• 2026 இல் உள்ள அரச விடுமுறைகள் பின்வருமாறு அமைந்துள்ளது..!

    2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன.

    இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களமும் வெளியிட்டுள்ளது.

    இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன.

    2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மலரவுள்ளது.

    அத்துடன், வெசாக் பௌர்ணமி தினம் மே 01 ஆம் திகதியும், நத்தார் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ளன.

    2026 ஆம் ஆண்டின் அரச விடுமுறைகள்..

    🛑ஜனவரி - 03 சனிக்கிழமை – துருத்து முழுநோன்மதி தினம்

    🛑ஜனவரி - 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் பண்டிகை

    🛑பெப்ரவரி - 01 ஞாயிற்றுக்கிழமை – நவம் முழு நோன்மதி தினம்

    🛑பெப்ரவரி - 04 புதன்கிழமை – சுதந்திர தினம்

    🛑பெப்ரவரி - 15 ஞாயிற்றுக்கிழமை – மகா சிவராத்திரி விரதம்

    🛑மார்ச் - 02 திங்கட்கிழமை – மெதின் முழுநோன்மதி தினம்

    🛑மார்ச் - 21 சனிக்கிழமை – ரமழான் பண்டிகை

    🛑ஏப்ரல் - 01 புதன்கிழமை – பஃக் முழுநோன்மதி தினம்

    🛑ஏப்ரல் - 03 வெள்ளிக்கிழமை – பெரிய வெள்ளி தினம்

    🛑ஏப்ரல் - 13 திங்கட்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம்

    🛑ஏப்ரல் - 14 செவ்வாய்க்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு

    🛑மே - 01 வெள்ளிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினம்

    🛑மே - 01 வெள்ளிக்கிழமை – உலக தொழிலாளர் தினம்

    🛑மே - 02 சனிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம்

    🛑மே 28 வியாழக்கிழமை – ஹஜ் பெருநாள்

    🛑மே 30 சனிக்கிழமை – அதி பொசன் முழு நோன்மதி தினம்

    🛑ஜூன் - 29 திங்கட்கிழமை – பொசொன் முழுநோன்மதி தினம்

    🛑ஜூலை - 29 புதன்கிழமை – எசல முழுநோன்மதி தினம்

    🛑ஒகஸ்ட் - 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்)

    🛑ஒகஸ்ட் 27 வியாழக்கிழமை – நிக்கினி முழுநோன்மதி தினம்

    🛑செப்டம்பர் 26 சனிக்கிழமை – பினர முழுநோன்மதி தினம்

    🛑ஒக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை – வஃப் முழுநோன்மதி தினம்

    🛑நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை

    🛑நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை – இல்புர முழுநோன்மதி தினம்

