• ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Kommentare ·0 Geteilt ·13KB Ansichten ·0 Bewertungen
  • பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!!

    2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார்.

    விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார்.

    மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார்.

    இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார்.

    ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது

    ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார்.
    என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார்.

    எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது....

    தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

    அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    பிரான்சில் கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 வருட சிறை!! 2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் அகதி விசாவில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்பவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து அவரது உடலின் மறைவிடங்களில் சிகரட் லைட்டர் மூலம் சுட்டு காயம் ஏற்படுத்தியதற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். விசா கிடைக்ம தாமதமான காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்ப்பினி என வைத்தியர்கள் கூறியதால்? நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. அதன் பின்னர் நரேஷ் நடைபினமாகி மதுவிற்கு. அடிமையாகி மனநிலை குழம்பிய நிலையில் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது டீ சேட்டை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு மனைவியின். உடலில் மறைவிடங்களில் சிகரட் லைட்டரால் எரித்து சித்திரவதை செய்துள்ளார். ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி அலங்கோல நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலம் இது ” நான் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. அவர் நான் 5 மாத கர்ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மார்பு, பெண் உறுப்பு, ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரித்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார். இதை கேட்டு நீதிமன்றம் சில நிமிடம் அதிர்ந்து நின்றது.... தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் நலமாக வாழ்ந்து வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது
    0 Kommentare ·0 Geteilt ·10KB Ansichten ·0 Bewertungen
  • ஆர்வமானவர்கள் வீட்டில், அமைதியானவர்கள் பள்ளியில்:
    குழந்தைகளின் "இரட்டை இயல்புகளை" புரிந்துகொள்வது எப்படி?
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

    பெற்றோர்கள் பலர் சொல்வார்கள்,

    "என் குழந்தை வீட்டில் மிகவும் ஆர்வமாகவும், உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுபவனாகவும் இருக்கிறார்."

    ஆனால் பள்ளியில், அதே குழந்தை அமைதியாக, reserved ஆக, Quiet ஆக இருக்கும்.

    இதற்கு

    "குழந்தையிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது"
    என்று அர்த்தமில்லை.
    இதற்கு

    "குழந்தை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறது"

    என்று தான் அர்த்தம்.

    "A child's behavior is a language, not a label. Listen to what their silence is also saying."

    பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த இரட்டை இயல்புகளை நன்றாக புரிந்துகொள்ள சில

    key points:

    1. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் (Adaptability):
    வீடு என்பது பாதுகாப்பான, பரிச்சயமான, சுதந்திரமான இடம்.
    பள்ளி என்பது விதிகள், கட்டமைப்பு, பலரின் கண்கள் உள்ள இடம்.
    சில குழந்தைகள் இயற்கையாகவே ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப தங்கள் நடத்தையை சரி செய்து கொள்கிறார்கள்.

    2. அமைதி என்பது புரிதலின் இன்மை அல்ல:
    Quiet ஆன குழந்தை கவனமாக கேட்கக்கூடும்.
    பாடத்தை புரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.
    எல்லா கற்றலும் பேசி வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை.

    3. நம்பிக்கை (Confidence) வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு வடிவத்தில் தெரியும்:
    சிலர் பேசி தங்கள் confidence-ஐ காட்டுவர்.
    சிலர் கவனித்தல், சிந்தித்தல், தங்கள் பணியை சிறப்பாக செய்தல் மூலம் காட்டுவர்.
    இரண்டும் சரியான வடிவங்கள்தான்.

    4. "வீட்டில் இருக்கும்போது போல இரு" என்று கட்டாயப்படுத்தாமல் இருங்கள்:
    "நீ வீட்டில் இப்படி இல்லையே!" போன்ற வார்த்தைகள் குழந்தையை குழப்பும்.
    ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சி மற்றும் வளர்ச்சியின் வேகம் வேறு.
    பள்ளியில் confidence வர நேரம் பிடிக்கும்.

    5. வெளிப்பாட்டுக்கு முன் நம்பிக்கையை (Trust) கட்டியெழுப்புங்கள்:
    குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பினை (Emotional Safety) உணரும்போது தான் அதிகம் பேசுவார்கள்.
    அழுத்தம் கொடுப்பதை விட மெதுவான ஊக்குவிப்பு நல்லது.
    Trust தான் வெளிப்பாட்டிற்கான சாவியை திறக்கும்.

    6. உடல் மொழி (Body Language) மற்றும் எழுத்து பணியை கவனியுங்கள்:
    சில குழந்தைகள் எழுதுதல், வரைதல் அல்லது செயல்கள் மூலம் தங்களின் கருத்தை சிறப்பாக தெரிவிப்பார்கள்.
    அவர்களின் பணி, கவனம், முயற்சியைக் கவனியுங்கள்.
    அவை அவர்களின் குரலை விட அதிகம் சொல்லும்.

    7. வாய்மொழி பதில்களுக்கு முன் தயாராகும் நேரம் (Preparation Time) கொடுங்கள்:
    சில குழந்தைகளுக்கு பேசுவதற்கு முன் சிந்திக்க நேரம் தேவை.
    முதலில் ஜோடிகளாக பகிர்ந்து கொள்ள அல்லது மனதளவில் பயிற்சி செய்ய அனுமதியுங்கள்.
    இது படிப்படியாக confidence-ஐ வளர்க்கும்.

    8. ஆர்வமான பங்கேற்பை மட்டும் போற்றாதீர்கள்; முயற்சியை போற்றுங்கள்:
    கேட்பது, முயற்சிப்பது, சிறிய அளவில் பேச முயல்வது போன்றவற்றை பாராட்டுங்கள்.
    வகுப்பில் மட்டும் உரக்க பேசுவோரை மட்டுமே பாராட்டாதீர்கள்.
    ஒவ்வொரு முயற்சியும் முக்கியம்.

    9. வீடு - பள்ளி இடையே திறந்த உறவை (Open Communication) பேணுங்கள்:
    பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் கவனிப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    குழந்தையின் இரு பக்கங்களையும் புரிந்துகொள்வது முழுமையான படத்தைத் தரும்.
    Teamwork தான் வளர்ச்சியை ஆதரிக்கும்.

    10. வளர்ச்சி வரும் என நம்புங்கள் (Trust The Growth):
    பல quietஆன குழந்தைகள் நேரம் கொடுத்தால் மலர்வார்கள்.
    உரத்த குரலில் அல்ல, ஆனால் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் (Clear & Confident) மாறுவார்கள்.
    வளர்ச்சி என்பது ஒரு process, race அல்ல.

    Final Thought:
    இரட்டை இயல்புகள் கொண்ட குழந்தைகள் என்பது குழப்பமடைந்த குழந்தைகள் அல்ல.
    அவர்கள் மாற்றத்திறனுள்ள குழந்தைகள் (Adaptable Children).

    நாம் அவர்களைப் புரிந்துகொண்டு, ஆதரித்து, நேரம் கொடுக்கும்போது, அவர்கள் தழைத்து வளர்வார்கள் (Thrive).

    #ParentingTips #ChildBehavior #TamilParenting #Education #ChildPsychology #அறிவுரை #குழந்தைவளர்ப்பு #பள்ளிச்சூழல்
    ஆர்வமானவர்கள் வீட்டில், அமைதியானவர்கள் பள்ளியில்: குழந்தைகளின் "இரட்டை இயல்புகளை" புரிந்துகொள்வது எப்படி? ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ பெற்றோர்கள் பலர் சொல்வார்கள், "என் குழந்தை வீட்டில் மிகவும் ஆர்வமாகவும், உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுபவனாகவும் இருக்கிறார்." ஆனால் பள்ளியில், அதே குழந்தை அமைதியாக, reserved ஆக, Quiet ஆக இருக்கும். இதற்கு "குழந்தையிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது" என்று அர்த்தமில்லை. இதற்கு "குழந்தை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறது" என்று தான் அர்த்தம். "A child's behavior is a language, not a label. Listen to what their silence is also saying." பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இந்த இரட்டை இயல்புகளை நன்றாக புரிந்துகொள்ள சில key points: 1. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் (Adaptability): வீடு என்பது பாதுகாப்பான, பரிச்சயமான, சுதந்திரமான இடம். பள்ளி என்பது விதிகள், கட்டமைப்பு, பலரின் கண்கள் உள்ள இடம். சில குழந்தைகள் இயற்கையாகவே ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப தங்கள் நடத்தையை சரி செய்து கொள்கிறார்கள். 2. அமைதி என்பது புரிதலின் இன்மை அல்ல: Quiet ஆன குழந்தை கவனமாக கேட்கக்கூடும். பாடத்தை புரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். எல்லா கற்றலும் பேசி வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லை. 3. நம்பிக்கை (Confidence) வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு வடிவத்தில் தெரியும்: சிலர் பேசி தங்கள் confidence-ஐ காட்டுவர். சிலர் கவனித்தல், சிந்தித்தல், தங்கள் பணியை சிறப்பாக செய்தல் மூலம் காட்டுவர். இரண்டும் சரியான வடிவங்கள்தான். 4. "வீட்டில் இருக்கும்போது போல இரு" என்று கட்டாயப்படுத்தாமல் இருங்கள்: "நீ வீட்டில் இப்படி இல்லையே!" போன்ற வார்த்தைகள் குழந்தையை குழப்பும். ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சி மற்றும் வளர்ச்சியின் வேகம் வேறு. பள்ளியில் confidence வர நேரம் பிடிக்கும். 5. வெளிப்பாட்டுக்கு முன் நம்பிக்கையை (Trust) கட்டியெழுப்புங்கள்: குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பினை (Emotional Safety) உணரும்போது தான் அதிகம் பேசுவார்கள். அழுத்தம் கொடுப்பதை விட மெதுவான ஊக்குவிப்பு நல்லது. Trust தான் வெளிப்பாட்டிற்கான சாவியை திறக்கும். 6. உடல் மொழி (Body Language) மற்றும் எழுத்து பணியை கவனியுங்கள்: சில குழந்தைகள் எழுதுதல், வரைதல் அல்லது செயல்கள் மூலம் தங்களின் கருத்தை சிறப்பாக தெரிவிப்பார்கள். அவர்களின் பணி, கவனம், முயற்சியைக் கவனியுங்கள். அவை அவர்களின் குரலை விட அதிகம் சொல்லும். 7. வாய்மொழி பதில்களுக்கு முன் தயாராகும் நேரம் (Preparation Time) கொடுங்கள்: சில குழந்தைகளுக்கு பேசுவதற்கு முன் சிந்திக்க நேரம் தேவை. முதலில் ஜோடிகளாக பகிர்ந்து கொள்ள அல்லது மனதளவில் பயிற்சி செய்ய அனுமதியுங்கள். இது படிப்படியாக confidence-ஐ வளர்க்கும். 8. ஆர்வமான பங்கேற்பை மட்டும் போற்றாதீர்கள்; முயற்சியை போற்றுங்கள்: கேட்பது, முயற்சிப்பது, சிறிய அளவில் பேச முயல்வது போன்றவற்றை பாராட்டுங்கள். வகுப்பில் மட்டும் உரக்க பேசுவோரை மட்டுமே பாராட்டாதீர்கள். ஒவ்வொரு முயற்சியும் முக்கியம். 9. வீடு - பள்ளி இடையே திறந்த உறவை (Open Communication) பேணுங்கள்: பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் கவனிப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் இரு பக்கங்களையும் புரிந்துகொள்வது முழுமையான படத்தைத் தரும். Teamwork தான் வளர்ச்சியை ஆதரிக்கும். 10. வளர்ச்சி வரும் என நம்புங்கள் (Trust The Growth): பல quietஆன குழந்தைகள் நேரம் கொடுத்தால் மலர்வார்கள். உரத்த குரலில் அல்ல, ஆனால் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் (Clear & Confident) மாறுவார்கள். வளர்ச்சி என்பது ஒரு process, race அல்ல. Final Thought: இரட்டை இயல்புகள் கொண்ட குழந்தைகள் என்பது குழப்பமடைந்த குழந்தைகள் அல்ல. அவர்கள் மாற்றத்திறனுள்ள குழந்தைகள் (Adaptable Children). நாம் அவர்களைப் புரிந்துகொண்டு, ஆதரித்து, நேரம் கொடுக்கும்போது, அவர்கள் தழைத்து வளர்வார்கள் (Thrive). #ParentingTips #ChildBehavior #TamilParenting #Education #ChildPsychology #அறிவுரை #குழந்தைவளர்ப்பு #பள்ளிச்சூழல்
    0 Kommentare ·0 Geteilt ·4KB Ansichten ·0 Bewertungen
  • ஒரு இயற்கை மரணம்
    எத்தனை பேரை வாழ வைக்கிறது
    என்று பாருங்கள்...

