• 🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம்

    செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம்.
    இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை.

    👉 இது உண்மையில்:

    • இரத்த ஓட்டம் குறைவது
    • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது
    • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது
    • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation)

    இதனால் உருவாகும் ஒரு நிலை.

    ---

    🔍 நாம் வெளியில் பார்க்குவது

    தோலில்:

    • குழிகள்
    • ஆரஞ்சு தோல் போல uneven texture

    ஏன் வருகிறது?

    • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும்
    • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும்
    • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும்

    ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது.

    ---

    🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது?

    • கொழுப்பு செல்கள் பெரிதாகும்
    • லிம்ப் நாளங்கள் அடைபடும்
    • இரத்த நாளங்கள் சுருங்கும்
    • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது

    ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது.

    ---

    💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம்

    லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹

    அது:

    • அதிக நீரை வெளியேற்றும்
    • கழிவுகளை நீக்கும்
    • அழற்சியை குறைக்கும்
    • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்

    ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை.

    அது இயங்க வேண்டுமெனில்:

    • உடல் இயக்கம்
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம் குடித்தல்
    • மன அமைதி

    தேவை.

    ---

    🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்:

    • நீர் தேங்கும்
    • கொழுப்பு செல்கள் வீங்கும்
    • அழற்சி அதிகரிக்கும்
    • தோல் கடினமாகும்

    ➡️ இதுவே செல்லுலைட்.

    ---

    👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்?

    ஏனெனில்:

    • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும்
    • நீண்ட நேரம் உட்கார்வது
    • இப்பகுதியில் கொழுப்பு அதிகம்
    • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம்
    • லிம்ப் பாதை நீளம் அதிகம்

    ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும்.

    ---

    ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை

    நீங்கள்:

    • எடை குறைத்தாலும்
    • தினமும் exercise செய்தாலும்
    • நல்ல உணவு சாப்பிட்டாலும்

    செல்லுலைட் இருக்கலாம்.

    ஏனெனில் இது:

    • திரவ அழுத்தம்
    • தோல் திசு இறுக்கம்
    • லிம்ப் அடைப்பு
    • இரத்த ஓட்டம்
    • உடல் அழற்சி

    இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை.

    ---

    🧠 ஹார்மோன் & மன அழுத்தம்

    அதிக stress & hormone imbalance:

    • தோல் திசுக்களை கடினமாக்கும்
    • லிம்ப் நாளங்களை சுருக்கும்
    • நீர் தேங்க வைக்கும்

    ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை.

    ---

    🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது?

    கிரீம்கள்:

    • தோலை மென்மையாக்கும்
    • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

    ஆனால்:

    • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது
    • உள்ளழற்சியை நீக்காது

    உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான்.

    ---

    🌿 உண்மையான தீர்வு

    உதவி செய்ய வேண்டியது:

    • லிம்ப் drainage
    • உடல் stretching / massage
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம்
    • அழற்சி குறைக்கும் உணவு
    • மன அமைதி

    இதனால்:

    • நீர் தேக்கம் குறையும்
    • கொழுப்பு மென்மையாகும்
    • தோல் மென்மையாகும்

    ---

    🤍 முடிவு

    செல்லுலைட்:

    ❌ உடல் குறை இல்லை
    ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி

    👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை.
    👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது.

    உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚

    ---

    #CelluliteAwareness
    #LymphaticHealth
    #WomenHealthTamil
    #BodyScience
    #SkinHealth
    #NaturalHealing
    #TamilHealthTips
    #WellnessTamil
    #HormoneHealth
    #HealthyBodyMind
    #NoBodyShaming
    #RealWomenRealBodies
    #InflammationAwareness
    #SelfCareTamil
    #HealthEducation
    🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம் செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம். இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை. 👉 இது உண்மையில்: • இரத்த ஓட்டம் குறைவது • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation) இதனால் உருவாகும் ஒரு நிலை. --- 🔍 நாம் வெளியில் பார்க்குவது தோலில்: • குழிகள் • ஆரஞ்சு தோல் போல uneven texture ஏன் வருகிறது? • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும் • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும் • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும் ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது. --- 🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது? • கொழுப்பு செல்கள் பெரிதாகும் • லிம்ப் நாளங்கள் அடைபடும் • இரத்த நாளங்கள் சுருங்கும் • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது. --- 💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம் லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹 அது: • அதிக நீரை வெளியேற்றும் • கழிவுகளை நீக்கும் • அழற்சியை குறைக்கும் • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை. அது இயங்க வேண்டுமெனில்: • உடல் இயக்கம் • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் குடித்தல் • மன அமைதி தேவை. --- 🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்: • நீர் தேங்கும் • கொழுப்பு செல்கள் வீங்கும் • அழற்சி அதிகரிக்கும் • தோல் கடினமாகும் ➡️ இதுவே செல்லுலைட். --- 👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்? ஏனெனில்: • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும் • நீண்ட நேரம் உட்கார்வது • இப்பகுதியில் கொழுப்பு அதிகம் • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம் • லிம்ப் பாதை நீளம் அதிகம் ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும். --- ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை நீங்கள்: • எடை குறைத்தாலும் • தினமும் exercise செய்தாலும் • நல்ல உணவு சாப்பிட்டாலும் செல்லுலைட் இருக்கலாம். ஏனெனில் இது: • திரவ அழுத்தம் • தோல் திசு இறுக்கம் • லிம்ப் அடைப்பு • இரத்த ஓட்டம் • உடல் அழற்சி இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை. --- 🧠 ஹார்மோன் & மன அழுத்தம் அதிக stress & hormone imbalance: • தோல் திசுக்களை கடினமாக்கும் • லிம்ப் நாளங்களை சுருக்கும் • நீர் தேங்க வைக்கும் ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை. --- 🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது? கிரீம்கள்: • தோலை மென்மையாக்கும் • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆனால்: • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது • உள்ளழற்சியை நீக்காது உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான். --- 🌿 உண்மையான தீர்வு உதவி செய்ய வேண்டியது: • லிம்ப் drainage • உடல் stretching / massage • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் • அழற்சி குறைக்கும் உணவு • மன அமைதி இதனால்: • நீர் தேக்கம் குறையும் • கொழுப்பு மென்மையாகும் • தோல் மென்மையாகும் --- 🤍 முடிவு செல்லுலைட்: ❌ உடல் குறை இல்லை ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி 👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை. 👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது. உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚 --- #CelluliteAwareness #LymphaticHealth #WomenHealthTamil #BodyScience #SkinHealth #NaturalHealing #TamilHealthTips #WellnessTamil #HormoneHealth #HealthyBodyMind #NoBodyShaming #RealWomenRealBodies #InflammationAwareness #SelfCareTamil #HealthEducation
    0 Comments ·0 Shares ·12K Views ·0 Reviews
  • பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!!

    2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

    விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார்.

    மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார்.

    ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது

    ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார்.
    என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார்.

    எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது....

    தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

    அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!! 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது.... தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    0 Comments ·0 Shares ·10K Views ·0 Reviews
  • "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள்.
    "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான்.

    அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள்.
    சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை.
    அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்...

    சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....?

    நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான்.
    வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை.
    என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான்.

    சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன?

    அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட.

    முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார்.
    சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார்.

    சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்".

    அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம்.
    அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?"
    என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்..
    குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.

