புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு அருகில் வந்தவரிடம் "என்னமா சிலிண்டர் இல்லையா என்றதும்?
சிரித்துக் கொண்டே "நம்ம என்ன அப்படி சமைக்க போறோம் பிரியாணியா, கறி சோறா? என்ன ரெண்டு மிலைக்காய் தக்காளிய பிச்சி போட்டு கஞ்சிக்கு காரக் குழம்பு, மீன் குழம்பு வைக்க போறோம், வெச்ச குழம்ப ரெண்டு நாளைக்கு வெச்சிக்க போறோம், அதுக்கு எதுக்கு சாமி சிலிண்டர்? காடு கொடுக்குது அது இல்லாதவங்க எடுத்து வயித்துக்கு பயன்படுத்திக்குறோம்,
ஆடு மேய்க்குறோம், எதோ ஆடு வளர்ந்தா அது வித்து வயித்த கழுவிக்குறோம், இருப்பு இல்லாத வாழ்கை தான் ஆனா அதுக்காக கவலை பட மாட்டோம் சாமி, ஏன்னா என் வயசுல ஆஸ்பத்தரிக்கு நடக்குறவங்க நிறைய பேரு ஊர்ல இருக்காங்க, நான் ஆரோக்கியத்தோடு காடு மேடு ஏறி கல்லு மாதிரி போயிட்டு வரேன் பாத்தீங்களா அதுவே கடவுள் புண்ணியத்துல பெரிய பாக்கியம், ஒண்டிக்க சொந்த குடிசை, உசுருக்கு திங்க கஞ்சி, உழைக்க உடல் ஆரோக்கியம் இது இருந்தா போதும் சாமி, பெருசா கார் பங்களாவுக்கெல்லாம் ஆசை படல, நிம்மதி ஆரோக்கியம் இருக்கோமா அது போதும் சாமி என்று அவர் சுருக்காக முடித்ததும்
பேச ஏதும் வார்த்தைகள் ஏதும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை எனது வாழ்க்கையோடு பொறுத்தி பார்த்து யோசித்த படி மௌனமாக நின்றிருக் கொண்டிருந்தேன்
உடனே அவர் "என்னங்கய்யா பேச மாட்றீங்க? எதாவது தப்பா சொல்லிட்டேனா என்றதும்
இல்லைங்கம்மா , நீங்க சொன்னது உண்மை தான், காசு இல்லாட்டாலும், நிம்மதி ஆரோக்கியம் போதும் மா, உலகத்திலேயே மிகப்பெரிய சொத்து நம்முடைய ஆரோக்கியமும், உடம்பும் தான் மா
என்னுடைய மனைவி இறந்து 10 வருஷம் ஆகுது, எனக்கு ஒரேயொரு பொண்ணு, இப்போ என்னுடைய பொண்ணுக்கு நான் தான் அப்பா அம்மா எல்லாமே, மறுமணம் பண்ணிக்கல, காரணம் என்னோட மனைவிய 14 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணேன், புள்ளைக்கு ஒன்றை வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க, டெங்கு காய்ச்சல், சரியா டைம்க்கு சாப்பிட மாட்டாங்க, நோய் எதிப்பு சக்தி இல்ல, எனக்குண்ணு அம்மா அப்பா சொந்தம் பந்தம் இந்த உலகத்துல யாருமே கிடையாது,
நேரத்துக்கு ஒரு ஆண சாப்படியா? எங்க இருக்கண்ணு கேக்குற உலகத்துல இருக்க ரெண்டே உறவு அம்மா, மனைவி மட்டும் தான், இந்த ரெண்டு வார்த்தையும் நான் கேட்டு பத்து வருஷம் ஆகுது, இனி என் பொண்ணு பெருசாகி கேட்டாதான்