    1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்..

    2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார்.

    3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி
    மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்..

    4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்..

    6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார்.

    7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார்.

    8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள்.

    10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்..

    12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார்

    14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு
    கடைக்காரன் லாபம் அடைகிறார்.

    15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார்.

    16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்.....

    ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்...

    மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்....

    இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே...

    ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

    இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    ஒரு இயற்கை மரணம் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்று பாருங்கள்... 1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்.. 2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார். 3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்.. 4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்.. 6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார். 7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார். 8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள். 10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்.. 12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார் 14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரன் லாபம் அடைகிறார். 15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார். 16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்..... ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்... மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்.... இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே... ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும். இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!

    ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

    எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது

    எத்தனை கறி செய்வது?

    பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா?
    யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது?

    கவலைக்குரிய விடயம் என்னவெனில்:-

    இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள்.

    அடுத்த பிரச்சினை:-

    ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள்.

    ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும்.

    பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.

    ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது.

    மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.

    வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்...

    ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

    ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

    ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

    இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.....

    சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..! ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள். எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது எத்தனை கறி செய்வது? பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா? யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது? கவலைக்குரிய விடயம் என்னவெனில்:- இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள். அடுத்த பிரச்சினை:- ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள். ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும். பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது. மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம். வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்... ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும். ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும். இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது..... சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    0 Kommentare ·0 Geteilt ·3KB Ansichten ·0 Bewertungen
  • யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!..

    பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம

    தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு.

    தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது

    அன்றைய இளைஞர் கூட்டம்.

    ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது.

    இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு.

    லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர்.

    61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது.

    டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார்.

    கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!..

    கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார்.

    எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும்.

    சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம்.

    அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை.

