்கள்

    அதாவது 1982 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டமைப்பில் சப் இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் சம்பவத்தின் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி கொண்டிருந்தார்

    தற்போது இராணுவ ஒட்டுக்குழுக்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை ஏவி நாடகமாடும் ஜேவிபி ஆட்சியாளர்கள் கூட திருகோணமலை படுகொலை சூத்திரதாரி எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர மீதும் குண்டூசி கூட படாமல் பாதுகாக்கின்றார்கள்
    திருகோணமலை கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் (Trinco-5) படு*கொ*லை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதும் இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் திருகோணமலையில் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர கடைமையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்தின் ஏற்பாட்டில் திட்டமிட்டு இந்த படு*கொ*லைகளை நடத்தியிருந்தார் இந்த சம்பவத்தில் கொ*ல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காலம் சென்ற டாக்டர் மனோகரன் வழங்கிய சத்தியக்கடதாசியில், சம்பவம் நடந்த அன்று மாலை காந்தி சிலைக்கு அருகே எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகரவின் பிக்கப் வாகனம் (pick- up truck) சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தில் முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் இருந்ததையும், அவர் கடந்து சென்ற பிறகு சோதனைச் சாவடிகளில் இருந்த கடற்படையினர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர சென்றுவிட்டார், இனி நாம் உள்ளே செல்லலாம் என்று பேசிக்கொண்டதையும் பதிவு செய்திருக்கின்றார் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, கடற்கரையில் பணியிலிருந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை அசம்பாவிதம் நடக்கப்போவதாகக் கூறி எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர வெளியேறியிருக்கின்றார் என்கின்ற தகவலையும் இந்த கொடூரம் ஒரு திட்டமிட்ட சம்பவம் என்பதற்கு ஆதாரமாக பதிவு செய்திருக்கின்றார் அதே போல திருகோணமலை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டி, கொ*ல்லப்பட்டவர்கள் பு*லி உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கவும் எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர முயன்றிருந்தார் இது போதாதென்று சம்பவ இடத்தில் து*ப்பாக்கிக் கா*யங்களை மறைத்து கு*ண்டு வெ*டிப்பினால் மரணம் நிகழ்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கவும் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர முயற்சி செய்திருந்தார் இது மாத்திரமின்றி ஜனவரி 10, 2006 அன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பிறகு டாக்டர் மனோகரன் வீடு திரும்பியபோது, ​​முகமூடி அணிந்த இராணுவத்தினர் சகிதம் எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவின் வாகனம் அவரது வீட்டிற்கு வெளியே அச்சுறுத்தும் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே இரவில், டாக்டர் மனோகரன் வீடடின் கூரையின் மீது கற்கள் வீசப்பட்டதோடு தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் திருகோணமலையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டனர் இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத அட்டூழியங்களை தொடர்ச்சியாக செய்த கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவிற்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்த போதிலும் நீதியின் முன் நிறுத்தாமல் பதவி உயர்வுகள் வழங்கி கெளரவித்தார்கள் அதாவது 1982 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டமைப்பில் சப் இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் சம்பவத்தின் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி கொண்டிருந்தார் தற்போது இராணுவ ஒட்டுக்குழுக்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை ஏவி நாடகமாடும் ஜேவிபி ஆட்சியாளர்கள் கூட திருகோணமலை படுகொலை சூத்திரதாரி எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர மீதும் குண்டூசி கூட படாமல் பாதுகாக்கின்றார்கள்
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • பட்டணத்து ஆள் ஒரு முறை கிராமத்துக்கு சென்றான். அங்கே ஒரு கொட்டகையில் இருக்கும் பெரியவரிடம் சென்று "ஐயா.. இந்த கொட்டகைகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?"...
    பெரியவர்: நீங்கள் ஆடுகளின் கொட்டகையை கேட்கிறீங்களா இல்ல... மாடுகளின் கொட்டகையை கேட்கிறீர்களா..

    மாடு கொட்டகை...

    மாடுகள் அனைத்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்..

    அப்ப ஆட்டுக் கூட்டத்தை..

    ஆட்டு கூட்டத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்..

    மாடு எம்புட்டு கட்டு வைக்கோல் சாப்பிடும்...

    பசுமாட்டை கேட்கிறீங்களா இல்லை எருமை மாட்டை கேட்கிறீங்களா...

    பசு மாடு எம்புட்டு கட்டு சாப்பிடும்..

    பசுமாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்...

    அப்ப எருமை மாடு?

    எருமை மாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்...

    😠😠😠

    என்ன பெரியவரே ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்ல வேண்டியது தானே...

    அதெப்படி சார்... ரெண்டும் வேற வேற உரிமையாளருடையது...

    பசுமாடு யாருடையது...

    பசுமாடு எங்க முதலாளியோடது...

    அப்ப எருமைமாடு?

    எருமைமாடு எங்க முதலாளியோடது..

    😳😳😳
    ( வந்தவர் மயங்கி விழுந்தார்...)


    பட்டணத்து ஆள் ஒரு முறை கிராமத்துக்கு சென்றான். அங்கே ஒரு கொட்டகையில் இருக்கும் பெரியவரிடம் சென்று "ஐயா.. இந்த கொட்டகைகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?"... பெரியவர்: நீங்கள் ஆடுகளின் கொட்டகையை கேட்கிறீங்களா இல்ல... மாடுகளின் கொட்டகையை கேட்கிறீர்களா.. மாடு கொட்டகை... மாடுகள் அனைத்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.. அப்ப ஆட்டுக் கூட்டத்தை.. ஆட்டு கூட்டத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்.. மாடு எம்புட்டு கட்டு வைக்கோல் சாப்பிடும்... பசுமாட்டை கேட்கிறீங்களா இல்லை எருமை மாட்டை கேட்கிறீங்களா... பசு மாடு எம்புட்டு கட்டு சாப்பிடும்.. பசுமாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்... அப்ப எருமை மாடு? எருமை மாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்... 😠😠😠 என்ன பெரியவரே ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்ல வேண்டியது தானே... அதெப்படி சார்... ரெண்டும் வேற வேற உரிமையாளருடையது... பசுமாடு யாருடையது... பசுமாடு எங்க முதலாளியோடது... அப்ப எருமைமாடு? எருமைமாடு எங்க முதலாளியோடது.. 😳😳😳 ( வந்தவர் மயங்கி விழுந்தார்...)
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • இது ஒரு எச்சரிக்கை பதிவு...

