• மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள்.

    மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

    மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன.

    பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil

    பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம்,

    இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA

    அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

    அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன.

    வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது.

    ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway
    மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

    இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China
    சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது.

    அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia
    ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது.

    மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள். மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன. வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது. ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது. அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது. மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    0 Commenti ·0 condivisioni ·10K Views ·0 Anteprima
  • ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை.

    ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

    ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது.

    ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான்.

    ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான்.

    ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன.

    ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார்.
    "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?"

    ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்...

    ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால்

    ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது.

    ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது.

    ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார்.

    ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது.
    ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள்.

    ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன.
    "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.

    ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள்.

    ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை.

    ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது.

    ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம்.

    ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள்.

    ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக.

    ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது

    செந்தமிழ்ச்செல்வன்
    உலகத்தமிழ் மங்கையர்மலர்
    ♥இடம்: பிரான்ஸ் பாரிஸ் நகரத்தின் ஒரு குற்றவியல் நீதிமன்றம் (Tribunal correctionnel). நேரம்: ஒரு குளிர்கால காலை வேளை. ♥நீதிமன்றத்தின் உயர்ந்த கூரையும், மரத்தாலான சுவர்களும் அந்த இடத்தின் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின. பிரெஞ்சு மொழியில் வழக்கறிஞர்களின் வாதங்கள் மெல்லிய இரைச்சலாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ♥சாட்சிக் கூண்டில் (Barre des témoins) நின்றிருந்தாள் இருபத்தி ஐந்து வயது சுபாஷினி. அவளது தோற்றத்தில் ஒரு கவலையான நடுக்கம் இருந்தது. குளிரை தாங்கிக்கொள்ள அணிந்திருந்த தடித்த கோட்டுக்குள்ளும் அவளது மெலிந்த தேகம் நடுங்கியிருந்தது. ♥அவளது இடுப்பில், ஒரு வயது மகன் அகரன், தாயின் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு உலகமறியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். ♥சுபாஷினியின் கண்கள் நேராக நீதிபதியைப் பார்க்க அஞ்சின. அவளது பார்வை அடிக்கடி வலதுபுறம் அமைந்திருந்த அந்தக் கண்ணாடிக் கூண்டின் பக்கம் சென்றது. அங்கே, இருபத்தி எட்டு வயது ரகு, அவளது காதல் கணவன், தலை குனிந்தபடி நின்றிருந்தான். ♥சில வருடங்களுக்கு முன் பெற்றோர் நிச்சயம் செய்து இரண்டு வருட தொலைதூர காதலின் பின் யாழ்ப்பாணத்தில் உறவுகள் சூழ, மங்கல இசை முழங்க அவளுக்குத் தாலி கட்டிய அதே கைகள், இன்று நீதிமன்றக் காவலில் இறுகப் பிணைக்கப்பட்டிருந்தன. ♥அவர்களுக்கு அருகில் நின்றிருந்த மொழிபெயர்ப்பாளர் (Translator), நீதிபதி கேட்ட கேள்வியை தமிழில் மொழிபெயர்த்தார். "திருமதி சுபாஷினி, அன்றைய தினம் இரவு என்ன நடந்தது என்று நீதிமன்றத்திற்கு விவரிக்க முடியுமா?" ♥சுபாஷினிக்கு தொண்டை வறண்டு போனது. அவளது தாய்மொழி, அந்நிய தேசத்து நீதிமன்றத்தில் ஒலிப்பது அவளுக்கு ஒருவித ஆறுதலையும், அதே சமயம் பெரும் துயரத்தையும் தந்தது. நடந்ததைச் சொல்வதா? சொன்னால் கணவன் ரகுவின் வாழ்க்கை என்னவாகும்? அவள் இப்போதும் கணவனை அதிகமாக காதலிக்கிறாள்... ♥சொல்லாவிட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்? என காதலா.? தாய்மையா?.. கணவனா ?குழந்தையின் எதிர்காலமா? என அவள் நடுவில் நின்று யோசித்தால் ♥புலம்பெயர்ந்து வந்த புதிதில் பிரான்ஸ் நாட்டின் வாழ்க்கை அவர்களுக்கு சொர்க்கமாகத் தெரியவில்லை. மொழி தெரியாத தடுமாற்றம், சிறிய வாடகை வீடு, ரகுவின் இரவு பகல் வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி என அனைத்தும் சேர்ந்து அவர்கள் இடையே இருந்த காதலை மெல்ல மெல்ல அரித்துத் தின்றிருந்தது. ♥இதனால் ரகுவின் விரக்தி, கோபமாக மாறியது. அந்தக் கோபம், சுபாஷினியின் மீதான வன்முறையாக வெடித்தது. ♥"அம்மா, நீங்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லலாம்," என்று மொழிபெயர்ப்பாளர் மென்மையாக ஊக்கப்படுத்தினார். ♥சுபாஷினி தன் மார்பில் சாய்ந்திருந்த குழந்தையை ஒருமுறை குனிந்து பார்த்தாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்த அந்த அமைதி, அவளுக்குள் ஒரு தீப்பொறியை மூட்டியது. தான் அனுபவித்த வலியை தன் மகன் ஒருபோதும் காணக்கூடாது என்ற வைராக்கியம் அவளுக்குள் எழுந்தது. ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டவள், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினாள். ♥அவளது குரல் தழுதழுத்தது, ஆனால் வார்த்தைகள் தெளிவாக வந்தன. "அன்று... ரகு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வாடகை மின்சாரம் கார் கட்டு பணம் லோன்பணம். என பணவிஷயமாகத் தகராறு ஏற்பட்டது. நான்... நான் அவரைத்அமைதிப்படுத்தி தடுத்தபோது..." அவள் விம்மினாள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. ♥நீதிமன்றமே அமைதியானது. ஒரு தமிழ் பெண், தன் கணவனுக்கு எதிராக சாட்சி சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கலாச்சாரத் தடைகள், குடும்ப கௌரவம், சமூகத்தின் பார்வை என அனைத்தையும் உடைத்துக் கொண்டு அவள் அங்கு நின்றாள். ♥மனைவி கூறி முடிக்க கூண்டில் நின்ற ரகு, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவன் கண்களில் கோபம் இல்லை, ஒருவித இயலாமையும், குற்றவுணர்ச்சியும் தெரிந்தது. அவனும் அவளை இன்னும் காதலிக்கிறான் ஆனால் அவனின் கைமீறிய பொருளாதாரம் அவனை மனிதனாக வாழ விடவில்லை. ♥சுபாஷினி தொடர்ந்து பேசினாள். நடந்த வன்முறையை, தான் பட்ட காயங்களை, குழந்தையின் அழுரலைக் கேட்டு தான் துடித்த துடிப்பை விவரித்தாள். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கல்லாக வந்து ரகுவின் மீது விழுவது போலிருந்தது. ♥சாட்சியம் முடிந்து அவள் திரும்பும்போது, அவளது கால்கள் தளர்ந்தன. ஆனால் மனதளவில் அவள் ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வைப் பெற்றாள். இது கணவனைப் பழிவாங்கும் செயல் அல்ல; இது ஒரு தாயாகத் தன் குழந்தையைப் பாதுகாக்கும் போராட்டம். ♥ தன் கணவன் எப்படியும் வாழ்ந்து விடுவான் ஆனால் இந்த பச்சை குழந்தையை நான் இருக்கும் நாட்டில் ஒரு நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டுமானால் இந்த பிரிவு தவிர்க்க முடியாதது என்று அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவளின் இதயத்தில் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் இடம் இருக்கப் போவதில்லை ஆனாலும் இந்த சமூகம் அவளை கணவனை நீதிமன்றத்தில் ஏற்றியவள் கணவனுக்கு எதிராக சாட்சி சொன்னவள் என்று நிச்சயம் அவதூறு பரப்பும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என் குழந்தையைப் பற்றி மட்டும் தான் நான் யோசிக்கிறேன் என்று அவள் மனதுக்குள் கூறிக் கொண்டாள். ♥பிரான்ஸ் நாட்டின் அந்த நீதிமன்றத்தில், ஒரு இலங்கைத் தமிழ் அகதிப் பெண், தன் கண்ணீரால் நீதியை யாசித்துக் கொண்டிருந்தாள் - தனக்காக அல்ல, தன் மடியில் தவழும் அந்த பிஞ்சு உயிரின் எதிர்காலத்திற்காக. ♥ இதை இங்கு ஒரு கற்பனையாக நான் உங்களுக்குத் தந்திருந்தாலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் பல பெண்கள் குடும்பங்களை பிரிந்து கணவனைப் பிரிந்து செல்வதற்கு இப்படியான சம்பவங்களும் காரணமாகிறது செந்தமிழ்ச்செல்வன் உலகத்தமிழ் மங்கையர்மலர்
    0 Commenti ·0 condivisioni ·13K Views ·0 Anteprima
  • 🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம்

    செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம்.
    இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை.

    👉 இது உண்மையில்:

    • இரத்த ஓட்டம் குறைவது
    • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது
    • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது
    • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation)

    இதனால் உருவாகும் ஒரு நிலை.

    ---

    🔍 நாம் வெளியில் பார்க்குவது

    தோலில்:

    • குழிகள்
    • ஆரஞ்சு தோல் போல uneven texture

    ஏன் வருகிறது?

    • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும்
    • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும்
    • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும்

    ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது.

    ---

    🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது?

    • கொழுப்பு செல்கள் பெரிதாகும்
    • லிம்ப் நாளங்கள் அடைபடும்
    • இரத்த நாளங்கள் சுருங்கும்
    • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது

    ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது.

    ---

    💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம்

    லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹

    அது:

    • அதிக நீரை வெளியேற்றும்
    • கழிவுகளை நீக்கும்
    • அழற்சியை குறைக்கும்
    • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்

    ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை.

    அது இயங்க வேண்டுமெனில்:

    • உடல் இயக்கம்
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம் குடித்தல்
    • மன அமைதி

    தேவை.

    ---

    🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்:

    • நீர் தேங்கும்
    • கொழுப்பு செல்கள் வீங்கும்
    • அழற்சி அதிகரிக்கும்
    • தோல் கடினமாகும்

    ➡️ இதுவே செல்லுலைட்.

    ---

    👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்?

    ஏனெனில்:

    • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும்
    • நீண்ட நேரம் உட்கார்வது
    • இப்பகுதியில் கொழுப்பு அதிகம்
    • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம்
    • லிம்ப் பாதை நீளம் அதிகம்

    ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும்.

    ---

    ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை

    நீங்கள்:

    • எடை குறைத்தாலும்
    • தினமும் exercise செய்தாலும்
    • நல்ல உணவு சாப்பிட்டாலும்

    செல்லுலைட் இருக்கலாம்.

    ஏனெனில் இது:

    • திரவ அழுத்தம்
    • தோல் திசு இறுக்கம்
    • லிம்ப் அடைப்பு
    • இரத்த ஓட்டம்
    • உடல் அழற்சி

    இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை.

    ---

    🧠 ஹார்மோன் & மன அழுத்தம்

    அதிக stress & hormone imbalance:

    • தோல் திசுக்களை கடினமாக்கும்
    • லிம்ப் நாளங்களை சுருக்கும்
    • நீர் தேங்க வைக்கும்

    ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை.

    ---

    🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது?

    கிரீம்கள்:

    • தோலை மென்மையாக்கும்
    • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

    ஆனால்:

    • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது
    • உள்ளழற்சியை நீக்காது

    உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான்.

    ---

    🌿 உண்மையான தீர்வு

    உதவி செய்ய வேண்டியது:

    • லிம்ப் drainage
    • உடல் stretching / massage
    • ஆழ்ந்த மூச்சு
    • நீர் அதிகம்
    • அழற்சி குறைக்கும் உணவு
    • மன அமைதி

    இதனால்:

    • நீர் தேக்கம் குறையும்
    • கொழுப்பு மென்மையாகும்
    • தோல் மென்மையாகும்

    ---

    🤍 முடிவு

    செல்லுலைட்:

    ❌ உடல் குறை இல்லை
    ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி

    👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை.
    👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது.

    உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚

    ---

    #CelluliteAwareness
    #LymphaticHealth
    #WomenHealthTamil
    #BodyScience
    #SkinHealth
    #NaturalHealing
    #TamilHealthTips
    #WellnessTamil
    #HormoneHealth
    #HealthyBodyMind
    #NoBodyShaming
    #RealWomenRealBodies
    #InflammationAwareness
    #SelfCareTamil
    #HealthEducation
    🌿 செல்லுலைட் (Cellulite) – எளிய விளக்கம் செல்லுலைட் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றம். இது வெறும் கொழுப்பு அல்லது எடை அதிகம் இருப்பதால் மட்டும் வருவது இல்லை. 👉 இது உண்மையில்: • இரத்த ஓட்டம் குறைவது • லிம்ப் (Lymph) திரவம் தேங்குவது • தோல் கீழ் திசுக்கள் இறுக்கம் அடைவது • உடலுக்குள் உள்ள அழற்சி (inflammation) இதனால் உருவாகும் ஒரு நிலை. --- 🔍 நாம் வெளியில் பார்க்குவது தோலில்: • குழிகள் • ஆரஞ்சு தோல் போல uneven texture ஏன் வருகிறது? • கொழுப்பு செல்கள் மேலே தள்ளும் • இணைப்பு திசுக்கள் (connective tissue) கீழே இழுக்கும் • நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கும் ➡️ இதனால் தோலில் குழிகள் தெரிகிறது. --- 🧬 தோலுக்குள் என்ன நடக்கிறது? • கொழுப்பு செல்கள் பெரிதாகும் • லிம்ப் நாளங்கள் அடைபடும் • இரத்த நாளங்கள் சுருங்கும் • ஆக்ஸிஜன் சரியாக செல்லாது ➡️ இங்குதான் செல்லுலைட் ஆரம்பமாகிறது. --- 💚 லிம்ப் சிஸ்டம் (Lymph system) முக்கியம் லிம்ப் சிஸ்டம் உடலின் குப்பை அகற்றும் அமைப்பு 🧹 அது: • அதிக நீரை வெளியேற்றும் • கழிவுகளை நீக்கும் • அழற்சியை குறைக்கும் • நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் ⚠️ இதற்கு இதயம் போல pump இல்லை. அது இயங்க வேண்டுமெனில்: • உடல் இயக்கம் • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் குடித்தல் • மன அமைதி தேவை. --- 🚫 லிம்ப் ஓட்டம் மந்தமாக இருந்தால்: • நீர் தேங்கும் • கொழுப்பு செல்கள் வீங்கும் • அழற்சி அதிகரிக்கும் • தோல் கடினமாகும் ➡️ இதுவே செல்லுலைட். --- 👗 ஏன் தொடை & இடுப்பில் அதிகம்? ஏனெனில்: • Gravity காரணமாக திரவம் கீழே தேங்கும் • நீண்ட நேரம் உட்கார்வது • இப்பகுதியில் கொழுப்பு அதிகம் • பெண்கள் ஹார்மோன் (estrogen) அதிகம் • லிம்ப் பாதை நீளம் அதிகம் ➡️ அதனால் மெலிந்த பெண்களுக்கும் செல்லுலைட் இருக்கும். --- ⚖️ செல்லுலைட் = எடை பிரச்சனை இல்லை நீங்கள்: • எடை குறைத்தாலும் • தினமும் exercise செய்தாலும் • நல்ல உணவு சாப்பிட்டாலும் செல்லுலைட் இருக்கலாம். ஏனெனில் இது: • திரவ அழுத்தம் • தோல் திசு இறுக்கம் • லிம்ப் அடைப்பு • இரத்த ஓட்டம் • உடல் அழற்சி இவற்றால் வருகிறது – கொழுப்பால் மட்டும் இல்லை. --- 🧠 ஹார்மோன் & மன அழுத்தம் அதிக stress & hormone imbalance: • தோல் திசுக்களை கடினமாக்கும் • லிம்ப் நாளங்களை சுருக்கும் • நீர் தேங்க வைக்கும் ➡️ செல்லுலைட் ஒரு உடல் சிக்னல் – குறை இல்லை. --- 🧴 கிரீம்கள் ஏன் முழுமையாக வேலை செய்யாது? கிரீம்கள்: • தோலை மென்மையாக்கும் • மேல்மட்ட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆனால்: • ஆழமான லிம்ப் அடைப்பை சரி செய்யாது • உள்ளழற்சியை நீக்காது உண்மையான மாற்றம் உள்ளிருந்து தான். --- 🌿 உண்மையான தீர்வு உதவி செய்ய வேண்டியது: • லிம்ப் drainage • உடல் stretching / massage • ஆழ்ந்த மூச்சு • நீர் அதிகம் • அழற்சி குறைக்கும் உணவு • மன அமைதி இதனால்: • நீர் தேக்கம் குறையும் • கொழுப்பு மென்மையாகும் • தோல் மென்மையாகும் --- 🤍 முடிவு செல்லுலைட்: ❌ உடல் குறை இல்லை ✅ உடல் உதவி கேட்கும் ஒரு அறிகுறி 👉 அது ஒரு செய்தி… தவறு இல்லை. 👉 உடல் பழுதில்லை… சுமை அதிகமாகியுள்ளது. உடலை எதிர்க்காமல் கவனித்தால், அது நிச்சயம் நல்ல பதில் தரும் 💚 --- #CelluliteAwareness #LymphaticHealth #WomenHealthTamil #BodyScience #SkinHealth #NaturalHealing #TamilHealthTips #WellnessTamil #HormoneHealth #HealthyBodyMind #NoBodyShaming #RealWomenRealBodies #InflammationAwareness #SelfCareTamil #HealthEducation
    0 Commenti ·0 condivisioni ·12K Views ·0 Anteprima
  • குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கு ஒரு அற்புதமான இயற்கை 'ஆன்டி-வைரஸ்' தீர்வு! ✨🛡️

    ​தேவையான பொருட்கள்

    ​🧅 பெரிய வெங்காயம் - 1 (தோல் நீக்கியது)
    📌 கிராம்பு - 5 முதல் 10 வரை

    ​எளிமையான செய்முறை & பயன்கள்

    ​🌿 தயாரிப்பு: ஒரு பெரிய வெங்காயத்தின் தோலை நீக்கி, அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் கிராம்புகளை அழகாகச் சொருகி வையுங்கள்.

    ​🌙 பயன்படுத்தும் முறை: உங்கள் செல்லக் குழந்தை உறங்கும் இடத்திற்கு அருகே (குழந்தைக்கு எட்டாத உயரத்தில்) ஒரு தட்டில் வைத்துவிடவும்.

    ​🌬️ இயற்கை சுத்திகரிப்பு: வெங்காயத்தின் 'சல்பர்' மற்றும் கிராம்பின் மருத்துவக் குணங்கள் காற்றில் பரவி, ஒரு இயற்கை ஏர்-பியூரிஃபையர் போலச் செயல்படும்.

    ​🩺 சுவாச மேன்மை: இது சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைச் சீராக்கி, தொந்தரவில்லாத சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும்.

    ​🦠 வைரஸ் எதிர்ப்பு: காற்றில் பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த மணத்திற்கு உண்டு.

    ​😴 ஆழ்ந்த உறக்கம்: சளி மற்றும் மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகள் இரவு முழுவதும் எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியாக உறங்க இது பெரிதும் உதவும்.

    ​#ColdRemedy #NaturalHealing #KidsHealth #HomeRemedies #OnionCloveRemedy #CoughRelief #HealthyKids #Ayurveda #ParentingTips #Immunity
    #FluRemedy #HolisticHealth #NaturalCure #Wellness #HealthTips #BabyCare #ViralRemedy #OrganicLiving #HealthyHome #TraditionalMedicine
    #SafeRemedy
    குழந்தைகளின் சளி மற்றும் இருமலுக்கு ஒரு அற்புதமான இயற்கை 'ஆன்டி-வைரஸ்' தீர்வு! ✨🛡️ ​தேவையான பொருட்கள் ​🧅 பெரிய வெங்காயம் - 1 (தோல் நீக்கியது) 📌 கிராம்பு - 5 முதல் 10 வரை ​எளிமையான செய்முறை & பயன்கள் ​🌿 தயாரிப்பு: ஒரு பெரிய வெங்காயத்தின் தோலை நீக்கி, அதை இரண்டாக நறுக்கி அதன் மேல் கிராம்புகளை அழகாகச் சொருகி வையுங்கள். ​🌙 பயன்படுத்தும் முறை: உங்கள் செல்லக் குழந்தை உறங்கும் இடத்திற்கு அருகே (குழந்தைக்கு எட்டாத உயரத்தில்) ஒரு தட்டில் வைத்துவிடவும். ​🌬️ இயற்கை சுத்திகரிப்பு: வெங்காயத்தின் 'சல்பர்' மற்றும் கிராம்பின் மருத்துவக் குணங்கள் காற்றில் பரவி, ஒரு இயற்கை ஏர்-பியூரிஃபையர் போலச் செயல்படும். ​🩺 சுவாச மேன்மை: இது சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைச் சீராக்கி, தொந்தரவில்லாத சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கும். ​🦠 வைரஸ் எதிர்ப்பு: காற்றில் பரவியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த மணத்திற்கு உண்டு. ​😴 ஆழ்ந்த உறக்கம்: சளி மற்றும் மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகள் இரவு முழுவதும் எவ்வித இடையூறும் இன்றி நிம்மதியாக உறங்க இது பெரிதும் உதவும். ​#ColdRemedy #NaturalHealing #KidsHealth #HomeRemedies #OnionCloveRemedy #CoughRelief #HealthyKids #Ayurveda #ParentingTips #Immunity #FluRemedy #HolisticHealth #NaturalCure #Wellness #HealthTips #BabyCare #ViralRemedy #OrganicLiving #HealthyHome #TraditionalMedicine #SafeRemedy
    0 Commenti ·0 condivisioni ·12K Views ·0 Anteprima
  • ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்?

    அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

    ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது.
    எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு.

    இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார்.

    ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது.

    ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

    மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார்.

    AV KrishnaRao
    ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்? அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது. எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு. இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார். ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது. ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார். AV KrishnaRao
    0 Commenti ·0 condivisioni ·11K Views ·0 Anteprima
  • களைப்போடு வந்த அப்பா
    கடப்பினிலே சாத்தி வைக்கக்
    களவாடிச் சென்று நாமும்
    கலை பயின்ற நினைவிருக்கா?

    முக்கோணக் கம்பியது
    முழங்காலைப் பதம் பார்க்க
    அப்போதும் நிறுத்தாமல்
    அயராது பழகினோமே!!

    அப்பாவின் ஈருருளி
    அழகான முதல் பயிற்சி
    தப்பியவர் யாருமுண்டோ?
    தழும்புகள் ஏதுமின்றி

    ஒற்றைக்கால் மிதியில் வைத்து
    மற்றக்கால் மண்ணிலூன்றி
    தத்தித் தத்தி உருட்டியபின்
    சற்றுக் கொஞ்சம் தேர்ச்சி பெற்று

    உயரமான இடத்திற்கு
    உருட்டியே கொண்டு சேர்த்து
    ஒற்றைக் கால் உதவியோடு
    ஒரே தாவில் ஏறிக் குந்தி

    உயரமான இடமிருந்து
    உருண்டோடி வரும்போது
    உலகத்தையே வெல்வது போல்
    உள்ளுக்குள்ள ஓர் நினைப்பு

    வழமைபோல் நானும் ஓர்நாள்
    வருகின்றேன் தேரிலேறி
    எட்டாத காலிரண்டை
    இரு புறமும் தொங்கவிட்டு

    கடவுளே முருகா அன்று
    காலமே சரியில்லை போல்
    குருட்டு நாய் ஒன்று மெல்லக்
    குறுக்கறுத்து வந்திடவே

    பயத்திலே கண்ணிரண்டும்
    பம்பரமாய்ச் சுழன்றபடி
    நிறுத்தவும் முடியாமல்
    நிலை தவறி மோதுகின்றேன்

    வீரென்று ஓலமிட்டு
    வீட்டு நாய் அலறியோட
    அடுப்படி வேலைகளை
    அரைகுறையாய்ப் போட்டபடி
    அடிப்பதற்குத் தேடுகின்றாள்
    அன்பான எனது அம்மா

    மரத்தால விழுந்தவனை
    மாடு வந்து முட்டுவதா
    எடுத்தேன் பார் ஓட்டம் நான்
    எதிர் வீட்டு வேலி தாண்டி

    அழகான நினைவு தந்த
    அப்பாவின் மிதிவண்டி
    ஆயிரம் முறை விழுந்தும்
    அலுக்காத மிதிவண்டி

    நாகரிக வளர்ச்சியினால்
    நாதியற்றுப் போயிரிச்சி
    பின்புறச் சுவரினிலே
    பெருமூச்சு விட்டபடி
    பழகிடத்தான் யாருமின்றி
    பயனற்றுக் கிடக்கிறது
    களைப்போடு வந்த அப்பா கடப்பினிலே சாத்தி வைக்கக் களவாடிச் சென்று நாமும் கலை பயின்ற நினைவிருக்கா? முக்கோணக் கம்பியது முழங்காலைப் பதம் பார்க்க அப்போதும் நிறுத்தாமல் அயராது பழகினோமே!! அப்பாவின் ஈருருளி அழகான முதல் பயிற்சி தப்பியவர் யாருமுண்டோ? தழும்புகள் ஏதுமின்றி ஒற்றைக்கால் மிதியில் வைத்து மற்றக்கால் மண்ணிலூன்றி தத்தித் தத்தி உருட்டியபின் சற்றுக் கொஞ்சம் தேர்ச்சி பெற்று உயரமான இடத்திற்கு உருட்டியே கொண்டு சேர்த்து ஒற்றைக் கால் உதவியோடு ஒரே தாவில் ஏறிக் குந்தி உயரமான இடமிருந்து உருண்டோடி வரும்போது உலகத்தையே வெல்வது போல் உள்ளுக்குள்ள ஓர் நினைப்பு வழமைபோல் நானும் ஓர்நாள் வருகின்றேன் தேரிலேறி எட்டாத காலிரண்டை இரு புறமும் தொங்கவிட்டு கடவுளே முருகா அன்று காலமே சரியில்லை போல் குருட்டு நாய் ஒன்று மெல்லக் குறுக்கறுத்து வந்திடவே பயத்திலே கண்ணிரண்டும் பம்பரமாய்ச் சுழன்றபடி நிறுத்தவும் முடியாமல் நிலை தவறி மோதுகின்றேன் வீரென்று ஓலமிட்டு வீட்டு நாய் அலறியோட அடுப்படி வேலைகளை அரைகுறையாய்ப் போட்டபடி அடிப்பதற்குத் தேடுகின்றாள் அன்பான எனது அம்மா மரத்தால விழுந்தவனை மாடு வந்து முட்டுவதா எடுத்தேன் பார் ஓட்டம் நான் எதிர் வீட்டு வேலி தாண்டி அழகான நினைவு தந்த அப்பாவின் மிதிவண்டி ஆயிரம் முறை விழுந்தும் அலுக்காத மிதிவண்டி நாகரிக வளர்ச்சியினால் நாதியற்றுப் போயிரிச்சி பின்புறச் சுவரினிலே பெருமூச்சு விட்டபடி பழகிடத்தான் யாருமின்றி பயனற்றுக் கிடக்கிறது
    0 Commenti ·0 condivisioni ·5K Views ·0 Anteprima
  • 🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்)

    கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய்.
    பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும்.

    👉 முக்கிய சிக்கல் என்னவென்றால்
    ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
    அல்லது
    👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம்.

    அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.

