• மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள்.

    மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

    மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன.

    பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil

    பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம்,

    இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA

    அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

    அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன.

    வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது.

    ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway
    மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

    இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China
    சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது.

    அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia
    ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது.

    மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள். மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன. வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது. ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது. அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது. மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    0 Comments ·0 Shares ·4K Views ·0 Reviews
  • ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Comments ·0 Shares ·7K Views ·0 Reviews
  • பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!!

    2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

    விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார்.

    மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார்.

    ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது

    ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார்.
    என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார்.

    எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது....

    தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

    அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!! 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது.... தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    0 Comments ·0 Shares ·6K Views ·0 Reviews
  • குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கு ஒரு அற்புதமான இயற்கை 'ஆன்டி-வைரஸ்' தீர்வு! ✨🛡️

    ​தேவையான பொருட்கள்

    ​🧅 பெரிய வெங்காயம் - 1 (தோல் நீக்கியது)
    📌 கிராம்பு - 5 முதல் 10 வரை

    ​எளிமையான செய்முறை & பயன்கள்

    ​🌿 தயாரிப்பு: ஒரு பெரிய வெங்காயத்தின் தோலை நீக்கி, அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் கிராம்புகளை அழகாகச் சொருகி வையுங்கள்.

    ​🌙 பயன்படுத்தும் முறை: உங்கள் செல்லக் குழந்தை உறங்கும் இடத்திற்கு அருகே (குழந்தைக்கு எட்டாத உயரத்தில்) ஒரு தட்டில் வைத்துவிடவும்.

    ​🌬️ இயற்கை சுத்திகரிப்பு: வெங்காயத்தின் 'சல்பர்' மற்றும் கிராம்பின் மருத்துவக் குணங்கள் காற்றில் பரவி, ஒரு இயற்கை ஏர்-பியூரிஃபையர் போலச் செயல்படும்.

    ​🩺 சுவாச மேன்மை: இது சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைச் சீராக்கி, தொந்தரவில்லாத சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும்.

    ​🦠 வைரஸ் எதிர்ப்பு: காற்றில் பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த மணத்திற்கு உண்டு.

    ​😴 ஆழ்ந்த உறக்கம்: சளி மற்றும் மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகள் இரவு முழுவதும் எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியாக உறங்க இது பெரிதும் உதவும்.

