ஒரு விரக்தி அடைந்த கன்னிப் பெண் காவல் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய படுக்கை அறையில் கட்டிலின் கீழ் ஒரு ஆள் எப்பொழுதும் இருக்கிறார் என்று திரும்பத் திரும்பக் கூறி புகார் கொடுத்தாள்.

கடைசியாக அவளை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கே உள்ள டாக்டரிடம் அப்படியே திரும்பத் திரும்பச் சொன்னாள்.

அவளுக்கு புதிதாக கண்டுபிடித்த மருந்து ஒன்றை கொடுத்தார்.

பிறகு அவள் தீடீர் என்று தான் குணமடைந்து விட்டதாக கூறினாள்.

உண்மையாகவே சொல்கிறீர்களா? நீங்கள் அந்த ஆளை உங்களுடைய படுக்கையின் கீழே இப்பொழுது பார்க்கவில்லையா? என்று கேட்டார் டாக்டர்.

இல்லை!
ஆனால் இப்பொழுது இரண்டு ஆட்கள் தென்படுகிறார்கள் என்றாள்.

அப்பொழுது ஒரு டாக்டர் மற்றவரிடம் இந்த வியாதிக்கு பெயர் விபரீதமான கன்னித்தன்மை ( மெலிக்நன்ட் வெர்ஜனிட்டி) என்று பெயர் இதற்கு ஒரே ஒரு ஊசி மருந்துதான் இருக்கிறது.

ஏன் இவளையும் ஆஸ்பத்திரியில் உள்ள தச்சு வேலை செய்பவனையும் அவளுடைய தனியறையில் தனியாக விடக்கூடாது என்று கூடி பேசி தச்சு வேலை செய்பவனே அழைத்து வரச் செய்து அவனிடம் இந்த வியாதியை பற்றி விளக்கினார்கள்.

அவளும் அவனும் அவளுடைய அறையில் ஒரு மணி நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு அவன் அது ஒன்றும் அவ்வளவு நீளமாகாது என்று சொல்லி ஒத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரையும் அவளுடைய படுக்கையில் தள்ளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் ஆவலாக கூடியிருந்தார்கள்.

அப்பொழுது உள்ளே இருந்து இல்லை!

முடியாது!

நிறுத்து!

என் தாயார் என்னை ஒருக்காலும் மன்னிக்க மாட்டாள்!
என்று சத்தம் கேட்டது.

கத்துவதை முதலில் நிறுத்து!

இதை முன்பே செய்திருக்க வேண்டும்!

இப்படி மூர்க்கத்தனமாக செய்வதா?

நீ ஒரு காட்டுமிராண்டி!

இதனை உனது கணவன் செய்ய வேண்டும்.
அப்படி ஒருவன் இல்லையே!

வெளியில் இருந்தவர்கள் தங்களுடைய ஆவலை அடக்க முடியாமல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.

அப்பொழுது அந்த தச்சு வேலைக்காரன் நான் அவளை குணப்படுத்திவிட்டேன் என்றான்.

அவளும் ஆமாம் நான் இப்பொழுது குணமடைந்து விட்டேன் என்றாள்.

அப்பொழுது அவன் அந்த கட்டில் கால்களை காட்டினான்.
அதன் நான்கு கால்களும் அகற்றப்பட்டிருந்தன.

சில சமயம் குணப்படுத்துதல் மிகவும் வலிதானது.
நீங்கள் ஆயிரத்து ஒரு வழிமுறைகளை கையாளலாம்.
ஆனால் அந்தத் தச்சு தொழிலாளி நல்ல வேலை செய்தான்.
அந்த கட்டிலில் நான்கு கால்களை அகற்றிவிட்டான்.

வேலை முடிந்து விட்டது இப்பொழுது கட்டில் அடியில் யார் படுத்துக் கொள்வார்கள்? மறைந்து கொள்வார்கள்?

