வெடிமருந்து தயாரிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்கள்
ஒரு காலத்தில் உலகையே அதிரவைக்கும் வெடிமருந்தின் மூலப்பொருளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நவீன உலகம் தோன்றுவதற்கு முன்பே, ஐரோப்பாவில் 'வெடிமருந்துப் புரட்சி' (Gunpowder Revolution) நிலப்பிரபுத்துவத்தை வேரோடு சாய்த்துக்கொண்டிருந்த அதே வேளையில், இங்கே தமிழகத்தில் வேதியியலும் படைத் தொழில்நுட்பமும் ஒரு சத்தமில்லாத உச்சத்தைத் தொட்டிருந்தன. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் விடை தெரியாத ஒரு மர்மம் இன்றும் எஞ்சி நிற்கிறது
விஜயநகரப் பேரரசு முதல் நாயக்கர் காலம் வரை, இங்குள்ள கொல்லர்களின் உலைக்களங்கள் சாதாரண கருவிகளை மட்டும் உருவாக்கவில்லை; அவை பேரரசுகளைக் காக்கும் பீரங்கிகளை வார்த்தெடுத்தன. தஞ்சாவூரின் கிழக்கு வாயிலில் இன்றும் மௌன சாட்சியாய் நின்றுகொண்டிருக்கும் 22 டன் எடையுள்ள அந்த இரும்புப் பீரங்கி, தமிழர்களின் 'சூடாக்கி அடித்துப் பற்றவைக்கும்' (Forge-welding) அசாத்திய தொழில்நுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
வார்ப்பிரும்பு அல்லாத, தேனிரும்பால் இவ்வளவு பெரிய பீரங்கியை உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பம் இன்றும் அறிவியலாளர்களை வியக்க வைக்கிறது.
திப்பு சுல்தானின் ஏவுகணைகள் ஆங்கிலேயர்களை அலறவிட்டதும், செஞ்சிக்கோட்டையின் பீரங்கிகள் பிரெஞ்சுக்காரர்களை மலைக்க வைத்ததும் நம் தொழில்நுட்ப வரலாறின் பொன்னான பக்கங்கள். தமிழகத்தின் கடற்கரை மணலிலும், கரிசல் காட்டிலும் விளைந்த 'வெடியுப்பு' (Saltpeter) எனும் வெள்ளை தங்கம், ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியது. போர்ச்சுகீசியர்கள் முதல் டச்சுக்காரர்கள் வரை, இங்கிருந்து ஏற்றுமதி செய்த வெடியுப்புதான் ஐரோப்பியப் போர்க்களங்களில் தீயாய் மழை பொழிந்தது.
தமிழகக் கடற்கரையிலிருந்து போர்ச்சுகல் மற்றும் ஆசியாவிற்குப் போர்த்துக்கீசியர்களால் வெடியுப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1524-1628
1524வாக்கில் மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டிலிருந்து வெடியுப்பைக் (சாம்பரிய வெடியகி பொட்டாசியம் நைட்ரேட்) கொள்முதல் செய்தனர். கொச்சிக்கு அனுப்பி மீண்டும் போர்ச்சுக்கலுக்கு கப்பலேற்றினர்." 1570இல் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து அய்ந்து பீப்பாய்களில் வெடியுப்புவை ஏற்றிக் கொண்டு, மயிலாப்பூரைச் சேர்ந்த கசாடோவான (திருமணமான குடியேற்றக்காரர்) அந்தோனியோ டினிஸ் சுந்தாவுக்கு (இந்தோனேசியாவில்) கப்பலில் பயணம் செய்தார்." தேவனாம்பட்டினம் துறைமுகத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தின் வளர்ச்சியானது உள்நாட்டில் கிடைத்த வளமான வெடியுப்பின் இயற்கை வளத்திற்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. தேவனாம்பட்டினத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து அதிக அளவு வெடியுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு (போர்த்துக்கீசிய வரைபடத்திலும் திட்டத்திலும் உள்ள) வெடியுப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டது." மதுரைத் திருமலை நாயக்கரின் (1627-1659) பேரரசில் தூத்துக்குடியில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் வெடியுப்பு கிடைப்பதை அறிந்து அதை வாங்கத் தொடங்கினர்.இந்தியாவின் போர்த்துக்கீசியத் துணையரையர் கவுண்ட் டி லின்ஹரேஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட தூத்துக்குடியின் படைத் தளபதி பெட்ரோ சோரேஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, முத்துக் குளிக்கும் கடற்கரை முழுவதற்கும் வெடியுப்பின் ஒப்பந்தக்காரர் 'ஓ கான்ட்ராடர் டி சாலிட்ரே யெம் டோடா டி பெஸ்காரியா') என்ற பட்டத்தை வழங்கினார்.