    ​#ColdRemedy #NaturalHealing #KidsHealth #HomeRemedies #OnionCloveRemedy #CoughRelief #HealthyKids #Ayurveda #ParentingTips #Immunity
    #FluRemedy #HolisticHealth #NaturalCure #Wellness #HealthTips #BabyCare #ViralRemedy #OrganicLiving #HealthyHome #TraditionalMedicine
    #SafeRemedy
    குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கு ஒரு அற்புதமான இயற்கை 'ஆன்டி-வைரஸ்' தீர்வு! ✨🛡️ ​தேவையான பொருட்கள் ​🧅 பெரிய வெங்காயம் - 1 (தோல் நீக்கியது) 📌 கிராம்பு - 5 முதல் 10 வரை ​எளிமையான செய்முறை & பயன்கள் ​🌿 தயாரிப்பு: ஒரு பெரிய வெங்காயத்தின் தோலை நீக்கி, அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் கிராம்புகளை அழகாகச் சொருகி வையுங்கள். ​🌙 பயன்படுத்தும் முறை: உங்கள் செல்லக் குழந்தை உறங்கும் இடத்திற்கு அருகே (குழந்தைக்கு எட்டாத உயரத்தில்) ஒரு தட்டில் வைத்துவிடவும். ​🌬️ இயற்கை சுத்திகரிப்பு: வெங்காயத்தின் 'சல்பர்' மற்றும் கிராம்பின் மருத்துவக் குணங்கள் காற்றில் பரவி, ஒரு இயற்கை ஏர்-பியூரிஃபையர் போலச் செயல்படும். ​🩺 சுவாச மேன்மை: இது சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைச் சீராக்கி, தொந்தரவில்லாத சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும். ​🦠 வைரஸ் எதிர்ப்பு: காற்றில் பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த மணத்திற்கு உண்டு. ​😴 ஆழ்ந்த உறக்கம்: சளி மற்றும் மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகள் இரவு முழுவதும் எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியாக உறங்க இது பெரிதும் உதவும். ​#ColdRemedy #NaturalHealing #KidsHealth #HomeRemedies #OnionCloveRemedy #CoughRelief #HealthyKids #Ayurveda #ParentingTips #Immunity #FluRemedy #HolisticHealth #NaturalCure #Wellness #HealthTips #BabyCare #ViralRemedy #OrganicLiving #HealthyHome #TraditionalMedicine #SafeRemedy
    0 Comments ·0 Shares ·7K Views ·0 Reviews
  • ஒரு புதிய ஆய்வில், பகலில் தினமும் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்கும் (nap) பெரியவர்கள், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறுகிய நேரம் தூங்குபவர்கள் அல்லது தூங்காதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆபத்து அதிகமாக உள்ளது.
    வயது, இரவில் தூங்கும் தரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை கணக்கில் எடுத்த பிறகும் இந்த தொடர்பு தொடர்ந்துள்ளது. அதாவது, நீண்ட நேர பகல் தூக்கம் நல்ல ஓய்வை காட்டுவதற்குப் பதிலாக, உடலில் ஏதோ சீர்கேடு இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    நிபுணர்கள் கூறுவதாவது:

    இரவில் சரியாக தூங்காமல் இருப்பது

    தூக்கத்தில் மூச்சு தடை (Sleep Apnea)

    உடலில் சக்தி மாற்றச் செயல்களில் (metabolism) சீர்கேடு

    போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடல் அடிக்கடி நீண்ட நேரம் தூங்கச் சொல்கிறது.

    இதனால்:

    இரத்த அழுத்த கட்டுப்பாடு பாதிக்கலாம்

    சர்க்கரை அளவு சீராக இருக்காமல் போகலாம்

    இதயத்திற்கு மெதுவாக அழுத்தம் அதிகரிக்கலாம்

    முக்கியமாக:
    பிரச்சனை “பகல் தூக்கம்” அல்ல…
    👉 ஏன் உடலுக்கு அடிக்கடி நீண்ட தூக்கம் தேவைப்படுகிறது என்பதே முக்கியம்.

    ஆனால்,

    ✅ 30 நிமிடத்திற்குள் இருக்கும் குறுகிய தூக்கம் – பாதுகாப்பானது
    ✅ கவனம் அதிகரிக்க உதவும்
    ✅ மனநிலையை நல்லதாக மாற்றும்

    ஆனால்,

    ⚠️ அடிக்கடி நீண்ட நேரம் தூங்கினால்
    ⚠️ தூங்கிய பிறகும் சோர்வாக இருந்தால்

    👉 உங்கள் இரவு தூக்கத்தின் தரத்தையும்
    👉 இதய ஆரோக்கியத்தையும்
    ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

    முடிவாக:
    இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க,
    👉 தொடர்ந்து நல்ல இரவு தூக்கம் பெறுவதுதான் சிறந்த வழி.

    ---

    #Viral
    #TrendingNow
    #BreakingNews
    #HealthTips
    #DidYouKnow
    #Lifestyle
    #DailyUpdate
    #Awareness
    #Facts
    #Motivation