ஆனா நெஞ்சுலையும், உடம்புலையும் தில்லு இருக்கு, எந்த சூழ்நிலையிலும் நம்ம தைரியத்தையும் நம்பிக்கையும் விட்டுற கூடாது, இந்த பத்து வருஷத்த சாதாரணமா கடந்து வரல, எனக்கு வயசு சின்னது தான், ஆனா மனிதனோட நூறு வருஷத்துக்கு அனுபவம் என் மனசுல இருக்கு, கடைசி சொட்டு உயிர் இருக்க வரைக்கும் மீசை முறுக்கிவிட்டு துணிச்சலா தன்னம்பிக்கையா வாழனும், இப்போ நீங்க சொன்னீங்களே நிம்மதியா ஆரோக்கியமா இருந்தா போதும்ண்ணு, அந்த ஆரோக்கியம் இல்லாததால தான் இன்னைக்கு நான் என்னுடைய மனைவிய இழந்தும், என் பொண்ணு அம்மாவ இழந்தும் ஒவ்வொரு நாளும் கஷ்ட்டபடுறோம்
உண்மை மா, நம்முடைய முதல் சொத்து நம்ம உடம்பு தான், உடம்ப பாத்துக்காம பாதிலே போயிடுறவங்க அவங்க நிம்மதியா போயிடுவாங்க, ஆனா அவங்களோட வாழ்ந்த நாட்கள நினைச்சும், அவங்க கூட இருந்த நினைவுகள நினைச்சும் தினம் தினம் நாம் கவலைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகணும், அந்த வேதனையும் சாவையும் நம்ம நமக்கு வர சந்ததிகளுக்கு கொடுத்தர கூடாது, அவங்க கடைசி வரைக்கும் கரையேத்தி வாழவெச்சிட்டு போறது தான் மனிதனா பொறந்ததுக்கு நம்ம பிறவிக்கு செய்யுற கைமாறு, நான் பாண்டிலே பொறந்தவன் பாத்தீங்களா எனக்கு டீ, காப்பி சாப்பிடுற பழக்கம் கூட கிடையாது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாம என் உடம்ப ஆரோக்கியமா பாத்துகறதுனால தான் நான் என் புள்ளைய ஒரு அம்மாவா இருந்து பாதுகாப்பா பாசமா வளர்க்க முடியுது, அப்போ கிரிக்கெட், இப்போ ஃபோட்டோ கிராஃபி, வேலை போக மத்த நேரத்துல இந்த மாதிரி கிராமம், உங்கள மாதிரி கிராமவாசிங்க, விவசாயிங்க, பறவைங்க, குளம், ஏறி, பூக்கள், பட்டாம்பூச்சி, ஆடு, மாடு, கோழி, இவங்க தான் என்னோட சொந்தம் பந்தம் எல்லாமே, இப்படி கிராமத்து பக்கம் வந்து நாளு நல்ல மனுஷங்கள பாத்து பேசுனா நம்ம கவலை பாரம் எல்லாம் பறந்துடும், என்று நான் சிரித்தபடி முடித்ததும்
எதும் பேசாமல் மௌனமாக நின்றுக் கொண்டிருந்ததார்
அந்த மௌனத்திற்கான அர்த்தம் என்ன என்பது தெரியும்
சரிமா தலையில சுமை இருக்கு, நீங்க கிளம்புங்க அப்பறம் வந்து உங்கள பாக்குறேன்
அம்மா இங்க பாருங்க இங்க பாருங்க மா என்று அவரை எனது கண்ணை நோக்கி நிமிர வைத்து
இதுவரைக்கும் என்னோட புகைப்பட வாழ்கையில கிராமவாசிங்க விவசாயிங்கண்ணு
பல்லாயிரம் பேர் கிட்ட பேசிருக்கேன், ஆனா அதுல ஒரு சில பேர் தான் தன்னம்பிக்கையா துணிச்சலா பாசிட்டிவா பேசுவாங்க, எனக்கு நெகடிவா சோகமா பேசுறவங்கள எப்பவும் பிடிக்காது, நீங்க எதுவும் இல்லாட்டாலும் துணிச்சலா தன்னம்பிக்கையா பேசுனீங்க பாத்தீங்களா அது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு, அதனால தான் அதிகமா யாருகிட்டயும் சொல்லாத என்னுடைய வாழ்கைய உங்ககிட்ட சொன்னேன், தைரியமா இருங்கம்மா, உடம்ப பாத்துக்கோங்க, எதை காதலிக்குறோமோ இல்லையோ நமம உடம்ப காதலிக்கணும், அந்த உடம்ப நமக்காக இல்லாட்டாலும் இந்த உலகத்துல நம்மல கொடுத்தவங்களுக்காவும், நம்மல நம்பி வந்தவங்களுக்காகவும், நம்மல நம்பி பிறந்தவங்களுக்காகவும் நம்ம உடம்ப நம்ப ஆரோக்கியமா பத்தரமா பாத்துக்கணும்