போர்த்துக்கீசிய ஆவணங்கள், பெரும்பாலும் மதுரைப் பகுதியிலிருந்து உள்ளூர் மக்களால் பிரித்தெடுக்கப்பட்ட வெடியுப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளை விடச் சிறந்தது என்று குறிப்பிடுகின்றன. ஏனெனில் இருமுறை மட்டும் கொதிக்க வைத்துத் தூய்மைப்படுத்த இதற்குத் தேவைப்பட்டது. போர்த்துக்கீசியச் சான்றுகளின்படி வெள்ளை வேடியுப்பு மற்றும் கருப்பு வெடியுப்பு எனப்படும் இரு வகையான வெடியுப்புகள் கிடைத்தன." கருப்பு வெடியுப்பு முதன்மையாக வேடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்து என்பது பொருட்களின் தளர்வான கலவையாகும் என்பது கவனிக்கத்தக்கது, அவை கந்தகம், கரி மற்றும் வெடியுப்பு ஆகியனவாகும். வெரு மருந்தை நுண்மணித் தூளாக அறிமுகப்படுத்துவதற்கு முன், வெடி மருந்தை ஆயத்தமாக எடுத்துச் செல்வது நல்லதல்ல. இதற்குப் பின்னால் உள்ள காரணம் போக்குவரத்தினால் இவை அசைவுறும் போது, கந்தகம் கீழேயும் கரி மேலேயும் வந்துவிடும். எனவே, இப்பொருட்களைத் தனித்தனியே எடுத்துச் செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டு இப்புலத்தில் முறையாகக் கலக்கப்பட்டது. போர்த்துக்கீசிய ஆவணத்தில் மூன்று அகப்பைகள் தூளை எடுப்பதற்காக ஒரு வாசிப்பு முறை உள்ளது.இந்தக் காலகட்டத்தில் சந்தையில் வெடியுப்பின் விலை ஒரு மணங்கு அளவு, ஒன்றரை ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. போர்த்துக்கீசிய வணிகர்கள் தூத்துக்குடியிலிருந்து கோவாவிற்கு வெடியுப்பை ஏற்றுமதி செய்ததோடு போர்ச்சுகலுக்கும் அனுப்பினர்."
புதுச்சேரியின் வெடிமருந்துத் தொழிற்சாலைகளில் உயிரைப் பணயம் வைத்து, கரி, கந்தகம், வெடியுப்பு கலந்த அந்த 'கறுப்புத் தூளை' (Gunpowder) நம் முன்னோர்கள் தயாரித்த விதம், ஒரு ரசாயன வித்தை. ஒரு சிறு தீப்பொறி பட்டால் கூட ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறும் அபாயம்... அதையும் தாண்டி அவர்கள் உருவாக்கிய அந்த நெருப்பு இயந்திரங்களின் கதை சிலிர்ப்பூட்டக்கூடியது.
பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வடஇந்தியாவிற்கு, வெடிமருந்து தொழில்நுட்பம் சீனாவிலிருந்து அறிமுகமானது. வெடியுப்பு, கரி மற்றும் கந்தகம் போன்ற மூன்று பொருட்களை இணைத்து வெடி மருந்து தயாரிக்கப்பட்டது. 1671இன் ஓர் ஆவணத்தின்படி, களத்திலிருந்த படைத்தளபதிகள் தேனிரும்பு வெடிகுண்டுகளை மட்டுமே வலியுறுத்தத் தொடங்கினர். இது கல்பந்துகளைப் படிப்படியாக அப்புறப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியது. இதனால் போரில் வெடிமருந்துத் தொழில்நுட்பம் முதன்மை பெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள கொல்லர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் வெடியுப்பை வெட்டி உற்பத்தி செய்தனர். வெடியுப்பு இயற்கையான செயல்முறையின் மூலம் சுண்ணாம்பு நிலத்தோடு தொடர்புகொண்ட அழுகும் வெடியப் பொருட்களிலிருந்து உருவானது. இந்த உப்பு மேலோடுகள் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் நீரில் கலந்து நன்கு கிளறப்பட்டு, பின்னர் சில நாட்கள் இருக்க விடப்படுகிறது. பின்னர் கசடு அடைந்த வெடியுப்புப் படிவுகள் கீழே இறங்கி, நீர் ஆழமற்ற குழிகளில் வெளியேற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொதுவான இந்த முறை அய்ரோப்பியப் பயணிகளால் விளக்கப்பட்டது. * குழியில் இருந்து எடுக்கப்பட்ட கசடான வெடியுப்பை ஒரு தரம் குறைந்த வெடியுப்பைப் பெறக் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டாம் கொதிநிலை சிறந்த தரமான வெடியுப்பை உருவாக்கியது. மேலும், மூன்றாம் அல்லது நான்காம் கொதிநிலைக்குப் பிறகு மிகச் சிறந்த தரம் பெறப்பட்டது.
இப்புத்தகத்தில் உள்ளது வெறும் போர்க்கருவிகளின் பட்டியல் அல்ல; பழம் நெடுங்கால தமிழகத்தின் அறிவியல் வரலாறு.
நூல்: தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும் வேறுபட்ட உள்ளூர்க் கலைஞர்களும்: அய்ரோப்பியர்களின் பார்வையில் - எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
தமிழில்: புதுவை சீனு. தமிழ்மணி
வெடிமருந்து தயாரிப்பில் சிறந்து விளங்கிய தமிழர்கள் ஒரு காலத்தில் உலகையே அதிரவைக்கும் வெடிமருந்தின் மூலப்பொருளைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நவீன உலகம் தோன்றுவதற்கு முன்பே, ஐரோப்பாவில் 'வெடிமருந்துப் புரட்சி' (Gunpowder Revolution) நிலப்பிரபுத்துவத்தை வேரோடு சாய்த்துக்கொண்டிருந்த அதே வேளையில், இங்கே தமிழகத்தில் வேதியியலும் படைத் தொழில்நுட்பமும் ஒரு சத்தமில்லாத உச்சத்தைத் தொட்டிருந்தன. ஆனால், வரலாற்றின் பக்கங்களில் விடை தெரியாத ஒரு மர்மம் இன்றும் எஞ்சி நிற்கிறது விஜயநகரப் பேரரசு முதல் நாயக்கர் காலம் வரை, இங்குள்ள கொல்லர்களின் உலைக்களங்கள் சாதாரண கருவிகளை மட்டும் உருவாக்கவில்லை; அவை பேரரசுகளைக் காக்கும் பீரங்கிகளை வார்த்தெடுத்தன. தஞ்சாவூரின் கிழக்கு வாயிலில் இன்றும் மௌன சாட்சியாய் நின்றுகொண்டிருக்கும் 22 டன் எடையுள்ள அந்த இரும்புப் பீரங்கி, தமிழர்களின் 'சூடாக்கி அடித்துப் பற்றவைக்கும்' (Forge-welding) அசாத்திய தொழில்நுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. வார்ப்பிரும்பு அல்லாத, தேனிரும்பால் இவ்வளவு பெரிய பீரங்கியை உருவாக்கிய அந்தத் தொழில்நுட்பம் இன்றும் அறிவியலாளர்களை