    ஒரு புதிய ஆய்வில், பகலில் தினமும் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்கும் (nap) பெரியவர்கள், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறுகிய நேரம் தூங்குபவர்கள் அல்லது தூங்காதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆபத்து அதிகமாக உள்ளது. வயது, இரவில் தூங்கும் தரம், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை கணக்கில் எடுத்த பிறகும் இந்த தொடர்பு தொடர்ந்துள்ளது. அதாவது, நீண்ட நேர பகல் தூக்கம் நல்ல ஓய்வை காட்டுவதற்குப் பதிலாக, உடலில் ஏதோ சீர்கேடு இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். நிபுணர்கள் கூறுவதாவது: இரவில் சரியாக தூங்காமல் இருப்பது தூக்கத்தில் மூச்சு தடை (Sleep Apnea) உடலில் சக்தி மாற்றச் செயல்களில் (metabolism) சீர்கேடு போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடல் அடிக்கடி நீண்ட நேரம் தூங்கச் சொல்கிறது. இதனால்: இரத்த அழுத்த கட்டுப்பாடு பாதிக்கலாம் சர்க்கரை அளவு சீராக இருக்காமல் போகலாம் இதயத்திற்கு மெதுவாக அழுத்தம் அதிகரிக்கலாம் முக்கியமாக: பிரச்சனை “பகல் தூக்கம்” அல்ல… 👉 ஏன் உடலுக்கு அடிக்கடி நீண்ட தூக்கம் தேவைப்படுகிறது என்பதே முக்கியம். ஆனால், ✅ 30 நிமிடத்திற்குள் இருக்கும் குறுகிய தூக்கம் – பாதுகாப்பானது ✅ கவனம் அதிகரிக்க உதவும் ✅ மனநிலையை நல்லதாக மாற்றும் ஆனால், ⚠️ அடிக்கடி நீண்ட நேரம் தூங்கினால் ⚠️ தூங்கிய பிறகும் சோர்வாக இருந்தால் 👉 உங்கள் இரவு தூக்கத்தின் தரத்தையும் 👉 இதய ஆரோக்கியத்தையும் ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. முடிவாக: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, 👉 தொடர்ந்து நல்ல இரவு தூக்கம் பெறுவதுதான் சிறந்த வழி. --- #Viral #TrendingNow #BreakingNews #HealthTips #DidYouKnow #Lifestyle #DailyUpdate #Awareness #Facts #Motivation
    0 Comments ·0 Shares ·7K Views ·0 Reviews
  • ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்?

    அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

    ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது.
    எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு.

    இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார்.

    ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது.

    ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார்.

    AV KrishnaRao
    ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்? அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது. எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு. இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார். ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது. ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார். AV KrishnaRao
    0 Comments ·0 Shares ·6K Views ·0 Reviews
  • களைப்போடு வந்த அப்பா
    கடப்பினிலே சாத்தி வைக்கக்
    களவாடிச் சென்று நாமும்
    கலை பயின்ற நினைவிருக்கா?

    முக்கோணக் கம்பியது
    முழங்காலைப் பதம் பார்க்க
    அப்போதும் நிறுத்தாமல்
    அயராது பழகினோமே!!

    அப்பாவின் ஈருருளி
    அழகான முதல் பயிற்சி
    தப்பியவர் யாருமுண்டோ?
    தழும்புகள் ஏதுமின்றி

    ஒற்றைக்கால் மிதியில் வைத்து
    மற்றக்கால் மண்ணிலூன்றி
    தத்தித் தத்தி உருட்டியபின்
    சற்றுக் கொஞ்சம் தேர்ச்சி பெற்று

    உயரமான இடத்திற்கு
    உருட்டியே கொண்டு சேர்த்து
    ஒற்றைக் கால் உதவியோடு
    ஒரே தாவில் ஏறிக் குந்தி

    உயரமான இடமிருந்து
    உருண்டோடி வரும்போது
    உலகத்தையே வெல்வது போல்
    உள்ளுக்குள்ள ஓர் நினைப்பு

    வழமைபோல் நானும் ஓர்நாள்
    வருகின்றேன் தேரிலேறி
    எட்டாத காலிரண்டை
    இரு புறமும் தொங்கவிட்டு

    கடவுளே முருகா அன்று
    காலமே சரியில்லை போல்
    குருட்டு நாய் ஒன்று மெல்லக்
    குறுக்கறுத்து வந்திடவே

