அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள்...
இனிப்பு, கார பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும் போது காலை முதல் இரவு வரை வெந்நீர் மட்டுமே குடிப்பது சிறந்தது. அது செரிமானத்துக்கு உதவும். வாயு சேர்வதைத் தடுக்கும்.
ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். அந்த நீரை அவ்வப்போது லேசாக சூடாக்கி, நாள் முழுவதும் குடிக்கலாம்.
சீரகத்துக்கு பதில் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரையும் இதே போல குடிக்கலாம். அதற்காக சீரகம், ஓமம் இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏதாவது ஒன்று போதும்.
வெறும் திட உணவுகளாகச் சாப்பிடாமல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் நீர்மோரை சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.
பச்சை மிளகு கிடைக்கும் சீசன் இது. அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். அதுவும் செரிமானத்துக்கு உதவும்...
#fblifestyle #tamilfoods
அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள்... இனிப்பு, கார பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும் போது காலை முதல் இரவு வரை வெந்நீர் மட்டுமே குடிப்பது சிறந்தது. அது செரிமானத்துக்கு உதவும். வாயு சேர்வதைத் தடுக்கும். ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொள்ளவும். அந்த நீரை அவ்வப்போது லேசாக சூடாக்கி, நாள் முழுவதும் குடிக்கலாம். சீரகத்துக்கு பதில் ஓமத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரையும் இதே போல குடிக்கலாம். அதற்காக சீரகம், ஓமம் இரண்டையும் சேர்க்காதீர்கள். ஏதாவது ஒன்று போதும். வெறும் திட உணவுகளாகச் சாப்பிடாமல் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் நீர்மோரை சிறிது சிறிதாகக் குடிக்கலாம். பச்சை மிளகு கிடைக்கும் சீசன் இது. அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம். அதுவும் செரிமானத்துக்கு உதவும்... #fblifestyle #tamilfoods
0 Kommentare ·0 Geteilt ·2KB Ansichten ·0 Bewertungen
Idaivelai.com https://idaivelai.com