• நான் காபி தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் மனைவி அந்தப் பக்கமாக வந்தாள். வந்தவள் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு விஷயம் சொன்னாள்:
    'ஏன் நீங்கள் சர்க்கரை போட முன்னர் காபித் தூளை போட்டீர்கள்?

    சொல்லி விட்டு, அவள் தன் பாட்டில் சென்றுவிட்டாள்.

    நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். நான் வழக்கம் போல, எந்த ஒன்றையும் பல கோணத்தில் ஆராய்வேன்.

    தண்ணீரில் காபியை முதலில் கலந்தால் பின்னர் சர்க்கரை போட்டால், சர்க்கரை
    கரையும் திறன் இழந்துவிடுமோ! 🤔🤔

    அல்லது சர்க்கரைக்குப் பிறகு காபியைச் சேர்த்தால் காபியின் சுவை நன்றாக இருக்குமோ!🤔🤔

    நான் எனக்குத் தெரிந்த வேதியியல் அறிவுகள் அனைத்தையும் தலைக்கு வரவழைத்து யோசிக்க ஆரம்பித்தேன்.

    இறுதியில் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தேன்: அப்படிப் போட்டாலும் ஒன்று, இப்படிப் போட்டாலும் ஒன்றுதான். நான் தயாரித்த காபியின் வடிவில் , சுவையில் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை.

    நான் தைரியமாக அவளிடம் சென்று, இதோ
    காபி நன்றாகத்தான் இருக்கிறது. காபித் தூளை முதலில் போட்டு, சர்க்கரை தூளை பிறகு போட்டாலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றேன்.

    அதற்கு அவள்:
    இல்லை, நீங்கள செய்த வேலை பிழை.
    முதலில் கபியை கலக்கி விட்டு, பின்னர் சர்க்கரை போடுவதால், அந்த கரண்டியில் இருக்கும் காபித் தூளின் அடையாளங்கள் சர்க்கரை பாட்டிலில் அப்படியே நின்று விடும்." என்றாள்.

    ✍ பெர்னார்டோ ஷா
    ✍ தமிழாக்கம் / imran farook

    🔺️🔺️🔺️
    ஆதலால் பெண்கள் ஏதாவது சொல்லித் தந்தால் அதனை, கருத்தில் கொள்ளுங்கள்.
    தலைக்கு எடுத்து யோசனை செய்யுங்கள்.

    நான் காபி தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் மனைவி அந்தப் பக்கமாக வந்தாள். வந்தவள் ஒரு பார்வை பார்த்து விட்டு, ஒரு விஷயம் சொன்னாள்: 'ஏன் நீங்கள் சர்க்கரை போட முன்னர் காபித் தூளை போட்டீர்கள்? சொல்லி விட்டு, அவள் தன் பாட்டில் சென்றுவிட்டாள். நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தேன். நான் வழக்கம் போல, எந்த ஒன்றையும் பல கோணத்தில் ஆராய்வேன். தண்ணீரில் காபியை முதலில் கலந்தால் பின்னர் சர்க்கரை போட்டால், சர்க்கரை கரையும் திறன் இழந்துவிடுமோ! 🤔🤔 அல்லது சர்க்கரைக்குப் பிறகு காபியைச் சேர்த்தால் காபியின் சுவை நன்றாக இருக்குமோ!🤔🤔 நான் எனக்குத் தெரிந்த வேதியியல் அறிவுகள் அனைத்தையும் தலைக்கு வரவழைத்து யோசிக்க ஆரம்பித்தேன். இறுதியில் ஒரு உறுதியான முடிவுக்கு வந்தேன்: அப்படிப் போட்டாலும் ஒன்று, இப்படிப் போட்டாலும் ஒன்றுதான். நான் தயாரித்த காபியின் வடிவில் , சுவையில் எந்த விதமான மாற்றமும் இருக்கவில்லை. நான் தைரியமாக அவளிடம் சென்று, இதோ காபி நன்றாகத்தான் இருக்கிறது. காபித் தூளை முதலில் போட்டு, சர்க்கரை தூளை பிறகு போட்டாலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றேன். அதற்கு அவள்: இல்லை, நீங்கள செய்த வேலை பிழை. முதலில் கபியை கலக்கி விட்டு, பின்னர் சர்க்கரை போடுவதால், அந்த கரண்டியில் இருக்கும் காபித் தூளின் அடையாளங்கள் சர்க்கரை பாட்டிலில் அப்படியே நின்று விடும்." என்றாள். ✍ பெர்னார்டோ ஷா ✍ தமிழாக்கம் / imran farook 🔺️🔺️🔺️ ஆதலால் பெண்கள் ஏதாவது சொல்லித் தந்தால் அதனை, கருத்தில் கொள்ளுங்கள். தலைக்கு எடுத்து யோசனை செய்யுங்கள்.
    0 Commentaires ·0 Parts ·1KB Vue ·0 Aperçu
  • இரவு 1 மணிக்கு தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மெதுவான பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது.
    தூக்கம் என்பது வெறும் ஓய்வு அல்ல. அது உடலும் மூளையும் தங்களைச் சீரமைத்து, அடுத்த நாளுக்குத் தயாராகும் மிக முக்கியமான நேரம். இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைக்கும் போது, ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன, நினைவாற்றல் வலுப்பெறுகிறது, உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