    ---

    🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி)

    👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
    👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை

    👉 சில நாட்கள் மலச்சிக்கல்
    👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு
    ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம்

    ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை
    ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து

    ---

    🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல்

    👉 மெல்லிய / பென்சில் போல மலம்
    ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும்

    👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல்
    ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை

    ---

    🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி)

    👉 பிரகாசமான சிவப்பு ரத்தம்

    டாய்லெட் பேப்பரில்

    மலத்தின் மீது

    கமோட்டில்

    👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள்
    ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம்

    👉 கருப்பு / அடர் நிற மலம்
    ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம்

    👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு
    ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia)
    ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை

    ---

    🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம்

    👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு
    👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி

    👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு
    👉 அதிக வாயு, உப்புசம்

    ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்

    ---

    🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு

    👉 டாய்லெட் சென்ற பிறகும்
    👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு

    👉 குறிப்பாக மலத்துடன்

    ரத்தம்

    சளி (mucus)
    இருந்தால் முக்கிய அறிகுறி

    ---

    🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல்

    👉 டயட் இல்லாமல் எடை குறைதல்
    👉 சாப்பிட விருப்பம் குறைதல்
    👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு

    ---

    🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம்

    👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது
    👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல்
    👉 தலைசுற்றல், வெளிறிய தோல்

    ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும்

    ---

    🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை)

    👉 ஆண்கள்
    👉 மெனோபாஸ் கடந்த பெண்கள்

    ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால்
    ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    ---

    🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள்

    👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம்
    👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை

    🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்

    ---

    🟣 10) மலத்தில் சளி (Mucus)

    👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால்
    👉 அதோடு ரத்தம், வலி இருந்தால்
    ⚠️ பரிசோதனை அவசியம்

    ---

    🟣 யாருக்கு ஆபத்து அதிகம்?

    👉 வயது 45க்கு மேல்
    👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு
    👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள்
    👉 நீண்ட கால குடல் அழற்சி நோய்
    👉 அதிக உடல் எடை
    👉 புகை, மது
    👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு

    ---

    🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம்

    👉 மீண்டும் மீண்டும் ரத்தம்
    👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல்
    👉 வயிற்று வலி + எடை குறைதல்
    👉 காரணமில்லாத அனீமியா
    👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள்

    ---

    ⭐ முக்கிய செய்தி

    👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில்
    சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம்

    👉 ஆனால்
    மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா
    🚩 மிக முக்கிய எச்சரிக்கை

    👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்

    ---

    ⚠️ மருத்துவ அறிவிப்பு
    இந்த தகவல் கல்விக்காக மட்டுமே.
    ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால்
    👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்) கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய். பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும். 👉 முக்கிய சிக்கல் என்னவென்றால் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். அல்லது 👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம். அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். --- 🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி) 👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு 👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை 👉 சில நாட்கள் மலச்சிக்கல் 👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம் ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து --- 🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல் 👉 மெல்லிய / பென்சில் போல மலம் ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும் 👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல் ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை --- 🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி) 👉 பிரகாசமான சிவப்பு ரத்தம் டாய்லெட் பேப்பரில் மலத்தின் மீது கமோட்டில் 👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள் ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம் 👉 கருப்பு / அடர் நிற மலம் ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம் 👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia) ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை --- 🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம் 👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு 👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி 👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு 👉 அதிக வாயு, உப்புசம் ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும் --- 🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு 👉 டாய்லெட் சென்ற பிறகும் 👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு 👉 குறிப்பாக மலத்துடன் ரத்தம் சளி (mucus) இருந்தால் முக்கிய அறிகுறி --- 🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல் 👉 டயட் இல்லாமல் எடை குறைதல் 👉 சாப்பிட விருப்பம் குறைதல் 👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு --- 🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம் 👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது 👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல் 👉 தலைசுற்றல், வெளிறிய தோல் ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும் --- 🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை) 👉 ஆண்கள் 👉 மெனோபாஸ் கடந்த பெண்கள் ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால் ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் --- 🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள் 👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம் 👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை 🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் --- 🟣 10) மலத்தில் சளி (Mucus) 👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால் 👉 அதோடு ரத்தம், வலி இருந்தால் ⚠️ பரிசோதனை அவசியம் --- 🟣 யாருக்கு ஆபத்து அதிகம்? 👉 வயது 45க்கு மேல் 👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு 👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள் 👉 நீண்ட கால குடல் அழற்சி நோய் 👉 அதிக உடல் எடை 👉 புகை, மது 👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு --- 🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் 👉 மீண்டும் மீண்டும் ரத்தம் 👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல் 👉 வயிற்று வலி + எடை குறைதல் 👉 காரணமில்லாத அனீமியா 👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள் --- ⭐ முக்கிய செய்தி 👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில் சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம் 👉 ஆனால் மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா 🚩 மிக முக்கிய எச்சரிக்கை 👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் --- ⚠️ மருத்துவ அறிவிப்பு இந்த தகவல் கல்விக்காக மட்டுமே. ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால் 👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    0 Commenti ·0 condivisioni ·5K Views ·0 Anteprima
  • பின்னோக்கிப் பாயும் நதியை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
    சீனாவின் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் கடலில் இருந்து நீர் பின்னோக்கிப் பாய்கிறது. இதனை 'டைடல் போர்' என்றும் 'வெள்ளி டிராகன்' என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். சீனாவில் இயற்கை தனது விசித்திரமான வடிவங்களை வெளிப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றாக கியான்டாங் ஆறு திகழ்கிறது.

    பொதுவாக, ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளி வழியாக கடலை நோக்கி ஓடுவது இயல்பு. ஆனால், சீனாவில் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் அதும் இந்த சில குறிப்பிட்ட காலங்களில் இயல்புக்கு முற்றிலும் மாறாக கடலிலிருந்து ஆற்றின் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இது அறிவியல் ரீதியாகவும், கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை அதிசயமாகவும் கருதப்படுகிறது.

    கடலில் உருவாகும் சக்தி வாய்ந்த அலைகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து மேல்நோக்கி பாயும்போது உருவாகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு எல்லா ஆறுகளிலும் நடப்பதில்லை. இதன் அமைப்பு காரணமாக கடலில் வரும் அலைகள் சுருங்கி ஒரே திசையில் திரண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. இதற்கு சில குறிப்பிட்ட புவியியல் அமைப்புகள் தேவை. கியான்டாங் ஆறு ஆழம் குறைவாக இருப்பதும், அது கடலில் கலக்கும் பகுதி குறுகலாக இருப்பதும் மேலும் இந்தப் பகுதி புனல் வடிவத்தில் அமைந்திருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன.

    இந்த நேரத்தில் உருவாகும் அலைகள் சாதாரணமானவை அல்ல. சில சமயம் அவை 80 அடி உயரம் வரை எழும்பக் கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். இந்த நீரலைகள் ஆற்றின் கரையோரத்தில் நிற்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. அலை வருவதற்கு முன்பு இடியென முழங்கும் ஒலி பல கிலோ மீட்டர் தூரத்திவிருந்தே கேட்கப்படும். அந்த ஒலி கேட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அலைகள் வரும் திசை நோக்கி கவனத்தை திரும்புவார்கள். அலைகள் கடந்த பின்னரும் நீர் மட்டம் நீண்ட நேரம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என்பது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும்.