    "அம்மா... எனக்கு ஒரு சந்தேகம்..". படுக்கையில் எழுந்து அமர்ந்தவாறு சிறுவன் அம்மாவை பார்த்துக் கேட்டான். "என்னப்பா" என்றவாறே அம்மாவும் எழுந்து அமர்ந்துகொண்டாள். "அம்மா... நான் தினமும் காலையில் பிக்‌ஷை எடுத்து கொண்டுவரும் அரிசியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சமைத்து அதையும் தானம் பண்ணி மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியை மிச்சம் வைத்தால் நாம் இன்னும் நான்கு நாட்கள் நன்றாக சாப்பிடலாமே அம்மா.. எதற்காக எல்லாவற்றையும் சமைத்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறாய்" என்றான். அம்மா சிறுவன் தலையை மெதுவாக கோதிவிட்டாள். "குழந்தாய்.. நான் இப்பொழுது சொன்னால் உனக்குப் புரியாது, நீயே உணரும் நாள் வரும். இப்போது தூங்கு.." என்றவாறே பாயில் படுத்து அசதியில் உறங்கிப்போனாள். சிறுவனுக்கு ஏனோ உறங்கமுடியவில்லை. அம்மா எதற்காக சமைத்ததை எல்லாம் தானம் செய்கிறாள்.. இந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் வீடு திரும்பப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் கிளம்பி விட்டான் ஸ்ரீமன் நாராயணனை தேடிச்சென்ற துருவனைப்போல்... சிறுவன் மனதில் இதே கேள்வியுடன் நடந்துகொண்டே இருந்தான். இரவு நேரமாகி விட்டது. வந்து சேர்ந்த இடமோ அடர்ந்த வனம், காட்டு விலங்குகளின் இரவு நேர சத்தம் மற்றும் உறுமல்கள் அவனை மிகவும் பயமுறுத்தியது. குழந்தை தானே....? நாராயணா.. எனக்கு பயமாக இருக்கிறதே.. பசி வேறு, சோர்வாக ஒரு மரத்தடியில் அமர்கிறான். சிறுவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதை அங்கு வந்த ஓர் வேடன் பார்த்தான். "தம்பி.. நீ யார்? இது துஷ்ட மிருகங்கள் நடமாடும் நேரம், இங்கெல்லாம் இருக்கக் கூடாது. நீ உன் வீட்டிற்கு போய் விடு" என்றான். பின்னர் "வேண்டாம் வேண்டாம், இன்று இரவு என்னுடன் தங்கிவிடு.. நாளை விடிந்தபின் போகலாம்" என்றவாறு மரத்தை நிமிர்ந்து பார்த்து குரல் கொடுக்கிறான். மரத்தின் உச்சியில் அமைத்திருந்த வீட்டிலிருந்து அவன் மனைவி ஓர் நூலேணியை கீழே இறக்கி விடுகிறாள். சிறுவனை மெதுவாக மேலே ஏற்றி தானும் ஏறிச்செல்கிறான். வேடனின் துணைவி இரண்டு தினை உருண்டை மட்டுமே செய்து வைத்திருந்தாள். தன் கணவனிடம் ஒன்றை கொடுத்துவிட்டு தன்னுடையதை உண்ண ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு சிறுவன் அங்கு வந்ததில் உடன்பாடில்லை. என்ன செய்வது, வேடன் தன் பங்கு தினை உருண்டையை சிறுவனிடம் கொடுத்து உண்ணச்செய்தான். அங்கு படுப்பதற்கும் இடம் இல்லை.. இருவர் மட்டுமே படுத்துக்கொள்ள முடியும். சிறுவனை பாதுகாப்பாக படுக்கவைத்துவிட்டு வேடன் விளிம்பில் படுத்துக்கொள்கிறான். குழந்தை அசதியில் உறங்கி விட்டான். காலையில் வேடனின் மனைவியின் கூச்சல் கேட்டு திடுக்கிட்டு எழுகிறான். இரவில் வேடன் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்து ஓர் கரடிக்கு இரையாகிவிட்டிருந்தான். சிறுவன் மீண்டும் சோகத்துடன் தன் கேள்விக்கு விடை தேடி நடக்கிறான். நாட்கள் உருண்டோடுகின்றன. அவன் கேள்விக்கு அதாவது, தானம் செய்தால் கிடைக்கும் பலன் என்ன? அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முனிவர் ஒருவரை சந்திக்கிறான். தன் சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான். தன்னுடைய இத்தனை நாள் அனுபவங்களை கூறுகிறான். வேடன் கதை உட்பட. முனிவர் சிறிது யோசித்து பக்கத்தில் ஒரு நாட்டின் பெயரைக்கூறி, "நீ அங்கு போ.. உனக்கு விடை கிடைக்கும்" என்றார். சிறுவன் அங்கு செல்கிறான். நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அந்த நாட்டின் ராணிக்கு வெகு நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட சிறுவனுக்கு சட்டென்று முனிவர் அவனிடம் சொன்ன விஷயம் நினைவு வந்தது. தனக்கு அரசனை பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் அரண்மனை செல்கிறான். ஞானப்பிழம்பாக நிற்கும் சிறுவனை கண்ட காவலாளி அமைச்சரிடம் சென்று சிறுவனின் கோரிக்கையை கூறுகிறார். சிறுவனைப் பார்த்த உடன் என்ன தோன்றியதோ? அவனை அரசன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். சிறுவன் மஹாராணிக்கு குழந்தை பிறக்கப்போகும் விஷயத்தை கூறி தனது கோரிக்கையை அரசன் முன் வைக்கிறான். "அரசே.. ராணிக்கு குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது அந்தக் குழந்தையை பூமியில் படாமல் ஓர் தங்கத் தாம்பாளத்தில் எடுத்துவந்து என்னிடம் காண்பிக்கவேண்டும்". அரசனுக்கு ஆச்சரியம்.. ஒரு பாலகன் தைரியமாக தன்னிடம் வந்து கேட்கிறானே என்னதான் நடக்கிறது பார்க்கலாம். அவர் அந்தப்புரத்திற்குச் சென்று சிறுவனின் கோரிக்கையை மருத்துவச்சியிடம் கூறுகிறார். சிறிது நேரத்தில் ஓர் தங்கத் தாம்பாளத்தில் மலர்ச்செண்டுபோல் பச்சிளம் குழந்தையுடன் மஹாராணியின் தோழி எடுத்துவந்து அரசனிடம் குழந்தையை காண்பித்து "அரசே.. சாதாரணக் குழந்தையைப்போல் இந்தக்குழந்தை அழவில்லை. ஆனால் ஆரோக்கியமான குழந்தையாகத்தான் இருக்கிறது "என்று சற்று கவலையுடன் கூறினாள். அரசன் குழந்தையை அந்தச் சிறுவனிடம் எடுத்துச்செல் என்று ஆணையிட்டார். அரசனுக்கும் ஆர்வம். சிறுவன் குழந்தை அருகில் வருகிறான் "என் சந்தேகத்தை தீர்த்து வை.. தானத்தின் பலன் என்ன?" என்று சிறுவன் குழந்தையை பார்த்து கேட்க, என்ன ஆச்சரியம்.. குழந்தையிடமிருந்து பதில்... "அத்தினைக்கு இத்தனையானால் அத்தனைக்கு எத்தனை.... வேண்டும்...." என்று கூறி சாதாரணக் குழந்தையாக அழ ஆரம்பித்தது . அரசனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. சிறுவன் அரசனிடம் விடைபெற்று தன் நாடு நோக்கி திரும்பினான். அவனுக்கு புரிந்து விட்டது. அன்று இரவு ஓர் உருண்டை தினைக்கே அந்த வேடன் அரசனுக்கு மகனாகப் பிறந்து விட்டான்.. தன் தாய் இருக்கோ இல்லையோ தினம் தினம் எத்தனை வழிபோக்கர்களுக்கு உணவளிக்கிறாள்.. ஆகா இதுதானா.... தானத்தின் மகிமை என்று வியந்தான்.
    0 Comments ·0 Shares ·4K Views ·0 Reviews
  • 🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்)

    கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய்.
    பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும்.

    👉 முக்கிய சிக்கல் என்னவென்றால்
    ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
    அல்லது
    👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம்.

    அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.

    ---

    🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி)

    👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
    👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை

    👉 சில நாட்கள் மலச்சிக்கல்
    👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு
    ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம்

    ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை
    ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து

    ---

    🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல்

    👉 மெல்லிய / பென்சில் போல மலம்
    ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும்

    👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல்
    ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை

    ---

    🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி)

    👉 பிரகாசமான சிவப்பு ரத்தம்

    டாய்லெட் பேப்பரில்

    மலத்தின் மீது

    கமோட்டில்

    👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள்
    ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம்

    👉 கருப்பு / அடர் நிற மலம்
    ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம்

    👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு
    ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia)
    ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை

    ---

    🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம்

    👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு
    👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி

    👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு
    👉 அதிக வாயு, உப்புசம்

    ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்

    ---

    🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு

    👉 டாய்லெட் சென்ற பிறகும்
    👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு

    👉 குறிப்பாக மலத்துடன்

    ரத்தம்

    சளி (mucus)
    இருந்தால் முக்கிய அறிகுறி

    ---

    🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல்

    👉 டயட் இல்லாமல் எடை குறைதல்
    👉 சாப்பிட விருப்பம் குறைதல்
    👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு

    ---

    🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம்

    👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது
    👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல்
    👉 தலைசுற்றல், வெளிறிய தோல்

    ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும்

    ---

    🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை)

    👉 ஆண்கள்
    👉 மெனோபாஸ் கடந்த பெண்கள்

    ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால்
    ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    ---

    🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள்

    👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம்
    👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை

    🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்

    ---

    🟣 10) மலத்தில் சளி (Mucus)

    👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால்
    👉 அதோடு ரத்தம், வலி இருந்தால்
    ⚠️ பரிசோதனை அவசியம்

    ---

    🟣 யாருக்கு ஆபத்து அதிகம்?