    - இது ஒரு இணைய தள பதிவு!
    யாரய்யா பாடுறது?. என்னய்யா வாய்ஸ் இது?. அந்தப் பொண்ணை போகச் சொல்லுங்க!.. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அன்றைய ரேவதி ஸ்டுடியோ ரெக்கார்டிங் ரூம்!..டி.ஆர்.மகாலிங்கத்தின் தெருப் பாடகனுக்காக பாட வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!..சின்னப் பொண்ணு!.. கண்ணில் நீர் முட்ட அங்கிருந்து நகர்ந்து தனது தாயைத் தேடி ஓடியது.மடியில் முகம் புதைத்து விம்ம தாய்க்குத் தாங்கவில்லை!..பரவாயில்லை!.. விடும்மா!..தலை கோதிய தாய் கூறினார்!..உன் குரலுக்காக இந்த ஊரே காத்துக் கிடக்கப் போகுது பாரு!..அந்தத் தாயின் வாக்கு பிற்காலத்தில் பலித்தது.உட்கார்ந்திருந்த கூட்டம் எழுந்து ஆடத் தொடங்கியது இந்தக் குரலைக் கேட்டதும்.அப்படி ஆட வைத்த குரலுக்குச் சொந்தக்காரர் என்கிறது நமது இசைக்குழு. தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான இந்தக் குரலை ஆரம்பத்தில் விரட்டி விட்டவர் ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி!.. அவரைச் சொல்லிக் குற்றமில்லை!..எம்.எஸ்.தொடங்கி எம்.எல்.வி.ஜிக்கி லீலா என பல குயில்களின் குரல்களை பதிவு செய்தவர்.இதென்னடா இப்படியொரு குரல் என வந்த கோபமது.ஆனால் அந்த வித்தியாசமான குரல் தான் எங்களுக்குத் தேவை என நின்றது அன்றைய இளைஞர் கூட்டம். ர்ர்ர்ருக்குமணியே!...பப்பரப்பரபர சக்கரப் பெண்ணே!..பப்பரப்பரபர முத்து மொழியே!..அதிரடியாக ஹை பிட்சில் அலறும்போது ஆஹா!.. என ஆடிய கூட்டத்தை கட்டிப்போட்டது ஈஸ்வரியின் குரல்.அதென்னவோ சுசீலாம்மா ஜானகியம்மா என மரியாதை வரும்போது ஈஸ்வரியம்மா வர மறுக்கிறது.வயது என்பதைத் தாண்டியபோதும் ஏனோ இந்தக் குரலில் இளமை கொப்பளிக்கிறது.நம்ம பக்கத்து வீட்டு ஈஸ்வரியக்கா!..என்ற நினைப்பு தான் வருகிறது. இளையாங்குடி பூர்வீகம் என்றாலும் சென்னை தான் லூர்து மேரி ராஜேஸ்வரி பிறந்து வளர்ந்ததெல்லாம்.அப்பா அந்தோணிசாமி மூன்று பிள்ளைகளைத் தந்துவிட்டு இளமையிலேயே விடை பெற்றுக்கொண்டார்.பாவம் ரெஜினா நிர்மலா!.. ஆண் துணை இல்லாத சென்னைப் பட்டினத்தில் வாழ்வதே ஒரு சவாலான விஷயம்.சர்ச்சில் கோரஸ் பாடிய அனுபவம்.சினிமா ஸ்டுடியோக்களுக்கு பயன்பட்டது.அரை வயிறு கஞ்சி அதனால் தான் கிடைத்தது.ராஜேஸ்வரியின் பள்ளிப் படிப்பில் பாடலுக்கு முக்கியத்துவம் இருந்தது.அந்தக் கால பெண்களுக்கு கல்லூரி எட்டாக் கனி.அம்மாவோடு கோரஸ் போகும்போது ஸ்டுடியோ அறிமுகம்.54ல் மனோகரா ரெக்கார்டிங்கில் ஒரு வாய் குறைந்தது.வெங்கட்ராமன் இந்தப் பெண்ணைப் பிடித்து மைக் முன் நிறுத்தியது தான் ஆரம்பம்.திருச்சி லோகநாதன் ரெகமண்டில் மகாலிங்கம் படத்திற்கு பாட வந்தபோது தான் அந்த விரட்டியடிப்பு. லோகநாதன் விடாமல் இசைத் திலகத்திடம் கொண்டு போனார்.அங்கும் கோரஸ் தான்.இவ வாய்ஸ் வித்தியாசமா இருக்கே!.. வியந்தது ஏ.பி.என்.நல்ல இடத்து சம்பந்தம் அது.புதுப் பெண்ணே புதுப் பெண்ணே நிமிர்ந்து பாரு என்றார்கள்.துக்கத்திலும் சிரிக்கணும் துணையுடனே இருக்கணும்.இங்கும் சிக்கல்.மருதகாசி குறுக்கிட்டார்.தமிழ் உச்சரிப்பு சரியில்லையே!.. அதெல்லாம் சரிபண்ணிடலாம்.ஏ.பி.என். சொன்னபோது ராஜேஸ்வரிக்கு சந்தோஷம்.ரங்கசாமி ஏதாவது சொன்னால்?. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.ஏ.பி.என்.உறுதி தந்தார்.ஏற்கனவே இங்கொரு ராஜேஸ்வரி இருக்கு. நீ என்ன பண்றே !.. பேரை கொஞ்சம் சுருக்கிக்கோ!..வி.கே.ஆர் தலையாட்ட ஏ.பி.என்.இட்ட நாமகரணம் தான் எல்.ஆர்.ஈஸ்வரி.நியூமராலஜி தெரியாத ஈஸ்வரிக்கு பெயரை வெட்டியதில் சங்கடம் தான்.வண்டி டாப் கியரில் போகக் காரணம் மெல்லிசை மன்னர். 61 ல் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.பாச மலருக்காக ஜமுனா ராணியோடு கோரஸ்.பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்.ராத்திரி பத்து மணிக்குத் தொடங்கியது.கூடப் பாடப் பாட ரிகர்ஸல் நீண்டு கொண்டே போனது.அது ஒரு நீண்ட இரவு!.. இறுதியில் அடுத்த பாட்டு நீ தான் என்றார் எம்.எஸ்.வி.சோலோ என்றதும் உதறல் எடுத்தது.இப்போது தான் கத்திக் கத்தி ஓய்ந்தபோது ஒரு மணி.இப்போது போய் பாடு என்றால்!..வாராய் என் தோழீ!.. வாராயோ!..வார்த்தைகள் வரவில்லை.பரவாயில்லை! .. நாளைக்கு பார்த்துக்கலாம்! .. பெருந்தன்மையோடு எம்.எஸ்.வி.சொல்ல அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் இப்படி பட்டையைக் கிளப்பும் என அப்போது தெரியவில்லை.இசைத் திலகம் அழைத்து பாராட்டினார்.பிரமாதப்படுத்திட்டேம்மா!..பொண்ணு மாப்பிளே ஒண்ணாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே!.. மாமா தான் அந்த ஹிட்டைத் தந்தது.இப்போது எம்.எஸ்.வி.அறுபதுகளின் ஆரம்பம் அந்தப் பொண்ணுக்கு அமர்க்களமானது. டி.எம்.எஸ்ஸோடு இணையும் பாடல்களில் அவரை அப்பாவியாக நிற்க வைத்து அதகளம் பண்ணுவார் ஈஸ்வரி!..கேட்டுக்கோடீ உர்ர்ருமி மேளம் என பந்தாக் காட்ட வீ ஷல் மீட் என ஆங்கிலத்தில் எடுத்து விட்டு ஓ..மை...ஸ்வீட்டீ!..குட்டும்மீ அங்க்கிள்!...எம்.எஸ்.விக்கு குஷி வந்துவிடும்..அந்த ஐந்தடி உயரத்திற்கு ஆனந்தம்!.. டாட்ட..டா...டடட்..டடட்டீ...திரையில் அப்படியே தெரியும்.கலைச்செல்வி நடிகர் திலகம் ஆட்டம்.குடி..மகனே...பெருங்குடி மகனே!..நான் கொடுக்கட்டுமா?.என்..உள்ளம் உந்தன் ஆரா..தனை...என் நெஞ்சில் வைத்தேன் அன்பால் உனை. .ஆரோக்கியமான போட்டி!..சோலோவாகட்டும் ஜோடிக் குரலாகட்டும் ஈஸ்வரி தனித்தன்மையோடு திகழ்வார்.விதவிதமான கேரக்டர்கள்.வார்த்தைகளுக்கு அவர் தரும் மரியாதை!.. கவிஞர்களே திணறிப்போவார்கள்.அதிசய உலகம்...ரகசிய இதயம்...பொன்னுழகில்...நான் உன்னை அழைத்தேன் கேட்டுப் பாருங்கள்.நா..ம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென காதல் தேவை சொன்னாள்.என் இடது கண்ணும் துடித்தது....நீர் குடித்த மேகம்...என் நீல வண்ணக் கூந்தல்.அந்த கூந்தலுக்குள் ஒரு குவாட்டர் பாட்டில் இருக்கும். வரிக்கு வரி நம்மை வியக்க வைப்பார். கருப்புப் பணத்திற்காக கவிஞர் எழுதிக்கொடுத்துவிட்டார்.யாரை பாட வைக்கப்போறே?. சுசீலா தான்!..அடப் போயா!.. ஈஸ்வரியைப் போடு!.. இல்ல கவிஞரே!.. ஸ்லோவான பாட்டு!..அவ செட்டாகமாட்டா!..நான் சொல்றேன்! .. பாட்டு ஹிட்டாகும் பாரு!..ஹிட்டாயிடுச்சு!..அம்மம்மா கேளடி தோழீ...கண்ணா..ளே ஆயிரம் சேதி!... நம்ம ஈஸ்வரியா?. பிஞ்சா..க நா..னிருந்தேனே அஞ்சாமல் அணைத்துவிட்டானே!.. அச்சாரம் கொடுத்துவிட்டு..டானே!..முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே!...அட்டகாசமாக பாடிக் கொடுத்தார்.யாருக்குமே அறிமுகம் இல்லாத எதிர்காலத்தில் ஒரு அட்டகாசமான பாடல்.வாணிஸ்ரீக்காக.மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ...கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ...சரணங்களில் அசத்தியிருப்பார்.ஒரு முகம் வருகிறது. தினம் தினம்.அறிமுகம் நடக்கிறது சுகம் சுகம்.பக்கம் வந்து பள்ளி கொண்டு வெட்கத்தையும் விட்ட பின்பு விட்ட குறை தொட்ட குறை ஏ..தோ..என்ன நினைப்பு!.. இந்த நினைப்பு!..இது இரவைத் தேடும் பால் நிலவு.அருமையானதொரு அனுபவம்.வளைந்து நெளிந்து ஏற்ற இறக்கங்களில் பயணிக்கும் மெட்டில் என்ன ஒரு பயணம்!.. கே.எஸ்.ஜியின் அசத்தலான ஸ்கிரிப்ட்டில் தட்டு தடுமாறி நெஞ்சம் .சீர்காழியோடு அட்டகாசமாக இணைந்திருப்பார்.பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை நான் பார்த்துப் பசியாற வேண்டும்.சிருங்கார ரசத்தில் தோய்ந்த பாடல்!..அதே கே.எஸ்.ஜியின் சித்தியில் பி.பி.எஸ்ஸோடு சந்திக்க வைத்திருப்பார்.முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா!.. முத்துச் சிப்பி போலே சிரிப்போமா!.. ஆஹா...ஹா..ஹா...அழகான ஜோடிப் பாடல்.டி.எம்.எஸ்.ஸோடு கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை.இன்னொரு அழகு.உள்ளம் பூப்போன்றது.எண்ணம் பால் போன்றது.சட்டென மாறும் மெட்டு.சின்ன ராணி...வண்ண மேனி..ஆசை நீ..ராடுது அச்சம் போ..ராடுது..எப்படியெல்லாம் டியூன் போட்டாலும் அசராமல் அடித்துத் துவைப்பார்.நமக்கெல்லாம் தெரிந்த நாடு கொண்ட பூங்கொடி காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப் பார்!.. சவுக்கடி!..தேடி வரும் நாடகம் கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப் பார்!.. சவுக்கடி!...வலை போட்டுப் பிடித்தா..லும் கிடைக்...காதது!..ஹ..ஹ்ஹா...துடித்து எழுந்தது!... கதை முடிக்க நினைத்தது!... நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்.எங்காவது ஈஸ்வரியை பொது வெளியில் பார்க்க நேர்ந்தால் நிமிர்ந்து தான் நிற்பார்!.. கூனிக் குறுகி!.. பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை!.. அதைத் தான் தனது பாடல்களிலும் வெளிப்படுத்தினார். எனக்குப் பிடித்த ஈஸ்வரியை கலைக்கோயிலில் காணலாம்.அந்த முள்ளில் ரோஜா...கள்ளூறும் ரோஜா...கண்மணீ சரோ. .ஜா!..பி.பி.எஸ்ஸோடு அற்புதமாக இணைந்திருப்பார்.என்னைத் தொட்டுப் பேசும் எண்ணம் அங்கே இல்லை!..இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை..பா..ம..க..ஸ..ஸ..ரிக. .ரிக..ஸ்வர லயங்கள் சுழன்றாட போதையில் தள்ளாடிய குரல்கள்.அதே போன்றதொரு அழகு பாடல்.அம்மம்மா. ..கன்னத்தில் கன்னம் வைத்துக் கொள்ளு! ...கள்ளுண்ட பூவைக் கொஞ்சம் கிள்ளு..இன்னொரு கிறக்கமான பாடல்.அடடா!.. என்ன அழகு அருகே வந்து பழகு! ... அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு. ..வாலியின் அட்டகாசத்தால் ஈஸ்வரி எழிலாக மாறியிருப்பார்.கல்யாணம் கச்சேரி எல்லாமே வழி வழி வந்திருக்கு!.. அதில் வாழும் பண்பிருக்கு.பாலுவோடு போட்டி போட்ட ஈஸ்வரி.தரிசனத்தில் டி.எம்.எஸ்ஸோடு வந்த இது மாலை..நேரத்து மயக்கம் இன்னொரு கிறக்கம்.முனிவன் மனமும் மயங்கும் மேனி மோக வாசல் தானோ!...இல்லறம் கேட்டால் துறவறம் கேட்கும் இதயமே மாறி விடு!.. அந்தக் கெஞ்சலில் ஒரு கொஞ்சல் இருக்கும்.மறந்தே போச்சு ரொம்ப நா..ளாச்சு மடி மேல் விளையாடி!.. பாலுவோடு அசத்தலாக விளையாடியது இந்தக் குரல்.மறந்தா போகும்!.. மனதுக்குத் தெரியும்.பொழுதுண்டு விளையாட...அதே பாலுவோடு ஆரம்பம் இன்றே ஆகட்டும்.ஆஆஆ...ஆறேழு நாட்கள் போகட்டும்....ம்ம்ம்..இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது...ஈஸ்வரிக்கு தனக்கு முன்னால் நிற்கும் மைக் தான் எப்போதும் காதலன்.அந்த மைக்கை ஒரு ஆணாக பாவித்துக்கொள்ளுவார்.அவரே சொன்னது.அந்த இன்வால்வ்மெண்ட் அற்புதமானது.உறவினில்...ஃபிப்டி ஃப்டி!.. உதட்டினில் பாதிப் பாதி!.. முத்த மழையிங்கு பொங்கி வர பொங்கி வர அந்த வண்ண மயில் தத்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும். சிலர் குடிப்பது போலே நடிப்பார். ..சிலர் நடிப்பது போலே குடிப்பார்...சிலர் பாட்டில் மயங்குவார்...சிலர் பாட்டிலில் மயங்குவார்.கவியரசு வரிகளை இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள்.மின் மினியைக் கண்மணியாய் கொண்டவளை என்னிடமே தந்தாள் பாடலிலும் அதே ஈடுபாடு.சச்சா... மம்மா ...பப்பா. ..ஹோ...உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?. கத்தி முனை காயம் செய்யும்...கண் பட்டால் மாயம் செய்யும்..மாயம் செய்த குரல்கள்.துள்ளுவதோ இளமையில் துள்ளாட்டம் போட்ட குரல்கள்.அவளுக்கென்ன அழகிய முகத்தில் அசத்திய குரல்கள்.இன்னொரு பெண் குரலா? . அதற்கும் ரெடி!.. அடிப் போடீ!.. பைத்தியக்காரீ!.. நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா?. நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்.போட்டியில் தூள் பறக்கும்.கடவுள் தந்த இரு மலர்கள் பாடலில் இன்னொரு போட்டி!.. மலருக்குத் தென்றல் பகையானால் பாடலில் உருக்கமான ஈஸ்வரி.உனது மலர் கொடியிலே மற்றொரு அசத்தல்.கட்டோடு குழலாட ஆட!.. வேறொரு அருமையான அனுபவம்.தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்ட தலைவியில் அட்டகாசமான அனுபவம்.பொறந்தாலும் பொம்பளையா பொறக்கக் கூடாது..காமெடியிலும் கலக்கிய ஈஸ்வரி!..பாண்டியன் நானிருக்க....ஏன்டீ உனக்கு...அஜக் தான் குமக் தான்.ஆச்சிக்காக அசத்திய பாடல்.தனித்து விளங்கிய ஈஸ்வரி இன்னொரு ரகம். அடி என்னடி உலகம்..இதில் எத்தனை கலகம் என்று கேட்ட குரலில் ஆதங்கமே அதிகமிருந்தது.கா..தோடு தான் நா..ன் பாடுவேன் பாடலில் சிருங்காரம் இருந்தது.ஆடவரெல்லாம் ஆட வரலாம் பாடலில் இளமை இருந்தது.கண்களும் காவடி சிந்தாடட்டும் காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும் பாடலில் துள்ளல் இருந்தது.உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே தானத் தந்த னானா!..பாடலில் நல்ல மனசு தெரிந்தது.எல்லோரும் பார்க்க...என் உல்லாச வாழ்க்கை...பாடலில் ஆற்ற முடியாத சோகம் இருந்தது.மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா பாடலில் கிண்டலும் கேலியும் இருந்தது.அவளொரு கதாநாயகி... ம்ம்ம் நானொரு கதாநாயகி....நான் முள்ளில் விழுந்த பட்டுச் சேலை!... முள்ளாய் நின்றவன் யார்?. கோபம் தெரிந்தது.நானொரு காதல் சன்யாசி....நாளொரு மேடை என் ராசி...பல மேடைகளை அலங்கரித்தது இந்தக் குரல்.பலே பலே மகாடியோய்!.. பங்காரு நா சாமியோய்!.. தெலுங்கு தேசத்தில் ஈஸ்வரி இன்றும் கொண்டாடப்படுகிறார்.அரை குறை ஆடையோடு ஆண்களைக் கவர ஆடிப் பாடும் பெண்களுக்காக இருந்த ஒரே குரல்.அப்படியே ஆன்மீகம் பேசியபோதும் ஏற்றுக்கொண்டது தான் வியப்பு.செல்லாத்தா எங்க மாரியாத்தா என வீதிக்கு வீதி ஈஸ்வரி குரல் அலறியபோது பலர் கன்னத்தில் போட்டுக்கொண்டது வியப்பான விஷயம் தான்.ஏற்றுக்கொண்ட மதம் வேறாக இருந்தாலும் இவர் ஏறாத கோயில்கள் இல்லை.எந்தக் கோயில் விசேஷமாக இருந்தாலும் ஈஸ்வரி இருந்தால் கூட்டம் அள்ளும்.இது எந்தப் பாடகிகளுக்கும் கிடைக்காத வரம்.இது தான் இந்தப் பெண்மணியை இப்போதும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு இரண்டும் இருந்தால் அழகு வளரும்.அழகு குறையாத ஈஸ்வரி..பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது?. முத்தாரமே உன் ஊடல் என்னவோ?. அத்தானிடம் என் கோபம் செல்லுமோ?. அந்த சிக்கல் இந்தக் குரலுக்கு இல்லை!.. உடன் பிறப்புகளின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக பாவித்து இனிமையாகக் கழிகிறது இவரது வாழ்க்கை. - இது ஒரு இணைய தள பதிவு!
    0 Kommentare ·0 Geteilt ·3KB Ansichten ·0 Bewertungen
  • 🌊 21 வருடங்கள்…
    ஆனால் அந்த நாள் இன்னும் மனசில் அதே சத்தத்தோடு…