    படித்துவிட்டு கட்டாயமாக
    பகிருங்கள் தேனீக்கள் மட்டும்
    இந்த மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன்
    வாழ்வதற்கு நான்கு
    ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
    இருக்காது!’ என்று
    சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட்
    ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
    இனிக்கும் செய்தியல்ல!
    தேனீ... உலகின் மிக
    சுவாரஸ்யமான,
    நுணுக்கமான உயிரினம்.
    அந்தத் தேனீக்களைப் பற்றி
    ஆச்சரியமான மற்றும்
    அதிர்ச்சியான விஷயத்தைத்
    தெரிந்துகொள்ளலாமா?
    முதலில்... ஆச்சரியம்.
    தக்கனூண்டு சைஸில்
    இருக்கும் தேனீதான் உலகின்
    மிகச் சிறந்த மகரந்தச்
    சேர்க்கையாளர். தென்னை,
    வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
    போன்ற பல பழ வகைகள் காபி,
    ஏலக்காய், பருத்தி போன்ற
    செடிகள் மற்றும் உணவு
    தானியங்கள் எனப் பல கோடி
    மகரந்தச் சேர்க்கைகளுக்குக்
    காரணமாக இருக்கும்
    தேனீக்கள்தான், உலகின் 80
    சதவிகித உணவுப்
    பொருள்களின் பெருக்கத்துக்கு
    ம் காரணம்.
    தேனீயின் தகவல் பரிமாற்ற
    முறை, ஸ்கைப், வாட்ஸ்அப்
    முறைகளை விடத்
    துல்லியமானது. யானை,
    ஆமைகளுக்கு ஞாபகசக்தி
    அதிகம் என்போம். ஆனால்,
    அவற்றைவிடவும்
    கூர்மையான ஞாபகசக்தி
    கொண்டவை தேனீக்கள்.
    இதுபோல இன்னும் பல
    ஆச்சரியங்கள் அந்தத்
    தக்கனூண்டு உடம்பில்
    இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி
    தரும் விஷயம்... அந்தத்
    தேனீக்கள் இப்போது
    'அழிந்துவரும் உயிரினங்கள்’
    பட்டியலில் இடம்பிடித்திருக
    ்கின்றன.
    ஆம்... 'உலகை உலுக்கும்
    செய்தி’ என்றால், நிச்சயம்
    இதுதான். ஒட்டுமொத்த மக்கள்
    தொகையாலும் பூமிக்கு
    விளையாத நன்மை, ஒரே ஒரு
    தேனீயால் விளையும். அந்த
    அளவுக்குத் தேனீயின்
    ஒவ்வொரு சிறகசைப்பும்
    பூமிப் பந்தில் பசுமைப்
    போர்வையைப் போத்துகிறது.
    தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’
    பற்றி தெரிந்துகொண்டால்தான்,
    அது காடுகளின்
    பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
    நன்மை விளைவிக்கிறது என்று
    புரியும்.
    தேனீக்களின் வாழ்வியல்
    குணங்களைப் பற்றி கேட்டதும்,
    சுவாரஸ்யமாகப்
    பட்டியலிட்டார் தமிழ்நாடு
    வேளாண்மை
    பல்கலைக்கழகத்தின் பூச்சிகள்
    துறையைச் சேர்ந்த டாக்டர்
    எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
    உலகத்தில் அஞ்சு வகை
    தேனீக்கள் இருக்கு. மலைத்
    தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்
    தேனீ, இத்தாலியன் தேனீ,
    கொடுக்கில்லாத் தேனீ. இதில்
    இந்திய, இத்தாலிய மற்றும்
    கொடுக்கில்லாத்
    தேனீக்களைத்தான் மனிதர்கள்
    வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள்
    தானாகவே காட்டில் வளரும்.
    ஒரு குடும்பத்தில் ஒரு ராணித்
    தேனீ, சில நூறு ஆண்
    தேனீக்கள், பல்லாயிரம் பணித்
    தேனீக்கள் (பெண்கள்)
    இருக்கும். இதில் ஆண்
    தேனீக்களுக்கு 90 நாள்களும்,
    பணித் தேனீக்களுக்கு 70
    நாள்களும், ராணித் தேனீக்கு
    இரண்டு வருடங்களும் ஆயுள்.
    ராணித் தேனீக்களுக்கு
    முட்டையிடுவது மட்டும்தான்
    வேலை. ஆண் தேனீக்கு,
    ராணியோடு புணர்வதும்
    தேன் கூட்டைப் பாதுகாப்பதும்
    கடமை. மற்ற எல்லா
    வேலைகளும் பணித் தேனீக்கள்
    பொறுப்பு. உணவுச் சேகரிப்பு,
    தேன்கூடு கட்டுவது, தேனைப்
    பக்குவப்படுத்துவது,
    கூட்டைச் சுத்தமாகப்
    பராமரிப்பதுனு எல்லா
    வேலைகளையும் பணித்
    தேனீக்கள்தான் கவனிக்கும்.
    தேனீக்களின் பொறியியல்
    அறிவு அபாரமானது. தேன்
    கூட்டை அறுங்கோண
    வடிவத்துல கட்டும். ஏன்னா,
    அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர்
    இடத்தைக்கூட வீணாக்காம
    முழுசாப் பயன்படுத்த
    முடியும். ஆண் தேனீகளுக்குப்
    பெரிய அறுங்கோண செல்,
    பணித் தேனீக்களுக்குச் சிறிய
    அறுங்கோண செல் வடிவத்தில்
    கூடு கட்டிட்டு, ராணித்
    தேனீக்கு சிலிண்டர் வடிவில்
    செல் கட்டும். கூட்டின்
    கட்டுமானம் திருப்தியாக
    இருந்தால் மட்டுமே, ராணித்
    தேனீ அதில் முட்டையிடும்.
    பூக்களின் மகரந்தம், மதுரம்...
    இரண்டும்தான் தேனீக்களின்
    உணவு. அப்போதைய பசிக்கு
    அப்போதே சாப்பிட்டுவிடும்.
    அப்புறம் ஏன் தேன்
    சேகரிக்கிறது? குளிர்
    காலங்கள், பூ பூக்காத
    காலங்களில் உணவுத்
    தட்டுப்பாட்டைச்
    சமாளிக்கத்தான் தேன்
    சேகரிக்கிறது. தேனீக்கள் தேன்
    சேகரித்துப் பதப்படுத்துவதுத
    ான் உலகின் சிறந்த உணவுப்
    பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
    தேன் தேடிச் செல்லும் பணித்
    தேனீக்கள், பூக்களின்
    மதுரத்தை உறிந்து தன்
    உடலில் இருக்கும் 'தேன்
    பை’யில் சேகரித்துக்கொள்
    ளும். அந்த மதுரம் முழுவதும்
    செரிக்காமல், தேனீயின்
    வயிற்றில் இருக்கும்
    நொதிகளுடன் சேர்ந்து
    திரவமாக மாறிவிடும்.
    கூட்டுக்குத் திரும்பி வரும்
    தேனீக்கள், கூட்டின் வாசலில்
    காத்திருக்கும் தேனீக்களிடம்
    அந்தத் திரவத்தை
    ஒப்படைக்கும். அதற்காக
    ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன்
    பையில் இருந்து திரவத்தை
    வெளியில் கொண்டுவந்து எதிர்
    தேனீயின் வாயில் கொட்டும்.
    ஒரு தேனீ இப்படி 50 முறை
    கக்கினால்தான், ஒரு துளி தேன்
    சேரும். கூட்டைப் பராமரிக்கும்
    தேனீக்கள் அந்தத் திரவத்தைக்
    கூட்டின் ஓர் ஒரத்தில்
    இருக்கும் தேனடையில் கக்கி,
    அதில் இன்வர்டோஸ் எனும்
    நொதியைச் சேர்க்கும். பிறகு
    அந்தத் திரவத்தில் இருந்து
    நீர்த்தன்மை வற்றிப்போவதற்கா
    க தன் இறகை ஆட்டி ஆட்டி
    ஆவியாக்கும். பிறகு தேனைப்
    பாதுகாக்க ஒருவகை
    மெழுகைப் பூசிவைக்கும்.
    இத்தனை
    நடைமுறைகளுக்குப்
    பிறகுதான் நாம் சுவைக்கும்
    தேன் உருவாகும். தேன்
    எடுப்பவர்கள் கொஞ்சம்
    தேனை தேனிக்களுக்கு எனக்
    கூட்டில் விட்டுத்தான்
    எடுப்பார்கள். அதுதான் தேன்
    சேகரிக்கும் தர்மம்!
    இந்த வேலை நடக்கும்போது
    ராணித் தேனீ அதை வேடிக்கை
    மட்டுமே பார்க்கும்.
    இனப்பெருக்கக் காலத்தில்
    மட்டும்தான் அதற்கு வேலை
    வரும். அந்தச் சமயத்தில்
    வேகமாக ராணித் தேனீ
    உயரத்துக்குப் பறக்கும். அதை
    எந்த ஆண் தேனீ துரத்திப்
    பிடிக்கிறதோ, அதோடுதான்
    இணை சேரும் ராணி. புணர்ச்சி
    முடிந்தவுடன் ஆண்
    இறந்துவிடும். அதன் பிறகு
    ராணித் தேனீ முட்டையிட,
    முட்டையில் இருந்து வரும்
    தேனீக்களைப் பணித்
    தேனீக்கள்தான் வளர்ப்புத்
    தாயாக வளர்க்கும்!
    தேன் சேகரிப்பதற்கான
    தகவல்களை தேனீக்கள்
    பகிர்ந்துகொள்ளும் முறை
    அட்டகாசமானது. உணவுத்
    தேவை ஏற்படும்போது
    'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