    👉 வயது 45க்கு மேல்
    👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு
    👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள்
    👉 நீண்ட கால குடல் அழற்சி நோய்
    👉 அதிக உடல் எடை
    👉 புகை, மது
    👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு

    ---

    🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம்

    👉 மீண்டும் மீண்டும் ரத்தம்
    👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல்
    👉 வயிற்று வலி + எடை குறைதல்
    👉 காரணமில்லாத அனீமியா
    👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள்

    ---

    ⭐ முக்கிய செய்தி

    👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில்
    சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம்

    👉 ஆனால்
    மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா
    🚩 மிக முக்கிய எச்சரிக்கை

    👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்

    ---

    ⚠️ மருத்துவ அறிவிப்பு
    இந்த தகவல் கல்விக்காக மட்டுமே.
    ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால்
    👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்) கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய். பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும். 👉 முக்கிய சிக்கல் என்னவென்றால் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். அல்லது 👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம். அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். --- 🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி) 👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு 👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை 👉 சில நாட்கள் மலச்சிக்கல் 👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம் ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து --- 🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல் 👉 மெல்லிய / பென்சில் போல மலம் ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும் 👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல் ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை --- 🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி) 👉 பிரகாசமான சிவப்பு ரத்தம் டாய்லெட் பேப்பரில் மலத்தின் மீது கமோட்டில் 👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள் ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம் 👉 கருப்பு / அடர் நிற மலம் ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம் 👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia) ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை --- 🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம் 👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு 👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி 👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு 👉 அதிக வாயு, உப்புசம் ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும் --- 🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு 👉 டாய்லெட் சென்ற பிறகும் 👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு 👉 குறிப்பாக மலத்துடன் ரத்தம் சளி (mucus) இருந்தால் முக்கிய அறிகுறி --- 🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல் 👉 டயட் இல்லாமல் எடை குறைதல் 👉 சாப்பிட விருப்பம் குறைதல் 👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு --- 🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம் 👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது 👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல் 👉 தலைசுற்றல், வெளிறிய தோல் ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும் --- 🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை) 👉 ஆண்கள் 👉 மெனோபாஸ் கடந்த பெண்கள் ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால் ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் --- 🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள் 👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம் 👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை 🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் --- 🟣 10) மலத்தில் சளி (Mucus) 👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால் 👉 அதோடு ரத்தம், வலி இருந்தால் ⚠️ பரிசோதனை அவசியம் --- 🟣 யாருக்கு ஆபத்து அதிகம்? 👉 வயது 45க்கு மேல் 👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு 👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள் 👉 நீண்ட கால குடல் அழற்சி நோய் 👉 அதிக உடல் எடை 👉 புகை, மது 👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு --- 🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் 👉 மீண்டும் மீண்டும் ரத்தம் 👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல் 👉 வயிற்று வலி + எடை குறைதல் 👉 காரணமில்லாத அனீமியா 👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள் --- ⭐ முக்கிய செய்தி 👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில் சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம் 👉 ஆனால் மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா 🚩 மிக முக்கிய எச்சரிக்கை 👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் --- ⚠️ மருத்துவ அறிவிப்பு இந்த தகவல் கல்விக்காக மட்டுமே. ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால் 👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    0 Comments ·0 Shares ·5K Views ·0 Reviews
  • உடல் உறுப்புகளும் அவை பாதிக்கப்படும் காரணங்களும்:
    வயிறு: அதிகாலையில் உணவு உண்ணாமல் இருந்தால் வயிறு பயப்படும்.
    சிறுநீரகம்: 24 மணிநேரத்தில் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகம் பயப்படும்.
    பித்தப்பை: இரவு 11 மணி வரை தூங்காமல் இருப்பதும், சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருப்பதும் பித்தப்பையைப் பாதிக்கும்.
    சிறுகுடல்: குளிர்ந்த மற்றும் பழைய உணவுகளை உட்கொள்ளும்போது சிறுகுடல் பயப்படும்.
    பெருங்குடல்: அதிகப்படியான காரமான மற்றும் பொரித்த உணவுகளை உண்ணும்போது பெருங்குடல் பாதிப்படையும்.
    நுரையீரல்: புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்தால் நுரையீரல் பயப்படும்.
    கல்லீரல்: அதிகப்படியான கொழுப்பு உணவுகள் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும்.
    இதயம்: அதிக உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உண்ணும்போது இதயம் பயப்படும்.
    கணையம்: அளவுக்கு அதிகமான இனிப்பு பண்டங்களை உண்ணும்போது கணையம் பயப்படும்.
    கண்கள்: இருட்டில் கைபேசி மற்றும் கணினித் திரைகளை (Mobile/Laptop) பார்ப்பதால் கண்கள் பயப்படும்.
    மூளை: எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தூக்கமின்மையால் மூளை பாதிப்படையும். Krv Raja

    #fblifestyle

    உடல் உறுப்புகளும் அவை பாதிக்கப்படும் காரணங்களும்: வயிறு: அதிகாலையில் உணவு உண்ணாமல் இருந்தால் வயிறு பயப்படும். சிறுநீரகம்: 24 மணிநேரத்தில் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகம் பயப்படும். பித்தப்பை: இரவு 11 மணி வரை தூங்காமல் இருப்பதும், சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருப்பதும் பித்தப்பையைப் பாதிக்கும். சிறுகுடல்: குளிர்ந்த மற்றும் பழைய உணவுகளை உட்கொள்ளும்போது சிறுகுடல் பயப்படும். பெருங்குடல்: அதிகப்படியான காரமான மற்றும் பொரித்த உணவுகளை உண்ணும்போது பெருங்குடல் பாதிப்படையும். நுரையீரல்: புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்தால் நுரையீரல் பயப்படும். கல்லீரல்: அதிகப்படியான கொழுப்பு உணவுகள் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். இதயம்: அதிக உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உண்ணும்போது இதயம் பயப்படும். கணையம்: அளவுக்கு அதிகமான இனிப்பு பண்டங்களை உண்ணும்போது கணையம் பயப்படும். கண்கள்: இருட்டில் கைபேசி மற்றும் கணினித் திரைகளை (Mobile/Laptop) பார்ப்பதால் கண்கள் பயப்படும். மூளை: எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தூக்கமின்மையால் மூளை பாதிப்படையும். Krv Raja #fblifestyle
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!

    ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

    எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது

    எத்தனை கறி செய்வது?

    பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா?
    யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது?

    கவலைக்குரிய விடயம் என்னவெனில்:-

    இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள்.

    அடுத்த பிரச்சினை:-

    ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள்.

    ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும்.

    பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.

    ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது.

    மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.

    வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்...

    ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

    ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

    ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

    இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.....

    சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..! ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள். எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது எத்தனை கறி செய்வது? பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா? யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது? கவலைக்குரிய விடயம் என்னவெனில்:- இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள். அடுத்த பிரச்சினை:- ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள். ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும். பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது. மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம். வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்... ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும். ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும். இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது..... சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • மலச்சிக்கல் - உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை

    லட்சக்கணக்கான மக்கள் சோர்வு, வயிற்று உப்பசம் அல்லது அசௌகரியத்துடன் நடமாடுகிறார்கள். ஆனால், இவற்றிற்குப் பின்னால் நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic Constipation) ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள் தினமும் மலம் கழிப்பவராக இருந்தாலும், உங்கள் செரிமான அமைப்பு கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது என்று அர்த்தமல்ல. குடலின் மேற்பகுதியில் பழைய கழிவுகள் தேங்கிவிடுவதால், காலப்போக்கில் சில கிலோ எடையுள்ள மலம் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்:
    இவ்வாறு கழிவுகள் தேங்குவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, வயிற்று உப்பசத்தை அதிகரிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. கழிவுகள் நீண்ட நேரம் குடலில் தங்கும்போது, வெளியேற்றப்பட வேண்டிய நச்சுக்கள் மீண்டும் இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இது பின்வரும் பாதிப்புகளை உண்டாக்கும்:

    அதிகப்படியான சோர்வு.