கிட்டத்தட்ட நம்முடைய பிரச்சினைகளும் இப்படிதான்.
சகல பிரச்சனைகளுக்கும் அவ்வளவு சுலபமாக தீர்வு காண முடியாது. ஏனெனில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக அதில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது.
நாம் ஆயிரம் வழிமுறைகளைக் கையாளலாம்.
அதற்கு திறமையான நுட்பமான முறைகள் எப்போதும் அவசியமாகின்றன
ஒரு விரக்தி அடைந்த கன்னிப் பெண் காவல் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய படுக்கை அறையில் கட்டிலின் கீழ் ஒரு ஆள் எப்பொழுதும் இருக்கிறார் என்று திரும்பத் திரும்பக் கூறி புகார் கொடுத்தாள். கடைசியாக அவளை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கே உள்ள டாக்டரிடம் அப்படியே திரும்பத் திரும்பச் சொன்னாள். அவளுக்கு புதிதாக கண்டுபிடித்த மருந்து ஒன்றை கொடுத்தார். பிறகு அவள் தீடீர் என்று தான் குணமடைந்து விட்டதாக கூறினாள். உண்மையாகவே சொல்கிறீர்களா? நீங்கள் அந்த ஆளை உங்களுடைய படுக்கையின் கீழே இப்பொழுது பார்க்கவில்லையா? என்று கேட்டார் டாக்டர். இல்லை! ஆனால் இப்பொழுது இரண்டு ஆட்கள் தென்படுகிறார்கள் என்றாள். அப்பொழுது ஒரு டாக்டர் மற்றவரிடம் இந்த வியாதிக்கு பெயர் விபரீதமான கன்னித்தன்மை ( மெலிக்நன்ட் வெர்ஜனிட்டி) என்று பெயர் இதற்கு ஒரே ஒரு ஊசி மருந்துதான் இருக்கிறது. ஏன் இவளையும் ஆஸ்பத்திரியில் உள்ள தச்சு வேலை செய்பவனையும் அவளுடைய தனியறையில் தனியாக விடக்கூடாது என்று கூடி பேசி தச்சு வேலை செய்பவனே அழைத்து வரச் செய்து அவனிடம் இந்த வியாதியை பற்றி விளக்கினார்கள். அவளும் அவனும் அவளுடைய அறையில் ஒரு மணி நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு அவன் அது ஒன்றும் அவ்வளவு நீளமாகாது என்று சொல்லி ஒத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் அவளுடைய படுக்கையில் தள்ளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் ஆவலாக கூடியிருந்தார்கள். அப்பொழுது உள்ளே இருந்து இல்லை! முடியாது! நிறுத்து! என் தாயார் என்னை ஒருக்காலும் மன்னிக்க மாட்டாள்! என்று சத்தம் கேட்டது. கத்துவதை முதலில் நிறுத்து! இதை முன்பே செய்திருக்க வேண்டும்! இப்படி மூர்க்கத்தனமாக செய்வதா? நீ ஒரு காட்டுமிராண்டி! இதனை உனது கணவன் செய்ய வேண்டும். அப்படி ஒருவன் இல்லையே! வெளியில் இருந்தவர்கள் தங்களுடைய ஆவலை அடக்க முடியாமல் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார்கள். அப்பொழுது அந்த தச்சு வேலைக்காரன் நான் அவளை குணப்படுத்திவிட்டேன் என்றான். அவளும் ஆமாம் நான் இப்பொழுது குணமடைந்து விட்டேன் என்றாள். அப்பொழுது அவன் அந்த கட்டில் கால்களை காட்டினான். அதன் நான்கு கால்களும் அகற்றப்பட்டிருந்தன. சில சமயம் குணப்படுத்துதல் மிகவும் வலிதானது. நீங்கள் ஆயிரத்து ஒரு வழிமுறைகளை கையாளலாம். ஆனால் அந்தத் தச்சு தொழிலாளி நல்ல வேலை செய்தான். அந்த கட்டிலில் நான்கு கால்களை அகற்றிவிட்டான். வேலை முடிந்து விட்டது இப்பொழுது கட்டில் அடியில் யார் படுத்துக் கொள்வார்கள்? மறைந்து கொள்வார்கள்? கிட்டத்தட்ட நம்முடைய பிரச்சினைகளும் இப்படிதான். சகல பிரச்சனைகளுக்கும் அவ்வளவு சுலபமாக தீர்வு காண முடியாது. ஏனெனில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக அதில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. நாம் ஆயிரம் வழிமுறைகளைக் கையாளலாம். அதற்கு திறமையான நுட்பமான முறைகள் எப்போதும் அவசியமாகின்றன
0 Comments ·0 Shares ·474 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com