    இந்த பிரம்மாண்ட அலைகளை வெள்ளி டிராகன் என்று அழைப்பதற்குக் காரணம், நீர் வெள்ளி நிறத்தில் மின்னி டிராகன் போல் சுழன்று பாயும் தோற்றம் காரணமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஏற்படும் என்றாலும் இலையுதிர் காலத்தில் இது வலிமையாகவும் அழகாகவும் காணப்படும். குறிப்பாக, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் அலைகளின் சக்தி அதிகரித்து இந்த பின்னோக்கிப் பாயும் நீரோட்டம் உச்சத்தை அடைகிறது.

    சீனாவின் இந்த நிகழ்வு சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த காட்சியைக் காண ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வருகிறார்கள். இயற்கையின் சக்தியும் அதன் வியப்பையும் நேரில் காண விரும்புவோர் கியான்டாங் ஆற்றின் பின்னோக்கிப் பாயும் நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து வருகிறது.

    இந்திரா கோபாலன்

    படித்ததை பகிர்கிறேன்
    பகிர்வு

    பின்னோக்கிப் பாயும் நதியை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? சீனாவின் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் கடலில் இருந்து நீர் பின்னோக்கிப் பாய்கிறது. இதனை 'டைடல் போர்' என்றும் 'வெள்ளி டிராகன்' என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். சீனாவில் இயற்கை தனது விசித்திரமான வடிவங்களை வெளிப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் உலக அளவில் கவனம் பெற்ற ஒன்றாக கியான்டாங் ஆறு திகழ்கிறது. பொதுவாக, ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்து சமவெளி வழியாக கடலை நோக்கி ஓடுவது இயல்பு. ஆனால், சீனாவில் ஹாங்சோ நகரை ஒட்டியுள்ள கியான்டாங் ஆற்றில் அதும் இந்த சில குறிப்பிட்ட காலங்களில் இயல்புக்கு முற்றிலும் மாறாக கடலிலிருந்து ஆற்றின் நீர் பின்னோக்கிப் பாயும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. இது அறிவியல் ரீதியாகவும், கூட மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு இயற்கை அதிசயமாகவும் கருதப்படுகிறது. கடலில் உருவாகும் சக்தி வாய்ந்த அலைகள் ஆற்றின் இயல்பான ஓட்டத்தை எதிர்த்து மேல்நோக்கி பாயும்போது உருவாகிறது. இந்த குறிப்பிட்ட நிகழ்வு எல்லா ஆறுகளிலும் நடப்பதில்லை. இதன் அமைப்பு காரணமாக கடலில் வரும் அலைகள் சுருங்கி ஒரே திசையில் திரண்டு மிகுந்த வேகத்துடன் ஆற்றுக்குள் நுழைகிறது. இதற்கு சில குறிப்பிட்ட புவியியல் அமைப்புகள் தேவை. கியான்டாங் ஆறு ஆழம் குறைவாக இருப்பதும், அது கடலில் கலக்கும் பகுதி குறுகலாக இருப்பதும் மேலும் இந்தப் பகுதி புனல் வடிவத்தில் அமைந்திருப்பதும் முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நேரத்தில் உருவாகும் அலைகள் சாதாரணமானவை அல்ல. சில சமயம் அவை 80 அடி உயரம் வரை எழும்பக் கூடும். மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும். இந்த நீரலைகள் ஆற்றின் கரையோரத்தில் நிற்பவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சியையும் பரவசத்தையும் அளிக்கின்றன. அலை வருவதற்கு முன்பு இடியென முழங்கும் ஒலி பல கிலோ மீட்டர் தூரத்திவிருந்தே கேட்கப்படும். அந்த ஒலி கேட்டதும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அலைகள் வரும் திசை நோக்கி கவனத்தை திரும்புவார்கள். அலைகள் கடந்த பின்னரும் நீர் மட்டம் நீண்ட நேரம் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கும் என்பது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும். இந்த பிரம்மாண்ட அலைகளை வெள்ளி டிராகன் என்று அழைப்பதற்குக் காரணம், நீர் வெள்ளி நிறத்தில் மின்னி டிராகன் போல் சுழன்று பாயும் தோற்றம் காரணமாக இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் ஏற்படும் என்றாலும் இலையுதிர் காலத்தில் இது வலிமையாகவும் அழகாகவும் காணப்படும். குறிப்பாக, சந்திரன் மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது கடல் அலைகளின் சக்தி அதிகரித்து இந்த பின்னோக்கிப் பாயும் நீரோட்டம் உச்சத்தை அடைகிறது. சீனாவின் இந்த நிகழ்வு சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த காட்சியைக் காண ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பயணிகள் வருகிறார்கள். இயற்கையின் சக்தியும் அதன் வியப்பையும் நேரில் காண விரும்புவோர் கியான்டாங் ஆற்றின் பின்னோக்கிப் பாயும் நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து வருகிறது. இந்திரா கோபாலன் படித்ததை பகிர்கிறேன் பகிர்வு
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • அப்பா… ஏன் எப்போதும் பின்னால்?

    (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து)

    1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்…
    அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்…
    இருவரும் சமம்.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் எப்போதும் பின்னால்?

    2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்…
    அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்…
    இருவருமே சம உழைப்பு.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்தங்குகிறார்?

    3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்…
    அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்…
    அன்பு இருவரிடமும் சமம்.
    ஆனால் ஏன்
    தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது?

    4️⃣ போனில் பேசினால்
    முதலில் “அம்மா”…
    கஷ்டம் வந்தால்
    அழைக்கும் முதல் குரல் “அம்மா”…

    உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும்
    நீங்கள் நினைப்பது “அப்பா”…
    ஆனால் அவர் ஒருபோதும்
    உங்களை நினைக்கவில்லையா என்று
    வருத்தப்பட்டதே இல்லை.
    அப்படியிருக்க,
    தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்?

    5️⃣ அலமாரியில்
    அம்மாவின் கலர்புல் புடவைகள்…
    குழந்தைகளின் நிறைய உடைகள்…
    ஆனால்
    அப்பாவின் உடைகள் மிகக் குறைவு.

    அவர் தன் தேவையை
    ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை.
    அப்படியிருக்க,
    அப்பா ஏன் பின்னால்?

    6️⃣ அம்மாவுக்கு
    நிறைய தங்க நகைகள்…
    அப்பாவுக்கு
    திருமணத்தில் போட்ட
    ஒரே ஒரு மோதிரம்.

    அம்மா குறைவைக் குறித்து
    சில நேரம் சொல்வார்…
    அப்பா?
    ஒருபோதும் இல்லை.

    7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக
    அப்பா
    தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்…
    ஆனால்
    அங்கீகாரம் என்ற இடத்தில்
    அவர் ஏன் எப்போதும்
    பின்தள்ளப்படுகிறார்?