    ஆனால் தினமும் இரவு 12–1 மணிக்குப் பிறகு தூங்கும் பழக்கம் தொடர்ந்தால், அதன் விளைவுகள் மெதுவாக வெளிப்படும். முடி உதிர்வு அதிகரித்தல், உடல் எடை கட்டுப்பாட்டை இழத்தல், நாள் முழுவதும் சோர்வு, கவனம் குறைதல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக, மூளை சரியாக ஓய்வெடுக்காததால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படும்.

    இரவு 9–10 மணிக்குள் தூங்கும் பழக்கம் இளமையை காக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலுக்கு இயல்பான சக்தியை வழங்கவும் உதவுகிறது. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த பழக்கம்.

    ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினால், இன்று முதல் சரியான நேரத்தில் படுக்கையை அணுகுங்கள். நல்ல தூக்கம் தான் நல்ல நாளின் ஆரம்பம்.

    #sleepwell #sleepingtime #healthylifestyle

    இரவு 1 மணிக்கு தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மெதுவான பெரிய அச்சுறுத்தலாக மாறுகிறது. தூக்கம் என்பது வெறும் ஓய்வு அல்ல. அது உடலும் மூளையும் தங்களைச் சீரமைத்து, அடுத்த நாளுக்குத் தயாராகும் மிக முக்கியமான நேரம். இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைக்கும் போது, ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்கின்றன, நினைவாற்றல் வலுப்பெறுகிறது, உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால் தினமும் இரவு 12–1 மணிக்குப் பிறகு தூங்கும் பழக்கம் தொடர்ந்தால், அதன் விளைவுகள் மெதுவாக வெளிப்படும். முடி உதிர்வு அதிகரித்தல், உடல் எடை கட்டுப்பாட்டை இழத்தல், நாள் முழுவதும் சோர்வு, கவனம் குறைதல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். குறிப்பாக, மூளை சரியாக ஓய்வெடுக்காததால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படும். இரவு 9–10 மணிக்குள் தூங்கும் பழக்கம் இளமையை காக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலுக்கு இயல்பான சக்தியை வழங்கவும் உதவுகிறது. இது நீண்டகால ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த பழக்கம். ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பினால், இன்று முதல் சரியான நேரத்தில் படுக்கையை அணுகுங்கள். நல்ல தூக்கம் தான் நல்ல நாளின் ஆரம்பம். #sleepwell #sleepingtime #healthylifestyle
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • அப்பா… ஏன் எப்போதும் பின்னால்?

    (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து)

    1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்…
    அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்…
    இருவரும் சமம்.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் எப்போதும் பின்னால்?

    2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்…
    அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்…
    இருவருமே சம உழைப்பு.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்தங்குகிறார்?

    3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்…
    அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்…
    அன்பு இருவரிடமும் சமம்.
    ஆனால் ஏன்
    தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது?