    தலைவலி.

    சருமப் பிரச்சனைகள்.

    உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு.

    இதற்குக் காரணமான நவீன வாழ்க்கை முறை:
    நார்ச்சத்து குறைந்த உணவுகள், போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பது போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சனை இன்று மிகச் சாதாரணமாகிவிட்டது.

    குடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
    நமது பெருங்குடல் கழிவுகளைச் சீராக நகர்த்த தண்ணீர், நார்ச்சத்து மற்றும் முறையான நரம்பு சமிக்கைகளை (Nerve signaling) நம்பியுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்படும்போது, மலம் வறண்டு இறுகிப்போகிறது. இதனால் தினமும் மலம் கழித்தாலும், குடல் முழுமையாகச் சுத்தமாவதில்லை. காலப்போக்கில் இது குடலின் தசைகளை வலுவிழக்கச் செய்து, மலம் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் திறனைக் குறைக்கிறது.

    தீர்வு என்ன?
    சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு வெறும் மலம் கழிப்பது மட்டும் போதாது, குடல் முழுமையாகச் சுத்தமாவது அவசியம். இதற்கு:

    அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகளை (Whole foods) உட்கொள்ள வேண்டும்.

    தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    மன அழுத்தத்தைக் குறைத்து குடலின் இயக்கத்தைச் சீராக்க வேண்டும்.

    உண்மையான செரிமான ஆரோக்கியம் என்பது கழிவுகளை முழுமையாக அகற்றி, உங்கள் உடல் சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்வதுதான்.

    #healthylifestyle #health #tamilnewsupdates #TamilNews #hrtamilnews #constipation
    மலச்சிக்கல் - உங்களுக்குத் தெரியாமல் உங்கள் உடலில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியப் பிரச்சனை லட்சக்கணக்கான மக்கள் சோர்வு, வயிற்று உப்பசம் அல்லது அசௌகரியத்துடன் நடமாடுகிறார்கள். ஆனால், இவற்றிற்குப் பின்னால் நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic Constipation) ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம் என்பதை அவர்கள் உணருவதில்லை. நீங்கள் தினமும் மலம் கழிப்பவராக இருந்தாலும், உங்கள் செரிமான அமைப்பு கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது என்று அர்த்தமல்ல. குடலின் மேற்பகுதியில் பழைய கழிவுகள் தேங்கிவிடுவதால், காலப்போக்கில் சில கிலோ எடையுள்ள மலம் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழிவுகள் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்: இவ்வாறு கழிவுகள் தேங்குவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, வயிற்று உப்பசத்தை அதிகரிக்கிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. கழிவுகள் நீண்ட நேரம் குடலில் தங்கும்போது, வெளியேற்றப்பட வேண்டிய நச்சுக்கள் மீண்டும் இரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இது பின்வரும் பாதிப்புகளை உண்டாக்கும்: அதிகப்படியான சோர்வு. தலைவலி. சருமப் பிரச்சனைகள். உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு. இதற்குக் காரணமான நவீன வாழ்க்கை முறை: நார்ச்சத்து குறைந்த உணவுகள், போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பது போன்ற காரணங்களால் இந்தப் பிரச்சனை இன்று மிகச் சாதாரணமாகிவிட்டது. குடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? நமது பெருங்குடல் கழிவுகளைச் சீராக நகர்த்த தண்ணீர், நார்ச்சத்து மற்றும் முறையான நரம்பு சமிக்கைகளை (Nerve signaling) நம்பியுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்படும்போது, மலம் வறண்டு இறுகிப்போகிறது. இதனால் தினமும் மலம் கழித்தாலும், குடல் முழுமையாகச் சுத்தமாவதில்லை. காலப்போக்கில் இது குடலின் தசைகளை வலுவிழக்கச் செய்து, மலம் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் திறனைக் குறைக்கிறது. தீர்வு என்ன? சிறந்த செரிமான ஆரோக்கியத்திற்கு வெறும் மலம் கழிப்பது மட்டும் போதாது, குடல் முழுமையாகச் சுத்தமாவது அவசியம். இதற்கு: அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகளை (Whole foods) உட்கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தைக் குறைத்து குடலின் இயக்கத்தைச் சீராக்க வேண்டும். உண்மையான செரிமான ஆரோக்கியம் என்பது கழிவுகளை முழுமையாக அகற்றி, உங்கள் உடல் சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்வதுதான். #healthylifestyle #health #tamilnewsupdates #TamilNews #hrtamilnews #constipation
    0 Comments ·0 Shares ·4K Views ·0 Reviews
  • காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..
    இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். காலையில் பல் துலக்கும் முன் 50 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். சுட வைத்து ஆரிய வெந்நீர் நல்லது. பிறகு பல் துலக்கி விட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ பானங்களோ சாப்பிட வேண்டும்.
    உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ பானங்களையோ சாப்பிடக் கூடாது.
    இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், குணமாகிவிடு மாம். ஒன்று நிச்சயம். இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத் தான் பார்க்கலாமே...
    #fblifestyle #tamilfoods
    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது. என்று கேள்விப்பட்டிருப்போம். இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே.. இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். காலையில் பல் துலக்கும் முன் 50 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். சுட வைத்து ஆரிய வெந்நீர் நல்லது. பிறகு பல் துலக்கி விட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ பானங்களோ சாப்பிட வேண்டும். உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ பானங்களையோ சாப்பிடக் கூடாது. இந்த முறையைக் கையாண்டால்... உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், குணமாகிவிடு மாம். ஒன்று நிச்சயம். இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத் தான் பார்க்கலாமே... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • ஒரு ஆணின் அனுபவம்..

    எங்கோ
    யாரோ இருவருக்கு
    மகளாக பிறந்தாள் ...

    எனக்கு
    மனைவியாக வந்த பின்பு,

    அவளுக்கென்று இருந்த
    ஆசைகளை கனவுகளை எல்லாம்
    மறந்து விட்டாள்..

    இப்போது
    நான் அழுதால் அழுகிறாள்..!

    நான் சிரித்தால் சிரிக்கிறாள் ..!

    நான் துடித்தால் துடிக்கிறாள்..!

    எனக்காகவே வாழ்கிறாள்..!

    ருசியாக உணவு சமைத்து தருகிறாள்..
    ரகசியமாக காதல் செய்கிறாள் ..

    காலையில்
    நான் எழும்புவதற்கு முன்பு
    அவள் எழுந்து விடுகிறாள் ..

    இரவில்
    வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் .,
    நான் வரும் வரை
    தூங்காமல் விழித்திருக்கிறாள் ..

    மாதவிடாய்
    வலி அவளை கொல்லும் போதும் .,
    சிரித்துக் கொண்டே
    வலியினை மறக்கிறாள் ..
    வீட்டை சுத்தம் செய்கிறாள் ..
    அன்பாக பேசுகிறாள் ..
    அனைத்து வேலைகளையும்
    சளைக்காமல் செய்கிறாள் ..

    ஓர் நாள்
    கர்ப்பம் ஆகி விட்டேன் என
    காதுக்குள் சொல்லி
    மார்பில் சாய்ந்தாள் ..

    பக்குவமாக
    குழந்தை போல் பார்த்துக் கொண்டேன் ..

    அவசரமாக
    வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்..

    ஒரு தாதிப் பெண்
    என்னையும் உள்ளே
    வர சென்னாள் .

