மனம் உ(இ)றை ஓங்கு புகழ்……
*********************************
போற்றுதற்குரிய
வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகள் பெற்ரெடுத்த பிள்ளை……

அவர்
ஈழத்தின் எல்லைகளில்
தொல்லை தந்தோர்க்கு-எதிராய்
தொடுத்தார் வில்லை….

உலகமே வியந்து மூக்கில் வைத்தது விரலை…..

எம்
தலைவனுக்கு ஈடுஇணை யாருமேயில்லை……

கற்பனையில் மிதக்காதீர்
அது
உங்களுக்கு எட்டாத எல்லை….

தமிழினத்தின்
ஒரேயொரு தலைப்பிள்ளை….

உலக உருண்டையில்
எங்குமே இவர்போல்
உ(க)ருக்கொண்டதேயில்லை….

கிடைத்தற்கரிய பேறைப் பெற்றது
உலகத் தமிழினம் மட்டுமே….

பெருமை கொள்வோம்
தமிழனாய் பிறந்தோம்-நல்ல
தலைவனின் வழியில் நடந்தோமென்று..!

அண்ணா
வாழ்த்த வயதில்லை….

உங்கள்
வீரத்தை,தியாகத்தை,மனிதநேயத்தை,
ஜீவகாருண்யத்தை,மதிநுட்பத்தை,
மிடுக்கை,
வரித்த இலட்சியத்தில் பற்றுருதியை,
எண்ணிலடங்காப் பே(போ)ராற்றலை வியந்து பார்த்த இனமென்றின் சக பிள்ளைகளாய்
மனநிறைவோடு
வாழ்த்தி வணங்கி நிற்கிறோம்…..

உலகத் தமிழினத்தின் இதயவறையில்
நீக்கமற நிலைத்த நித்திய வாழ்வியக்கத் தலைமகனே நீடூழி/யுகங்கள் பல வாழியவே….!

அன்புரிமையோடு….
து.செம்பரிதி,
26.11.2025.
05:23.
மனம் உ(இ)றை ஓங்கு புகழ்…… ********************************* போற்றுதற்குரிய வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகள் பெற்ரெடுத்த பிள்ளை…… அவர் ஈழத்தின் எல்லைகளில் தொல்லை தந்தோர்க்கு-எதிராய் தொடுத்தார் வில்லை…. உலகமே வியந்து மூக்கில் வைத்தது விரலை….. எம் தலைவனுக்கு ஈடுஇணை யாருமேயில்லை…… கற்பனையில் மிதக்காதீர் அது உங்களுக்கு எட்டாத எல்லை…. தமிழினத்தின் ஒரேயொரு தலைப்பிள்ளை…. உலக உருண்டையில் எங்குமே இவர்போல் உ(க)ருக்கொண்டதேயில்லை…. கிடைத்தற்கரிய பேறைப் பெற்றது உலகத் தமிழினம் மட்டுமே…. பெருமை கொள்வோம் தமிழனாய் பிறந்தோம்-நல்ல தலைவனின் வழியில் நடந்தோமென்று..! அண்ணா வாழ்த்த வயதில்லை…. உங்கள் வீரத்தை,தியாகத்தை,மனிதநேயத்தை, ஜீவகாருண்யத்தை,மதிநுட்பத்தை, மிடுக்கை, வரித்த இலட்சியத்தில் பற்றுருதியை, எண்ணிலடங்காப் பே(போ)ராற்றலை வியந்து பார்த்த இனமென்றின் சக பிள்ளைகளாய் மனநிறைவோடு வாழ்த்தி வணங்கி நிற்கிறோம்….. உலகத் தமிழினத்தின் இதயவறையில் நீக்கமற நிலைத்த நித்திய வாழ்வியக்கத் தலைமகனே நீடூழி/யுகங்கள் பல வாழியவே….! அன்புரிமையோடு…. து.செம்பரிதி, 26.11.2025. 05:23.
0 Commenti ·0 condivisioni ·702 Views ·0 Anteprima
Idaivelai.com https://idaivelai.com