    4️⃣ போனில் பேசினால்
    முதலில் “அம்மா”…
    கஷ்டம் வந்தால்
    அழைக்கும் முதல் குரல் “அம்மா”…

    உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும்
    நீங்கள் நினைப்பது “அப்பா”…
    ஆனால் அவர் ஒருபோதும்
    உங்களை நினைக்கவில்லையா என்று
    வருத்தப்பட்டதே இல்லை.
    அப்படியிருக்க,
    தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்?

    5️⃣ அலமாரியில்
    அம்மாவின் கலர்புல் புடவைகள்…
    குழந்தைகளின் நிறைய உடைகள்…
    ஆனால்
    அப்பாவின் உடைகள் மிகக் குறைவு.

    அவர் தன் தேவையை
    ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்னால்?

    6️⃣ அம்மாவுக்கு
    நிறைய தங்க நகைகள்…
    அப்பாவுக்கு
    திருமணத்தில் போட்ட
    ஒரே ஒரு மோதிரம்.

    அம்மா குறைவைக் குறித்து
    சில நேரம் சொல்வார்…
    அப்பா?
    ஒருபோதும் இல்லை.

    7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக
    அப்பா
    தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்…
    ஆனால்
    அங்கீகாரம் என்ற இடத்தில்
    அவர் ஏன் எப்போதும்
    பின்தள்ளப்படுகிறார்?

    8️⃣ “இந்த மாதம்
    காலேஜ் கட்டணம்…”
    “பண்டிகைக்கு
    புது உடை வாங்கித் தருங்கள்…”

    அம்மா சொல்வார்…
    அப்பா கேட்பார்…
    ஆனால்
    அப்பா தன் உடையைப் பற்றி
    ஒருபோதும் யோசிப்பதில்லை.

    9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்…
    சில குழந்தைகள் சொல்வார்கள்:
    “அம்மா வீட்டு வேலைகளுக்கு
    இன்னும் பயன்படுவார்…”
    “அப்பா என்ன செய்ய முடியும்?”

    இந்த கேள்வி
    எத்தனை தந்தைகளின்
    மனதை உடைத்திருக்கும்…

    🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு.
    முதுகெலும்பு எங்கே இருக்கிறது?
    👉 நம் உடலின் பின்னால்.

    அதை நாம்
    தினமும் பார்க்க மாட்டோம்…
    ஆனால்
    அது இல்லையென்றால்
    நாம் நின்றுகூட இருக்க முடியாது.

    👉 ஒருவேளை…
    👉 இதனால்தான்
    👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ…



    அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️

    இன்று ஒருமுறை
    👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்…
    👉 பேசுங்கள்…
    👉 நன்றி சொல்லுங்கள்…

    அவர் கேட்க மாட்டார்.
    ஆனால்
    அவரின் கண்கள் பேசும்.
    அப்பா… ஏன் எப்போதும் பின்னால்? (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து) 1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்… அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்… இருவரும் சமம். அப்படியிருக்க, அப்பா ஏன் எப்போதும் பின்னால்? 2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்… அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்… இருவருமே சம உழைப்பு. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்தங்குகிறார்? 3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்… அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்… அன்பு இருவரிடமும் சமம். ஆனால் ஏன் தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது? 4️⃣ போனில் பேசினால் முதலில் “அம்மா”… கஷ்டம் வந்தால் அழைக்கும் முதல் குரல் “அம்மா”… உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் நீங்கள் நினைப்பது “அப்பா”… ஆனால் அவர் ஒருபோதும் உங்களை நினைக்கவில்லையா என்று வருத்தப்பட்டதே இல்லை. அப்படியிருக்க, தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்? 5️⃣ அலமாரியில் அம்மாவின் கலர்புல் புடவைகள்… குழந்தைகளின் நிறைய உடைகள்… ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு. அவர் தன் தேவையை ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்னால்? 6️⃣ அம்மாவுக்கு நிறைய தங்க நகைகள்… அப்பாவுக்கு திருமணத்தில் போட்ட ஒரே ஒரு மோதிரம். அம்மா குறைவைக் குறித்து சில நேரம் சொல்வார்… அப்பா? ஒருபோதும் இல்லை. 7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக அப்பா தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்… ஆனால் அங்கீகாரம் என்ற இடத்தில் அவர் ஏன் எப்போதும் பின்தள்ளப்படுகிறார்? 8️⃣ “இந்த மாதம் காலேஜ் கட்டணம்…” “பண்டிகைக்கு புது உடை வாங்கித் தருங்கள்…” அம்மா சொல்வார்… அப்பா கேட்பார்… ஆனால் அப்பா தன் உடையைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. 9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்… சில குழந்தைகள் சொல்வார்கள்: “அம்மா வீட்டு வேலைகளுக்கு இன்னும் பயன்படுவார்…” “அப்பா என்ன செய்ய முடியும்?” இந்த கேள்வி எத்தனை தந்தைகளின் மனதை உடைத்திருக்கும்… 🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு. முதுகெலும்பு எங்கே இருக்கிறது? 👉 நம் உடலின் பின்னால். அதை நாம் தினமும் பார்க்க மாட்டோம்… ஆனால் அது இல்லையென்றால் நாம் நின்றுகூட இருக்க முடியாது. 👉 ஒருவேளை… 👉 இதனால்தான் 👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ… ⸻ அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️ இன்று ஒருமுறை 👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்… 👉 பேசுங்கள்… 👉 நன்றி சொல்லுங்கள்… அவர் கேட்க மாட்டார். ஆனால் அவரின் கண்கள் பேசும்.
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • அட்ஜஸ்ட்மன்ட் - கதை.
    ஒரு ஊரில், சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே தன் வேலை விஷயமாக, இங்குமங்கும் போவதும், வருவதுமாய் இருப்பார்.