    முன்னே சென்று பூக்கள்
    இருக்கும் இடத்தைக்
    கண்டுபிடித்துவிட்டுக்
    கூட்டுக்குத் திரும்பும்.
    கூட்டில் உள்ள மற்ற பணித்
    தேனீக்களுக்கு ஸ்கவுட்
    தேனீக்கள், தாங்கள்
    கண்டுபிடித்த தோட்டம்
    அல்லது சோலை எந்தத்
    திசையில் எவ்வளவு தூரத்தில்
    உள்ளது என்பதை நடனம் ஆடித்
    தெரிவிக்கும்.
    இதில் இரண்டு வித நடனங்கள்
    உள்ளன. வட்ட நடனம் மற்றும்
    வாலாட்டு நடனம். வட்ட
    நடனத்தில் வட்டமிட்டு
    வட்டமிட்டு பூக்கள் இருக்கும்
    தொலைவை மட்டும்
    குறிக்கும். வாலாட்டு
    நடனத்தில் உயரப் பறந்து
    வாலை ஆட்டினால், சூரியன்
    இருக்கும் அதே திசையில்
    உணவு உள்ளது என்றும், கீழே
    பறந்து வாலை ஆட்டினால்,
    சூரியனுக்கு நேரெதிர்
    திசையில் தோட்டம் உள்ளது
    என்றும் அர்த்தம். வாலை
    வேகமாக ஆட்டினால், சோலை
    அருகில் உள்ளது என்றும்,
    மெதுவாக ஆட்டினால்,
    தொலைவில் உள்ளது என்றும்
    அர்த்தம்
    சூரியன், சோலையின் திசை,
    தங்கள் கூட்டின் இருப்பிடம்...
    இந்த மூன்றையும்
    சம்பந்தப்படுத்தி நடன
    அசைவுகள் இருக்கும். இந்த
    நுட்பமான நடன ரகசியத்தைக்
    கண்டுபிடித்த ஆஸ்திரிய
    ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-
    க்கு நோபல் பரிசு
    கொடுத்தார்கள்.
    தேன் சேகரிக்கும்போது
    தேனீக்களின் காலில்
    ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
    மகரந்தம், அடுத்தடுத்து
    பூக்களின் மேல்
    உட்காரும்போது, விதவிதமான
    கூட்டணியுடன் பரவும்.
    இதுதான் காடுகளின்,
    சோலைகளின் பரவலுக்குக்
    காரணம். தேனீக்களை அதிகம்
    காடுகளுக்குள்தான் பார்க்க
    முடியும். காரணம், தேனீக்கள்
    இருக்கிற இடத்திலேயே
    இயற்கையாகவே அடர்ந்த
    காடுகள் உருவாகிவிடும்!''
    ''அழியும் உயிரினம்
    பட்டியலில் இடம் பிடிக்கும்
    அளவுக்கு தேனீக்களுக்கு
    என்ன ஆபத்து?''
    ''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற
    மேற்கத்திய நாடுகளில்
    தேனீக்கள் அழிந்துவரும்
    உயிரினங்கள். கடந்த ஐந்து
    ஆண்டுகளில் மட்டும் உலகின்
    மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள்
    அழிந்துவிட்டன. அதாவது,
    தேனீக்களின் அழிவு சதவிகிதம்
    42 சதவிகிதம் அதிகரித்திருக்க
    ிறது. இன்னும் இந்தியாவில்
    தேனீக்களுக்கு அந்த
    அளவுக்குப் பெரிய அபாயம்
    ஏற்படவில்லை. ஆனால்,
    கூடிய சீக்கிரமே அந்த
    நிலைமை வரலாம்.
    தேனீக்களின் இந்தப்
    பேரழிவுக்குக் காரணம், Colony
    Collapse Disorder - சுருக்கமாக...
    CCD. அதாவது கூட்டில் இருந்து
    உணவு சேகரிக்கச் சென்ற
    பணித் தேனீக்கள்
    கொத்துக்கொத்தாகக்
    காணாமல்போய்விடும். ராணி
    மட்டும் கூட்டில் இருக்கும்.
    பணித் தேனீக்கள் கொஞ்சம்
    கொஞ்சமாகக் குறைந்து ஒரு
    கட்டத்தில் இல்லாமலேயே
    போய்விட்டால், ராணித் தேனீ
    என்ன செய்வதெனத்
    தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
    இறந்துவிடும்.
    இல்லையெனில், வேறு கூடு
    தேடிப் போய்விடும். பணித்
    தேனீக்கள் இப்படித்
    தொலைந்துபோவதற்குப் பல
    காரணங்கள் உண்டு. அதில்
    முக்கியமானது... செயற்கை
    உரம், பூச்சிக்கொல்லி, மரபணு
    மாற்றப்பட்ட பயிர்கள்.
    செயற்கை உரத்தில் உள்ள
    நியோ நிக்டினாய்ட்ஸ்
    எனப்படும் வேதிப்பொருள்,
    தேனீக்களின் நரம்பு
    மண்டலத்தைப் பாதித்து
    அவற்றின் நினைவுத்திறனை
    மழுங்கடித்துவிடும். இதனால்
    கூட்டுக்குத் திரும்பும் வழி
    மறந்துபோய் பறந்துபோய்
    அலைந்து திரிந்து
    இறந்துவிடும். மரபணு
    மாற்றப்பட்ட உணவுப்
    பயிர்களின் விதைகளை
    'டெர்மினேட்டர் சீட்ஸ்’
    என்பார்கள். அதாவது, அந்தப்
    பயிர்கள் 'விதை தானியத்தை’
    உருவாக்காது. மலட்டு
    விதைகளைத்தான்
    உருவாக்கும். அப்படியான
    மரபணு மாற்றப்பட்ட
    பயிர்களின் மகரந்தத்தில் உள்ள
    புரோட்டீன் தேனீக்களிடம்
    செரிமானக் கோளாறுகளை
    உண்டாக்கி, ஒரு கட்டத்தில்
    தேனீக்களைக் கொன்றேவிடும்.
    இப்படி விவசாயத்தில் 'வணிக
    லாபத்துக்காக’ மனிதன் செய்த
    பல மாற்றங்கள் தேனீக்களை
    அழிக்கின்றன. ஐரோப்பிய
    நாடுகளில் கடந்த ஐந்து
    வருடங்களாக விவசாய
    உற்பத்தி பெருமளவு
    குறைந்துவருவதற்குக்
    காரணம் தேனீக்களின் இறப்பு
    எனத் தெரியவந்தது. அதனால்,
    அங்கு செயற்கை உரம், மரபணு
    மாற்றப்பட்ட விதைகள்
    போன்றவற்றைத் தடை
    செய்துவிட்டனர். வளர்ப்புத்
    தேனீக்களைப் பிடித்து வந்து
    தங்கள் வயல்களில்
    பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்க
    ை உண்டாக்க முயற்சிக்கிறார்
    கள். பல லட்சம் தேனீக்களை
    அழித்த சுயநல மனிதனால்,
    ஒரே ஒரு தேனீயைக்கூட
    உருவாக்க முடியாது. இதை
    நாம் எப்போது உணர்வோம்?''
    என்று வருத்தமாகச்
    சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவ
    ாசன்.
    'தேனீக்கள் மட்டும் இந்த
    மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன்
    வாழ்வதற்கு நான்கு
    ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
    இருக்காது!’ என்று
    சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட்
    ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.
    இது ஒரு எச்சரிக்கை பதிவு... படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை..... இனிக்கும் செய்தியல்ல! தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கு ம் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக ்கின்றன. ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும். தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன். உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும். தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும். பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுத ான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள் ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்கா க தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்! இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்! தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும். இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம் சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்- க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!'' ''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?'' ''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்க ிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம். தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்க ை உண்டாக்க முயற்சிக்கிறார் கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவ ாசன். 'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை..