    பயத்திலே கண்ணிரண்டும்
    பம்பரமாய்ச் சுழன்றபடி
    நிறுத்தவும் முடியாமல்
    நிலை தவறி மோதுகின்றேன்

    வீரென்று ஓலமிட்டு
    வீட்டு நாய் அலறியோட
    அடுப்படி வேலைகளை
    அரைகுறையாய்ப் போட்டபடி
    அடிப்பதற்குத் தேடுகின்றாள்
    அன்பான எனது அம்மா

    மரத்தால விழுந்தவனை
    மாடு வந்து முட்டுவதா
    எடுத்தேன் பார் ஓட்டம் நான்
    எதிர் வீட்டு வேலி தாண்டி

    அழகான நினைவு தந்த
    அப்பாவின் மிதிவண்டி
    ஆயிரம் முறை விழுந்தும்
    அலுக்காத மிதிவண்டி

    நாகரிக வளர்ச்சியினால்
    நாதியற்றுப் போயிரிச்சி
    பின்புறச் சுவரினிலே
    பெருமூச்சு விட்டபடி
    பழகிடத்தான் யாருமின்றி
    பயனற்றுக் கிடக்கிறது
    களைப்போடு வந்த அப்பா கடப்பினிலே சாத்தி வைக்கக் களவாடிச் சென்று நாமும் கலை பயின்ற நினைவிருக்கா? முக்கோணக் கம்பியது முழங்காலைப் பதம் பார்க்க அப்போதும் நிறுத்தாமல் அயராது பழகினோமே!! அப்பாவின் ஈருருளி அழகான முதல் பயிற்சி தப்பியவர் யாருமுண்டோ? தழும்புகள் ஏதுமின்றி ஒற்றைக்கால் மிதியில் வைத்து மற்றக்கால் மண்ணிலூன்றி தத்தித் தத்தி உருட்டியபின் சற்றுக் கொஞ்சம் தேர்ச்சி பெற்று உயரமான இடத்திற்கு உருட்டியே கொண்டு சேர்த்து ஒற்றைக் கால் உதவியோடு ஒரே தாவில் ஏறிக் குந்தி உயரமான இடமிருந்து உருண்டோடி வரும்போது உலகத்தையே வெல்வது போல் உள்ளுக்குள்ள ஓர் நினைப்பு வழமைபோல் நானும் ஓர்நாள் வருகின்றேன் தேரிலேறி எட்டாத காலிரண்டை இரு புறமும் தொங்கவிட்டு கடவுளே முருகா அன்று காலமே சரியில்லை போல் குருட்டு நாய் ஒன்று மெல்லக் குறுக்கறுத்து வந்திடவே பயத்திலே கண்ணிரண்டும் பம்பரமாய்ச் சுழன்றபடி நிறுத்தவும் முடியாமல் நிலை தவறி மோதுகின்றேன் வீரென்று ஓலமிட்டு வீட்டு நாய் அலறியோட அடுப்படி வேலைகளை அரைகுறையாய்ப் போட்டபடி அடிப்பதற்குத் தேடுகின்றாள் அன்பான எனது அம்மா மரத்தால விழுந்தவனை மாடு வந்து முட்டுவதா எடுத்தேன் பார் ஓட்டம் நான் எதிர் வீட்டு வேலி தாண்டி அழகான நினைவு தந்த அப்பாவின் மிதிவண்டி ஆயிரம் முறை விழுந்தும் அலுக்காத மிதிவண்டி நாகரிக வளர்ச்சியினால் நாதியற்றுப் போயிரிச்சி பின்புறச் சுவரினிலே பெருமூச்சு விட்டபடி பழகிடத்தான் யாருமின்றி பயனற்றுக் கிடக்கிறது
    0 Comments ·0 Shares ·4K Views ·0 Reviews
  • "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள்.
    "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான்.

    அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள்.
    சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை.
    அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்...

    சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....?

    நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான்.
    வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை.
    என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான்.

    சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன?

    அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட.

    முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார்.
    சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார்.

    சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்".

    அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம்.
    அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?"
    என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்..
    குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.

    "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள். "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான். அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள். சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை. அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்... சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....? நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான். வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை. என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான். சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன? அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட. முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார். சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார். சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்". அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம். அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?" என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்.. குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • 🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்)

    கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய்.
    பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும்.

    👉 முக்கிய சிக்கல் என்னவென்றால்
    ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
    அல்லது
    👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம்.

    அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.

    ---

    🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி)

    👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
    👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை

    👉 சில நாட்கள் மலச்சிக்கல்
    👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு
    ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம்

    ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை
    ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து

    ---

    🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல்

    👉 மெல்லிய / பென்சில் போல மலம்
    ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும்

    👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல்
    ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை

    ---

    🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி)

    👉 பிரகாசமான சிவப்பு ரத்தம்

    டாய்லெட் பேப்பரில்

    மலத்தின் மீது

    கமோட்டில்

    👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள்
    ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம்

    👉 கருப்பு / அடர் நிற மலம்
    ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம்

    👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு
    ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia)
    ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை

    ---

    🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம்

    👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு
    👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி

    👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு
    👉 அதிக வாயு, உப்புசம்

    ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்

    ---

    🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு

    👉 டாய்லெட் சென்ற பிறகும்
    👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு

    👉 குறிப்பாக மலத்துடன்

    ரத்தம்

    சளி (mucus)
    இருந்தால் முக்கிய அறிகுறி

    ---

    🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல்

    👉 டயட் இல்லாமல் எடை குறைதல்
    👉 சாப்பிட விருப்பம் குறைதல்
    👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு

    ---

    🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம்

    👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது
    👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல்
    👉 தலைசுற்றல், வெளிறிய தோல்

    ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும்

    ---

    🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை)

    👉 ஆண்கள்
    👉 மெனோபாஸ் கடந்த பெண்கள்

    ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால்
    ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    ---

    🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள்

    👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம்
    👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை

    🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்

    ---

    🟣 10) மலத்தில் சளி (Mucus)

    👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால்
    👉 அதோடு ரத்தம், வலி இருந்தால்
    ⚠️ பரிசோதனை அவசியம்

    ---

    🟣 யாருக்கு ஆபத்து அதிகம்?

    👉 வயது 45க்கு மேல்
    👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு
    👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள்
    👉 நீண்ட கால குடல் அழற்சி நோய்
    👉 அதிக உடல் எடை
    👉 புகை, மது
    👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு

    ---

    🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம்

    👉 மீண்டும் மீண்டும் ரத்தம்
    👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல்
    👉 வயிற்று வலி + எடை குறைதல்
    👉 காரணமில்லாத அனீமியா
    👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள்

    ---

    ⭐ முக்கிய செய்தி

    👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில்
    சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம்

    👉 ஆனால்
    மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா
    🚩 மிக முக்கிய எச்சரிக்கை

    👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்

    ---

    ⚠️ மருத்துவ அறிவிப்பு
    இந்த தகவல் கல்விக்காக மட்டுமே.
    ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால்
    👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்) கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய். பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும். 👉 முக்கிய சிக்கல் என்னவென்றால் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். அல்லது 👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம். அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். --- 🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி) 👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு 👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை 👉 சில நாட்கள் மலச்சிக்கல் 👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம் ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து --- 🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல் 👉 மெல்லிய / பென்சில் போல மலம் ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும் 👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல் ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை --- 🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி) 👉 பிரகாசமான சிவப்பு ரத்தம் டாய்லெட் பேப்பரில் மலத்தின் மீது கமோட்டில் 👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள் ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம் 👉 கருப்பு / அடர் நிற மலம் ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம் 👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia) ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை --- 🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம் 👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு 👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி 👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு 👉 அதிக வாயு, உப்புசம் ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும் --- 🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு 👉 டாய்லெட் சென்ற பிறகும் 👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு 👉 குறிப்பாக மலத்துடன் ரத்தம் சளி (mucus) இருந்தால் முக்கிய அறிகுறி --- 🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல் 👉 டயட் இல்லாமல் எடை குறைதல் 👉 சாப்பிட விருப்பம் குறைதல் 👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு --- 🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம் 👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது 👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல் 👉 தலைசுற்றல், வெளிறிய தோல் ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும் --- 🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை) 👉 ஆண்கள் 👉 மெனோபாஸ் கடந்த பெண்கள் ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால் ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் --- 🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள் 👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம் 👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை 🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் --- 🟣 10) மலத்தில் சளி (Mucus) 👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால் 👉 அதோடு ரத்தம், வலி இருந்தால் ⚠️ பரிசோதனை அவசியம் --- 🟣 யாருக்கு ஆபத்து அதிகம்? 👉 வயது 45க்கு மேல் 👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு 👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள் 👉 நீண்ட கால குடல் அழற்சி நோய் 👉 அதிக உடல் எடை 👉 புகை, மது 👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு --- 🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் 👉 மீண்டும் மீண்டும் ரத்தம் 👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல் 👉 வயிற்று வலி + எடை குறைதல் 👉 காரணமில்லாத அனீமியா 👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள் --- ⭐ முக்கிய செய்தி 👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில் சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம் 👉 ஆனால் மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா 🚩 மிக முக்கிய எச்சரிக்கை 👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் --- ⚠️ மருத்துவ அறிவிப்பு இந்த தகவல் கல்விக்காக மட்டுமே. ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால் 👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    0 Comments ·0 Shares ·4K Views ·0 Reviews
  • அப்பா… ஏன் எப்போதும் பின்னால்?

    (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து)

    1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்…
    அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்…
    இருவரும் சமம்.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் எப்போதும் பின்னால்?

    2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்…
    அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்…
    இருவருமே சம உழைப்பு.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்தங்குகிறார்?

    3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்…
    அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்…
    அன்பு இருவரிடமும் சமம்.
    ஆனால் ஏன்
    தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது?

    4️⃣ போனில் பேசினால்
    முதலில் “அம்மா”…
    கஷ்டம் வந்தால்
    அழைக்கும் முதல் குரல் “அம்மா”…

    உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும்
    நீங்கள் நினைப்பது “அப்பா”…
    ஆனால் அவர் ஒருபோதும்
    உங்களை நினைக்கவில்லையா என்று
    வருத்தப்பட்டதே இல்லை.
    அப்படியிருக்க,
    தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்?

    5️⃣ அலமாரியில்
    அம்மாவின் கலர்புல் புடவைகள்…
    குழந்தைகளின் நிறைய உடைகள்…
    ஆனால்
    அப்பாவின் உடைகள் மிகக் குறைவு.

    அவர் தன் தேவையை
    ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்னால்?

    6️⃣ அம்மாவுக்கு
    நிறைய தங்க நகைகள்…
    அப்பாவுக்கு
    திருமணத்தில் போட்ட
    ஒரே ஒரு மோதிரம்.

    அம்மா குறைவைக் குறித்து
    சில நேரம் சொல்வார்…
    அப்பா?
    ஒருபோதும் இல்லை.

    7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக
    அப்பா
    தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்…
    ஆனால்
    அங்கீகாரம் என்ற இடத்தில்
    அவர் ஏன் எப்போதும்
    பின்தள்ளப்படுகிறார்?

    8️⃣ “இந்த மாதம்
    காலேஜ் கட்டணம்…”
    “பண்டிகைக்கு
    புது உடை வாங்கித் தருங்கள்…”

    அம்மா சொல்வார்…
    அப்பா கேட்பார்…
    ஆனால்
    அப்பா தன் உடையைப் பற்றி
    ஒருபோதும் யோசிப்பதில்லை.