    ஒரு நாள், விபத்தில் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சில நாட்களில், வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை, தன் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.

    சில நாட்கள், அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்...

    சில நாட்கள், மேற்கு, வடக்கு...
    இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும், அவரது பயணம் இருந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் சிலர்,

    ஒரு நாள், வணிகரை நிறுத்தி, " என்னப்பா இது... ஒரு நாள் கிழக்கே போற... ஒரு நாள் மேற்கே போற... ஒரு நாள் உடனே திரும்பிடறே... ஒருநாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா போற... ஒண்ணும் விளங்கலையே... என்னாச்சு..? " என்றனர்.

    " முன்ன மாதிரி இல்லங்க... இப்ப இந்த, கழுதையோட உதவி தேவைப்படுது; அதை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. நான் போக சொல்ற இடத்துக்கெல்லாம், இது போறதில்லை; நான் சொல்ற எதையும் கேட்கறதும் இல்லை...

    அதுக்காக, விட்டுட முடியுங்களா... நமக்கு வேலையாகணும்... அதேசமயம், கழுதை கூடவெல்லாம் மல்லுக்கட்ட முடியாது. அதுக்கு சொன்னாலும் விளங்காது. அதனால, நான் கொஞ்சம் மாறிக்கிட்டேன்... அது, கிழக்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்...

    மேற்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்... அது, வேகமா போனாலும், அதற்கேற்ப பழகிட்டேன்... இப்ப, கழுதைக்கும் பிரச்னை இல்ல; எனக்கும் இல்ல. வாழ்க்கை நிம்மதியா போகுது..." என்றார்.

    இதேபோல, நம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானால், வீட்டில், அலுவலகத்தில், பல

    கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... அதற்காக, கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது. அதுங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரிய வைப்பதும் கஷ்டம்.

    அதனால, குதிரையோ கழுதையோ நாம கொஞ்சம், " அட்ஜஸ்ட் " செய்து கொண்டால், நம் வேலையும் நடக்கும்;

    வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்.