    8️⃣ “இந்த மாதம்
    காலேஜ் கட்டணம்…”
    “பண்டிகைக்கு
    புது உடை வாங்கித் தருங்கள்…”

    அம்மா சொல்வார்…
    அப்பா கேட்பார்…
    ஆனால்
    அப்பா தன் உடையைப் பற்றி
    ஒருபோதும் யோசிப்பதில்லை.

    9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்…
    சில குழந்தைகள் சொல்வார்கள்:
    “அம்மா வீட்டு வேலைகளுக்கு
    இன்னும் பயன்படுவார்…”
    “அப்பா என்ன செய்ய முடியும்?”

    இந்த கேள்வி
    எத்தனை தந்தைகளின்
    மனதை உடைத்திருக்கும்…

    🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு.
    முதுகெலும்பு எங்கே இருக்கிறது?
    👉 நம் உடலின் பின்னால்.

    அதை நாம்
    தினமும் பார்க்க மாட்டோம்…
    ஆனால்
    அது இல்லையென்றால்
    நாம் நின்றுகூட இருக்க முடியாது.

    👉 ஒருவேளை…
    👉 இதனால்தான்
    👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ…



    அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️

    இன்று ஒருமுறை
    👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்…
    👉 பேசுங்கள்…
    👉 நன்றி சொல்லுங்கள்…

    அவர் கேட்க மாட்டார்.
    ஆனால்
    அவரின் கண்கள் பேசும்.
    அப்பா… ஏன் எப்போதும் பின்னால்? (யார் எழுதியது என்று தெரியவில்லை… ஆனால் இதயம் நிறைந்த எழுத்து) 1️⃣ அம்மா 9 மாதம் சுமக்கிறார்… அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார்… இருவரும் சமம். அப்படியிருக்க, அப்பா ஏன் எப்போதும் பின்னால்? 2️⃣ அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பத்தை நடத்துகிறார்… அப்பா தன் சம்பளமெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார்… இருவருமே சம உழைப்பு. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்தங்குகிறார்? 3️⃣ அம்மா உனக்கு பிடித்ததை சமைப்பார்… அப்பா உனக்கு பிடித்ததை வாங்கித் தருவார்… அன்பு இருவரிடமும் சமம். ஆனால் ஏன் தாயின் அன்பு மட்டும் உயர்த்திக் காட்டப்படுகிறது? 4️⃣ போனில் பேசினால் முதலில் “அம்மா”… கஷ்டம் வந்தால் அழைக்கும் முதல் குரல் “அம்மா”… உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் நீங்கள் நினைப்பது “அப்பா”… ஆனால் அவர் ஒருபோதும் உங்களை நினைக்கவில்லையா என்று வருத்தப்பட்டதே இல்லை. அப்படியிருக்க, தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள்? 5️⃣ அலமாரியில் அம்மாவின் கலர்புல் புடவைகள்… குழந்தைகளின் நிறைய உடைகள்… ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு. அவர் தன் தேவையை ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை. அப்படியிருக்க, அப்பா ஏன் பின்னால்? 6️⃣ அம்மாவுக்கு நிறைய தங்க நகைகள்… அப்பாவுக்கு திருமணத்தில் போட்ட ஒரே ஒரு மோதிரம். அம்மா குறைவைக் குறித்து சில நேரம் சொல்வார்… அப்பா? ஒருபோதும் இல்லை. 7️⃣ குடும்பத்தின் நிம்மதிக்காக அப்பா தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கிறார்… ஆனால் அங்கீகாரம் என்ற இடத்தில் அவர் ஏன் எப்போதும் பின்தள்ளப்படுகிறார்? 8️⃣ “இந்த மாதம் காலேஜ் கட்டணம்…” “பண்டிகைக்கு புது உடை வாங்கித் தருங்கள்…” அம்மா சொல்வார்… அப்பா கேட்பார்… ஆனால் அப்பா தன் உடையைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. 9️⃣ பெற்றோர் வயதாகிவிட்டால்… சில குழந்தைகள் சொல்வார்கள்: “அம்மா வீட்டு வேலைகளுக்கு இன்னும் பயன்படுவார்…” “அப்பா என்ன செய்ய முடியும்?” இந்த கேள்வி எத்தனை தந்தைகளின் மனதை உடைத்திருக்கும்… 🔟 அப்பா குடும்பத்தின் முதுகெலும்பு. முதுகெலும்பு எங்கே இருக்கிறது? 👉 நம் உடலின் பின்னால். அதை நாம் தினமும் பார்க்க மாட்டோம்… ஆனால் அது இல்லையென்றால் நாம் நின்றுகூட இருக்க முடியாது. 👉 ஒருவேளை… 👉 இதனால்தான் 👉 அப்பா எப்போதும் பின்னால் நிற்கிறாரோ… ⸻ அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பணம் ❤️ இன்று ஒருமுறை 👉 உங்கள் அப்பாவை நினையுங்கள்… 👉 பேசுங்கள்… 👉 நன்றி சொல்லுங்கள்… அவர் கேட்க மாட்டார். ஆனால் அவரின் கண்கள் பேசும்.
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!

    ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.

    எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது

    எத்தனை கறி செய்வது?

    பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா?
    யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது?

    கவலைக்குரிய விடயம் என்னவெனில்:-

    இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள்.

    அடுத்த பிரச்சினை:-

    ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள்.

    ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும்.

    பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.

    ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது.

    மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.

    வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்...

    ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

    ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்.

    ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

    இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.....

    சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..! ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள். எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது எத்தனை கறி செய்வது? பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா? யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது? கவலைக்குரிய விடயம் என்னவெனில்:- இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள். அடுத்த பிரச்சினை:- ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள். ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும். பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது. மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம். வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்... ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும். ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும். இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது..... சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் .
    ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ...
    அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ...

    உழைப்பே உயர்வு தரும் ...
    கல்வியே சிறந்த செல்வம் ...
    நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ...

    இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை,

    தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் ,
    அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் ,
    நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ...

    இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான்.

    இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் .

    இது பொறாமை இல்லை . ஆதங்கம் ...

    "Stop making stupid people famous"

    #Stop_making_stupid_people_famous
    எத்தனையோ மனநிலையில் இருப்போம், ஏதோ கொஞ்ச நேரம் இளைப்பார நினைத்து தான் சோஷியல் மீடியா பக்கம் வருகிறோம் . ஆனால் இது வெறும் ஹாஹா 😂 ஸ்மைலி போட்டு விட்டு கடந்து செல்லும் பதிவு அல்ல ... அவரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ... உழைப்பே உயர்வு தரும் ... கல்வியே சிறந்த செல்வம் ... நேர்மையும் உண்மையும் தான் தலை சிறந்த சொத்து ... இப்படி சொல்லி வளர்க்கப்பட்டு , அதன்படியே வளர்த்து நின்று வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நாமிருக்கும் நிலைமை, தப்பாக தான் கமெண்ட் அடிப்பார்கள் என தெரிந்தும் இரட்டை அர்த்தம் பொதிந்த போஸ்ட் போடுபவர்கள் , அறை குறை ஆடையோடு ரீல்ஸ் போடுபவர்கள் , நேற்று பிறந்த குழந்தை, நாளைக்கு சாக தயாராக இருக்கும் பாட்டி என குடும்பத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் , திருமணம் செய்வதே மனைவியை வைத்து வீடியோ போடத்தான் என்பது போல் மனைவியை வைத்து வீடியோ போடுபவர்கள் , இவர்கள் தான் இன்று செலிபிரிட்டி ... இவர்களை இவ்வளவு வளர்த்து விடுவது நாம் தான். இவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, அதீத வளர்ச்சி இதையெல்லாம் பார்க்கும் போது என சொல்ல வரும்போதே உனக்கு பொறாமை ன்னு ஒரு நக்கல் கேள்வி வரும் . இது பொறாமை இல்லை . ஆதங்கம் ... "Stop making stupid people famous" #Stop_making_stupid_people_famous
    0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
  • அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ஒரு தன்னாட்சி கடல் ரோபோ
    எதிர்பாராத விதத்தில், விஞ்ஞான உலகையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பை செய்து விட்டது.

    ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், Antarcticaவில் உள்ள Totten Glacier அருகே கடல் நீரின் இயக்கங்களை ஆய்வு செய்ய இந்த ரோபோவை அனுப்பினர்.
    ஆனால் இயற்கையின் சக்தி வேறு திட்டம் போட்டது.

    கடல் ஓட்டங்களில் சிக்கிய அந்த ரோபோ, திட்டமிட்ட இடத்தை விட்டு விலகி, இதுவரை மனிதர்கள் நேரடியாக ஆய்வு செய்யாத Denman Glacier-ன் அடியில் சென்று சிக்கிக் கொண்டது.

    ---

    ❄️ பனியின் அடியில்… பல மாதங்கள்

    தடித்த பனிக்கட்டின் கீழ்,
    ஒளியே இல்லாத சூழலில்,
    பல மாதங்கள் அந்த ரோபோ செயல்பட்டு வந்தது.

    அது நகரும் போது, பனிப்பாறையின் அடிப்பகுதியை மீண்டும் மீண்டும் தொட்டு சென்றது.
    இதன் மூலம், Denman Glacier-ன் பனி தடிமனை
    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமாக வரைபடம் தயாரிக்க முடிந்தது.

    ---

    🌊 மறைந்திருந்த அபாயம் வெளிச்சத்திற்கு

    ரோபோவில் உள்ள கருவிகள்,
    Denman Glacier-ன் அடிப்பகுதியில்
    சாதாரணத்தை விட வெப்பமான கடல் நீர்
    ஓடிக்கொண்டிருப்பதை கண்டறிந்தன.

    இந்த வெப்பமான நீர்,
    பனிப்பாறையை கீழ்புறத்திலிருந்து வேகமாக உருக்கி,
    மிகப் பெரிய பனி களஞ்சியத்தில்
    மறைந்திருந்த நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

    ---

    🌍 உலகிற்கு என்ன அர்த்தம்?

    Denman Glacier போன்ற பெரும் பனிப்பாறைகள்
    நிலைத்தன்மையை இழந்தால்,

    • கடல் மட்டம் உயர்வது வேகமாகும்
    • கடலோர நகரங்களுக்கு அபாயம் அதிகரிக்கும்
    • காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாகும்

    என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கையாக சொல்கிறது.

    ---

    🔬 விபத்தாக தொடங்கி… வரலாற்று கண்டுபிடிப்பு

    ஒரு தவறான பாதை,
    ஒரு எதிர்பாராத சிக்கல்,
    ஆனால் அதுவே
    மனிதகுலத்திற்கு மிக முக்கியமான அறிவை அளித்துள்ளது.

    அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் வெப்பம்,
    நாம் நினைப்பதை விட
    உலகின் எதிர்காலத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

    இந்த தகவல் முக்கியம் என்று நினைத்தால்,
    மற்றவர்களும் அறிய பகிருங்கள்.

    #antarctica #climatescience #sealevelrise #oceanresearch #earthchanges #fblifestyle
    அண்டார்டிகாவில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ஒரு தன்னாட்சி கடல் ரோபோ எதிர்பாராத விதத்தில், விஞ்ஞான உலகையே அதிர வைத்த ஒரு கண்டுபிடிப்பை செய்து விட்டது. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், Antarcticaவில் உள்ள Totten Glacier அருகே கடல் நீரின் இயக்கங்களை ஆய்வு செய்ய இந்த ரோபோவை அனுப்பினர். ஆனால் இயற்கையின் சக்தி வேறு திட்டம் போட்டது. கடல் ஓட்டங்களில் சிக்கிய அந்த ரோபோ, திட்டமிட்ட இடத்தை விட்டு விலகி, இதுவரை மனிதர்கள் நேரடியாக ஆய்வு செய்யாத Denman Glacier-ன் அடியில் சென்று சிக்கிக் கொண்டது. --- ❄️ பனியின் அடியில்… பல மாதங்கள் தடித்த பனிக்கட்டின் கீழ், ஒளியே இல்லாத சூழலில், பல மாதங்கள் அந்த ரோபோ செயல்பட்டு வந்தது. அது நகரும் போது, பனிப்பாறையின் அடிப்பகுதியை மீண்டும் மீண்டும் தொட்டு சென்றது. இதன் மூலம், Denman Glacier-ன் பனி தடிமனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துல்லியமாக வரைபடம் தயாரிக்க முடிந்தது. --- 🌊 மறைந்திருந்த அபாயம் வெளிச்சத்திற்கு ரோபோவில் உள்ள கருவிகள், Denman Glacier-ன் அடிப்பகுதியில் சாதாரணத்தை விட வெப்பமான கடல் நீர் ஓடிக்கொண்டிருப்பதை கண்டறிந்தன. இந்த வெப்பமான நீர், பனிப்பாறையை கீழ்புறத்திலிருந்து வேகமாக உருக்கி, மிகப் பெரிய பனி களஞ்சியத்தில் மறைந்திருந்த நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. --- 🌍 உலகிற்கு என்ன அர்த்தம்? Denman Glacier போன்ற பெரும் பனிப்பாறைகள் நிலைத்தன்மையை இழந்தால், • கடல் மட்டம் உயர்வது வேகமாகும் • கடலோர நகரங்களுக்கு அபாயம் அதிகரிக்கும் • காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமாகும் என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கையாக சொல்கிறது. --- 🔬 விபத்தாக தொடங்கி… வரலாற்று கண்டுபிடிப்பு ஒரு தவறான பாதை, ஒரு எதிர்பாராத சிக்கல், ஆனால் அதுவே மனிதகுலத்திற்கு மிக முக்கியமான அறிவை அளித்துள்ளது. அண்டார்டிகாவில் மறைந்திருக்கும் வெப்பம், நாம் நினைப்பதை விட உலகின் எதிர்காலத்தை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் முக்கியம் என்று நினைத்தால், மற்றவர்களும் அறிய பகிருங்கள். #antarctica #climatescience #sealevelrise #oceanresearch #earthchanges #fblifestyle
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
Pagine in Evidenza
Idaivelai.com https://idaivelai.com