    🔴🟢🔴

    இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம் மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை.

    மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது.

    நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள்.

    வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான்.

    வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல்.

    அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து நின்றன.

    இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ்.

    அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது.

    ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான்.

    உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின் விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன.

    அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம்.

    வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான்.

    அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ.

    சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி.

    இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.
    வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை.. 🔴🟢🔴 இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம் மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை. மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது. நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள். வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான். வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல். அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து நின்றன. இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ். அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது. ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான். உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின் விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன. அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம். வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான். அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ. சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி. இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.

    அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

    அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.
    ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

    அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.

    நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள்.
    பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன்.
    மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது.
    உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.

    தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.

    அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.
    அதற்குத் திறமை வேண்டும்.
    நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.

    “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

    நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.
    நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

    “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம்.
    நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

    இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.
    இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

    எங்கும் இருட்டாக இருந்தது.
    அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

    திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர்.
    அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

    திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

    ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு.
    அது கத்தாது என்று சொல்ல நினைத்தான்.
    கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.
    “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.

    இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன்.
    சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.

    ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான்.
    வலிமையாக ஊதினான்.

    சங்கோசை எங்கும் கேட்டது.

    அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

    பிறகு என்ன?
    பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

    இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.
    ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு அருகில் வந்தவரிடம் "என்னமா சிலிண்டர் இல்லையா என்றதும்?

    சிரித்துக் கொண்டே "நம்ம என்ன அப்படி சமைக்க போறோம் பிரியாணியா, கறி சோறா? என்ன ரெண்டு மிலைக்காய் தக்காளிய பிச்சி போட்டு கஞ்சிக்கு காரக் குழம்பு, மீன் குழம்பு வைக்க போறோம், வெச்ச குழம்ப ரெண்டு நாளைக்கு வெச்சிக்க போறோம், அதுக்கு எதுக்கு சாமி சிலிண்டர்? காடு கொடுக்குது அது இல்லாதவங்க எடுத்து வயித்துக்கு பயன்படுத்திக்குறோம்,

    ஆடு மேய்க்குறோம், எதோ ஆடு வளர்ந்தா அது வித்து வயித்த கழுவிக்குறோம், இருப்பு இல்லாத வாழ்கை தான் ஆனா அதுக்காக கவலை பட மாட்டோம் சாமி, ஏன்னா என் வயசுல ஆஸ்பத்தரிக்கு நடக்குறவங்க நிறைய பேரு ஊர்ல இருக்காங்க, நான் ஆரோக்கியத்தோடு காடு மேடு ஏறி கல்லு மாதிரி போயிட்டு வரேன் பாத்தீங்களா அதுவே கடவுள் புண்ணியத்துல பெரிய பாக்கியம், ஒண்டிக்க சொந்த குடிசை, உசுருக்கு திங்க கஞ்சி, உழைக்க உடல் ஆரோக்கியம் இது இருந்தா போதும் சாமி, பெருசா கார் பங்களாவுக்கெல்லாம் ஆசை படல, நிம்மதி ஆரோக்கியம் இருக்கோமா அது போதும் சாமி என்று அவர் சுருக்காக முடித்ததும்

    பேச ஏதும் வார்த்தைகள் ஏதும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை எனது வாழ்க்கையோடு பொறுத்தி பார்த்து யோசித்த படி மௌனமாக நின்றிருக் கொண்டிருந்தேன்

    உடனே அவர் "என்னங்கய்யா பேச மாட்றீங்க? எதாவது தப்பா சொல்லிட்டேனா என்றதும்

    இல்லைங்கம்மா , நீங்க சொன்னது உண்மை தான், காசு இல்லாட்டாலும், நிம்மதி ஆரோக்கியம் போதும் மா, உலகத்திலேயே மிகப்பெரிய சொத்து நம்முடைய ஆரோக்கியமும், உடம்பும் தான் மா

    என்னுடைய மனைவி இறந்து 10 வருஷம் ஆகுது, எனக்கு ஒரேயொரு பொண்ணு, இப்போ என்னுடைய பொண்ணுக்கு நான் தான் அப்பா அம்மா எல்லாமே, மறுமணம் பண்ணிக்கல, காரணம் என்னோட மனைவிய 14 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணேன், புள்ளைக்கு ஒன்றை வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க, டெங்கு காய்ச்சல், சரியா டைம்க்கு சாப்பிட மாட்டாங்க, நோய் எதிப்பு சக்தி இல்ல, எனக்குண்ணு அம்மா அப்பா சொந்தம் பந்தம் இந்த உலகத்துல யாருமே கிடையாது,

    நேரத்துக்கு ஒரு ஆண சாப்படியா? எங்க இருக்கண்ணு கேக்குற உலகத்துல இருக்க ரெண்டே உறவு அம்மா, மனைவி மட்டும் தான், இந்த ரெண்டு வார்த்தையும் நான் கேட்டு பத்து வருஷம் ஆகுது, இனி என் பொண்ணு பெருசாகி கேட்டாதான்