    😂😂😂

    அட்ஜஸ்ட்மன்ட் - கதை. ஒரு ஊரில், சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே தன் வேலை விஷயமாக, இங்குமங்கும் போவதும், வருவதுமாய் இருப்பார். ஒரு நாள், விபத்தில் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சில நாட்களில், வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை, தன் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். சில நாட்கள், அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்... சில நாட்கள், மேற்கு, வடக்கு... இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும், அவரது பயணம் இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் சிலர், ஒரு நாள், வணிகரை நிறுத்தி, " என்னப்பா இது... ஒரு நாள் கிழக்கே போற... ஒரு நாள் மேற்கே போற... ஒரு நாள் உடனே திரும்பிடறே... ஒருநாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா போற... ஒண்ணும் விளங்கலையே... என்னாச்சு..? " என்றனர். " முன்ன மாதிரி இல்லங்க... இப்ப இந்த, கழுதையோட உதவி தேவைப்படுது; அதை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. நான் போக சொல்ற இடத்துக்கெல்லாம், இது போறதில்லை; நான் சொல்ற எதையும் கேட்கறதும் இல்லை... அதுக்காக, விட்டுட முடியுங்களா... நமக்கு வேலையாகணும்... அதேசமயம், கழுதை கூடவெல்லாம் மல்லுக்கட்ட முடியாது. அதுக்கு சொன்னாலும் விளங்காது. அதனால, நான் கொஞ்சம் மாறிக்கிட்டேன்... அது, கிழக்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்... மேற்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்... அது, வேகமா போனாலும், அதற்கேற்ப பழகிட்டேன்... இப்ப, கழுதைக்கும் பிரச்னை இல்ல; எனக்கும் இல்ல. வாழ்க்கை நிம்மதியா போகுது..." என்றார். இதேபோல, நம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானால், வீட்டில், அலுவலகத்தில், பல கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... அதற்காக, கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது. அதுங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரிய வைப்பதும் கஷ்டம். அதனால, குதிரையோ கழுதையோ நாம கொஞ்சம், " அட்ஜஸ்ட் " செய்து கொண்டால், நம் வேலையும் நடக்கும்; வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். 😂😂😂
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • பின்னோக்கிப் பாயும் நதியை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
    சீனாவின் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் கடலில் இருந்து நீர் பின்னோக்கிப் பாய்கிறது. இதனை 'டைடல் போர்' என்றும் 'வெள்ளி டிராகன்' என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். சீனாவில் இயற்கை தனது விசித்திரமான வடிவங்களை வெளிப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றாக கியான்டாங் ஆறு திகழ்கிறது.

    பொதுவாக, ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளி வழியாக கடலை நோக்கி ஓடுவது இயல்பு. ஆனால், சீனாவில் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் அதும் இந்த சில குறிப்பிட்ட காலங்களில் இயல்புக்கு முற்றிலும் மாறாக கடலிலிருந்து ஆற்றின் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இது அறிவியல் ரீதியாகவும், கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை அதிசயமாகவும் கருதப்படுகிறது.

    கடலில் உருவாகும் சக்தி வாய்ந்த அலைகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து மேல்நோக்கி பாயும்போது உருவாகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு எல்லா ஆறுகளிலும் நடப்பதில்லை. இதன் அமைப்பு காரணமாக கடலில் வரும் அலைகள் சுருங்கி ஒரே திசையில் திரண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. இதற்கு சில குறிப்பிட்ட புவியியல் அமைப்புகள் தேவை. கியான்டாங் ஆறு ஆழம் குறைவாக இருப்பதும், அது கடலில் கலக்கும் பகுதி குறுகலாக இருப்பதும் மேலும் இந்தப் பகுதி புனல் வடிவத்தில் அமைந்திருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

    இந்த நேரத்தில் உருவாகும் அலைகள் சாதாரணமானவை அல்ல. சில சமயம் அவை 80 அடி உயரம் வரை எழும்பக் கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். இந்த நீரலைகள் ஆற்றின் கரையோரத்தில் நிற்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. அலை வருவதற்கு முன்பு இடியென முழங்கும் ஒலி பல கிலோ மீட்டர் தூரத்திவிருந்தே கேட்கப்படும். அந்த ஒலி கேட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அலைகள் வரும் திசை நோக்கி கவனத்தை திரும்புவார்கள். அலைகள் கடந்த பின்னரும் நீர் மட்டம் நீண்ட நேரம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என்பது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும்.

    இந்த பிரம்மாண்ட அலைகளை வெள்ளி டிராகன் என்று அழைப்பதற்குக் காரணம், நீர் வெள்ளி நிறத்தில் மின்னி டிராகன் போல் சுழன்று பாயும் தோற்றம் காரணமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஏற்படும் என்றாலும் இலையுதிர் காலத்தில் இது வலிமையாகவும் அழகாகவும் காணப்படும். குறிப்பாக, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் அலைகளின் சக்தி அதிகரித்து இந்த பின்னோக்கிப் பாயும் நீரோட்டம் உச்சத்தை அடைகிறது.