    🛑டிசம்பர் 23 புதன்கிழமை – உந்துவப் முழுநோன்மதி தினம்

    🛑டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் பண்டிகை

    #NewsUpdate #SriLankaNews #Holidays #2026 #holidaysof2026 #SriLankaTamilNews
    2026 இல் உள்ள அரச விடுமுறைகள் பின்வருமாறு அமைந்துள்ளது..! 2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களமும் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மலரவுள்ளது. அத்துடன், வெசாக் பௌர்ணமி தினம் மே 01 ஆம் திகதியும், நத்தார் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ளன. 2026 ஆம் ஆண்டின் அரச விடுமுறைகள்.. 🛑ஜனவரி - 03 சனிக்கிழமை – துருத்து முழுநோன்மதி தினம் 🛑ஜனவரி - 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் பண்டிகை 🛑பெப்ரவரி - 01 ஞாயிற்றுக்கிழமை – நவம் முழு நோன்மதி தினம் 🛑பெப்ரவரி - 04 புதன்கிழமை – சுதந்திர தினம் 🛑பெப்ரவரி - 15 ஞாயிற்றுக்கிழமை – மகா சிவராத்திரி விரதம் 🛑மார்ச் - 02 திங்கட்கிழமை – மெதின் முழுநோன்மதி தினம் 🛑மார்ச் - 21 சனிக்கிழமை – ரமழான் பண்டிகை 🛑ஏப்ரல் - 01 புதன்கிழமை – பஃக் முழுநோன்மதி தினம் 🛑ஏப்ரல் - 03 வெள்ளிக்கிழமை – பெரிய வெள்ளி தினம் 🛑ஏப்ரல் - 13 திங்கட்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம் 🛑ஏப்ரல் - 14 செவ்வாய்க்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு 🛑மே - 01 வெள்ளிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினம் 🛑மே - 01 வெள்ளிக்கிழமை – உலக தொழிலாளர் தினம் 🛑மே - 02 சனிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம் 🛑மே 28 வியாழக்கிழமை – ஹஜ் பெருநாள் 🛑மே 30 சனிக்கிழமை – அதி பொசன் முழு நோன்மதி தினம் 🛑ஜூன் - 29 திங்கட்கிழமை – பொசொன் முழுநோன்மதி தினம் 🛑ஜூலை - 29 புதன்கிழமை – எசல முழுநோன்மதி தினம் 🛑ஒகஸ்ட் - 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்) 🛑ஒகஸ்ட் 27 வியாழக்கிழமை – நிக்கினி முழுநோன்மதி தினம் 🛑செப்டம்பர் 26 சனிக்கிழமை – பினர முழுநோன்மதி தினம் 🛑ஒக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை – வஃப் முழுநோன்மதி தினம் 🛑நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை 🛑நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை – இல்புர முழுநோன்மதி தினம் 🛑டிசம்பர் 23 புதன்கிழமை – உந்துவப் முழுநோன்மதி தினம் 🛑டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் பண்டிகை #NewsUpdate #SriLankaNews #Holidays #2026 #holidaysof2026 #SriLankaTamilNews
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·583 Views ·0 Reviews
  • இதுதான் சட்டம் ஒழுங்கு.
    கோர்ட்க்கு வந்துருக்கோம்னு ஒரு பயம் இல்லாம Drug கானா பாட்ட ரீல்ஸ் போட்டுனு இருக்கான் அந்த லட்சணத்துல இருக்கு சட்டமும் Govermentum🤧🚶‍♂️
    இதுதான் சட்டம் ஒழுங்கு. கோர்ட்க்கு வந்துருக்கோம்னு ஒரு பயம் இல்லாம Drug கானா பாட்ட ரீல்ஸ் போட்டுனு இருக்கான் அந்த லட்சணத்துல இருக்கு சட்டமும் Govermentum🤧🚶‍♂️
    0 Comments ·0 Shares ·719 Views ·9 Plays ·0 Reviews
  • கணவனைப் பிரிந்த பெண்களின் நிலை
    இது தான்,..

    அன்பான கணவனாக அவன் இருந்து இருந்தால் ஒரு பெண் கவலை படுவாள்…. ஆனால் அன்பான கணவனை அவள் ஏன் பிரிய போகிறாள். மரணத்தால் வரும் பிரிவை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது, அவன் அன்பானவனாக இருக்கும் பட்சத்தில்.

    கணவன் இறந்த பிறகு வரும் கண்ணீர், சில சமயம் ஆனந்த கண்ணீராக கூட இருக்காலம் என்று.

    இந்த உலகில், பெண்ணிற்கு என்று எதுவும் இல்லை.

    #காதலும் சரி, #காமமும் சரி…அவளின் பங்களிப்பு தேவை இல்லை, அதை பற்றி ஆண் யோசிப்பதும் இல்லை.

    இவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் சரி, இவர் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவளுக்கு வேசி பட்டம் கொடுத்து விடுவார்கள், இல்லை என்றால் ஆசிட் வீச்சு.

    இல்லற வாழ்கையில் இன்னும் மோசம். இவர் கூப்பிட்டால் அவள் இணங்கி வர வேண்டும். அவளாக கூப்பிட்டால் அவ்வளவு தான், நெருப்பு துண்டாக அவன் வார்த்தை வந்து விழும், ஏன் எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா என்று?