    ஆனா நெஞ்சுலையும், உடம்புலையும் தில்லு இருக்கு, எந்த சூழ்நிலையிலும் நம்ம தைரியத்தையும் நம்பிக்கையும் விட்டுற கூடாது, இந்த பத்து வருஷத்த சாதாரணமா கடந்து வரல, எனக்கு வயசு சின்னது தான், ஆனா மனிதனோட நூறு வருஷத்துக்கு அனுபவம் என் மனசுல இருக்கு, கடைசி சொட்டு உயிர் இருக்க வரைக்கும் மீசை முறுக்கிவிட்டு துணிச்சலா தன்னம்பிக்கையா வாழனும், இப்போ நீங்க சொன்னீங்களே நிம்மதியா ஆரோக்கியமா இருந்தா போதும்ண்ணு, அந்த ஆரோக்கியம் இல்லாததால தான் இன்னைக்கு நான் என்னுடைய மனைவிய இழந்தும், என் பொண்ணு அம்மாவ இழந்தும் ஒவ்வொரு நாளும் கஷ்ட்டபடுறோம்

    உண்மை மா, நம்முடைய முதல் சொத்து நம்ம உடம்பு தான், உடம்ப பாத்துக்காம பாதிலே போயிடுறவங்க அவங்க நிம்மதியா போயிடுவாங்க, ஆனா அவங்களோட வாழ்ந்த நாட்கள நினைச்சும், அவங்க கூட இருந்த நினைவுகள நினைச்சும் தினம் தினம் நாம் கவலைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகணும், அந்த வேதனையும் சாவையும் நம்ம நமக்கு வர சந்ததிகளுக்கு கொடுத்தர கூடாது, அவங்க கடைசி வரைக்கும் கரையேத்தி வாழவெச்சிட்டு போறது தான் மனிதனா பொறந்ததுக்கு நம்ம பிறவிக்கு செய்யுற கைமாறு, நான் பாண்டிலே பொறந்தவன் பாத்தீங்களா எனக்கு டீ, காப்பி சாப்பிடுற பழக்கம் கூட கிடையாது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாம என் உடம்ப ஆரோக்கியமா பாத்துகறதுனால தான் நான் என் புள்ளைய ஒரு அம்மாவா இருந்து பாதுகாப்பா பாசமா வளர்க்க முடியுது, அப்போ கிரிக்கெட், இப்போ ஃபோட்டோ கிராஃபி, வேலை போக மத்த நேரத்துல இந்த மாதிரி கிராமம், உங்கள மாதிரி கிராமவாசிங்க, விவசாயிங்க, பறவைங்க, குளம், ஏறி, பூக்கள், பட்டாம்பூச்சி, ஆடு, மாடு, கோழி, இவங்க தான் என்னோட சொந்தம் பந்தம் எல்லாமே, இப்படி கிராமத்து பக்கம் வந்து நாளு நல்ல மனுஷங்கள பாத்து பேசுனா நம்ம கவலை பாரம் எல்லாம் பறந்துடும், என்று நான் சிரித்தபடி முடித்ததும்

    எதும் பேசாமல் மௌனமாக நின்றுக் கொண்டிருந்ததார்

    அந்த மௌனத்திற்கான அர்த்தம் என்ன என்பது தெரியும்

    சரிமா தலையில சுமை இருக்கு, நீங்க கிளம்புங்க அப்பறம் வந்து உங்கள பாக்குறேன்

    அம்மா இங்க பாருங்க இங்க பாருங்க மா என்று அவரை எனது கண்ணை நோக்கி நிமிர வைத்து

    இதுவரைக்கும் என்னோட புகைப்பட வாழ்கையில கிராமவாசிங்க விவசாயிங்கண்ணு
    பல்லாயிரம் பேர் கிட்ட பேசிருக்கேன், ஆனா அதுல ஒரு சில பேர் தான் தன்னம்பிக்கையா துணிச்சலா பாசிட்டிவா பேசுவாங்க, எனக்கு நெகடிவா சோகமா பேசுறவங்கள எப்பவும் பிடிக்காது, நீங்க எதுவும் இல்லாட்டாலும் துணிச்சலா தன்னம்பிக்கையா பேசுனீங்க பாத்தீங்களா அது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு, அதனால தான் அதிகமா யாருகிட்டயும் சொல்லாத என்னுடைய வாழ்கைய உங்ககிட்ட சொன்னேன், தைரியமா இருங்கம்மா, உடம்ப பாத்துக்கோங்க, எதை காதலிக்குறோமோ இல்லையோ நமம உடம்ப காதலிக்கணும், அந்த உடம்ப நமக்காக இல்லாட்டாலும் இந்த உலகத்துல நம்மல கொடுத்தவங்களுக்காவும், நம்மல நம்பி வந்தவங்களுக்காகவும், நம்மல நம்பி பிறந்தவங்களுக்காகவும் நம்ம உடம்ப நம்ப ஆரோக்கியமா பத்தரமா பாத்துக்கணும்

    ஒருத்தர இழந்துட்டு அவர் நினைவோடவே வாழ்நாள் வரை வாழுற வலி தான் உலகத்திலே மிக பெரிய கொடுமையானது, இது என்ன தவிர இந்த உலகத்துல வேற யாருக்கும் நடக்கா கூடாது என்றுதான் என்னுடைய தினந்தோற பிராத்தன, நீங்க எப்படி ஆரம்பத்துல என்கிட்ட தன்னம்பிக்கையா சந்தோஷமா பேசுனீங்களோ, அதே போல நீங்க கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையா ஆரோக்கியமா இருக்கணும் மா என்று நான் முடித்ததும்

    "நீ நல்லா இருப்ப சாமி" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு தனது முந்தானையை எடுத்து கண்களை துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் என்னிடமிருந்து விடைபெற்று மெதுவாய் நடந்து சென்று வளைந்து எனது கண்களிலிருந்து முழுவதுமாய் மறைந்தார்

    அவர் கண்களிலிருந்து மறைந்த பின்பே வீட்டில் தனியாக இருக்கும் மகள் ஞாபகத்திற்க்கு வந்தார்

    வண்டியை திருப்பி நேராக வீட்டிற்கு விட்டு வீட்டை அடைந்து கதவை தட்டியதும், ஜன்னல் ஓரத்திலிருந்து முக அடையாளம் உறுதி செய்துவிட்டு கதவு திறக்கப்பட்டது

    உள்ளே நுழைந்ததும் மகள் ஓடிவந்து!அப்பா என கட்டியணைத்தார்

    இன்று இரவு உறக்கத்தின் போது மகளுக்கான ஒரு நிகழ்ந்த உண்மை கதை ரெடி என கை கால்களை அலம்பி விட்டு

    சமைக்க சமையலறைக்குள் நுழைந்தேன்.