வியக்க வைக்கிறது. திப்பு சுல்தானின் ஏவுகணைகள் ஆங்கிலேயர்களை அலறவிட்டதும், செஞ்சிக்கோட்டையின் பீரங்கிகள் பிரெஞ்சுக்காரர்களை மலைக்க வைத்ததும் நம் தொழில்நுட்ப வரலாறின் பொன்னான பக்கங்கள். தமிழகத்தின் கடற்கரை மணலிலும், கரிசல் காட்டிலும் விளைந்த 'வெடியுப்பு' (Saltpeter) எனும் வெள்ளை தங்கம், ஐரோப்பியர்களின் கண்களை உறுத்தியது. போர்ச்சுகீசியர்கள் முதல் டச்சுக்காரர்கள் வரை, இங்கிருந்து ஏற்றுமதி செய்த வெடியுப்புதான் ஐரோப்பியப் போர்க்களங்களில் தீயாய் மழை பொழிந்தது. தமிழகக் கடற்கரையிலிருந்து போர்ச்சுகல் மற்றும் ஆசியாவிற்குப் போர்த்துக்கீசியர்களால் வெடியுப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. 1524-1628 1524வாக்கில் மயிலாப்பூரிலுள்ள சாந்தோமில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டிலிருந்து வெடியுப்பைக் (சாம்பரிய வெடியகி பொட்டாசியம் நைட்ரேட்) கொள்முதல் செய்தனர். கொச்சிக்கு அனுப்பி மீண்டும் போர்ச்சுக்கலுக்கு கப்பலேற்றினர்." 1570இல் சோழமண்டலக் கடற்கரையிலிருந்து அய்ந்து பீப்பாய்களில் வெடியுப்புவை ஏற்றிக் கொண்டு, மயிலாப்பூரைச் சேர்ந்த கசாடோவான (திருமணமான குடியேற்றக்காரர்) அந்தோனியோ டினிஸ் சுந்தாவுக்கு (இந்தோனேசியாவில்) கப்பலில் பயணம் செய்தார்." தேவனாம்பட்டினம் துறைமுகத்தில் போர்த்துக்கீசிய வணிகத்தின் வளர்ச்சியானது உள்நாட்டில் கிடைத்த வளமான வெடியுப்பின் இயற்கை வளத்திற்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. தேவனாம்பட்டினத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து அதிக அளவு வெடியுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு (போர்த்துக்கீசிய வரைபடத்திலும் திட்டத்திலும் உள்ள) வெடியுப்புக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டது." மதுரைத் திருமலை நாயக்கரின் (1627-1659) பேரரசில் தூத்துக்குடியில் குடியேறிய போர்த்துக்கீசியர்கள் வெடியுப்பு கிடைப்பதை அறிந்து அதை வாங்கத் தொடங்கினர்.இந்தியாவின் போர்த்துக்கீசியத் துணையரையர் கவுண்ட் டி லின்ஹரேஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட தூத்துக்குடியின் படைத் தளபதி பெட்ரோ சோரேஸ் டி பிரிட்டோ அவர்களுக்கு, முத்துக் குளிக்கும் கடற்கரை முழுவதற்கும் வெடியுப்பின் ஒப்பந்தக்காரர் 'ஓ கான்ட்ராடர் டி சாலிட்ரே யெம் டோடா டி பெஸ்காரியா') என்ற பட்டத்தை வழங்கினார். போர்த்துக்கீசிய ஆவணங்கள், பெரும்பாலும் மதுரைப் பகுதியிலிருந்து உள்ளூர் மக்களால் பிரித்தெடுக்கப்பட்ட வெடியுப்பு இந்தியாவின் மற்ற பகுதிகளை விடச் சிறந்தது என்று குறிப்பிடுகின்றன. ஏனெனில் இருமுறை மட்டும் கொதிக்க வைத்துத் தூய்மைப்படுத்த இதற்குத் தேவைப்பட்டது. போர்த்துக்கீசியச் சான்றுகளின்படி வெள்ளை வேடியுப்பு மற்றும் கருப்பு வெடியுப்பு எனப்படும் இரு வகையான வெடியுப்புகள் கிடைத்தன." கருப்பு வெடியுப்பு முதன்மையாக வேடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. வெடிமருந்து என்பது பொருட்களின் தளர்வான கலவையாகும் என்பது கவனிக்கத்தக்கது, அவை கந்தகம், கரி மற்றும் வெடியுப்பு ஆகியனவாகும். வெரு மருந்தை நுண்மணித் தூளாக அறிமுகப்படுத்துவதற்கு முன், வெடி மருந்தை ஆயத்தமாக எடுத்துச் செல்வது நல்லதல்ல. இதற்குப் பின்னால் உள்ள காரணம் போக்குவரத்தினால் இவை அசைவுறும் போது, கந்தகம் கீழேயும் கரி மேலேயும் வந்துவிடும். எனவே, இப்பொருட்களைத் தனித்தனியே எடுத்துச் செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டு இப்புலத்தில் முறையாகக் கலக்கப்பட்டது. போர்த்துக்கீசிய ஆவணத்தில் மூன்று அகப்பைகள் தூளை எடுப்பதற்காக ஒரு வாசிப்பு முறை உள்ளது.