    இதற்க்காகவே அவள் பயந்து, ஐயா ராசா…நீ கூப்பிடும் வரைக்கும் நான் காத்து இருக்கிறேன் என்பாள்.

    கணவனை பிரிந்தால் என்ன? விடுதலை உணர்வுடன், இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்…கஷ்டப்பட்டு வாழ்வதை விட.
    இந்த மாதிரி தான் பல பெண்கள் இருக்கிறார்கள்....
    கணவனைப் பிரிந்த பெண்களின் நிலை இது தான்,.. அன்பான கணவனாக அவன் இருந்து இருந்தால் ஒரு பெண் கவலை படுவாள்…. ஆனால் அன்பான கணவனை அவள் ஏன் பிரிய போகிறாள். மரணத்தால் வரும் பிரிவை இந்த கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது, அவன் அன்பானவனாக இருக்கும் பட்சத்தில். கணவன் இறந்த பிறகு வரும் கண்ணீர், சில சமயம் ஆனந்த கண்ணீராக கூட இருக்காலம் என்று. இந்த உலகில், பெண்ணிற்கு என்று எதுவும் இல்லை. #காதலும் சரி, #காமமும் சரி…அவளின் பங்களிப்பு தேவை இல்லை, அதை பற்றி ஆண் யோசிப்பதும் இல்லை. இவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் சரி, இவர் காதலை சொன்னதும், அவள் ஏற்று கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவளுக்கு வேசி பட்டம் கொடுத்து விடுவார்கள், இல்லை என்றால் ஆசிட் வீச்சு. இல்லற வாழ்கையில் இன்னும் மோசம். இவர் கூப்பிட்டால் அவள் இணங்கி வர வேண்டும். அவளாக கூப்பிட்டால் அவ்வளவு தான், நெருப்பு துண்டாக அவன் வார்த்தை வந்து விழும், ஏன் எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா என்று? இதற்க்காகவே அவள் பயந்து, ஐயா ராசா…நீ கூப்பிடும் வரைக்கும் நான் காத்து இருக்கிறேன் என்பாள். கணவனை பிரிந்தால் என்ன? விடுதலை உணர்வுடன், இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழலாம்…கஷ்டப்பட்டு வாழ்வதை விட. இந்த மாதிரி தான் பல பெண்கள் இருக்கிறார்கள்....
    0 Comments ·0 Shares ·706 Views ·0 Reviews
  • ஒரு ஆணின் அனுபவம்..

    எங்கோ
    யாரோ இருவருக்கு
    மகளாக பிறந்தாள் ...

    எனக்கு
    மனைவியாக வந்த பின்பு,

    அவளுக்கென்று இருந்த
    ஆசைகளை கனவுகளை எல்லாம்
    மறந்து விட்டாள்..

    இப்போது
    நான் அழுதால் அழுகிறாள்..!

    நான் சிரித்தால் சிரிக்கிறாள் ..!

    நான் துடித்தால் துடிக்கிறாள்..!

    எனக்காகவே வாழ்கிறாள்..!

    ருசியாக உணவு சமைத்து தருகிறாள்..
    ரகசியமாக காதல் செய்கிறாள் ..

    காலையில்
    நான் எழும்புவதற்கு முன்பு
    அவள் எழுந்து விடுகிறாள் ..

    இரவில்
    வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் .,
    நான் வரும் வரை
    தூங்காமல் விழித்திருக்கிறாள் ..

    மாதவிடாய்
    வலி அவளை கொல்லும் போதும் .,
    சிரித்துக் கொண்டே
    வலியினை மறக்கிறாள் ..
    வீட்டை சுத்தம் செய்கிறாள் ..
    அன்பாக பேசுகிறாள் ..
    அனைத்து வேலைகளையும்
    சளைக்காமல் செய்கிறாள் ..

    ஓர் நாள்
    கர்ப்பம் ஆகி விட்டேன் என
    காதுக்குள் சொல்லி
    மார்பில் சாய்ந்தாள் ..