    பாதம் தழுவி செல்லும் அலைகள்
    ஒரு நொடியில்
    உயிரையும் கனவுகளையும்
    வாரிச் சுருட்டி இழுத்துச் சென்ற நாள்…

    📅 டிசம்பர் 26, 2004 – ஞாயிற்றுக்கிழமை
    “சுனாமி” என்றொரு சொல்லை
    இந்திய தீபகற்பம்
    முதன்முறையாக கேட்ட நாள்.

    📺 வீட்டில் டிவி இல்லை…
    ☕ அருகிலுள்ள டீக்கடையில்
    Breaking News பார்த்து
    உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்கள்
    என்று தெரிந்தபோது
    கண்ணீரோடு வந்த நிம்மதி…

    ---

    🌍 இயற்கை எழுதிய

    மனிதன் மறக்கக் கூடாத பாடம்

    🔴 கடலுக்கடியில் நடந்த
    பயங்கரமான நிலநடுக்கம்
    🔴 1200 கி.மீ நீளமான
    பூமியின் விரிசல்
    🔴 பல அணுகுண்டுகளை
    ஒருசேர வெடித்த அளவிலான ஆற்றல்
    🔴 மணிக்கு 1000 கி.மீ வேகத்தில்
    பயணித்த மரண அலைகள்…

    ⚠️ கடல் பின்வாங்கியது…
    ஆனால்
    “ஓடுங்க… இது எச்சரிக்கை”
    என்று சொல்ல
    யாரும் இல்லை…

    ---

    🕊️ ஒரு நிமிடம் கண் மூடி நினைப்போம்

    👶 தாய் இல்லாத குழந்தைகள்
    👵 துணையை இழந்த முதியவர்கள்
    🏠 வீடு, வாழ்க்கை, எதிர்காலம்
    அனைத்தையும் ஒரே நொடியில்
    இழந்த லட்சக்கணக்கான மக்கள்…

    ---

    🔔 அந்த பேரழிவுக்குப் பிறகு…

    ✅ இந்தியப் பெருங்கடலில்
    சுனாமி எச்சரிக்கை மையங்கள்
    ✅ விழிப்புணர்வு
    ✅ முன் எச்சரிக்கை அமைப்புகள்

    ஆனால்…
    அந்த நாள் ஏற்படுத்திய
    மனக்காயம் மட்டும்
    இன்றும் ஆறவில்லை.

    ---

    🙏 2004 சுனாமியில் உயிரிழந்த
    அனைவருக்கும்
    இன்று நினைவஞ்சலி செலுத்துவோம்.

    💬 “பிறரின் வலியில் இருந்து
    நாம் பாடம் கற்றுக்கொள்ளும் போது தான்
    மனிதநேயம் உயிரோடு இருக்கும்.”

    👇 இந்த பதிவு மனதை தொட்டால்
    Share செய்யுங்கள்…
    ஒரு நினைவு
    ஒரு எச்சரிக்கை
    ஒரு பாடம்…

    #Tsunami2004 #NeverForget #Dec26 #IndianOceanTsunami
    🌊 21 வருடங்கள்… ஆனால் அந்த நாள் இன்னும் மனசில் அதே சத்தத்தோடு… பாதம் தழுவி செல்லும் அலைகள் ஒரு நொடியில் உயிரையும் கனவுகளையும் வாரிச் சுருட்டி இழுத்துச் சென்ற நாள்… 📅 டிசம்பர் 26, 2004 – ஞாயிற்றுக்கிழமை “சுனாமி” என்றொரு சொல்லை இந்திய தீபகற்பம் முதன்முறையாக கேட்ட நாள். 📺 வீட்டில் டிவி இல்லை… ☕ அருகிலுள்ள டீக்கடையில் Breaking News பார்த்து உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரிந்தபோது கண்ணீரோடு வந்த நிம்மதி… --- 🌍 இயற்கை எழுதிய மனிதன் மறக்கக் கூடாத பாடம் 🔴 கடலுக்கடியில் நடந்த பயங்கரமான நிலநடுக்கம் 🔴 1200 கி.மீ நீளமான பூமியின் விரிசல் 🔴 பல அணுகுண்டுகளை ஒருசேர வெடித்த அளவிலான ஆற்றல் 🔴 மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் பயணித்த மரண அலைகள்… ⚠️ கடல் பின்வாங்கியது… ஆனால் “ஓடுங்க… இது எச்சரிக்கை” என்று சொல்ல யாரும் இல்லை… --- 🕊️ ஒரு நிமிடம் கண் மூடி நினைப்போம் 👶 தாய் இல்லாத குழந்தைகள் 👵 துணையை இழந்த முதியவர்கள் 🏠 வீடு, வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் ஒரே நொடியில் இழந்த லட்சக்கணக்கான மக்கள்… --- 🔔 அந்த பேரழிவுக்குப் பிறகு… ✅ இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் ✅ விழிப்புணர்வு ✅ முன் எச்சரிக்கை அமைப்புகள் ஆனால்… அந்த நாள் ஏற்படுத்திய மனக்காயம் மட்டும் இன்றும் ஆறவில்லை. --- 🙏 2004 சுனாமியில் உயிரிழந்த அனைவருக்கும் இன்று நினைவஞ்சலி செலுத்துவோம். 💬 “பிறரின் வலியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளும் போது தான் மனிதநேயம் உயிரோடு இருக்கும்.” 👇 இந்த பதிவு மனதை தொட்டால் Share செய்யுங்கள்… ஒரு நினைவு ஒரு எச்சரிக்கை ஒரு பாடம்… #Tsunami2004 #NeverForget #Dec26 #IndianOceanTsunami
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • 🚨 கோமா vs மூளை மரணம் – இரண்டும் ஒன்றே இல்லை! 🚨
    👉 பலருக்கும் குழப்பமாக இருக்கும் இந்த மருத்துவ உண்மை… இதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!

    ---

    🧠 கோமா (Coma) என்றால் என்ன?

    மூளை இன்னும் உயிருடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது

    மூளையின் செயல்பாடு தற்காலிகமாக மந்தமாக இருக்கும்

    சரியான சிகிச்சை கிடைத்தால் மீண்டும் விழிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது

    பலர் கோமாவிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளனர்

    ➡️ அதாவது… கோமா = நம்பிக்கை உள்ள நிலை

    ---

    ⚠️ மூளை மரணம் (Brain Death) என்றால்?

    மூளையின் அனைத்து செயல்பாடுகளும் நிரந்தரமாக நிறுத்தம்

    எந்த சிகிச்சையாலும் மீண்டும் செயல்பட வாய்ப்பே இல்லை

    இதயம் இயந்திர உதவியால் துடித்தாலும்,
    👉 மருத்துவ ரீதியாக இது முழுமையான மரணம்

    ➡️ மூளை மரணம் = திரும்ப முடியாத உண்மை

    ---

    📝 ஒரே வரியில் சொன்னால்:

    கோமா = திரும்பக்கூடிய நிலை

    மூளை மரணம் = திரும்ப முடியாத நிலை

    ---

    💡 எளிய உதாரணம் (அனைவருக்கும் புரியுமாறு):

    கோமா 👉 விளக்கு அணைந்திருக்கிறது… ஆனால் மின்சாரம் இருக்கிறது

    மூளை மரணம் 👉 மின்சாரம் முழுக்க துண்டிக்கப்பட்டது… இனி விளக்கு எரியவே எரியாது

    ---

    📌 ஏன் இந்த தகவல் முக்கியம்?

    சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கைகளை நீக்க

    மருத்துவ முடிவுகளை புரிந்து கொள்ள

    உறவினர்களின் நிலையை சரியாக உணர்ந்து கொள்ள

    👉 இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்!