    படித்ததில் பகிர்ந்தது
    புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு அருகில் வந்தவரிடம் "என்னமா சிலிண்டர் இல்லையா என்றதும்? சிரித்துக் கொண்டே "நம்ம என்ன அப்படி சமைக்க போறோம் பிரியாணியா, கறி சோறா? என்ன ரெண்டு மிலைக்காய் தக்காளிய பிச்சி போட்டு கஞ்சிக்கு காரக் குழம்பு, மீன் குழம்பு வைக்க போறோம், வெச்ச குழம்ப ரெண்டு நாளைக்கு வெச்சிக்க போறோம், அதுக்கு எதுக்கு சாமி சிலிண்டர்? காடு கொடுக்குது அது இல்லாதவங்க எடுத்து வயித்துக்கு பயன்படுத்திக்குறோம், ஆடு மேய்க்குறோம், எதோ ஆடு வளர்ந்தா அது வித்து வயித்த கழுவிக்குறோம், இருப்பு இல்லாத வாழ்கை தான் ஆனா அதுக்காக கவலை பட மாட்டோம் சாமி, ஏன்னா என் வயசுல ஆஸ்பத்தரிக்கு நடக்குறவங்க நிறைய பேரு ஊர்ல இருக்காங்க, நான் ஆரோக்கியத்தோடு காடு மேடு ஏறி கல்லு மாதிரி போயிட்டு வரேன் பாத்தீங்களா அதுவே கடவுள் புண்ணியத்துல பெரிய பாக்கியம், ஒண்டிக்க சொந்த குடிசை, உசுருக்கு திங்க கஞ்சி, உழைக்க உடல் ஆரோக்கியம் இது இருந்தா போதும் சாமி, பெருசா கார் பங்களாவுக்கெல்லாம் ஆசை படல, நிம்மதி ஆரோக்கியம் இருக்கோமா அது போதும் சாமி என்று அவர் சுருக்காக முடித்ததும் பேச ஏதும் வார்த்தைகள் ஏதும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை எனது வாழ்க்கையோடு பொறுத்தி பார்த்து யோசித்த படி மௌனமாக நின்றிருக் கொண்டிருந்தேன் உடனே அவர் "என்னங்கய்யா பேச மாட்றீங்க? எதாவது தப்பா சொல்லிட்டேனா என்றதும் இல்லைங்கம்மா , நீங்க சொன்னது உண்மை தான், காசு இல்லாட்டாலும், நிம்மதி ஆரோக்கியம் போதும் மா, உலகத்திலேயே மிகப்பெரிய சொத்து நம்முடைய ஆரோக்கியமும், உடம்பும் தான் மா என்னுடைய மனைவி இறந்து 10 வருஷம் ஆகுது, எனக்கு ஒரேயொரு பொண்ணு, இப்போ என்னுடைய பொண்ணுக்கு நான் தான் அப்பா அம்மா எல்லாமே, மறுமணம் பண்ணிக்கல, காரணம் என்னோட மனைவிய 14 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணேன், புள்ளைக்கு ஒன்றை வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க, டெங்கு காய்ச்சல், சரியா டைம்க்கு சாப்பிட மாட்டாங்க, நோய் எதிப்பு சக்தி இல்ல, எனக்குண்ணு அம்மா அப்பா சொந்தம் பந்தம் இந்த உலகத்துல யாருமே கிடையாது, நேரத்துக்கு ஒரு ஆண சாப்படியா? எங்க இருக்கண்ணு கேக்குற உலகத்துல இருக்க ரெண்டே உறவு அம்மா, மனைவி மட்டும் தான், இந்த ரெண்டு வார்த்தையும் நான் கேட்டு பத்து வருஷம் ஆகுது, இனி என் பொண்ணு பெருசாகி கேட்டாதான் ஆனா நெஞ்சுலையும், உடம்புலையும் தில்லு இருக்கு, எந்த சூழ்நிலையிலும் நம்ம தைரியத்தையும் நம்பிக்கையும் விட்டுற கூடாது, இந்த பத்து வருஷத்த சாதாரணமா கடந்து வரல, எனக்கு வயசு சின்னது தான், ஆனா மனிதனோட நூறு வருஷத்துக்கு அனுபவம் என் மனசுல இருக்கு, கடைசி சொட்டு உயிர் இருக்க வரைக்கும் மீசை முறுக்கிவிட்டு துணிச்சலா தன்னம்பிக்கையா வாழனும், இப்போ நீங்க சொன்னீங்களே நிம்மதியா ஆரோக்கியமா இருந்தா போதும்ண்ணு, அந்த ஆரோக்கியம் இல்லாததால தான் இன்னைக்கு நான் என்னுடைய மனைவிய இழந்தும், என் பொண்ணு அம்மாவ இழந்தும் ஒவ்வொரு நாளும் கஷ்ட்டபடுறோம் உண்மை மா, நம்முடைய முதல் சொத்து நம்ம உடம்பு தான், உடம்ப பாத்துக்காம பாதிலே போயிடுறவங்க அவங்க நிம்மதியா போயிடுவாங்க, ஆனா அவங்களோட வாழ்ந்த நாட்கள நினைச்சும், அவங்க கூட இருந்த நினைவுகள நினைச்சும் தினம் தினம் நாம் கவலைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகணும், அந்த வேதனையும் சாவையும் நம்ம நமக்கு வர சந்ததிகளுக்கு கொடுத்தர கூடாது, அவங்க கடைசி வரைக்கும் கரையேத்தி வாழவெச்சிட்டு போறது தான் மனிதனா பொறந்ததுக்கு நம்ம பிறவிக்கு செய்யுற கைமாறு, நான் பாண்டிலே பொறந்தவன் பாத்தீங்களா எனக்கு டீ, காப்பி சாப்பிடுற பழக்கம் கூட கிடையாது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாம என் உடம்ப ஆரோக்கியமா பாத்துகறதுனால தான் நான் என் புள்ளைய ஒரு அம்மாவா இருந்து பாதுகாப்பா பாசமா வளர்க்க முடியுது, அப்போ கிரிக்கெட், இப்போ ஃபோட்டோ கிராஃபி, வேலை போக மத்த நேரத்துல இந்த மாதிரி கிராமம், உங்கள மாதிரி கிராமவாசிங்க, விவசாயிங்க, பறவைங்க, குளம், ஏறி, பூக்கள், பட்டாம்பூச்சி, ஆடு, மாடு, கோழி, இவங்க தான் என்னோட சொந்தம் பந்தம் எல்லாமே, இப்படி கிராமத்து பக்கம் வந்து நாளு நல்ல மனுஷங்கள பாத்து பேசுனா நம்ம கவலை பாரம் எல்லாம் பறந்துடும், என்று நான் சிரித்தபடி முடித்ததும் எதும் பேசாமல் மௌனமாக நின்றுக் கொண்டிருந்ததார் அந்த மௌனத்திற்கான அர்த்தம் என்ன என்பது தெரியும் சரிமா தலையில சுமை இருக்கு, நீங்க கிளம்புங்க அப்பறம் வந்து உங்கள பாக்குறேன் அம்மா இங்க பாருங்க இங்க பாருங்க மா என்று அவரை எனது கண்ணை நோக்கி நிமிர வைத்து இதுவரைக்கும் என்னோட புகைப்பட வாழ்கையில கிராமவாசிங்க விவசாயிங்கண்ணு பல்லாயிரம் பேர் கிட்ட பேசிருக்கேன், ஆனா அதுல ஒரு சில பேர் தான் தன்னம்பிக்கையா துணிச்சலா பாசிட்டிவா பேசுவாங்க, எனக்கு நெகடிவா சோகமா பேசுறவங்கள எப்பவும் பிடிக்காது, நீங்க எதுவும் இல்லாட்டாலும் துணிச்சலா தன்னம்பிக்கையா பேசுனீங்க பாத்தீங்களா அது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு, அதனால தான் அதிகமா யாருகிட்டயும் சொல்லாத என்னுடைய வாழ்கைய உங்ககிட்ட சொன்னேன், தைரியமா இருங்கம்மா, உடம்ப பாத்துக்கோங்க, எதை காதலிக்குறோமோ இல்லையோ நமம உடம்ப காதலிக்கணும், அந்த உடம்ப நமக்காக இல்லாட்டாலும் இந்த உலகத்துல நம்மல கொடுத்தவங்களுக்காவும், நம்மல நம்பி வந்தவங்களுக்காகவும், நம்மல நம்பி பிறந்தவங்களுக்காகவும் நம்ம உடம்ப நம்ப ஆரோக்கியமா பத்தரமா பாத்துக்கணும் ஒருத்தர இழந்துட்டு அவர் நினைவோடவே வாழ்நாள் வரை வாழுற வலி தான் உலகத்திலே மிக பெரிய கொடுமையானது, இது என்ன தவிர இந்த உலகத்துல வேற யாருக்கும் நடக்கா கூடாது என்றுதான் என்னுடைய தினந்தோற பிராத்தன, நீங்க எப்படி ஆரம்பத்துல என்கிட்ட தன்னம்பிக்கையா சந்தோஷமா பேசுனீங்களோ, அதே போல நீங்க கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையா ஆரோக்கியமா இருக்கணும் மா என்று நான் முடித்ததும் "நீ நல்லா இருப்ப சாமி" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு தனது முந்தானையை எடுத்து கண்களை துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் என்னிடமிருந்து விடைபெற்று மெதுவாய் நடந்து சென்று வளைந்து எனது கண்களிலிருந்து முழுவதுமாய் மறைந்தார் அவர் கண்களிலிருந்து மறைந்த பின்பே வீட்டில் தனியாக இருக்கும் மகள் ஞாபகத்திற்க்கு வந்தார் வண்டியை திருப்பி நேராக வீட்டிற்கு விட்டு வீட்டை அடைந்து கதவை தட்டியதும், ஜன்னல் ஓரத்திலிருந்து முக அடையாளம் உறுதி செய்துவிட்டு கதவு திறக்கப்பட்டது உள்ளே நுழைந்ததும் மகள் ஓடிவந்து!அப்பா என கட்டியணைத்தார் இன்று இரவு உறக்கத்தின் போது மகளுக்கான ஒரு நிகழ்ந்த உண்மை கதை ரெடி என கை கால்களை அலம்பி விட்டு சமைக்க சமையலறைக்குள் நுழைந்தேன். படித்ததில் பகிர்ந்தது
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • ஒரு #டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்!

    அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500 ரூபாய் பீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்தவில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000 ரூபாய் தந்து விடுவதாக விளம்பரம் செய்தார்.

    விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000 ரூபாய் ஆட்டய போடனும் என்ற நினைப்பில் அவரை சந்தித்தார்!

    டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க, அதற்கு அவர், டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்!

    நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல !

    பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது!

    நர்ஸ் இவரிடம் 500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குணபடுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்!

    வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல !

    பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார்.

    இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000 ரூபாய் வாங்கி விடனும் என்று முடிவு செய்தார்.

    இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து

    விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குணப்படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000 ரூபாய் என்று நோட்டை நீட்டினார்!

    பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம், என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000 ரூபாய் தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொல்ல!

    டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது.

    நர்ஸ் இவர் கிட்ட 500 ரூபாய் வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம்.

    “ஏமாற்ற நினைப்பவன், தானே ஏமாந்து விடுவான்.”
    ஒரு #டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்! அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500 ரூபாய் பீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்களின் வியாதியை குணப்படுத்தவில்லை என்றால் டாக்டர் அவர்களுக்கு 1000 ரூபாய் தந்து விடுவதாக விளம்பரம் செய்தார். விளம்பரத்தை பார்த்த ஒருவர் டாக்டரை ஏமாற்றி எப்படியாவது 1000 ரூபாய் ஆட்டய போடனும் என்ற நினைப்பில் அவரை சந்தித்தார்! டாக்டர் அவரிடம் என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்க, அதற்கு அவர், டாக்டர் எனக்கு நாக்கில் சுத்தமாக ருசி இல்லை என்று சொல்ல ! டாக்டரும் எல்லா சோதனை செய்து பார்த்து விட்டு இவர் தம்மிடம் ஏமாற்றுகிறார் என்று தெரிந்து கொண்டு! அவரின் நர்சை கூப்பிட்டார்! நர்ஸ் அந்த அலமாரியில் 11 ஆம் நம்பர் பாட்டிலை எடுத்து இவர் நாக்கில் இரண்டு சொட்டு விடுங்கள் என்று சொல்ல ! நர்சும் அதே மாதிரி ரெண்டு சொட்டு விட! வந்தவர் டாக்டர் என்ன பெட்ரோல் போய் நாக்கில் விடரீங்க என்று சொல்ல ! பார்த்தீர்களா உங்களுக்கு நாக்கில் சுவை வந்து விட்டது! நர்ஸ் இவரிடம் 500 ரூபாய் பீஸ் வாங்கிட்டு அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். என்னடா இப்படி ஆகி விட்டதே என்று சரி அடுத்த வாரம் பார்ப்போம் என்று ஒரு வாரம் கழித்து டாக்டரை போய் பார்த்தார். டாக்டர் வர வர எனக்கு நியாபக சக்தி சுத்தமா போய் விட்டது! எப்படியாவது குணபடுத்துங்க! என்று சொல்ல டாக்டரும் எல்லா சோதனைகளும் செய்து விட்டு நர்சிடம் , அந்த அலமாரியில் 11ஆம் நம்பர் பாட்டில் எடுத்து வா என்று சொன்னது தான் போதும்! வந்தவர் ஐயோ டாக்டர் அலமாரியில் இருக்கும் 11 ஆம் நம்பர் பாட்டில் பெட்ரோல் ஆச்சே! என்று சொல்ல ! பார்த்தீர்களா உங்களுக்கு நியாபக சக்தி வந்து விட்டது, போன வாரம் பார்த்தீர்கள் இப்பவும் உங்கள் நினைவில் இருக்கு பாருங்க! 500 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று டாக்டர் சொன்னார். இப்படியே ஒரு வாரம் ஓடியது சரி இன்னைக்கு டாக்டர் கிட்ட எப்படியாவது 1000 ரூபாய் வாங்கி விடனும் என்று முடிவு செய்தார். இப்போ டாக்டரை சந்தித்து தனக்கு கண் பார்வை சரியாக தெரியவில்லை என்று சொல்ல டாக்டரும் அவரை நன்றாக சோதித்து விட்டு உங்களுக்கு வந்து இருக்கும் வியாதியை என்னால் குணப்படுத்த முடியவில்லை நான் தோற்று விட்டேன்! இந்தாங்க 1000 ரூபாய் என்று நோட்டை நீட்டினார்! பணத்தை பார்த்தவுடன் நம்ம ஆளுக்கு ஒரே கோபம், என்ன டாக்டர் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்கள் 1000 ரூபாய் தருகிறீர்கள் என்று சொல்லி விட்டு வெறும் 100 ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொல்ல! டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், பார்த்தீர்களா இப்பொழுது உங்களுக்கு கண் நன்றாக தெரிகிறது. நர்ஸ் இவர் கிட்ட 500 ரூபாய் வாங்கிட்டு அனுப்புங்க என்றாராம். “ஏமாற்ற நினைப்பவன், தானே ஏமாந்து விடுவான்.”
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • என் நாட்படு தேறல் நீ - 2
    (தலைவன், தலைவி கூடல் குறிப்புகள்)

    யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! - குறுந்தொகை 40

    "சற்று முன்பு வரை நாம் இருவரும் அந்நியர்கள்.

