பசியறிந்து சோறு போடுவதற்கு
ஒருவர் இருக்கும் வரைக்கும்
சாப்பிட்டாயா எனக் கேட்கவும்
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

தாமதமாகும் இரவுகளில்
எங்கிருக்கின்றாய் என விசாரிக்கவும்
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

நோய் வந்தால் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

குரல் மாறுபாட்டில் மன
நிலையைக் கணிக்குமளவுக்கு
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என வழியனுப்புவதற்கு
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

எத்தனை படி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விடுவதற்கு
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

தோற்றுப் போய் திரும்புகையில்
தோள் சாய்த்துக்கொள்ளவதற்கு
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

போ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருப்பதற்கு
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வதற்கு
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

எதற்காகவும் எவரிடமும்
நம்மை விட்டுக் கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

தவறுகளைத் தவறென
சுட்டிக் காட்டித் திருத்தும்
ஒருவர் இருக்கும் வரைக்கும் ...

துயர் அழுத்தும் கணங்களில்
அருகிலிருந்து கண்ணீரைத் துடைக்கவும்
ஒருவர் இருக்கும் வரை...

மனக் குறைகளைப் புலம்பித்
தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்கவும்
ஒருவர் இருக்கும் வரை...
வாழ்தலும் இனிதே...
இந்த வாழ்க்கையும் இனிதே...!!!!
பசியறிந்து சோறு போடுவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் சாப்பிட்டாயா எனக் கேட்கவும் ஒருவர் இருக்கும் வரைக்கும் ... தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கின்றாய் என விசாரிக்கவும் ஒருவர் இருக்கும் வரைக்கும் ... நோய் வந்தால் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரைக்கும் ... குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்குமளவுக்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என வழியனுப்புவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... எத்தனை படி ஆனாலும் வீட்டில் கதவைத் திறந்து விடுவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... தோற்றுப் போய் திரும்புகையில் தோள் சாய்த்துக்கொள்ளவதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... போ என்றாலும் விட்டுப் போகாது சண்டை போட்டுக் கொண்டேனும் உடனிருப்பதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வதற்கு ஒருவர் இருக்கும் வரைக்கும் ... நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க ஒருவர் இருக்கும் வரைக்கும் ... எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத ஒருவர் இருக்கும் வரைக்கும் ... கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி நானிருக்கிறேனென உணர்த்த ஒருவர் இருக்கும் வரைக்கும் ... தவறுகளைத் தவறென சுட்டிக் காட்டித் திருத்தும் ஒருவர் இருக்கும் வரைக்கும் ... துயர் அழுத்தும் கணங்களில் அருகிலிருந்து கண்ணீரைத் துடைக்கவும் ஒருவர் இருக்கும் வரை... மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்கவும் ஒருவர் இருக்கும் வரை... வாழ்தலும் இனிதே... இந்த வாழ்க்கையும் இனிதே...!!!!👍
0 Comments ·0 Shares ·312 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com