    📢 பயனுள்ளதாக இருந்தால் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
    🩺 மருத்துவ உண்மை – மக்களுக்கு புரியும் மொழியில்
    🚨 கோமா vs மூளை மரணம் – இரண்டும் ஒன்றே இல்லை! 🚨 👉 பலருக்கும் குழப்பமாக இருக்கும் இந்த மருத்துவ உண்மை… இதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்! --- 🧠 கோமா (Coma) என்றால் என்ன? மூளை இன்னும் உயிருடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது மூளையின் செயல்பாடு தற்காலிகமாக மந்தமாக இருக்கும் சரியான சிகிச்சை கிடைத்தால் மீண்டும் விழிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது பலர் கோமாவிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளனர் ➡️ அதாவது… கோமா = நம்பிக்கை உள்ள நிலை --- ⚠️ மூளை மரணம் (Brain Death) என்றால்? மூளையின் அனைத்து செயல்பாடுகளும் நிரந்தரமாக நிறுத்தம் எந்த சிகிச்சையாலும் மீண்டும் செயல்பட வாய்ப்பே இல்லை இதயம் இயந்திர உதவியால் துடித்தாலும், 👉 மருத்துவ ரீதியாக இது முழுமையான மரணம் ➡️ மூளை மரணம் = திரும்ப முடியாத உண்மை --- 📝 ஒரே வரியில் சொன்னால்: கோமா = திரும்பக்கூடிய நிலை மூளை மரணம் = திரும்ப முடியாத நிலை --- 💡 எளிய உதாரணம் (அனைவருக்கும் புரியுமாறு): கோமா 👉 விளக்கு அணைந்திருக்கிறது… ஆனால் மின்சாரம் இருக்கிறது மூளை மரணம் 👉 மின்சாரம் முழுக்க துண்டிக்கப்பட்டது… இனி விளக்கு எரியவே எரியாது --- 📌 ஏன் இந்த தகவல் முக்கியம்? சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கைகளை நீக்க மருத்துவ முடிவுகளை புரிந்து கொள்ள உறவினர்களின் நிலையை சரியாக உணர்ந்து கொள்ள 👉 இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்! 📢 பயனுள்ளதாக இருந்தால் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்! 🩺 மருத்துவ உண்மை – மக்களுக்கு புரியும் மொழியில்
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • #fblifestyle

    💊 மருந்து வாங்க ஓட வேண்டாம்…

    🧠 உங்கள் குடலே உங்கள் உடலின் “மூளை”!

    நாம் அடிக்கடி சந்திக்கும் பல உடல் பிரச்சனைகளின் மூல காரணம் – குடல் (GUT) சரியாக இயங்காதது தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்?

    👉 வயிறு சரியில்லை
    👉 மலம் சரியாக போகவில்லை
    👉 அடிக்கடி வாயு
    👉 அஜீரணம்
    👉 உடல் சோர்வு
    👉 நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    இவையெல்லாம் தனித்தனி நோய்கள் இல்லை…
    குடல் சமநிலை குலைந்ததின் எச்சரிக்கை மணி! 🔔

    ---

    🧬 குடல் (GUT) என்றால் என்ன?

    குடல் என்பது உணவை செரிப்பதற்கான ஒரு குழாய் மட்டும் அல்ல ❌
    👉 இது நம் நோய் எதிர்ப்பு சக்தியின் 70%க்கும் மேல் உருவாகும் இடம்
    👉 நம் மனநிலையை கட்டுப்படுத்தும் Serotonin என்ற ஹார்மோனின் 90% குடலிலேயே உருவாகிறது
    👉 குடல் ஆரோக்கியம் = உடல் + மன ஆரோக்கியம் 💚

    ---

    ❗ குடலில் தினமும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் & அதற்கான எளிய தீர்வுகள்

    🔴 1. வாயு (Gas) பிரச்சனை

    காரணம்:
    ❌ வேகமாக சாப்பிடுதல்
    ❌ எண்ணெய் & ஜங்க் உணவு
    ❌ குடல் பாக்டீரியா சமநிலை குலைவு

    எளிய தீர்வு:
    ✅ சீரகம் + சுக்கு சேர்த்து கொதிக்க வைத்த நீர்
    ✅ மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுதல்
    ✅ இரவில் கனமான உணவு தவிர்த்தல்

    ---

    🔴 2. மலச்சிக்கல் (Constipation)

    காரணம்:
    ❌ தண்ணீர் குறைவு
    ❌ நார் (Fiber) இல்லாத உணவு
    ❌ உடல் அசைவின்மை

    எளிய தீர்வு:
    ✅ தினமும் 3–4 லிட்டர் நீர்
    ✅ பப்பாளி, கீரை, காய்கறிகள்
    ✅ காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி

    ---

    🔴 3. பேதி / அடிக்கடி மலம்

    காரணம்:
    ❌ குடல் கிருமிகள்
    ❌ பழைய உணவு
    ❌ மன அழுத்தம்

    எளிய தீர்வு:
    ✅ மோர் + சீரகம்
    ✅ இளநீர்
    ✅ வீட்டில் சமைத்த تازா உணவு

    ---

    🔴 4. அஜீரணம் (Indigestion)

    காரணம்:
    ❌ தவறான உணவு நேரம்
    ❌ அதிக காரம்
    ❌ நள்ளிரவில் சாப்பிடுதல்

    எளிய தீர்வு:
    ✅ உணவுக்குப் பிறகு சோம்பு
    ✅ மிதமான கார உணவு
    ✅ உணவு – தூக்கம் இடையே 2–3 மணி இடைவெளி

    ---

    🔴 5. வயிற்று வலி / வீக்கம்

    காரணம்:
    ❌ குடல் அழற்சி
    ❌ Gas trapping
    ❌ உணவு ஒவ்வாமை

    எளிய தீர்வு:
    ✅ வெந்நீர்
    ✅ இஞ்சி தேநீர்
    ✅ தயிர் / மோர் (Natural Probiotics)

    ---

    🔴 6. குடல் சமநிலை குலைவு (Gut Dysbiosis)

    அறிகுறிகள்:
    ⚠️ அடிக்கடி சோர்வு
    ⚠️ சரும பிரச்சனைகள்
    ⚠️ நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    எளிய தீர்வு:
    ✅ புளித்த உணவுகள் (இட்லி, தோசை, கஞ்சி)
    ✅ பழங்கள் & காய்கறிகள்
    ✅ தேவையில்லாத ஆன்டிபயாட்டிக் தவிர்க்கல்

    ---

    🌿 நினைவில் வையுங்கள்!

    > “மருந்து குடிக்காமல், உணவை மருந்தாக மாற்றினால் –
    மருத்துவரைத் தேடும் அவசியமே இருக்காது!”

    ---

    🙏 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்…

    📌 உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
    📌 தினமும் இப்படியான உடல் & ஆரோக்கிய விழிப்புணர்வு பதிவுகளுக்காக
    👉 எங்களது பேஸ்புக் பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள் ❤️
    📌 ஒருவரின் வாழ்க்கையையாவது இந்த பதிவு மாற்றலாம்!

    ---

    ✨ ஆரோக்கியம் ஒரு செலவு அல்ல – அது ஒரு முதலீடு!
    உங்கள் குடலை கவனியுங்கள்… உங்கள் உடல் தானாக குணமாகும் 🌱
    #fblifestyle 💊 மருந்து வாங்க ஓட வேண்டாம்… 🧠 உங்கள் குடலே உங்கள் உடலின் “மூளை”! நாம் அடிக்கடி சந்திக்கும் பல உடல் பிரச்சனைகளின் மூல காரணம் – குடல் (GUT) சரியாக இயங்காதது தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறோம்? 👉 வயிறு சரியில்லை 👉 மலம் சரியாக போகவில்லை 👉 அடிக்கடி வாயு 👉 அஜீரணம் 👉 உடல் சோர்வு 👉 நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் தனித்தனி நோய்கள் இல்லை… குடல் சமநிலை குலைந்ததின் எச்சரிக்கை மணி! 🔔 --- 🧬 குடல் (GUT) என்றால் என்ன? குடல் என்பது உணவை செரிப்பதற்கான ஒரு குழாய் மட்டும் அல்ல ❌ 👉 இது நம் நோய் எதிர்ப்பு சக்தியின் 70%க்கும் மேல் உருவாகும் இடம் 👉 நம் மனநிலையை கட்டுப்படுத்தும் Serotonin என்ற ஹார்மோனின் 90% குடலிலேயே உருவாகிறது 👉 குடல் ஆரோக்கியம் = உடல் + மன ஆரோக்கியம் 💚 --- ❗ குடலில் தினமும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் & அதற்கான எளிய தீர்வுகள் 🔴 1. வாயு (Gas) பிரச்சனை காரணம்: ❌ வேகமாக சாப்பிடுதல் ❌ எண்ணெய் & ஜங்க் உணவு ❌ குடல் பாக்டீரியா சமநிலை குலைவு எளிய தீர்வு: ✅ சீரகம் + சுக்கு சேர்த்து கொதிக்க வைத்த நீர் ✅ மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுதல் ✅ இரவில் கனமான உணவு தவிர்த்தல் --- 🔴 2. மலச்சிக்கல் (Constipation) காரணம்: ❌ தண்ணீர் குறைவு ❌ நார் (Fiber) இல்லாத உணவு ❌ உடல் அசைவின்மை எளிய தீர்வு: ✅ தினமும் 3–4 லிட்டர் நீர் ✅ பப்பாளி, கீரை, காய்கறிகள் ✅ காலையில் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி --- 🔴 3. பேதி / அடிக்கடி மலம் காரணம்: ❌ குடல் கிருமிகள் ❌ பழைய உணவு ❌ மன அழுத்தம் எளிய தீர்வு: ✅ மோர் + சீரகம் ✅ இளநீர் ✅ வீட்டில் சமைத்த تازா உணவு --- 🔴 4. அஜீரணம் (Indigestion) காரணம்: ❌ தவறான உணவு நேரம் ❌ அதிக காரம் ❌ நள்ளிரவில் சாப்பிடுதல் எளிய தீர்வு: ✅ உணவுக்குப் பிறகு சோம்பு ✅ மிதமான கார உணவு ✅ உணவு – தூக்கம் இடையே 2–3 மணி இடைவெளி --- 🔴 5. வயிற்று வலி / வீக்கம் காரணம்: ❌ குடல் அழற்சி ❌ Gas trapping ❌ உணவு ஒவ்வாமை எளிய தீர்வு: ✅ வெந்நீர் ✅ இஞ்சி தேநீர் ✅ தயிர் / மோர் (Natural Probiotics) --- 🔴 6. குடல் சமநிலை குலைவு (Gut Dysbiosis) அறிகுறிகள்: ⚠️ அடிக்கடி சோர்வு ⚠️ சரும பிரச்சனைகள் ⚠️ நோய் எதிர்ப்பு சக்தி குறைவு எளிய தீர்வு: ✅ புளித்த உணவுகள் (இட்லி, தோசை, கஞ்சி) ✅ பழங்கள் & காய்கறிகள் ✅ தேவையில்லாத ஆன்டிபயாட்டிக் தவிர்க்கல் --- 🌿 நினைவில் வையுங்கள்! > “மருந்து குடிக்காமல், உணவை மருந்தாக மாற்றினால் – மருத்துவரைத் தேடும் அவசியமே இருக்காது!” --- 🙏 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்… 📌 உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் 📌 தினமும் இப்படியான உடல் & ஆரோக்கிய விழிப்புணர்வு பதிவுகளுக்காக 👉 எங்களது பேஸ்புக் பக்கத்தை Follow செய்ய மறக்காதீர்கள் ❤️ 📌 ஒருவரின் வாழ்க்கையையாவது இந்த பதிவு மாற்றலாம்! --- ✨ ஆரோக்கியம் ஒரு செலவு அல்ல – அது ஒரு முதலீடு! உங்கள் குடலை கவனியுங்கள்… உங்கள் உடல் தானாக குணமாகும் 🌱
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • #fblifestyle

    🌿 தொண்டையில் ஒட்டும் சளி… எவ்வளவு இருமினாலும் வெளியே வராத அவஸ்தை!