    இப்போது
    அவள் அருகில் நான்

    கத்தினாள்
    கதறினாள்
    ஏதேதோ செய்தாள்

    வலியால்
    அவள் துடிப்பதை பார்த்து

    என்னால்
    தாங்க முடியவில்லை

    அழ வேண்டும் என்றும்
    நான் நினைக்கவில்லை

    ஆனால்
    என்னை அறியாமல்
    கண்ணீர் வருகிறது
    இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
    எனக்கு தெரியவில்லை

    சதை கிழிந்து
    குழந்தை வெளியில் வரும் போது

    அவள்
    அடைந்த வலியை
    கவிதையில்
    சொல்லிவிட முடியாது

    பாதி குழந்தை
    வெளியில் வந்திருக்கையில்

    வலி தாங்க முடியாமல்
    கைகள் இரண்டையும் எடுத்து
    கும்பிட்டு அழுதாள்

    எவ்வளவு
    வலி இருந்தால்
    அவள் கும்பிட்டு அழுதிருப்பாள்
    என்று நினைக்கும் போது

    நான் துடிதுடித்து
    அவளை இருக அணைத்து கொண்டேன்

    ஒரு பெரிய
    சத்தமிட்டு மயங்கி சாய்ந்தாள்

    ஒரு சில
    நிமிடங்களில்

    குழந்தையை கையில்
    கொடுத்தார்கள்

    நான்
    அவள் நெற்றியில் முத்தம் வைத்து
    இருக அணைத்து கொண்டேன்

    அவள்
    அனுபவித்த வலி என்பது
    நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
    என்று உணர்ந்தேன்

    மரியாதை
    செய்யுங்கள்
    நம் கண்மணிகளுக்கு ...

    நேசிக்கும் மனைவிக்காகவும்

    நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்

    இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்

    இந்த
    வரிகளை
    சமர்ப்பிக்கிறேன்

    நன்றிகள் கோடி
    பெண்களே.🙏
    ஒரு ஆணின் அனுபவம்.. எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் ... எனக்கு மனைவியாக வந்த பின்பு, அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை எல்லாம் மறந்து விட்டாள்.. இப்போது நான் அழுதால் அழுகிறாள்..! நான் சிரித்தால் சிரிக்கிறாள் ..! நான் துடித்தால் துடிக்கிறாள்..! எனக்காகவே வாழ்கிறாள்..! ருசியாக உணவு சமைத்து தருகிறாள்.. ரகசியமாக காதல் செய்கிறாள் .. காலையில் நான் எழும்புவதற்கு முன்பு அவள் எழுந்து விடுகிறாள் .. இரவில் வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால் ., நான் வரும் வரை தூங்காமல் விழித்திருக்கிறாள் .. மாதவிடாய் வலி அவளை கொல்லும் போதும் ., சிரித்துக் கொண்டே வலியினை மறக்கிறாள் .. வீட்டை சுத்தம் செய்கிறாள் .. அன்பாக பேசுகிறாள் .. அனைத்து வேலைகளையும் சளைக்காமல் செய்கிறாள் .. ஓர் நாள் கர்ப்பம் ஆகி விட்டேன் என காதுக்குள் சொல்லி மார்பில் சாய்ந்தாள் .. பக்குவமாக குழந்தை போல் பார்த்துக் கொண்டேன் .. அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்.. ஒரு தாதிப் பெண் என்னையும் உள்ளே வர சென்னாள் . இப்போது அவள் அருகில் நான் கத்தினாள் கதறினாள் ஏதேதோ செய்தாள் வலியால் அவள் துடிப்பதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை அழ வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை ஆனால் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது இந்த அன்புக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை சதை கிழிந்து குழந்தை வெளியில் வரும் போது அவள் அடைந்த வலியை கவிதையில் சொல்லிவிட முடியாது பாதி குழந்தை வெளியில் வந்திருக்கையில் வலி தாங்க முடியாமல் கைகள் இரண்டையும் எடுத்து கும்பிட்டு அழுதாள் எவ்வளவு வலி இருந்தால் அவள் கும்பிட்டு அழுதிருப்பாள் என்று நினைக்கும் போது நான் துடிதுடித்து அவளை இருக அணைத்து கொண்டேன் ஒரு பெரிய சத்தமிட்டு மயங்கி சாய்ந்தாள் ஒரு சில நிமிடங்களில் குழந்தையை கையில் கொடுத்தார்கள் நான் அவள் நெற்றியில் முத்தம் வைத்து இருக அணைத்து கொண்டேன் அவள் அனுபவித்த வலி என்பது நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை என்று உணர்ந்தேன் மரியாதை செய்யுங்கள் நம் கண்மணிகளுக்கு ... நேசிக்கும் மனைவிக்காகவும் நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும் இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும் இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன் நன்றிகள் கோடி பெண்களே.🙏
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள்...
    இனிப்பு, கார பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும் போது காலை முதல் இரவு வரை வெந்நீர் மட்டுமே குடிப்பது சிறந்தது. அது செரிமானத்துக்கு உதவும். வாயு சேர்வதைத் தடுக்கும்.
    ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். அந்த நீரை அவ்வப்போது லேசாக சூடாக்கி, நாள் முழுவதும் குடிக்கலாம்.
    சீரகத்துக்கு பதில் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரையும் இதே போல குடிக்கலாம். அதற்காக சீரகம், ஓமம் இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏதாவது ஒன்று போதும்.
    வெறும் திட உணவுகளாகச் சாப்பிடாமல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் நீர்மோரை சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.
    பச்சை மிளகு கிடைக்கும் சீசன் இது. அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். அதுவும் செரிமானத்துக்கு உதவும்...
    #fblifestyle #tamilfoods
    அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள்... இனிப்பு, கார பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும் போது காலை முதல் இரவு வரை வெந்நீர் மட்டுமே குடிப்பது சிறந்தது. அது செரிமானத்துக்கு உதவும். வாயு சேர்வதைத் தடுக்கும். ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். அந்த நீரை அவ்வப்போது லேசாக சூடாக்கி, நாள் முழுவதும் குடிக்கலாம். சீரகத்துக்கு பதில் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரையும் இதே போல குடிக்கலாம். அதற்காக சீரகம், ஓமம் இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏதாவது ஒன்று போதும். வெறும் திட உணவுகளாகச் சாப்பிடாமல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் நீர்மோரை சிறிது சிறிதாகக் குடிக்கலாம். பச்சை மிளகு கிடைக்கும் சீசன் இது. அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். அதுவும் செரிமானத்துக்கு உதவும்... #fblifestyle #tamilfoods
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • இது ஒரு எச்சரிக்கை பதிவு...