    உன் தாய் யாரோ, என் தாய் யாரோ. உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் எந்த உறவும் இல்லை. ஏன், நீயும் நானும் கூட இதற்கு முன் ஒருவரை ஒருவர் சந்தித்தது கூட இல்லை.

    ஆனால், இப்போது...?

    இந்த அகலமான கோரைப் பாயில், கலைந்த போர்வைகளுக்கு நடுவே, ஆடையின்றி நாம் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்தக் கோலத்தைப் பார். என் மார்பின் மீது உன் தலை சாய்ந்திருக்கிறது. உன் கூந்தல் என் முகத்தில் பரவி, என் சுவாசத்தை மறைக்கிறது. நம் இருவரின் வியர்வைத் துளிகளும் ஒன்றாகக் கலந்து, யாருடையது என்று பிரித்தறிய முடியாதபடி நம் உடல்களில் வழிந்தோடுகிறது.

    சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அந்த யுத்தத்தை நினைத்துப் பார்க்கிறேன். என் கரங்களுக்குள் நீ சிக்கித் திணறியபோது, உன் கண்கள் சொக்கியிருந்தன. வானம் பூமிக்கே வளைந்து வருவது போல, நான் உன் மேல் கவிழ்ந்து, என் மொத்த பாரத்தையும் உன் மென்மையான உடலில் இறக்கியபோது... நீ எழுப்பிய அந்த முனகல் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    காய்ந்து வெடித்துக் கிடக்கும் செம்மண் பூமி, வானத்திலிருந்து ஆவேசமாகக் கொட்டும் மழை நீரை எப்படி வரவேற்கும்? முதல் துளி விழுந்ததும், அந்த மண் சிலிர்த்துக்கொண்டு, அந்த நீரைத் தனக்குள்ளே ஒவ்வொரு அணுவாக இழுத்துக் கொள்ளுமே... அப்படித்தான் நீயும் என்னை ஏற்றுக்கொண்டாய்.

    மழை நீர் மண்ணுக்குள் இறங்கிய பிறகு, 'இது மண், இது நீர்' என்று யாராவது பிரித்துப் பார்க்க முடியுமா? முடியாது. அந்த நீர் மண்ணின் நிறமாகவே மாறிவிடும்; மண்ணின் வாசனையாகவே மாறிவிடும்.
    அதுபோலத்தான் பெண்ணே... என் உயிர்ச் சாரம் உனக்குள் பாய்ந்த அந்த நொடியில், நான் வேறு நீ வேறு என்ற பேதமே அழிந்துவிட்டது. என் ஆன்மா உனக்குள் கரைந்துவிட்டது. இப்போது உன் நாடி நரம்புகளில் ஓடுவது என் வெப்பம். உன் கருப்பைக்குள் நிறைந்திருப்பது என் உயிர். இனி எக்காலத்திலும், யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது.

    செம்மண்ணில் கலந்த மழைநீரைப் போல... நாம் இப்போது ஒரே உயிராகிவிட்டோம். இந்தத் தழுவலை இப்படியே நீட்டிப்போம், விடியல் நம்மைப் பிரிக்கும் வரை."

    -சி.வெற்றிவேல்,
    சாளையக்குறிச்சி.
    என் நாட்படு தேறல் நீ - 2 (தலைவன், தலைவி கூடல் குறிப்புகள்) யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! - குறுந்தொகை 40 "சற்று முன்பு வரை நாம் இருவரும் அந்நியர்கள். உன் தாய் யாரோ, என் தாய் யாரோ. உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் எந்த உறவும் இல்லை. ஏன், நீயும் நானும் கூட இதற்கு முன் ஒருவரை ஒருவர் சந்தித்தது கூட இல்லை. ஆனால், இப்போது...? இந்த அகலமான கோரைப் பாயில், கலைந்த போர்வைகளுக்கு நடுவே, ஆடையின்றி நாம் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்தக் கோலத்தைப் பார். என் மார்பின் மீது உன் தலை சாய்ந்திருக்கிறது. உன் கூந்தல் என் முகத்தில் பரவி, என் சுவாசத்தை மறைக்கிறது. நம் இருவரின் வியர்வைத் துளிகளும் ஒன்றாகக் கலந்து, யாருடையது என்று பிரித்தறிய முடியாதபடி நம் உடல்களில் வழிந்தோடுகிறது. சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அந்த யுத்தத்தை நினைத்துப் பார்க்கிறேன். என் கரங்களுக்குள் நீ சிக்கித் திணறியபோது, உன் கண்கள் சொக்கியிருந்தன. வானம் பூமிக்கே வளைந்து வருவது போல, நான் உன் மேல் கவிழ்ந்து, என் மொத்த பாரத்தையும் உன் மென்மையான உடலில் இறக்கியபோது... நீ எழுப்பிய அந்த முனகல் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. காய்ந்து வெடித்துக் கிடக்கும் செம்மண் பூமி, வானத்திலிருந்து ஆவேசமாகக் கொட்டும் மழை நீரை எப்படி வரவேற்கும்? முதல் துளி விழுந்ததும், அந்த மண் சிலிர்த்துக்கொண்டு, அந்த நீரைத் தனக்குள்ளே ஒவ்வொரு அணுவாக இழுத்துக் கொள்ளுமே... அப்படித்தான் நீயும் என்னை ஏற்றுக்கொண்டாய். மழை நீர் மண்ணுக்குள் இறங்கிய பிறகு, 'இது மண், இது நீர்' என்று யாராவது பிரித்துப் பார்க்க முடியுமா? முடியாது. அந்த நீர் மண்ணின் நிறமாகவே மாறிவிடும்; மண்ணின் வாசனையாகவே மாறிவிடும். அதுபோலத்தான் பெண்ணே... என் உயிர்ச் சாரம் உனக்குள் பாய்ந்த அந்த நொடியில், நான் வேறு நீ வேறு என்ற பேதமே அழிந்துவிட்டது. என் ஆன்மா உனக்குள் கரைந்துவிட்டது. இப்போது உன் நாடி நரம்புகளில் ஓடுவது என் வெப்பம். உன் கருப்பைக்குள் நிறைந்திருப்பது என் உயிர். இனி எக்காலத்திலும், யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது. செம்மண்ணில் கலந்த மழைநீரைப் போல... நாம் இப்போது ஒரே உயிராகிவிட்டோம். இந்தத் தழுவலை இப்படியே நீட்டிப்போம், விடியல் நம்மைப் பிரிக்கும் வரை." -சி.வெற்றிவேல், சாளையக்குறிச்சி.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
More Results
Idaivelai.com https://idaivelai.com