    😖 காரணமும்… எளிய பாரம்பரிய தீர்வும்…

    இன்றைய காலத்தில் பலருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒரு பெரிய தொந்தரவு தான் தொண்டையில் சளி ஒட்டிக்கொண்டு வெளியே வராத நிலை.

    👉 எவ்வளவு இருமினாலும் சளி வெளியே வராது
    👉 தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கியிருப்பது போல உணர்வு
    👉 பேசும்போதும் விழுங்கும்போதும் எரிச்சல்
    👉 அடிக்கடி இருமல் வரும், ஆனால் நிவாரணம் இல்லை
    👉 தொண்டை வறட்சியாகவும் கனமாகவும் இருக்கும்

    இந்த அறிகுறிகள் இருந்தால், அது நம் தினசரி வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு எரிச்சலை தரும்.

    ---

    ❓ ஏன் இப்படிச் சளி ஒட்டிக்கொள்கிறது?

    ✔️ குளிர் மற்றும் சளி
    ✔️ வானிலை மாற்றம்
    ✔️ அதிக குளிர்ந்த உணவுகள்
    ✔️ தூசி, புகை, மாசு
    ✔️ நீர் குறைவாக குடிப்பது
    ✔️ அடிக்கடி ஏசி பயன்படுத்துவது

    இந்த காரணங்களால் தொண்டையில் உள்ள சளி கட்டியாகி ஒட்டிக்கொண்டு, வெளியே வர முடியாமல் போய்விடுகிறது.

    ---

    🌿 நம் பாட்டி வைத்தியத்தில் சொல்லப்படும் எளிய வழி

    👉 கிராம்பு + கற்கண்டு

    பழங்காலத்திலிருந்தே, தொண்டை சளி மற்றும் இருமலுக்கு
    கிராம்பும் கற்கண்டும் சேர்த்து மென்று சாப்பிடுவது ஒரு எளிய நிவாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ---

    🌱 கிராம்பின் பயன் என்ன?

    🔸 கிராம்பில் உள்ள இயற்கையான சூடு தன்மை
    🔸 தொண்டையில் ஒட்டியிருக்கும் சளியை தளர்த்த உதவும்
    🔸 கிருமி எதிர்ப்பு சக்தி கொண்டது
    🔸 தொண்டை அடைப்பு உணர்வை குறைக்கும்

    ---

    🍬 கற்கண்டின் பயன் என்ன?

    🔹 தொண்டையை மிருதுவாக்கும்
    🔹 எரிச்சல் மற்றும் உலர்ச்சியை குறைக்கும்
    🔹 சளி மென்மையாகி நகர உதவும்
    🔹 இனிமை காரணமாக தொண்டையில் நிம்மதி தரும்

    ---

    👐 எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

    ✔️ ஒரு சிறிய கிராம்பு
    ✔️ அதுடன் ஒரு சிறிய கற்கண்டு துண்டு
    ✔️ இரண்டையும் சேர்த்து மெதுவாக மென்று சாப்பிடுங்கள்
    ✔️ உடனே விழுங்காமல் வாயில் சுவைக்க விடுங்கள்

    👉 இப்படி செய்யும்போது
    • உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும்
    • சளி மென்மையடையும்
    • இருமலுடன் சளி வெளியே வர எளிதாகும்

    குறிப்பாக
    🌬️ குளிர் காலம்
    🌧️ வானிலை மாற்றம்
    🤧 சளி பிடித்த நேரங்களில்
    இந்த வழி பலருக்கு நல்ல நிவாரணம் அளித்துள்ளதாக அனுபவங்கள் கூறுகின்றன.

    ---

    ⚠️ முக்கிய குறிப்பு (மிக அவசியம்)

    🚫 குழந்தைகள் – மிகச் சிறிய அளவில் மட்டும்
    🚫 நீரிழிவு நோயாளிகள் – கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை பெறவும்
    🚫 நீண்ட நாட்களாக சளி/இருமல் தொடர்ந்தால் – சுய மருத்துவம் வேண்டாம், மருத்துவரை அணுகவும்

    ---

    💚 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்…

    🙏 தயவுசெய்து
    👉 உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் அனைவருடனும் ஷேர் செய்யுங்கள்
    👉 இப்படியான எளிய ஆரோக்கிய தகவல்கள் தொடர்ந்து பெற
    📌 எங்களது Facebook பக்கத்தை Follow செய்யுங்கள்

    ஒரு சிறிய ஷேர்…
    பலரின் தொண்டை அவஸ்தைக்கு நிவாரணமாக மாறலாம் ❤️

    ---

    #ThroatRelief
    #ThondaiSalai
    #PhlegmProblem
    #NaturalHealing
    #HomeRemedies
    #CoughRelief
    #TamilHealthTips
    #PattiVaithiyam
    #fblifestyle 🌿 தொண்டையில் ஒட்டும் சளி… எவ்வளவு இருமினாலும் வெளியே வராத அவஸ்தை! 😖 காரணமும்… எளிய பாரம்பரிய தீர்வும்… இன்றைய காலத்தில் பலருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒரு பெரிய தொந்தரவு தான் தொண்டையில் சளி ஒட்டிக்கொண்டு வெளியே வராத நிலை. 👉 எவ்வளவு இருமினாலும் சளி வெளியே வராது 👉 தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கியிருப்பது போல உணர்வு 👉 பேசும்போதும் விழுங்கும்போதும் எரிச்சல் 👉 அடிக்கடி இருமல் வரும், ஆனால் நிவாரணம் இல்லை 👉 தொண்டை வறட்சியாகவும் கனமாகவும் இருக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால், அது நம் தினசரி வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு எரிச்சலை தரும். --- ❓ ஏன் இப்படிச் சளி ஒட்டிக்கொள்கிறது? ✔️ குளிர் மற்றும் சளி ✔️ வானிலை மாற்றம் ✔️ அதிக குளிர்ந்த உணவுகள் ✔️ தூசி, புகை, மாசு ✔️ நீர் குறைவாக குடிப்பது ✔️ அடிக்கடி ஏசி பயன்படுத்துவது இந்த காரணங்களால் தொண்டையில் உள்ள சளி கட்டியாகி ஒட்டிக்கொண்டு, வெளியே வர முடியாமல் போய்விடுகிறது. --- 🌿 நம் பாட்டி வைத்தியத்தில் சொல்லப்படும் எளிய வழி 👉 கிராம்பு + கற்கண்டு பழங்காலத்திலிருந்தே, தொண்டை சளி மற்றும் இருமலுக்கு கிராம்பும் கற்கண்டும் சேர்த்து மென்று சாப்பிடுவது ஒரு எளிய நிவாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. --- 🌱 கிராம்பின் பயன் என்ன? 🔸 கிராம்பில் உள்ள இயற்கையான சூடு தன்மை 🔸 தொண்டையில் ஒட்டியிருக்கும் சளியை தளர்த்த உதவும் 🔸 கிருமி எதிர்ப்பு சக்தி கொண்டது 🔸 தொண்டை அடைப்பு உணர்வை குறைக்கும் --- 🍬 கற்கண்டின் பயன் என்ன? 🔹 தொண்டையை மிருதுவாக்கும் 🔹 எரிச்சல் மற்றும் உலர்ச்சியை குறைக்கும் 🔹 சளி மென்மையாகி நகர உதவும் 🔹 இனிமை காரணமாக தொண்டையில் நிம்மதி தரும் --- 👐 எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? ✔️ ஒரு சிறிய கிராம்பு ✔️ அதுடன் ஒரு சிறிய கற்கண்டு துண்டு ✔️ இரண்டையும் சேர்த்து மெதுவாக மென்று சாப்பிடுங்கள் ✔️ உடனே விழுங்காமல் வாயில் சுவைக்க விடுங்கள் 👉 இப்படி செய்யும்போது • உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும் • சளி மென்மையடையும் • இருமலுடன் சளி வெளியே வர எளிதாகும் குறிப்பாக 🌬️ குளிர் காலம் 🌧️ வானிலை மாற்றம் 🤧 சளி பிடித்த நேரங்களில் இந்த வழி பலருக்கு நல்ல நிவாரணம் அளித்துள்ளதாக அனுபவங்கள் கூறுகின்றன. --- ⚠️ முக்கிய குறிப்பு (மிக அவசியம்) 🚫 குழந்தைகள் – மிகச் சிறிய அளவில் மட்டும் 🚫 நீரிழிவு நோயாளிகள் – கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை பெறவும் 🚫 நீண்ட நாட்களாக சளி/இருமல் தொடர்ந்தால் – சுய மருத்துவம் வேண்டாம், மருத்துவரை அணுகவும் --- 💚 இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்… 🙏 தயவுசெய்து 👉 உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் அனைவருடனும் ஷேர் செய்யுங்கள் 👉 இப்படியான எளிய ஆரோக்கிய தகவல்கள் தொடர்ந்து பெற 📌 எங்களது Facebook பக்கத்தை Follow செய்யுங்கள் ஒரு சிறிய ஷேர்… பலரின் தொண்டை அவஸ்தைக்கு நிவாரணமாக மாறலாம் ❤️ --- #ThroatRelief #ThondaiSalai #PhlegmProblem #NaturalHealing #HomeRemedies #CoughRelief #TamilHealthTips #PattiVaithiyam
    0 Kommentare ·0 Geteilt ·4KB Ansichten ·0 Bewertungen
  • சமீபத்தில் கணவன் இறந்து போன ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசும் போது அவர் கூறிய சில வார்த்தைகள் அப்படியே என் நெஞ்சில் படிந்துவிட்டது...
    "அவர் போனது வருத்தமாத்தான் இருக்கு... வீடு வெறிச்சுனு இருக்குதான் இருக்கு.. ஆனா கூடவே ஒரு ஆசுவாசமும் இருக்கும்மா.... இனிமே நான் கடைக்கு போக, சொந்தங்கள பார்க்க போக, தோழிகளோட வெளில போக யார்கிட்டயும் அனுமதி கேக்கவேணாம்.. சொல்லிவிட்டு வந்த நேரத்துக்குள்ள வீட்டுக்கு திரும்பணுமேங்கற பதட்டத்துலேயே போன இடத்துல கூட நிம்மதியா இருக்க முடியாம தவிக்க வேண்டாம்மா.. யாருக்கும் நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்மா.. என் முடிவெல்லாம் நானே எடுத்துக்கலாம்"..