ஒருத்தர இழந்துட்டு அவர் நினைவோடவே வாழ்நாள் வரை வாழுற வலி தான் உலகத்திலே மிக பெரிய கொடுமையானது, இது என்ன தவிர இந்த உலகத்துல வேற யாருக்கும் நடக்கா கூடாது என்றுதான் என்னுடைய தினந்தோற பிராத்தன, நீங்க எப்படி ஆரம்பத்துல என்கிட்ட தன்னம்பிக்கையா சந்தோஷமா பேசுனீங்களோ, அதே போல நீங்க கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையா ஆரோக்கியமா இருக்கணும் மா என்று நான் முடித்ததும்
"நீ நல்லா இருப்ப சாமி" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு தனது முந்தானையை எடுத்து கண்களை துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் என்னிடமிருந்து விடைபெற்று மெதுவாய் நடந்து சென்று வளைந்து எனது கண்களிலிருந்து முழுவதுமாய் மறைந்தார்
அவர் கண்களிலிருந்து மறைந்த பின்பே வீட்டில் தனியாக இருக்கும் மகள் ஞாபகத்திற்க்கு வந்தார்
வண்டியை திருப்பி நேராக வீட்டிற்கு விட்டு வீட்டை அடைந்து கதவை தட்டியதும், ஜன்னல் ஓரத்திலிருந்து முக அடையாளம் உறுதி செய்துவிட்டு கதவு திறக்கப்பட்டது
உள்ளே நுழைந்ததும் மகள் ஓடிவந்து!அப்பா என கட்டியணைத்தார்
இன்று இரவு உறக்கத்தின் போது மகளுக்கான ஒரு நிகழ்ந்த உண்மை கதை ரெடி என கை கால்களை அலம்பி விட்டு
சமைக்க சமையலறைக்குள் நுழைந்தேன்.
படித்ததில் பகிர்ந்தது
புகைப்படம் எடுத்து முடித்துவிட்டு அருகில் வந்தவரிடம் "என்னமா சிலிண்டர் இல்லையா என்றதும்?
சிரித்துக் கொண்டே "நம்ம என்ன அப்படி சமைக்க போறோம் பிரியாணியா, கறி சோறா? என்ன ரெண்டு மிலைக்காய் தக்காளிய பிச்சி போட்டு கஞ்சிக்கு காரக் குழம்பு, மீன் குழம்பு வைக்க போறோம், வெச்ச குழம்ப ரெண்டு நாளைக்கு வெச்சிக்க போறோம், அதுக்கு எதுக்கு சாமி சிலிண்டர்? காடு கொடுக்குது அது இல்லாதவங்க எடுத்து வயித்துக்கு பயன்படுத்திக்குறோம்,
ஆடு மேய்க்குறோம், எதோ ஆடு வளர்ந்தா அது வித்து வயித்த கழுவிக்குறோம், இருப்பு இல்லாத வாழ்கை தான் ஆனா அதுக்காக கவலை பட மாட்டோம் சாமி, ஏன்னா என் வயசுல ஆஸ்பத்தரிக்கு நடக்குறவங்க நிறைய பேரு ஊர்ல இருக்காங்க, நான் ஆரோக்கியத்தோடு காடு மேடு ஏறி கல்லு மாதிரி போயிட்டு வரேன் பாத்தீங்களா அதுவே கடவுள் புண்ணியத்துல பெரிய பாக்கியம், ஒண்டிக்க சொந்த குடிசை, உசுருக்கு திங்க கஞ்சி, உழைக்க உடல் ஆரோக்கியம் இது இருந்தா போதும் சாமி, பெருசா கார் பங்களாவுக்கெல்லாம் ஆசை படல, நிம்மதி ஆரோக்கியம் இருக்கோமா அது போதும் சாமி என்று அவர் சுருக்காக முடித்ததும்
பேச ஏதும் வார்த்தைகள் ஏதும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை எனது வாழ்க்கையோடு பொறுத்தி பார்த்து யோசித்த படி மௌனமாக நின்றிருக் கொண்டிருந்தேன்