    பக்குவமாக
    குழந்தை போல் பார்த்துக் கொண்டேன் ..

    அவசரமாக
    வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்..

    ஒரு தாதிப் பெண்
    என்னையும் உள்ளே
    வர சென்னாள் .

    இப்போது
    அவள் அருகில் நான்

    கத்தினாள்
    கதறினாள்
    ஏதேதோ செய்தாள்

    வலியால்
    அவள் துடிப்பதை பார்த்து

    என்னால்
    தாங்க முடியவில்லை

    அழ வேண்டும் என்றும்
    நான் நினைக்கவில்லை

    ஆனால்
    என்னை அறியாமல்
    கண்ணீர் வருகிறது
    இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
    எனக்கு தெரியவில்லை

    சதை கிழிந்து
    குழந்தை வெளியில் வரும் போது

    அவள்
    அடைந்த வலியை
    கவிதையில்
    சொல்லிவிட முடியாது

    பாதி குழந்தை
    வெளியில் வந்திருக்கையில்

    வலி தாங்க முடியாமல்
    கைகள் இரண்டையும் எடுத்து
    கும்பிட்டு அழுதாள்

    எவ்வளவு
    வலி இருந்தால்
    அவள் கும்பிட்டு அழுதிருப்பாள்
    என்று நினைக்கும் போது

    நான் துடிதுடித்து
    அவளை இருக அணைத்து கொண்டேன்

    ஒரு பெரிய
    சத்தமிட்டு மயங்கி சாய்ந்தாள்

    ஒரு சில
    நிமிடங்களில்

    குழந்தையை கையில்
    கொடுத்தார்கள்

    நான்
    அவள் நெற்றியில் முத்தம் வைத்து
    இருக அணைத்து கொண்டேன்

    அவள்
    அனுபவித்த வலி என்பது
    நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
    என்று உணர்ந்தேன்

    மரியாதை
    செய்யுங்கள்
    நம் கண்மணிகளுக்கு ...

    நேசிக்கும் மனைவிக்காகவும்

    நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்

    இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்

    இந்த
    வரிகளை
    சமர்ப்பிக்கிறேன்

    நன்றிகள் கோடி
    பெண்களே.🙏
    ஒரு ஆணின் அனுபவம்.. எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் ... எனக்கு மனைவியாக வந்த பின்பு, அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை எல்லாம் மறந்து விட்டாள்.. இப்போது நான் அழுதால் அழுகிறாள்..! நான் சிரித்தால் சிரிக்கிறாள் ..! நான் துடித்தால் துடிக்கிறாள்..! எனக்காகவே வாழ்கிறாள்..! ருசியாக உணவு சமைத்து தருகிறாள்.. ரகசியமாக காதல் செய்கிறாள் .. காலையில் நான் எழும்புவதற்கு முன்பு அவள் எழுந்து விடுகிறாள் .. இரவில் வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் ., நான் வரும் வரை தூங்காமல் விழித்திருக்கிறாள் .. மாதவிடாய் வலி அவளை கொல்லும் போதும் ., சிரித்துக் கொண்டே வலியினை மறக்கிறாள் .. வீட்டை சுத்தம் செய்கிறாள் .. அன்பாக பேசுகிறாள் .. அனைத்து வேலைகளையும் சளைக்காமல் செய்கிறாள் .. ஓர் நாள் கர்ப்பம் ஆகி விட்டேன் என காதுக்குள் சொல்லி மார்பில் சாய்ந்தாள் .. பக்குவமாக குழந்தை போல் பார்த்துக் கொண்டேன் .. அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்.. ஒரு தாதிப் பெண் என்னையும் உள்ளே வர சென்னாள் . இப்போது அவள் அருகில் நான் கத்தினாள் கதறினாள் ஏதேதோ செய்தாள் வலியால் அவள் துடிப்பதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை அழ வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை ஆனால் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது இந்த அன்புக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை சதை கிழிந்து குழந்தை வெளியில் வரும் போது அவள் அடைந்த வலியை கவிதையில் சொல்லிவிட முடியாது பாதி குழந்தை வெளியில் வந்திருக்கையில் வலி தாங்க முடியாமல் கைகள் இரண்டையும் எடுத்து கும்பிட்டு அழுதாள் எவ்வளவு வலி இருந்தால் அவள் கும்பிட்டு அழுதிருப்பாள் என்று நினைக்கும் போது நான் துடிதுடித்து அவளை இருக அணைத்து கொண்டேன் ஒரு பெரிய சத்தமிட்டு மயங்கி சாய்ந்தாள் ஒரு சில நிமிடங்களில் குழந்தையை கையில் கொடுத்தார்கள் நான் அவள் நெற்றியில் முத்தம் வைத்து இருக அணைத்து கொண்டேன் அவள் அனுபவித்த வலி என்பது நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை என்று உணர்ந்தேன் மரியாதை செய்யுங்கள் நம் கண்மணிகளுக்கு ... நேசிக்கும் மனைவிக்காகவும் நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும் இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும் இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன் நன்றிகள் கோடி பெண்களே.🙏
    0 Comments ·0 Shares ·918 Views ·0 Reviews
  • திருகோணமலை கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் (Trinco-5) படு*கொ*லை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதும் இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார்