    இது நிறையவே சிந்திக்க வைத்தது..

    கணவன்-மனைவி உறவென்பது எத்தனை பெரிதாக மதிக்கப்படுகிறது நம் சமூகத்தில்.. வாழ்வின் ஒரு பாதி மறு பாதி என்றெல்லாம் வசனம் பேசுகிறோம். ஆனால் பார்த்தால் அந்த மறுபாதி போன துக்கம் ஒரு புறம் இருந்தாலும், இப்படி ஒரு ஆசுவாசம் ஒரு பெண்ணிற்கு வருகிறதெனில் இங்கு என்ன பிரச்சினை? ஒவ்வொரு தனிமனிதரின் தாகமும் சிறிதே சிறிதளவு சுதந்திரம். அது கூட தன்னுடன் இருக்கும் மனிதருக்கு கிடைக்கவிடாமல் செய்யும் வாழ்வை ஒருவர் வாழ்ந்திருக்கிறார் எனில் அவர் எதை சாதித்துவிட்டு சென்றார்? நம் மரணம் ஒருவருக்கு ஆசுவாசத்தை அளிக்கிறதென்றால் நாம் என்ன மாதிரி வாழ்வை வாழ்ந்திருக்கிறோம்?

    என் அப்பாவிடம் அம்மா பயந்து பயந்து அனுமதி கேட்ட சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை அம்மா தோழியுடன் பக்கத்து தியேட்டருக்கு சினிமாவுக்கு சென்றார். போகும் அவசரத்தில் கேஸ் சிலிண்டர் நாப் மூட மறந்து விட்டார். அதை கவனித்த அப்பா தானே மூடியிருக்கலாம். வந்த பிறகு இனி பார்த்து செய் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நேராக கிளம்பி தியேட்டருக்கு சென்றார். உள்ளே போய் அம்மாவை அழைத்தார். பாதி படத்தில் வீட்டிற்கு வந்து சிலிண்டரை மூட வைத்தார். என்ன மனநிலையிது? அன்றே சிந்தித்தேன்.... வயது 8/9 கூட இருக்கலாம். எங்கிருந்து இத்தனை ஆணவம் வருகிறது மனிதர்களுக்கு? ஒரு நாள் அம்மா விவாகரத்து செய்தார். சிலர் மரணத்தில் ஆசுவாசம் அடைகின்றனர்..

    ஏன் எல்லாவற்றிற்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் அனுமதி பெற வேண்டும்? என் பதினாறு வயதிலிருந்து நானே எடுத்த முடிவு எங்கு செல்வதாக இருந்தாலும் தகவல் மட்டுமே சொல்வேன் வீட்டில் இருப்பவர்களிடம். அதே போல் என் பிள்ளைகளும் 16 வயதிலிருந்து தகவல் மட்டும் தான் சொல்வார்கள்.

    நம் மரணத்தில் யாரையும் ஆசுவாசம் அடைய வைக்காத ஒரு வாழ்வை வாழ்வோம்...

    #Vidhya Varadaraj பதிவில் இருந்து....

    சமீபத்தில் கணவன் இறந்து போன ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசும் போது அவர் கூறிய சில வார்த்தைகள் அப்படியே என் நெஞ்சில் படிந்துவிட்டது... "அவர் போனது வருத்தமாத்தான் இருக்கு... வீடு வெறிச்சுனு இருக்குதான் இருக்கு.. ஆனா கூடவே ஒரு ஆசுவாசமும் இருக்கும்மா.... இனிமே நான் கடைக்கு போக, சொந்தங்கள பார்க்க போக, தோழிகளோட வெளில போக யார்கிட்டயும் அனுமதி கேக்கவேணாம்.. சொல்லிவிட்டு வந்த நேரத்துக்குள்ள வீட்டுக்கு திரும்பணுமேங்கற பதட்டத்துலேயே போன இடத்துல கூட நிம்மதியா இருக்க முடியாம தவிக்க வேண்டாம்மா.. யாருக்கும் நான் இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்மா.. என் முடிவெல்லாம் நானே எடுத்துக்கலாம்".. இது நிறையவே சிந்திக்க வைத்தது.. கணவன்-மனைவி உறவென்பது எத்தனை பெரிதாக மதிக்கப்படுகிறது நம் சமூகத்தில்.. வாழ்வின் ஒரு பாதி மறு பாதி என்றெல்லாம் வசனம் பேசுகிறோம். ஆனால் பார்த்தால் அந்த மறுபாதி போன துக்கம் ஒரு புறம் இருந்தாலும், இப்படி ஒரு ஆசுவாசம் ஒரு பெண்ணிற்கு வருகிறதெனில் இங்கு என்ன பிரச்சினை? ஒவ்வொரு தனிமனிதரின் தாகமும் சிறிதே சிறிதளவு சுதந்திரம். அது கூட தன்னுடன் இருக்கும் மனிதருக்கு கிடைக்கவிடாமல் செய்யும் வாழ்வை ஒருவர் வாழ்ந்திருக்கிறார் எனில் அவர் எதை சாதித்துவிட்டு சென்றார்? நம் மரணம் ஒருவருக்கு ஆசுவாசத்தை அளிக்கிறதென்றால் நாம் என்ன மாதிரி வாழ்வை வாழ்ந்திருக்கிறோம்? என் அப்பாவிடம் அம்மா பயந்து பயந்து அனுமதி கேட்ட சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஒரு முறை அம்மா தோழியுடன் பக்கத்து தியேட்டருக்கு சினிமாவுக்கு சென்றார். போகும் அவசரத்தில் கேஸ் சிலிண்டர் நாப் மூட மறந்து விட்டார். அதை கவனித்த அப்பா தானே மூடியிருக்கலாம். வந்த பிறகு இனி பார்த்து செய் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நேராக கிளம்பி தியேட்டருக்கு சென்றார். உள்ளே போய் அம்மாவை அழைத்தார். பாதி படத்தில் வீட்டிற்கு வந்து சிலிண்டரை மூட வைத்தார். என்ன மனநிலையிது? அன்றே சிந்தித்தேன்.... வயது 8/9 கூட இருக்கலாம். எங்கிருந்து இத்தனை ஆணவம் வருகிறது மனிதர்களுக்கு? ஒரு நாள் அம்மா விவாகரத்து செய்தார். சிலர் மரணத்தில் ஆசுவாசம் அடைகின்றனர்.. ஏன் எல்லாவற்றிற்கும் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் அனுமதி பெற வேண்டும்? என் பதினாறு வயதிலிருந்து நானே எடுத்த முடிவு எங்கு செல்வதாக இருந்தாலும் தகவல் மட்டுமே சொல்வேன் வீட்டில் இருப்பவர்களிடம். அதே போல் என் பிள்ளைகளும் 16 வயதிலிருந்து தகவல் மட்டும் தான் சொல்வார்கள். நம் மரணத்தில் யாரையும் ஆசுவாசம் அடைய வைக்காத ஒரு வாழ்வை வாழ்வோம்... #Vidhya Varadaraj பதிவில் இருந்து....
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
  • #fblifestyle

    🧅 வெங்காயத்தில் கருப்பு புள்ளிகள் வந்தால் உடனே பயப்பட வேண்டாம்!

    உண்மை என்ன? எப்போது சாப்பிடலாம்? எப்போது குப்பையில் போட வேண்டும்?

    இன்றைக்கு பல வீடுகளில் ஒரு பொதுவான குழப்பம் இருக்கிறது.
    👉 “வெங்காயத்தில் கருப்பு புள்ளிகள் இருக்கு… இது விஷமா?”
    👉 “சாப்பிட்டா உடம்புக்கு ஏதாவது ஆகுமா?”

    இந்த சந்தேகத்தால்,
    ஒருசிலர் நல்ல வெங்காயத்தை கூட தேவையில்லாமல் தூக்கி எறிகிறார்கள்,
    இன்னொருசிலர் பாதிப்பு உள்ளதை தெரியாமலே சாப்பிடுகிறார்கள்.

    👉 உண்மை என்னனா,
    பயம் வேண்டாம்… சரியான தகவல் இருந்தாலே போதும்.

    ---

    🌱 வெங்காயத்தில் கருப்பு புள்ளிகள் ஏன் உருவாகிறது?

    பெரும்பாலான நேரங்களில்,
    வெங்காயத்தில் வரும் இந்த கருப்பு புள்ளிகளுக்குக் காரணம்
    👉 பூஞ்சை தாக்கம் (Fungal infection) தான்.

    இந்த பூஞ்சை தாக்கம் ஏற்படக் காரணங்கள்:

    ✔️ வெங்காயத்தை ஈரப்பதம் உள்ள இடத்தில் வைத்தல்
    ✔️ காற்றோட்டம் இல்லாத இடத்தில் நீண்ட நாட்கள் சேமித்தல்
    ✔️ மழைக்காலத்தில் அல்லது ஈர சூழலில் வைத்தல்
    ✔️ வெட்டுப்பட்ட அல்லது காயம் உள்ள வெங்காயத்தை சேமித்தல்

    👉 இவை எல்லாம் பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் உருவாக்கும்.

    ---

    🔍 மிக முக்கியமான விஷயம் என்ன?

    👉 கருப்பு புள்ளி இருக்கிறதா இல்லையா என்பதல்ல முக்கியம்.
    👉 அந்த பாதிப்பு எவ்வளவு ஆழம் வரை சென்றிருக்கிறது என்பதுதான் மிக முக்கியம்.

    அதை வைத்து தான்
    ✔️ சாப்பிடலாமா
    ❌ குப்பையில் போடலாமா
    என்று முடிவு செய்ய வேண்டும்.

    ---

    ✅ பாதிப்பு வெளிப்புற உலர் தோலில் மட்டும் இருந்தால்…

    வெங்காயத்தைப் பார்த்தால்
    👉 வெளிப்புற தோலில் மட்டும் கருப்பு புள்ளிகள் இருக்கலாம்.

    இந்த நிலையில்:

    ✔️ வெளிப்புற 2–3 உலர் அடுக்குகளை முழுவதும் உரித்து எடுத்து விடுங்கள்
    ✔️ உள்ளே உள்ள வெங்காயம்

    வெள்ளையாக இருந்தால்

    உறுதியாக இருந்தால்

    சளி இல்லாமல் இருந்தால்

    எந்தத் துர்நாற்றமும் இல்லாமல் இருந்தால்

    👉 அந்த வெங்காயத்தை சாப்பிடலாம்.

    📌 காரணம்:
    பூஞ்சை வெளிப்புற தோலில் மட்டும் இருந்தால்,
    அது உள்ளே பரவாமல் இருக்க வாய்ப்பு அதிகம்.
    மேலும் சமைக்கும் போது நன்றாக வெந்து விடுவதால்,
    பொதுவாக இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

    ---

    ❌ கருப்பு நிறம் உள்ளே வரை சென்றிருந்தால்…

    கீழே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால்
    👉 தயவு செய்து அந்த வெங்காயத்தை முழுவதும் தவிர்க்க வேண்டும்.