    சீனாவின் இந்த நிகழ்வு சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த காட்சியைக் காண ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வருகிறார்கள். இயற்கையின் சக்தியும் அதன் வியப்பையும் நேரில் காண விரும்புவோர் கியான்டாங் ஆற்றின் பின்னோக்கிப் பாயும் நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து வருகிறது.

    இந்திரா கோபாலன்

    படித்ததை பகிர்கிறேன்
    பகிர்வு

    பின்னோக்கிப் பாயும் நதியை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? சீனாவின் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் கடலில் இருந்து நீர் பின்னோக்கிப் பாய்கிறது. இதனை 'டைடல் போர்' என்றும் 'வெள்ளி டிராகன்' என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். சீனாவில் இயற்கை தனது விசித்திரமான வடிவங்களை வெளிப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றாக கியான்டாங் ஆறு திகழ்கிறது. பொதுவாக, ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளி வழியாக கடலை நோக்கி ஓடுவது இயல்பு. ஆனால், சீனாவில் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் அதும் இந்த சில குறிப்பிட்ட காலங்களில் இயல்புக்கு முற்றிலும் மாறாக கடலிலிருந்து ஆற்றின் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இது அறிவியல் ரீதியாகவும், கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை அதிசயமாகவும் கருதப்படுகிறது. கடலில் உருவாகும் சக்தி வாய்ந்த அலைகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து மேல்நோக்கி பாயும்போது உருவாகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு எல்லா ஆறுகளிலும் நடப்பதில்லை. இதன் அமைப்பு காரணமாக கடலில் வரும் அலைகள் சுருங்கி ஒரே திசையில் திரண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. இதற்கு சில குறிப்பிட்ட புவியியல் அமைப்புகள் தேவை. கியான்டாங் ஆறு ஆழம் குறைவாக இருப்பதும், அது கடலில் கலக்கும் பகுதி குறுகலாக இருப்பதும் மேலும் இந்தப் பகுதி புனல் வடிவத்தில் அமைந்திருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நேரத்தில் உருவாகும் அலைகள் சாதாரணமானவை அல்ல. சில சமயம் அவை 80 அடி உயரம் வரை எழும்பக் கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். இந்த நீரலைகள் ஆற்றின் கரையோரத்தில் நிற்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. அலை வருவதற்கு முன்பு இடியென முழங்கும் ஒலி பல கிலோ மீட்டர் தூரத்திவிருந்தே கேட்கப்படும். அந்த ஒலி கேட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அலைகள் வரும் திசை நோக்கி கவனத்தை திரும்புவார்கள். அலைகள் கடந்த பின்னரும் நீர் மட்டம் நீண்ட நேரம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என்பது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும். இந்த பிரம்மாண்ட அலைகளை வெள்ளி டிராகன் என்று அழைப்பதற்குக் காரணம், நீர் வெள்ளி நிறத்தில் மின்னி டிராகன் போல் சுழன்று பாயும் தோற்றம் காரணமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஏற்படும் என்றாலும் இலையுதிர் காலத்தில் இது வலிமையாகவும் அழகாகவும் காணப்படும். குறிப்பாக, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் அலைகளின் சக்தி அதிகரித்து இந்த பின்னோக்கிப் பாயும் நீரோட்டம் உச்சத்தை அடைகிறது. சீனாவின் இந்த நிகழ்வு சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த காட்சியைக் காண ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வருகிறார்கள். இயற்கையின் சக்தியும் அதன் வியப்பையும் நேரில் காண விரும்புவோர் கியான்டாங் ஆற்றின் பின்னோக்கிப் பாயும் நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து வருகிறது. இந்திரா கோபாலன் படித்ததை பகிர்கிறேன் பகிர்வு
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • 0 Commentaires ·0 Parts ·1KB Vue ·0 Aperçu
  • 0 Commentaires ·0 Parts ·1KB Vue ·0 Aperçu
  • 0 Commentaires ·0 Parts ·1KB Vue ·0 Aperçu
  • 0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • 0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
Idaivelai.com https://idaivelai.com