    திருகோணமலையில் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர கடைமையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்தின் ஏற்பாட்டில் திட்டமிட்டு இந்த படு*கொ*லைகளை நடத்தியிருந்தார்

    இந்த சம்பவத்தில் கொ*ல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காலம் சென்ற டாக்டர் மனோகரன் வழங்கிய சத்தியக்கடதாசியில், சம்பவம் நடந்த அன்று மாலை காந்தி சிலைக்கு அருகே எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகரவின் பிக்கப் வாகனம் (pick- up truck) சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    அந்த வாகனத்தில் முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் இருந்ததையும், அவர் கடந்து சென்ற பிறகு சோதனைச் சாவடிகளில் இருந்த கடற்படையினர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர சென்றுவிட்டார், இனி நாம் உள்ளே செல்லலாம் என்று பேசிக்கொண்டதையும் பதிவு செய்திருக்கின்றார்

    சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, கடற்கரையில் பணியிலிருந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை அசம்பாவிதம் நடக்கப்போவதாகக் கூறி எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர வெளியேறியிருக்கின்றார் என்கின்ற தகவலையும் இந்த கொடூரம் ஒரு திட்டமிட்ட சம்பவம் என்பதற்கு ஆதாரமாக பதிவு செய்திருக்கின்றார்

    அதே போல திருகோணமலை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டி, கொ*ல்லப்பட்டவர்கள் பு*லி உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கவும் எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர முயன்றிருந்தார்

    இது போதாதென்று சம்பவ இடத்தில் து*ப்பாக்கிக் கா*யங்களை மறைத்து கு*ண்டு வெ*டிப்பினால் மரணம் நிகழ்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கவும் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர முயற்சி செய்திருந்தார்

    இது மாத்திரமின்றி ஜனவரி 10, 2006 அன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பிறகு டாக்டர் மனோகரன் வீடு திரும்பியபோது, ​​முகமூடி அணிந்த இராணுவத்தினர் சகிதம் எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவின் வாகனம் அவரது வீட்டிற்கு வெளியே அச்சுறுத்தும் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அதே இரவில், டாக்டர் மனோகரன் வீடடின் கூரையின் மீது கற்கள் வீசப்பட்டதோடு தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் திருகோணமலையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டனர்

    இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத அட்டூழியங்களை தொடர்ச்சியாக செய்த கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவிற்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்த போதிலும் நீதியின் முன் நிறுத்தாமல் பதவி உயர்வுகள் வழங்கி கெளரவித்தார்கள்

    அதாவது 1982 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டமைப்பில் சப் இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் சம்பவத்தின் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி கொண்டிருந்தார்