    9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்…
    சில குழந்தைகள் சொல்வார்கள்:
    “அம்மா வீட்டு வேலைகளுக்கு
    இன்னும் பயன்படுவார்…”
    “அப்பா என்ன செய்ய முடியும்?”

    இந்த கேள்வி
    எத்தனை தந்தைகளின்
    மனதை உடைத்திருக்கும்…

    🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு.
    முதுகெலும்பு எங்கே இருக்கிறது?
    👉 நம் உடலின் பின்னால்.

    அதை நாம்
    தினமும் பார்க்க மாட்டோம்…
    ஆனால்
    அது இல்லையென்றால்
    நாம் நின்றுகூட இருக்க முடியாது.

    👉 ஒருவேளை…
    👉 இதனால்தான்
    👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ…



    அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️

    இன்று ஒருமுறை
    👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்…
    👉 பேசுங்கள்…
    👉 நன்றி சொல்லுங்கள்…

    அவர் கேட்க மாட்டார்.
    ஆனால்
    அவரின் கண்கள் பேசும்.
    அப்பா… ஏன் எப்போதும் பின்னால்? (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து) 1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்… அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்… இருவரும் சமம். அப்படியிருக்க, அப்பா ஏன் எப்போதும் பின்னால்? 2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்… அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்… இருவருமே சம உழைப்பு. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்தங்குகிறார்? 3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்… அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்… அன்பு இருவரிடமும் சமம். ஆனால் ஏன் தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது? 4️⃣ போனில் பேசினால் முதலில் “அம்மா”… கஷ்டம் வந்தால் அழைக்கும் முதல் குரல் “அம்மா”… உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் நீங்கள் நினைப்பது “அப்பா”… ஆனால் அவர் ஒருபோதும் உங்களை நினைக்கவில்லையா என்று வருத்தப்பட்டதே இல்லை. அப்படியிருக்க, தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்? 5️⃣ அலமாரியில் அம்மாவின் கலர்புல் புடவைகள்… குழந்தைகளின் நிறைய உடைகள்… ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு. அவர் தன் தேவையை ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்னால்? 6️⃣ அம்மாவுக்கு நிறைய தங்க நகைகள்… அப்பாவுக்கு திருமணத்தில் போட்ட ஒரே ஒரு மோதிரம். அம்மா குறைவைக் குறித்து சில நேரம் சொல்வார்… அப்பா? ஒருபோதும் இல்லை. 7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக அப்பா தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்… ஆனால் அங்கீகாரம் என்ற இடத்தில் அவர் ஏன் எப்போதும் பின்தள்ளப்படுகிறார்? 8️⃣ “இந்த மாதம் காலேஜ் கட்டணம்…” “பண்டிகைக்கு புது உடை வாங்கித் தருங்கள்…” அம்மா சொல்வார்… அப்பா கேட்பார்… ஆனால் அப்பா தன் உடையைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. 9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்… சில குழந்தைகள் சொல்வார்கள்: “அம்மா வீட்டு வேலைகளுக்கு இன்னும் பயன்படுவார்…” “அப்பா என்ன செய்ய முடியும்?” இந்த கேள்வி எத்தனை தந்தைகளின் மனதை உடைத்திருக்கும்… 🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு. முதுகெலும்பு எங்கே இருக்கிறது? 👉 நம் உடலின் பின்னால். அதை நாம் தினமும் பார்க்க மாட்டோம்… ஆனால் அது இல்லையென்றால் நாம் நின்றுகூட இருக்க முடியாது. 👉 ஒருவேளை… 👉 இதனால்தான் 👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ… ⸻ அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️ இன்று ஒருமுறை 👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்… 👉 பேசுங்கள்… 👉 நன்றி சொல்லுங்கள்… அவர் கேட்க மாட்டார். ஆனால் அவரின் கண்கள் பேசும்.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • ஒரு இயற்கை மரணம்
    எத்தனை பேரை வாழ வைக்கிறது
    என்று பாருங்கள்...