    படித்துவிட்டு கட்டாயமாக
    பகிருங்கள் தேனீக்கள் மட்டும்
    இந்த மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன்
    வாழ்வதற்கு நான்கு
    ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
    இருக்காது!’ என்று
    சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட்
    ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
    இனிக்கும் செய்தியல்ல!
    தேனீ... உலகின் மிக
    சுவாரஸ்யமான,
    நுணுக்கமான உயிரினம்.
    அந்தத் தேனீக்களைப் பற்றி
    ஆச்சரியமான மற்றும்
    அதிர்ச்சியான விஷயத்தைத்
    தெரிந்துகொள்ளலாமா?
    முதலில்... ஆச்சரியம்.
    தக்கனூண்டு சைஸில்
    இருக்கும் தேனீதான் உலகின்
    மிகச் சிறந்த மகரந்தச்
    சேர்க்கையாளர். தென்னை,
    வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
    போன்ற பல பழ வகைகள் காபி,
    ஏலக்காய், பருத்தி போன்ற
    செடிகள் மற்றும் உணவு
    தானியங்கள் எனப் பல கோடி
    மகரந்தச் சேர்க்கைகளுக்குக்
    காரணமாக இருக்கும்
    தேனீக்கள்தான், உலகின் 80
    சதவிகித உணவுப்
    பொருள்களின் பெருக்கத்துக்கு
    ம் காரணம்.
    தேனீயின் தகவல் பரிமாற்ற
    முறை, ஸ்கைப், வாட்ஸ்அப்
    முறைகளை விடத்
    துல்லியமானது. யானை,
    ஆமைகளுக்கு ஞாபகசக்தி
    அதிகம் என்போம். ஆனால்,
    அவற்றைவிடவும்
    கூர்மையான ஞாபகசக்தி
    கொண்டவை தேனீக்கள்.
    இதுபோல இன்னும் பல
    ஆச்சரியங்கள் அந்தத்
    தக்கனூண்டு உடம்பில்
    இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி
    தரும் விஷயம்... அந்தத்
    தேனீக்கள் இப்போது
    'அழிந்துவரும் உயிரினங்கள்’
    பட்டியலில் இடம்பிடித்திருக
    ்கின்றன.
    ஆம்... 'உலகை உலுக்கும்
    செய்தி’ என்றால், நிச்சயம்
    இதுதான். ஒட்டுமொத்த மக்கள்
    தொகையாலும் பூமிக்கு
    விளையாத நன்மை, ஒரே ஒரு
    தேனீயால் விளையும். அந்த
    அளவுக்குத் தேனீயின்
    ஒவ்வொரு சிறகசைப்பும்
    பூமிப் பந்தில் பசுமைப்
    போர்வையைப் போத்துகிறது.
    தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’
    பற்றி தெரிந்துகொண்டால்தான்,
    அது காடுகளின்
    பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
    நன்மை விளைவிக்கிறது என்று
    புரியும்.
    தேனீக்களின் வாழ்வியல்
    குணங்களைப் பற்றி கேட்டதும்,
    சுவாரஸ்யமாகப்
    பட்டியலிட்டார் தமிழ்நாடு
    வேளாண்மை
    பல்கலைக்கழகத்தின் பூச்சிகள்
    துறையைச் சேர்ந்த டாக்டர்
    எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
    உலகத்தில் அஞ்சு வகை
    தேனீக்கள் இருக்கு. மலைத்
    தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்
    தேனீ, இத்தாலியன் தேனீ,
    கொடுக்கில்லாத் தேனீ. இதில்
    இந்திய, இத்தாலிய மற்றும்
    கொடுக்கில்லாத்
    தேனீக்களைத்தான் மனிதர்கள்
    வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள்
    தானாகவே காட்டில் வளரும்.
    ஒரு குடும்பத்தில் ஒரு ராணித்
    தேனீ, சில நூறு ஆண்
    தேனீக்கள், பல்லாயிரம் பணித்
    தேனீக்கள் (பெண்கள்)
    இருக்கும். இதில் ஆண்
    தேனீக்களுக்கு 90 நாள்களும்,
    பணித் தேனீக்களுக்கு 70
    நாள்களும், ராணித் தேனீக்கு
    இரண்டு வருடங்களும் ஆயுள்.
    ராணித் தேனீக்களுக்கு
    முட்டையிடுவது மட்டும்தான்
    வேலை. ஆண் தேனீக்கு,
    ராணியோடு புணர்வதும்
    தேன் கூட்டைப் பாதுகாப்பதும்
    கடமை. மற்ற எல்லா
    வேலைகளும் பணித் தேனீக்கள்
    பொறுப்பு. உணவுச் சேகரிப்பு,
    தேன்கூடு கட்டுவது, தேனைப்
    பக்குவப்படுத்துவது,
    கூட்டைச் சுத்தமாகப்
    பராமரிப்பதுனு எல்லா
    வேலைகளையும் பணித்
    தேனீக்கள்தான் கவனிக்கும்.
    தேனீக்களின் பொறியியல்
    அறிவு அபாரமானது. தேன்
    கூட்டை அறுங்கோண
    வடிவத்துல கட்டும். ஏன்னா,
    அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர்
    இடத்தைக்கூட வீணாக்காம
    முழுசாப் பயன்படுத்த
    முடியும். ஆண் தேனீகளுக்குப்
    பெரிய அறுங்கோண செல்,
    பணித் தேனீக்களுக்குச் சிறிய
    அறுங்கோண செல் வடிவத்தில்
    கூடு கட்டிட்டு, ராணித்
    தேனீக்கு சிலிண்டர் வடிவில்
    செல் கட்டும். கூட்டின்
    கட்டுமானம் திருப்தியாக
    இருந்தால் மட்டுமே, ராணித்
    தேனீ அதில் முட்டையிடும்.
    பூக்களின் மகரந்தம், மதுரம்...
    இரண்டும்தான் தேனீக்களின்
    உணவு. அப்போதைய பசிக்கு
    அப்போதே சாப்பிட்டுவிடும்.
    அப்புறம் ஏன் தேன்
    சேகரிக்கிறது? குளிர்
    காலங்கள், பூ பூக்காத
    காலங்களில் உணவுத்
    தட்டுப்பாட்டைச்
    சமாளிக்கத்தான் தேன்
    சேகரிக்கிறது. தேனீக்கள் தேன்
    சேகரித்துப் பதப்படுத்துவதுத
    ான் உலகின் சிறந்த உணவுப்
    பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
    தேன் தேடிச் செல்லும் பணித்
    தேனீக்கள், பூக்களின்
    மதுரத்தை உறிந்து தன்
    உடலில் இருக்கும் 'தேன்
    பை’யில் சேகரித்துக்கொள்
    ளும். அந்த மதுரம் முழுவதும்
    செரிக்காமல், தேனீயின்
    வயிற்றில் இருக்கும்
    நொதிகளுடன் சேர்ந்து
    திரவமாக மாறிவிடும்.
    கூட்டுக்குத் திரும்பி வரும்
    தேனீக்கள், கூட்டின் வாசலில்
    காத்திருக்கும் தேனீக்களிடம்
    அந்தத் திரவத்தை
    ஒப்படைக்கும். அதற்காக
    ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன்
    பையில் இருந்து திரவத்தை
    வெளியில் கொண்டுவந்து எதிர்
    தேனீயின் வாயில் கொட்டும்.
    ஒரு தேனீ இப்படி 50 முறை
    கக்கினால்தான், ஒரு துளி தேன்
    சேரும். கூட்டைப் பராமரிக்கும்
    தேனீக்கள் அந்தத் திரவத்தைக்
    கூட்டின் ஓர் ஒரத்தில்
    இருக்கும் தேனடையில் கக்கி,
    அதில் இன்வர்டோஸ் எனும்
    நொதியைச் சேர்க்கும். பிறகு
    அந்தத் திரவத்தில் இருந்து
    நீர்த்தன்மை வற்றிப்போவதற்கா
    க தன் இறகை ஆட்டி ஆட்டி
    ஆவியாக்கும். பிறகு தேனைப்
    பாதுகாக்க ஒருவகை
    மெழுகைப் பூசிவைக்கும்.
    இத்தனை
    நடைமுறைகளுக்குப்
    பிறகுதான் நாம் சுவைக்கும்
    தேன் உருவாகும். தேன்
    எடுப்பவர்கள் கொஞ்சம்
    தேனை தேனிக்களுக்கு எனக்
    கூட்டில் விட்டுத்தான்
    எடுப்பார்கள். அதுதான் தேன்
    சேகரிக்கும் தர்மம்!
    இந்த வேலை நடக்கும்போது
    ராணித் தேனீ அதை வேடிக்கை
    மட்டுமே பார்க்கும்.
    இனப்பெருக்கக் காலத்தில்
    மட்டும்தான் அதற்கு வேலை
    வரும். அந்தச் சமயத்தில்
    வேகமாக ராணித் தேனீ
    உயரத்துக்குப் பறக்கும். அதை
    எந்த ஆண் தேனீ துரத்திப்
    பிடிக்கிறதோ, அதோடுதான்
    இணை சேரும் ராணி. புணர்ச்சி
    முடிந்தவுடன் ஆண்
    இறந்துவிடும். அதன் பிறகு
    ராணித் தேனீ முட்டையிட,
    முட்டையில் இருந்து வரும்
    தேனீக்களைப் பணித்
    தேனீக்கள்தான் வளர்ப்புத்
    தாயாக வளர்க்கும்!
    தேன் சேகரிப்பதற்கான
    தகவல்களை தேனீக்கள்
    பகிர்ந்துகொள்ளும் முறை
    அட்டகாசமானது. உணவுத்
    தேவை ஏற்படும்போது
    'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்
    முன்னே சென்று பூக்கள்
    இருக்கும் இடத்தைக்