    தற்போது இராணுவ ஒட்டுக்குழுக்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை ஏவி நாடகமாடும் ஜேவிபி ஆட்சியாளர்கள் கூட திருகோணமலை படுகொலை சூத்திரதாரி எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர மீதும் குண்டூசி கூட படாமல் பாதுகாக்கின்றார்கள்
    திருகோணமலை கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் (Trinco-5) படு*கொ*லை செய்யப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதும் இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரி ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் திருகோணமலையில் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர கடைமையாற்றிய போது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத்தின் ஏற்பாட்டில் திட்டமிட்டு இந்த படு*கொ*லைகளை நடத்தியிருந்தார் இந்த சம்பவத்தில் கொ*ல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை காலம் சென்ற டாக்டர் மனோகரன் வழங்கிய சத்தியக்கடதாசியில், சம்பவம் நடந்த அன்று மாலை காந்தி சிலைக்கு அருகே எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகரவின் பிக்கப் வாகனம் (pick- up truck) சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வாகனத்தில் முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் இருந்ததையும், அவர் கடந்து சென்ற பிறகு சோதனைச் சாவடிகளில் இருந்த கடற்படையினர் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர சென்றுவிட்டார், இனி நாம் உள்ளே செல்லலாம் என்று பேசிக்கொண்டதையும் பதிவு செய்திருக்கின்றார் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, கடற்கரையில் பணியிலிருந்த ஒரு பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை அசம்பாவிதம் நடக்கப்போவதாகக் கூறி எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர வெளியேறியிருக்கின்றார் என்கின்ற தகவலையும் இந்த கொடூரம் ஒரு திட்டமிட்ட சம்பவம் என்பதற்கு ஆதாரமாக பதிவு செய்திருக்கின்றார் அதே போல திருகோணமலை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை மிரட்டி, கொ*ல்லப்பட்டவர்கள் பு*லி உறுப்பினர்கள் என்று கையெழுத்து வாங்கவும் எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர முயன்றிருந்தார் இது போதாதென்று சம்பவ இடத்தில் து*ப்பாக்கிக் கா*யங்களை மறைத்து கு*ண்டு வெ*டிப்பினால் மரணம் நிகழ்ந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கவும் எச்.டி.கே.எஸ். கபில ஜயசேகர முயற்சி செய்திருந்தார் இது மாத்திரமின்றி ஜனவரி 10, 2006 அன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்த பிறகு டாக்டர் மனோகரன் வீடு திரும்பியபோது, ​​முகமூடி அணிந்த இராணுவத்தினர் சகிதம் எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவின் வாகனம் அவரது வீட்டிற்கு வெளியே அச்சுறுத்தும் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே இரவில், டாக்டர் மனோகரன் வீடடின் கூரையின் மீது கற்கள் வீசப்பட்டதோடு தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் திருகோணமலையை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டனர் இவ்வாறு வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத அட்டூழியங்களை தொடர்ச்சியாக செய்த கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நெருங்கிய சகாவான எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகராவிற்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்த போதிலும் நீதியின் முன் நிறுத்தாமல் பதவி உயர்வுகள் வழங்கி கெளரவித்தார்கள் அதாவது 1982 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டமைப்பில் சப் இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் சம்பவத்தின் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி கொண்டிருந்தார் தற்போது இராணுவ ஒட்டுக்குழுக்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை ஏவி நாடகமாடும் ஜேவிபி ஆட்சியாளர்கள் கூட திருகோணமலை படுகொலை சூத்திரதாரி எச்.டி.கே.எஸ். கபில ஜெயசேகர மீதும் குண்டூசி கூட படாமல் பாதுகாக்கின்றார்கள்
    0 Comments ·0 Shares ·917 Views ·0 Reviews
  • தூக்கமின்மை உங்கள் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    குறைவான தூக்கம் உங்கள் மூளையை சோர்வடையச் செய்வது மட்டுமல்ல, அது மூளையின் கட்டமைப்பையே சிதைக்கத் தொடங்குகிறது.

    புதிய நரம்பியல் ஆய்வுகளின்படி, தொடர்ச்சியான தூக்கமின்மை மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் ஒரு ஆபத்தான மாற்றத்தைத் தூண்டுகிறது.