    1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்..

    2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார்.

    3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி
    மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்..

    4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்..

    6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார்.

    7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார்.

    8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள்.

    10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்..

    12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார்

    14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு
    கடைக்காரன் லாபம் அடைகிறார்.

    15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார்.

    16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்.....

    ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்...

    மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்....

    இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே...

    ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

    இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    ஒரு இயற்கை மரணம் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்று பாருங்கள்... 1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்.. 2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார். 3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்.. 4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்.. 6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார். 7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார். 8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள். 10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்.. 12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார் 14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரன் லாபம் அடைகிறார். 15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார். 16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்..... ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்... மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்.... இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே... ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும். இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • #BREAKING 🚨
    நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்..

    ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் பிரம்மாண்ட #எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன.

    இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் #போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடத்தப்பட்ட #மரினெரா" (பெல்லா 1)
    ஐஸ்லாந்து அருகே ரஷ்யக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த மரினெரா" #பெல்லா 1 என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை அமெரிக்கப் படைகள் வழிமறித்தன இதனைத் தொடர்ந்து மிகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அக்கப்பலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    நடுவானில் இருந்து தரையிறங்கிய கமாண்டோக்கள்
    கப்பலைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை #Submarine பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அமெரிக்க விமானப்படை, அதிரடித் தாக்குதலில் இறங்கியது
    MH-6 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்க கமாண்டோக்கள் கப்பலின் 'டேங்க் டெக் Tank Deck பகுதியில் தரை இறக்கப்பட்டனர்.
    தற்போது கப்பல் முழுமையாக அமெரிக்க வீரர்களின் பிடியில் இருப்பதாகத் தெரிகிறது.

    சீறிப்பாயும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்ட செய்தியை அடுத்து, பாதுகாப்புக்கு அருகே இருந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதிவேகமாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றது.

    போர் மேகங்கள்..
    இதுவரை உக்ரைன் போர் போன்ற மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும், இப்போது முதன்முறையாக நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.

    ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அமெரிக்க வான்படைக்கும் இடையே மோதல் வெடித்தால் அது உலகளாவிய பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    மோ.கோகுலன்
    #BREAKING 🚨 நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்.. ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் பிரம்மாண்ட #எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன. இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் #போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. கடத்தப்பட்ட #மரினெரா" (பெல்லா 1) ஐஸ்லாந்து அருகே ரஷ்யக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த மரினெரா" #பெல்லா 1 என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை அமெரிக்கப் படைகள் வழிமறித்தன இதனைத் தொடர்ந்து மிகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அக்கப்பலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. நடுவானில் இருந்து தரையிறங்கிய கமாண்டோக்கள் கப்பலைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை #Submarine பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அமெரிக்க விமானப்படை, அதிரடித் தாக்குதலில் இறங்கியது MH-6 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்க கமாண்டோக்கள் கப்பலின் 'டேங்க் டெக் Tank Deck பகுதியில் தரை இறக்கப்பட்டனர். தற்போது கப்பல் முழுமையாக அமெரிக்க வீரர்களின் பிடியில் இருப்பதாகத் தெரிகிறது. சீறிப்பாயும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்ட செய்தியை அடுத்து, பாதுகாப்புக்கு அருகே இருந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதிவேகமாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றது. போர் மேகங்கள்.. இதுவரை உக்ரைன் போர் போன்ற மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும், இப்போது முதன்முறையாக நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அமெரிக்க வான்படைக்கும் இடையே மோதல் வெடித்தால் அது உலகளாவிய பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மோ.கோகுலன்
    0 Comments ·0 Shares ·1K Views ·3 Plays ·0 Reviews
More Results
Idaivelai.com https://idaivelai.com