    ❌ வெங்காயம் மெலிதாக, சளி போல இருந்தால்
    ❌ உள்ளே வரை கருப்பு நிறம் / பூஞ்சை பரவியிருந்தால்
    ❌ கையால் அழுத்தும் போது உருகும் மாதிரி இருந்தால்
    ❌ மோசமான, அசிங்கமான வாசனை வந்தால்

    👉 அந்த வெங்காயத்தை உரித்து எடுத்து சாப்பிட கூடாது.
    👉 முழுவதுமாக குப்பையில் போடுவது தான் பாதுகாப்பான முடிவு.

    ---

    ☠️ ஏன் இப்படிப் பாதிக்கப்பட்ட வெங்காயத்தை சாப்பிடக் கூடாது?

    👉 சில வகை பூஞ்சைகள்
    நீண்ட காலம் உடலுக்குள் சென்றால்:

    ⚠️ வயிற்றுப்போக்கு
    ⚠️ வாந்தி
    ⚠️ உணவு விஷமாதல்
    ⚠️ குடல் மற்றும் உடல்நல பாதிப்புகள்

    போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

    👉 ஒரே தடவை சாப்பிட்டால் உடனடி பிரச்சனை வராமலும் இருக்கலாம்.
    👉 ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட்டால் ஆபத்து அதிகம்.

    ---

    🛑 மிக முக்கியமான Golden Rule

    👉 சந்தேகம் இருந்தால் – சாப்பிடாதீர்கள்.
    👉 இதுவே உணவு பாதுகாப்பில் மிகச் சிறந்த விதி.

    ஒரு வெங்காயத்துக்காக
    👉 உங்கள் உடல்நலத்தை ஆபத்தில் போட தேவையில்லை.

    ---

    💡 மேலும் ஒரு முக்கிய உண்மை

    👉 எல்லா கருப்பு புள்ளிகளும் ஒரே நோய் அல்ல.
    👉 சில பூஞ்சைகள் ஆபத்தானவை.
    👉 சில பூஞ்சைகள் மேற்பரப்பில் மட்டும் இருக்கும்.

    அதனால் தான்
    👉 கவனமாக பார்த்து,
    👉 நாற்றம், அமைப்பு, உள்ளே நிலை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

    ---

    🌿 முடிவாக சொல்ல வேண்டுமென்றால்…

    ✔️ பயப்பட தேவையில்லை
    ✔️ அலட்சியம் கூடாது
    ✔️ விழிப்புணர்வு இருந்தால் போதும்

    இந்த மாதிரி சின்ன விஷயங்களை தெரிந்து கொள்வது
    👉 நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    ---

    🙏 ஒரு சிறிய வேண்டுகோள்

    இந்த தகவல்
    👵 அம்மா
    👴 அப்பா
    👩‍🍳 வீட்டில் சமையல் செய்வோர்
    👨‍👩‍👧‍👦 உறவினர்கள்

    அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    🔁 தயவு செய்து இந்த பதிவை அவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
    👉 ஒரே ஒரு ஷேர், ஒருவரின் உடல்நலத்தை காப்பாற்றலாம்.

    ---

    👍 மேலும் இப்படியான

    ✔️ உணவு பாதுகாப்பு தகவல்கள்
    ✔️ ஆரோக்கிய விழிப்புணர்வு
    ✔️ அன்றாட வாழ்க்கைக்கு பயனுள்ள உண்மைகள்

    தொடர்ந்து தெரிந்துகொள்ள
    👉 எங்களது Facebook பக்கத்தை இப்போதே Follow செய்யுங்கள்.

    பயம் வேண்டாம்…
    விழிப்புணர்வே போதும் ❤️
    #fblifestyle 🧅 வெங்காயத்தில் கருப்பு புள்ளிகள் வந்தால் உடனே பயப்பட வேண்டாம்! உண்மை என்ன? எப்போது சாப்பிடலாம்? எப்போது குப்பையில் போட வேண்டும்? இன்றைக்கு பல வீடுகளில் ஒரு பொதுவான குழப்பம் இருக்கிறது. 👉 “வெங்காயத்தில் கருப்பு புள்ளிகள் இருக்கு… இது விஷமா?” 👉 “சாப்பிட்டா உடம்புக்கு ஏதாவது ஆகுமா?” இந்த சந்தேகத்தால், ஒருசிலர் நல்ல வெங்காயத்தை கூட தேவையில்லாமல் தூக்கி எறிகிறார்கள், இன்னொருசிலர் பாதிப்பு உள்ளதை தெரியாமலே சாப்பிடுகிறார்கள். 👉 உண்மை என்னனா, பயம் வேண்டாம்… சரியான தகவல் இருந்தாலே போதும். --- 🌱 வெங்காயத்தில் கருப்பு புள்ளிகள் ஏன் உருவாகிறது? பெரும்பாலான நேரங்களில், வெங்காயத்தில் வரும் இந்த கருப்பு புள்ளிகளுக்குக் காரணம் 👉 பூஞ்சை தாக்கம் (Fungal infection) தான். இந்த பூஞ்சை தாக்கம் ஏற்படக் காரணங்கள்: ✔️ வெங்காயத்தை ஈரப்பதம் உள்ள இடத்தில் வைத்தல் ✔️ காற்றோட்டம் இல்லாத இடத்தில் நீண்ட நாட்கள் சேமித்தல் ✔️ மழைக்காலத்தில் அல்லது ஈர சூழலில் வைத்தல் ✔️ வெட்டுப்பட்ட அல்லது காயம் உள்ள வெங்காயத்தை சேமித்தல் 👉 இவை எல்லாம் பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் உருவாக்கும். --- 🔍 மிக முக்கியமான விஷயம் என்ன? 👉 கருப்பு புள்ளி இருக்கிறதா இல்லையா என்பதல்ல முக்கியம். 👉 அந்த பாதிப்பு எவ்வளவு ஆழம் வரை சென்றிருக்கிறது என்பதுதான் மிக முக்கியம். அதை வைத்து தான் ✔️ சாப்பிடலாமா ❌ குப்பையில் போடலாமா என்று முடிவு செய்ய வேண்டும். --- ✅ பாதிப்பு வெளிப்புற உலர் தோலில் மட்டும் இருந்தால்… வெங்காயத்தைப் பார்த்தால் 👉 வெளிப்புற தோலில் மட்டும் கருப்பு புள்ளிகள் இருக்கலாம். இந்த நிலையில்: ✔️ வெளிப்புற 2–3 உலர் அடுக்குகளை முழுவதும் உரித்து எடுத்து விடுங்கள் ✔️ உள்ளே உள்ள வெங்காயம் வெள்ளையாக இருந்தால் உறுதியாக இருந்தால் சளி இல்லாமல் இருந்தால் எந்தத் துர்நாற்றமும் இல்லாமல் இருந்தால் 👉 அந்த வெங்காயத்தை சாப்பிடலாம். 📌 காரணம்: பூஞ்சை வெளிப்புற தோலில் மட்டும் இருந்தால், அது உள்ளே பரவாமல் இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் சமைக்கும் போது நன்றாக வெந்து விடுவதால், பொதுவாக இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. --- ❌ கருப்பு நிறம் உள்ளே வரை சென்றிருந்தால்… கீழே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் 👉 தயவு செய்து அந்த வெங்காயத்தை முழுவதும் தவிர்க்க வேண்டும். ❌ வெங்காயம் மெலிதாக, சளி போல இருந்தால் ❌ உள்ளே வரை கருப்பு நிறம் / பூஞ்சை பரவியிருந்தால் ❌ கையால் அழுத்தும் போது உருகும் மாதிரி இருந்தால் ❌ மோசமான, அசிங்கமான வாசனை வந்தால் 👉 அந்த வெங்காயத்தை உரித்து எடுத்து சாப்பிட கூடாது. 👉 முழுவதுமாக குப்பையில் போடுவது தான் பாதுகாப்பான முடிவு. --- ☠️ ஏன் இப்படிப் பாதிக்கப்பட்ட வெங்காயத்தை சாப்பிடக் கூடாது? 👉 சில வகை பூஞ்சைகள் நீண்ட காலம் உடலுக்குள் சென்றால்: ⚠️ வயிற்றுப்போக்கு ⚠️ வாந்தி ⚠️ உணவு விஷமாதல் ⚠️ குடல் மற்றும் உடல்நல பாதிப்புகள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். 👉 ஒரே தடவை சாப்பிட்டால் உடனடி பிரச்சனை வராமலும் இருக்கலாம். 👉 ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட்டால் ஆபத்து அதிகம். --- 🛑 மிக முக்கியமான Golden Rule 👉 சந்தேகம் இருந்தால் – சாப்பிடாதீர்கள். 👉 இதுவே உணவு பாதுகாப்பில் மிகச் சிறந்த விதி. ஒரு வெங்காயத்துக்காக 👉 உங்கள் உடல்நலத்தை ஆபத்தில் போட தேவையில்லை. --- 💡 மேலும் ஒரு முக்கிய உண்மை 👉 எல்லா கருப்பு புள்ளிகளும் ஒரே நோய் அல்ல. 👉 சில பூஞ்சைகள் ஆபத்தானவை. 👉 சில பூஞ்சைகள் மேற்பரப்பில் மட்டும் இருக்கும். அதனால் தான் 👉 கவனமாக பார்த்து, 👉 நாற்றம், அமைப்பு, உள்ளே நிலை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். --- 🌿 முடிவாக சொல்ல வேண்டுமென்றால்… ✔️ பயப்பட தேவையில்லை ✔️ அலட்சியம் கூடாது ✔️ விழிப்புணர்வு இருந்தால் போதும் இந்த மாதிரி சின்ன விஷயங்களை தெரிந்து கொள்வது 👉 நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். --- 🙏 ஒரு சிறிய வேண்டுகோள் இந்த தகவல் 👵 அம்மா 👴 அப்பா 👩‍🍳 வீட்டில் சமையல் செய்வோர் 👨‍👩‍👧‍👦 உறவினர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🔁 தயவு செய்து இந்த பதிவை அவர்களுடன் ஷேர் செய்யுங்கள். 👉 ஒரே ஒரு ஷேர், ஒருவரின் உடல்நலத்தை காப்பாற்றலாம். --- 👍 மேலும் இப்படியான ✔️ உணவு பாதுகாப்பு தகவல்கள் ✔️ ஆரோக்கிய விழிப்புணர்வு ✔️ அன்றாட வாழ்க்கைக்கு பயனுள்ள உண்மைகள் தொடர்ந்து தெரிந்துகொள்ள 👉 எங்களது Facebook பக்கத்தை இப்போதே Follow செய்யுங்கள். பயம் வேண்டாம்… விழிப்புணர்வே போதும் ❤️
    0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
Weitere Ergebnisse
Idaivelai.com https://idaivelai.com