    நாம் தொடர்ந்து தூக்கத்தைத் தவிர்க்கும்போது, மூளையில் உள்ள கழிவுகளை அகற்றும் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் அஸ்ட்ரோசைட்டுகள் (Astrocytes) மற்றும் மைக்ரோகிளியா (Microglia) செல்கள் அதிகப்படியான சுறுசுறுப்பு அடைகின்றன.

    சாதாரணமாக, இந்த அஸ்ட்ரோசைட்டுகள் தேவையற்ற நரம்பு இணைப்புகளைச் சீரமைத்து மூளையைத் திறம்படச் செயல்பட வைக்கும். ஆனால் தூக்கமில்லாத நேரங்களில் இவை அதீத வேகத்தில் செயல்பட்டு, ஆரோக்கியமான நரம்பு இணைப்புகளையே அழிக்கத் தொடங்குகின்றன.

    எளிமையாகச் சொன்னால், மூளை தனது சொந்த தகவல் தொடர்பு நெட்வொர்க்கையே "சாப்பிட" ஆரம்பிக்கிறது. அதே வேளையில், மைக்ரோகிளியா செல்கள் மூளையில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்குகின்றன. இது பிற்காலத்தில் நரம்பியல் நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது.

    இதன் விளைவுகள் வெறும் கவனச்சிதறலோடு நின்றுவிடுவதில்லை. தொடர்ச்சியான தூக்கமின்மை என்பது:

    புதிய நினைவாற்றல் உருவாவதைத் தடுக்கிறது.

    உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைச் சிதைக்கிறது.

    ஹார்மோன் சமநிலையை மாற்றுகிறது.

    அல்சைமர் (Alzheimer’s) போன்ற நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    தூக்கம் என்பது வெறும் ஓய்வு நேரம் மட்டுமல்ல; அது உங்கள் மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும் ஒரு அத்தியாவசிய உயிரியல் பழுதுபார்ப்புப் பணியாகும். தூக்கத்தைத் தொடர்ந்து தவிர்ப்பது உங்கள் மூளையின் நீண்டகால ஆரோக்கியத்தையே சீர்குலைக்கும்.

    #sleepscience #brainhealth #neuroscience #sleepdeprivation #CognitiveHealth #alzheimersresearch #mentalhealth #ScienceExplained #neurobiology
    தூக்கமின்மை உங்கள் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல் குறைவான தூக்கம் உங்கள் மூளையை சோர்வடையச் செய்வது மட்டுமல்ல, அது மூளையின் கட்டமைப்பையே சிதைக்கத் தொடங்குகிறது. புதிய நரம்பியல் ஆய்வுகளின்படி, தொடர்ச்சியான தூக்கமின்மை மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்குள் ஒரு ஆபத்தான மாற்றத்தைத் தூண்டுகிறது. நாம் தொடர்ந்து தூக்கத்தைத் தவிர்க்கும்போது, மூளையில் உள்ள கழிவுகளை அகற்றும் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் அஸ்ட்ரோசைட்டுகள் (Astrocytes) மற்றும் மைக்ரோகிளியா (Microglia) செல்கள் அதிகப்படியான சுறுசுறுப்பு அடைகின்றன. சாதாரணமாக, இந்த அஸ்ட்ரோசைட்டுகள் தேவையற்ற நரம்பு இணைப்புகளைச் சீரமைத்து மூளையைத் திறம்படச் செயல்பட வைக்கும். ஆனால் தூக்கமில்லாத நேரங்களில் இவை அதீத வேகத்தில் செயல்பட்டு, ஆரோக்கியமான நரம்பு இணைப்புகளையே அழிக்கத் தொடங்குகின்றன. எளிமையாகச் சொன்னால், மூளை தனது சொந்த தகவல் தொடர்பு நெட்வொர்க்கையே "சாப்பிட" ஆரம்பிக்கிறது. அதே வேளையில், மைக்ரோகிளியா செல்கள் மூளையில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்குகின்றன. இது பிற்காலத்தில் நரம்பியல் நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. இதன் விளைவுகள் வெறும் கவனச்சிதறலோடு நின்றுவிடுவதில்லை. தொடர்ச்சியான தூக்கமின்மை என்பது: புதிய நினைவாற்றல் உருவாவதைத் தடுக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனைச் சிதைக்கிறது. ஹார்மோன் சமநிலையை மாற்றுகிறது. அல்சைமர் (Alzheimer’s) போன்ற நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது. தூக்கம் என்பது வெறும் ஓய்வு நேரம் மட்டுமல்ல; அது உங்கள் மூளையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவும் ஒரு அத்தியாவசிய உயிரியல் பழுதுபார்ப்புப் பணியாகும். தூக்கத்தைத் தொடர்ந்து தவிர்ப்பது உங்கள் மூளையின் நீண்டகால ஆரோக்கியத்தையே சீர்குலைக்கும். #sleepscience #brainhealth #neuroscience #sleepdeprivation #CognitiveHealth #alzheimersresearch #mentalhealth #ScienceExplained #neurobiology
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·140 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·138 Views ·0 Reviews
  • 🚶‍♂️ நீண்ட நடை = நீண்ட ஆயுள்! ❤️