இந்தக் காலகட்டத்தில் சந்தையில் வெடியுப்பின் விலை ஒரு மணங்கு அளவு, ஒன்றரை ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை ஏற்ற இறக்கமாக இருந்தது. போர்த்துக்கீசிய வணிகர்கள் தூத்துக்குடியிலிருந்து கோவாவிற்கு வெடியுப்பை ஏற்றுமதி செய்ததோடு போர்ச்சுகலுக்கும் அனுப்பினர்." புதுச்சேரியின் வெடிமருந்துத் தொழிற்சாலைகளில் உயிரைப் பணயம் வைத்து, கரி, கந்தகம், வெடியுப்பு கலந்த அந்த 'கறுப்புத் தூளை' (Gunpowder) நம் முன்னோர்கள் தயாரித்த விதம், ஒரு ரசாயன வித்தை. ஒரு சிறு தீப்பொறி பட்டால் கூட ஒட்டுமொத்தமாக வெடித்துச் சிதறும் அபாயம்... அதையும் தாண்டி அவர்கள் உருவாக்கிய அந்த நெருப்பு இயந்திரங்களின் கதை சிலிர்ப்பூட்டக்கூடியது. பதிமூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வடஇந்தியாவிற்கு, வெடிமருந்து தொழில்நுட்பம் சீனாவிலிருந்து அறிமுகமானது. வெடியுப்பு, கரி மற்றும் கந்தகம் போன்ற மூன்று பொருட்களை இணைத்து வெடி மருந்து தயாரிக்கப்பட்டது. 1671இன் ஓர் ஆவணத்தின்படி, களத்திலிருந்த படைத்தளபதிகள் தேனிரும்பு வெடிகுண்டுகளை மட்டுமே வலியுறுத்தத் தொடங்கினர். இது கல்பந்துகளைப் படிப்படியாக அப்புறப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியது. இதனால் போரில் வெடிமருந்துத் தொழில்நுட்பம் முதன்மை பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள கொல்லர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் அவர்கள் பல்வேறு இடங்களில் வெடியுப்பை வெட்டி உற்பத்தி செய்தனர். வெடியுப்பு இயற்கையான செயல்முறையின் மூலம் சுண்ணாம்பு நிலத்தோடு தொடர்புகொண்ட அழுகும் வெடியப் பொருட்களிலிருந்து உருவானது. இந்த உப்பு மேலோடுகள் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் நீரில் கலந்து நன்கு கிளறப்பட்டு, பின்னர் சில நாட்கள் இருக்க விடப்படுகிறது. பின்னர் கசடு அடைந்த வெடியுப்புப் படிவுகள் கீழே இறங்கி, நீர் ஆழமற்ற குழிகளில் வெளியேற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொதுவான இந்த முறை அய்ரோப்பியப் பயணிகளால் விளக்கப்பட்டது. * குழியில் இருந்து எடுக்கப்பட்ட கசடான வெடியுப்பை ஒரு தரம் குறைந்த வெடியுப்பைப் பெறக் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டாம் கொதிநிலை சிறந்த தரமான வெடியுப்பை உருவாக்கியது. மேலும், மூன்றாம் அல்லது நான்காம் கொதிநிலைக்குப் பிறகு மிகச் சிறந்த தரம் பெறப்பட்டது. இப்புத்தகத்தில் உள்ளது வெறும் போர்க்கருவிகளின் பட்டியல் அல்ல; பழம் நெடுங்கால தமிழகத்தின் அறிவியல் வரலாறு. நூல்: தமிழ்நாட்டின் வியப்பான தொழில்நுட்பமும் வேறுபட்ட உள்ளூர்க் கலைஞர்களும்: அய்ரோப்பியர்களின் பார்வையில் - எஸ்.ஜெயசீல ஸ்டீபன் தமிழில்: புதுவை சீனு. தமிழ்மணி
0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com