    கண்டுபிடித்துவிட்டுக்
    கூட்டுக்குத் திரும்பும்.
    கூட்டில் உள்ள மற்ற பணித்
    தேனீக்களுக்கு ஸ்கவுட்
    தேனீக்கள், தாங்கள்
    கண்டுபிடித்த தோட்டம்
    அல்லது சோலை எந்தத்
    திசையில் எவ்வளவு தூரத்தில்
    உள்ளது என்பதை நடனம் ஆடித்
    தெரிவிக்கும்.
    இதில் இரண்டு வித நடனங்கள்
    உள்ளன. வட்ட நடனம் மற்றும்
    வாலாட்டு நடனம். வட்ட
    நடனத்தில் வட்டமிட்டு
    வட்டமிட்டு பூக்கள் இருக்கும்
    தொலைவை மட்டும்
    குறிக்கும். வாலாட்டு
    நடனத்தில் உயரப் பறந்து
    வாலை ஆட்டினால், சூரியன்
    இருக்கும் அதே திசையில்
    உணவு உள்ளது என்றும், கீழே
    பறந்து வாலை ஆட்டினால்,
    சூரியனுக்கு நேரெதிர்
    திசையில் தோட்டம் உள்ளது
    என்றும் அர்த்தம். வாலை
    வேகமாக ஆட்டினால், சோலை
    அருகில் உள்ளது என்றும்,
    மெதுவாக ஆட்டினால்,
    தொலைவில் உள்ளது என்றும்
    அர்த்தம்
    சூரியன், சோலையின் திசை,
    தங்கள் கூட்டின் இருப்பிடம்...
    இந்த மூன்றையும்
    சம்பந்தப்படுத்தி நடன
    அசைவுகள் இருக்கும். இந்த
    நுட்பமான நடன ரகசியத்தைக்
    கண்டுபிடித்த ஆஸ்திரிய
    ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-
    க்கு நோபல் பரிசு
    கொடுத்தார்கள்.
    தேன் சேகரிக்கும்போது
    தேனீக்களின் காலில்
    ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
    மகரந்தம், அடுத்தடுத்து
    பூக்களின் மேல்
    உட்காரும்போது, விதவிதமான
    கூட்டணியுடன் பரவும்.
    இதுதான் காடுகளின்,
    சோலைகளின் பரவலுக்குக்
    காரணம். தேனீக்களை அதிகம்
    காடுகளுக்குள்தான் பார்க்க
    முடியும். காரணம், தேனீக்கள்
    இருக்கிற இடத்திலேயே
    இயற்கையாகவே அடர்ந்த
    காடுகள் உருவாகிவிடும்!''
    ''அழியும் உயிரினம்
    பட்டியலில் இடம் பிடிக்கும்
    அளவுக்கு தேனீக்களுக்கு
    என்ன ஆபத்து?''
    ''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற
    மேற்கத்திய நாடுகளில்
    தேனீக்கள் அழிந்துவரும்
    உயிரினங்கள். கடந்த ஐந்து
    ஆண்டுகளில் மட்டும் உலகின்
    மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள்
    அழிந்துவிட்டன. அதாவது,
    தேனீக்களின் அழிவு சதவிகிதம்
    42 சதவிகிதம் அதிகரித்திருக்க
    ிறது. இன்னும் இந்தியாவில்
    தேனீக்களுக்கு அந்த
    அளவுக்குப் பெரிய அபாயம்
    ஏற்படவில்லை. ஆனால்,
    கூடிய சீக்கிரமே அந்த
    நிலைமை வரலாம்.
    தேனீக்களின் இந்தப்
    பேரழிவுக்குக் காரணம், Colony
    Collapse Disorder - சுருக்கமாக...
    CCD. அதாவது கூட்டில் இருந்து
    உணவு சேகரிக்கச் சென்ற
    பணித் தேனீக்கள்
    கொத்துக்கொத்தாகக்
    காணாமல்போய்விடும். ராணி
    மட்டும் கூட்டில் இருக்கும்.
    பணித் தேனீக்கள் கொஞ்சம்
    கொஞ்சமாகக் குறைந்து ஒரு
    கட்டத்தில் இல்லாமலேயே
    போய்விட்டால், ராணித் தேனீ
    என்ன செய்வதெனத்
    தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
    இறந்துவிடும்.
    இல்லையெனில், வேறு கூடு
    தேடிப் போய்விடும். பணித்
    தேனீக்கள் இப்படித்
    தொலைந்துபோவதற்குப் பல
    காரணங்கள் உண்டு. அதில்
    முக்கியமானது... செயற்கை
    உரம், பூச்சிக்கொல்லி, மரபணு
    மாற்றப்பட்ட பயிர்கள்.
    செயற்கை உரத்தில் உள்ள
    நியோ நிக்டினாய்ட்ஸ்
    எனப்படும் வேதிப்பொருள்,
    தேனீக்களின் நரம்பு
    மண்டலத்தைப் பாதித்து
    அவற்றின் நினைவுத்திறனை
    மழுங்கடித்துவிடும். இதனால்
    கூட்டுக்குத் திரும்பும் வழி
    மறந்துபோய் பறந்துபோய்
    அலைந்து திரிந்து
    இறந்துவிடும். மரபணு
    மாற்றப்பட்ட உணவுப்
    பயிர்களின் விதைகளை
    'டெர்மினேட்டர் சீட்ஸ்’
    என்பார்கள். அதாவது, அந்தப்
    பயிர்கள் 'விதை தானியத்தை’
    உருவாக்காது. மலட்டு
    விதைகளைத்தான்
    உருவாக்கும். அப்படியான
    மரபணு மாற்றப்பட்ட
    பயிர்களின் மகரந்தத்தில் உள்ள
    புரோட்டீன் தேனீக்களிடம்
    செரிமானக் கோளாறுகளை
    உண்டாக்கி, ஒரு கட்டத்தில்
    தேனீக்களைக் கொன்றேவிடும்.
    இப்படி விவசாயத்தில் 'வணிக
    லாபத்துக்காக’ மனிதன் செய்த
    பல மாற்றங்கள் தேனீக்களை
    அழிக்கின்றன. ஐரோப்பிய
    நாடுகளில் கடந்த ஐந்து
    வருடங்களாக விவசாய
    உற்பத்தி பெருமளவு
    குறைந்துவருவதற்குக்
    காரணம் தேனீக்களின் இறப்பு
    எனத் தெரியவந்தது. அதனால்,
    அங்கு செயற்கை உரம், மரபணு
    மாற்றப்பட்ட விதைகள்
    போன்றவற்றைத் தடை
    செய்துவிட்டனர். வளர்ப்புத்
    தேனீக்களைப் பிடித்து வந்து
    தங்கள் வயல்களில்
    பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்க
    ை உண்டாக்க முயற்சிக்கிறார்
    கள். பல லட்சம் தேனீக்களை
    அழித்த சுயநல மனிதனால்,
    ஒரே ஒரு தேனீயைக்கூட
    உருவாக்க முடியாது. இதை
    நாம் எப்போது உணர்வோம்?''
    என்று வருத்தமாகச்
    சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவ
    ாசன்.
    'தேனீக்கள் மட்டும் இந்த
    மண்ணில் இருந்து
    மறைந்துவிட்டால், மனிதன்
    வாழ்வதற்கு நான்கு
    ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
    இருக்காது!’ என்று
    சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட்
    ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.
    இது ஒரு எச்சரிக்கை பதிவு... படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை..... இனிக்கும் செய்தியல்ல! தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா? முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கு ம் காரணம். தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக ்கின்றன. ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும். தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன். உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும். தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும். பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுத ான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள் ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்கா க தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்! இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்! தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும். இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம் சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்- க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!'' ''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?'' ''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்க ிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம். தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்க ை உண்டாக்க முயற்சிக்கிறார் கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவ ாசன். 'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.
    0 Comments ·0 Shares ·3K Views ·0 Reviews
  • #fblifestyle