உடனே அவர் "என்னங்கய்யா பேச மாட்றீங்க? எதாவது தப்பா சொல்லிட்டேனா என்றதும்
இல்லைங்கம்மா , நீங்க சொன்னது உண்மை தான், காசு இல்லாட்டாலும், நிம்மதி ஆரோக்கியம் போதும் மா, உலகத்திலேயே மிகப்பெரிய சொத்து நம்முடைய ஆரோக்கியமும், உடம்பும் தான் மா
என்னுடைய மனைவி இறந்து 10 வருஷம் ஆகுது, எனக்கு ஒரேயொரு பொண்ணு, இப்போ என்னுடைய பொண்ணுக்கு நான் தான் அப்பா அம்மா எல்லாமே, மறுமணம் பண்ணிக்கல, காரணம் என்னோட மனைவிய 14 வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணேன், புள்ளைக்கு ஒன்றை வயசு இருக்கும் போதே இறந்துட்டாங்க, டெங்கு காய்ச்சல், சரியா டைம்க்கு சாப்பிட மாட்டாங்க, நோய் எதிப்பு சக்தி இல்ல, எனக்குண்ணு அம்மா அப்பா சொந்தம் பந்தம் இந்த உலகத்துல யாருமே கிடையாது,
நேரத்துக்கு ஒரு ஆண சாப்படியா? எங்க இருக்கண்ணு கேக்குற உலகத்துல இருக்க ரெண்டே உறவு அம்மா, மனைவி மட்டும் தான், இந்த ரெண்டு வார்த்தையும் நான் கேட்டு பத்து வருஷம் ஆகுது, இனி என் பொண்ணு பெருசாகி கேட்டாதான்
ஆனா நெஞ்சுலையும், உடம்புலையும் தில்லு இருக்கு, எந்த சூழ்நிலையிலும் நம்ம தைரியத்தையும் நம்பிக்கையும் விட்டுற கூடாது, இந்த பத்து வருஷத்த சாதாரணமா கடந்து வரல, எனக்கு வயசு சின்னது தான், ஆனா மனிதனோட நூறு வருஷத்துக்கு அனுபவம் என் மனசுல இருக்கு, கடைசி சொட்டு உயிர் இருக்க வரைக்கும் மீசை முறுக்கிவிட்டு துணிச்சலா தன்னம்பிக்கையா வாழனும், இப்போ நீங்க சொன்னீங்களே நிம்மதியா ஆரோக்கியமா இருந்தா போதும்ண்ணு, அந்த ஆரோக்கியம் இல்லாததால தான் இன்னைக்கு நான் என்னுடைய மனைவிய இழந்தும், என் பொண்ணு அம்மாவ இழந்தும் ஒவ்வொரு நாளும் கஷ்ட்டபடுறோம்
உண்மை மா, நம்முடைய முதல் சொத்து நம்ம உடம்பு தான், உடம்ப பாத்துக்காம பாதிலே போயிடுறவங்க அவங்க நிம்மதியா போயிடுவாங்க, ஆனா அவங்களோட வாழ்ந்த நாட்கள நினைச்சும், அவங்க கூட இருந்த நினைவுகள நினைச்சும் தினம் தினம் நாம் கவலைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சாகணும், அந்த வேதனையும் சாவையும் நம்ம நமக்கு வர சந்ததிகளுக்கு கொடுத்தர கூடாது, அவங்க கடைசி வரைக்கும் கரையேத்தி வாழவெச்சிட்டு போறது தான் மனிதனா பொறந்ததுக்கு நம்ம பிறவிக்கு செய்யுற கைமாறு, நான் பாண்டிலே பொறந்தவன் பாத்தீங்களா எனக்கு டீ, காப்பி சாப்பிடுற பழக்கம் கூட கிடையாது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாம என் உடம்ப ஆரோக்கியமா பாத்துகறதுனால தான் நான் என் புள்ளைய ஒரு அம்மாவா இருந்து பாதுகாப்பா பாசமா வளர்க்க முடியுது, அப்போ கிரிக்கெட், இப்போ ஃபோட்டோ கிராஃபி, வேலை போக மத்த நேரத்துல இந்த மாதிரி கிராமம், உங்கள மாதிரி கிராமவாசிங்க, விவசாயிங்க, பறவைங்க, குளம், ஏறி, பூக்கள், பட்டாம்பூச்சி, ஆடு, மாடு, கோழி, இவங்க தான் என்னோட சொந்தம் பந்தம் எல்லாமே, இப்படி கிராமத்து பக்கம் வந்து நாளு நல்ல மனுஷங்கள பாத்து பேசுனா நம்ம கவலை பாரம் எல்லாம் பறந்துடும், என்று நான் சிரித்தபடி முடித்ததும்