    ஒரு நாளில் 5–10 நிமிடங்கள் நடந்து நிறுத்துவதை விட,
    ஒரே நேரத்தில் தொடர்ந்து நடப்பது தான்
    உங்கள் உடலுக்கு உண்மையான பலன் தருகிறது 💪

    🔹 தொடர்ந்து நடக்கும் போது
    • இதயம் சீராகவும் வலுவாகவும் வேலை செய்யும்
    • தசைகள் உறுதியாகும்
    • ரத்த ஓட்டம் மேம்படும்

    🔹 இடைவிடாத நடை
    👉 இதய நோய் அபாயத்தை குறைக்கும்
    👉 திடீர் மரண ஆபத்தை குறைக்கும்
    👉 உடலுக்கு உண்மையான கார்டியோ பயிற்சி கிடைக்கும்

    ⚠️ சின்ன சின்ன நடைகள் உடலை அசைக்குமே தவிர,
    உடலை மாற்றாது!

    👉 இன்று முதல்
    📌 30–40 நிமிடம்
    📌 இடைவிடாது
    📌 தொடர்ந்து நடக்க ஆரம்பிங்க

    உங்கள் நடை… உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கும்! 🌱

    இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்
    ❤️ Like | 🔁 Share | 💬 Comment
    — மற்றவர்களும் ஆரோக்கியம் பெறட்டும்!
    🚶‍♂️ நீண்ட நடை = நீண்ட ஆயுள்! ❤️ ஒரு நாளில் 5–10 நிமிடங்கள் நடந்து நிறுத்துவதை விட, ஒரே நேரத்தில் தொடர்ந்து நடப்பது தான் உங்கள் உடலுக்கு உண்மையான பலன் தருகிறது 💪 🔹 தொடர்ந்து நடக்கும் போது • இதயம் சீராகவும் வலுவாகவும் வேலை செய்யும் • தசைகள் உறுதியாகும் • ரத்த ஓட்டம் மேம்படும் 🔹 இடைவிடாத நடை 👉 இதய நோய் அபாயத்தை குறைக்கும் 👉 திடீர் மரண ஆபத்தை குறைக்கும் 👉 உடலுக்கு உண்மையான கார்டியோ பயிற்சி கிடைக்கும் ⚠️ சின்ன சின்ன நடைகள் உடலை அசைக்குமே தவிர, உடலை மாற்றாது! 👉 இன்று முதல் 📌 30–40 நிமிடம் 📌 இடைவிடாது 📌 தொடர்ந்து நடக்க ஆரம்பிங்க உங்கள் நடை… உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கும்! 🌱 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ❤️ Like | 🔁 Share | 💬 Comment — மற்றவர்களும் ஆரோக்கியம் பெறட்டும்!
    0 Comments ·0 Shares ·554 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com