    💊 மருந்து வாங்க ஓட வேண்டாம்…

    🧠 உங்கள் குடலே உங்கள் உடலின் “மூளை”!

    நாம் அடிக்கடி சந்திக்கும் பல உடல் பிரச்சனைகளின் மூல காரணம் – குடல் (GUT) சரியாக இயங்காதது தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?

    👉 வயிறு சரியில்லை
    👉 மலம் சரியாக போகவில்லை
    👉 அடிக்கடி வாயு
    👉 அஜீரணம்
    👉 உடல் சோர்வு
    👉 நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    இவையெல்லாம் தனித்தனி நோய்கள் இல்லை…
    குடல் சமநிலை குலைந்ததின் எச்சரிக்கை மணி! 🔔

    ---

    🧬 குடல் (GUT) என்றால் என்ன?

    குடல் என்பது உணவை செரிப்பதற்கான ஒரு குழாய் மட்டும் அல்ல ❌
    👉 இது நம் நோய் எதிர்ப்பு சக்தியின் 70%க்கும் மேல் உருவாகும் இடம்
    👉 நம் மனநிலையை கட்டுப்படுத்தும் Serotonin என்ற ஹார்மோனின் 90% குடலிலேயே உருவாகிறது
    👉 குடல் ஆரோக்கியம் = உடல் + மன ஆரோக்கியம் 💚

    ---

    ❗ குடலில் தினமும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் & அதற்கான எளிய தீர்வுகள்

    🔴 1. வாயு (Gas) பிரச்சனை

    காரணம்:
    ❌ வேகமாக சாப்பிடுதல்
    ❌ எண்ணெய் & ஜங்க் உணவு
    ❌ குடல் பாக்டீரியா சமநிலை குலைவு

    எளிய தீர்வு:
    ✅ சீரகம் + சுக்கு சேர்த்து கொதிக்க வைத்த நீர்
    ✅ மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுதல்
    ✅ இரவில் கனமான உணவு தவிர்த்தல்

    ---

    🔴 2. மலச்சிக்கல் (Constipation)

    காரணம்:
    ❌ தண்ணீர் குறைவு
    ❌ நார் (Fiber) இல்லாத உணவு
    ❌ உடல் அசைவின்மை

    எளிய தீர்வு:
    ✅ தினமும் 3–4 லிட்டர் நீர்
    ✅ பப்பாளி, கீரை, காய்கறிகள்
    ✅ காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி

    ---

    🔴 3. பேதி / அடிக்கடி மலம்

    காரணம்:
    ❌ குடல் கிருமிகள்
    ❌ பழைய உணவு
    ❌ மன அழுத்தம்

    எளிய தீர்வு:
    ✅ மோர் + சீரகம்
    ✅ இளநீர்
    ✅ வீட்டில் சமைத்த تازா உணவு

    ---

    🔴 4. அஜீரணம் (Indigestion)

    காரணம்:
    ❌ தவறான உணவு நேரம்
    ❌ அதிக காரம்
    ❌ நள்ளிரவில் சாப்பிடுதல்

    எளிய தீர்வு:
    ✅ உணவுக்குப் பிறகு சோம்பு
    ✅ மிதமான கார உணவு
    ✅ உணவு – தூக்கம் இடையே 2–3 மணி இடைவெளி

    ---

    🔴 5. வயிற்று வலி / வீக்கம்

    காரணம்:
    ❌ குடல் அழற்சி
    ❌ Gas trapping
    ❌ உணவு ஒவ்வாமை

    எளிய தீர்வு:
    ✅ வெந்நீர்
    ✅ இஞ்சி தேநீர்
    ✅ தயிர் / மோர் (Natural Probiotics)

    ---

    🔴 6. குடல் சமநிலை குலைவு (Gut Dysbiosis)

    அறிகுறிகள்:
    ⚠️ அடிக்கடி சோர்வு
    ⚠️ சரும பிரச்சனைகள்
    ⚠️ நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    எளிய தீர்வு:
    ✅ புளித்த உணவுகள் (இட்லி, தோசை, கஞ்சி)
    ✅ பழங்கள் & காய்கறிகள்
    ✅ தேவையில்லாத ஆன்டிபயாட்டிக் தவிர்க்கல்

    ---

    🌿 நினைவில் வையுங்கள்!

    > “மருந்து குடிக்காமல், உணவை மருந்தாக மாற்றினால் –
    மருத்துவரைத் தேடும் அவசியமே இருக்காது!”

    ---

    🙏 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்…

    📌 உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
    📌 தினமும் இப்படியான உடல் & ஆரோக்கிய விழிப்புணர்வு பதிவுகளுக்காக
    👉 எங்களது பேஸ்புக் பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள் ❤️
    📌 ஒருவரின் வாழ்க்கையையாவது இந்த பதிவு மாற்றலாம்!

    ---

    ✨ ஆரோக்கியம் ஒரு செலவு அல்ல – அது ஒரு முதலீடு!
    உங்கள் குடலை கவனியுங்கள்… உங்கள் உடல் தானாக குணமாகும் 🌱
    #fblifestyle 💊 மருந்து வாங்க ஓட வேண்டாம்… 🧠 உங்கள் குடலே உங்கள் உடலின் “மூளை”! நாம் அடிக்கடி சந்திக்கும் பல உடல் பிரச்சனைகளின் மூல காரணம் – குடல் (GUT) சரியாக இயங்காதது தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்? 👉 வயிறு சரியில்லை 👉 மலம் சரியாக போகவில்லை 👉 அடிக்கடி வாயு 👉 அஜீரணம் 👉 உடல் சோர்வு 👉 நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் தனித்தனி நோய்கள் இல்லை… குடல் சமநிலை குலைந்ததின் எச்சரிக்கை மணி! 🔔 --- 🧬 குடல் (GUT) என்றால் என்ன? குடல் என்பது உணவை செரிப்பதற்கான ஒரு குழாய் மட்டும் அல்ல ❌ 👉 இது நம் நோய் எதிர்ப்பு சக்தியின் 70%க்கும் மேல் உருவாகும் இடம் 👉 நம் மனநிலையை கட்டுப்படுத்தும் Serotonin என்ற ஹார்மோனின் 90% குடலிலேயே உருவாகிறது 👉 குடல் ஆரோக்கியம் = உடல் + மன ஆரோக்கியம் 💚 --- ❗ குடலில் தினமும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் & அதற்கான எளிய தீர்வுகள் 🔴 1. வாயு (Gas) பிரச்சனை காரணம்: ❌ வேகமாக சாப்பிடுதல் ❌ எண்ணெய் & ஜங்க் உணவு ❌ குடல் பாக்டீரியா சமநிலை குலைவு எளிய தீர்வு: ✅ சீரகம் + சுக்கு சேர்த்து கொதிக்க வைத்த நீர் ✅ மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுதல் ✅ இரவில் கனமான உணவு தவிர்த்தல் --- 🔴 2. மலச்சிக்கல் (Constipation) காரணம்: ❌ தண்ணீர் குறைவு ❌ நார் (Fiber) இல்லாத உணவு ❌ உடல் அசைவின்மை எளிய தீர்வு: ✅ தினமும் 3–4 லிட்டர் நீர் ✅ பப்பாளி, கீரை, காய்கறிகள் ✅ காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி --- 🔴 3. பேதி / அடிக்கடி மலம் காரணம்: ❌ குடல் கிருமிகள் ❌ பழைய உணவு ❌ மன அழுத்தம் எளிய தீர்வு: ✅ மோர் + சீரகம் ✅ இளநீர் ✅ வீட்டில் சமைத்த تازா உணவு --- 🔴 4. அஜீரணம் (Indigestion) காரணம்: ❌ தவறான உணவு நேரம் ❌ அதிக காரம் ❌ நள்ளிரவில் சாப்பிடுதல் எளிய தீர்வு: ✅ உணவுக்குப் பிறகு சோம்பு ✅ மிதமான கார உணவு ✅ உணவு – தூக்கம் இடையே 2–3 மணி இடைவெளி --- 🔴 5. வயிற்று வலி / வீக்கம் காரணம்: ❌ குடல் அழற்சி ❌ Gas trapping ❌ உணவு ஒவ்வாமை எளிய தீர்வு: ✅ வெந்நீர் ✅ இஞ்சி தேநீர் ✅ தயிர் / மோர் (Natural Probiotics) --- 🔴 6. குடல் சமநிலை குலைவு (Gut Dysbiosis) அறிகுறிகள்: ⚠️ அடிக்கடி சோர்வு ⚠️ சரும பிரச்சனைகள் ⚠️ நோய் எதிர்ப்பு சக்தி குறைவு எளிய தீர்வு: ✅ புளித்த உணவுகள் (இட்லி, தோசை, கஞ்சி) ✅ பழங்கள் & காய்கறிகள் ✅ தேவையில்லாத ஆன்டிபயாட்டிக் தவிர்க்கல் --- 🌿 நினைவில் வையுங்கள்! > “மருந்து குடிக்காமல், உணவை மருந்தாக மாற்றினால் – மருத்துவரைத் தேடும் அவசியமே இருக்காது!” --- 🙏 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்… 📌 உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் 📌 தினமும் இப்படியான உடல் & ஆரோக்கிய விழிப்புணர்வு பதிவுகளுக்காக 👉 எங்களது பேஸ்புக் பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள் ❤️ 📌 ஒருவரின் வாழ்க்கையையாவது இந்த பதிவு மாற்றலாம்! --- ✨ ஆரோக்கியம் ஒரு செலவு அல்ல – அது ஒரு முதலீடு! உங்கள் குடலை கவனியுங்கள்… உங்கள் உடல் தானாக குணமாகும் 🌱
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
More Results
Idaivelai.com https://idaivelai.com