எதும் பேசாமல் மௌனமாக நின்றுக் கொண்டிருந்ததார்
அந்த மௌனத்திற்கான அர்த்தம் என்ன என்பது தெரியும்
சரிமா தலையில சுமை இருக்கு, நீங்க கிளம்புங்க அப்பறம் வந்து உங்கள பாக்குறேன்
அம்மா இங்க பாருங்க இங்க பாருங்க மா என்று அவரை எனது கண்ணை நோக்கி நிமிர வைத்து
இதுவரைக்கும் என்னோட புகைப்பட வாழ்கையில கிராமவாசிங்க விவசாயிங்கண்ணு
பல்லாயிரம் பேர் கிட்ட பேசிருக்கேன், ஆனா அதுல ஒரு சில பேர் தான் தன்னம்பிக்கையா துணிச்சலா பாசிட்டிவா பேசுவாங்க, எனக்கு நெகடிவா சோகமா பேசுறவங்கள எப்பவும் பிடிக்காது, நீங்க எதுவும் இல்லாட்டாலும் துணிச்சலா தன்னம்பிக்கையா பேசுனீங்க பாத்தீங்களா அது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு, அதனால தான் அதிகமா யாருகிட்டயும் சொல்லாத என்னுடைய வாழ்கைய உங்ககிட்ட சொன்னேன், தைரியமா இருங்கம்மா, உடம்ப பாத்துக்கோங்க, எதை காதலிக்குறோமோ இல்லையோ நமம உடம்ப காதலிக்கணும், அந்த உடம்ப நமக்காக இல்லாட்டாலும் இந்த உலகத்துல நம்மல கொடுத்தவங்களுக்காவும், நம்மல நம்பி வந்தவங்களுக்காகவும், நம்மல நம்பி பிறந்தவங்களுக்காகவும் நம்ம உடம்ப நம்ப ஆரோக்கியமா பத்தரமா பாத்துக்கணும்
ஒருத்தர இழந்துட்டு அவர் நினைவோடவே வாழ்நாள் வரை வாழுற வலி தான் உலகத்திலே மிக பெரிய கொடுமையானது, இது என்ன தவிர இந்த உலகத்துல வேற யாருக்கும் நடக்கா கூடாது என்றுதான் என்னுடைய தினந்தோற பிராத்தன, நீங்க எப்படி ஆரம்பத்துல என்கிட்ட தன்னம்பிக்கையா சந்தோஷமா பேசுனீங்களோ, அதே போல நீங்க கடைசி வரைக்கும் தன்னம்பிக்கையா ஆரோக்கியமா இருக்கணும் மா என்று நான் முடித்ததும்
"நீ நல்லா இருப்ப சாமி" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு தனது முந்தானையை எடுத்து கண்களை துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் என்னிடமிருந்து விடைபெற்று மெதுவாய் நடந்து சென்று வளைந்து எனது கண்களிலிருந்து முழுவதுமாய் மறைந்தார்
அவர் கண்களிலிருந்து மறைந்த பின்பே வீட்டில் தனியாக இருக்கும் மகள் ஞாபகத்திற்க்கு வந்தார்
வண்டியை திருப்பி நேராக வீட்டிற்கு விட்டு வீட்டை அடைந்து கதவை தட்டியதும், ஜன்னல் ஓரத்திலிருந்து முக அடையாளம் உறுதி செய்துவிட்டு கதவு திறக்கப்பட்டது
உள்ளே நுழைந்ததும் மகள் ஓடிவந்து!அப்பா என கட்டியணைத்தார்
இன்று இரவு உறக்கத்தின் போது மகளுக்கான ஒரு நிகழ்ந்த உண்மை கதை ரெடி என கை கால்களை அலம்பி விட்டு
சமைக்க சமையலறைக்குள் நுழைந்தேன்.
படித்ததில் பகிர்ந்தது